என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யா வைகுண்ட தர்மபதி"

    • இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.

    திருவொற்றியூர்:

    மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி மிகவும் பிரசித்தி பெற்றது, இங்கு ஆண்டு தோறும் 10 நாள் புரட்டாசி திருவிழா வெகு விமரிசையாக நடை பெறும். இந்த விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

    இதையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு நாமக்கொடியை கையில் ஏந்தியவாறு பள்ளியறையை 5 முறையும்,கொடி மரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி சுற்றி வந்தனர்.

    பின்னர் பதிவலம் வந்து காலை 6.30 மணியளவில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது.

    இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது.

    தினமும் இரவு அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனம், கருடவாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முக சிம்மாசன வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், இந்திரவாகனம், பூம்பல்லக்கு வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார்.

    விழாவின் 8-வது நாளான 13-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணி விடை, 9மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணிக்கு திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார்.

    தேரோட்டத்தை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை -தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன்.

    திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம் உள்ளிட்ட முக்கிய பரிமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது. பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்டநாமம், 1.45 வைகுண்ட சோபனம், அண்டநாமம், திரு நாமக்கொடி இறக்குதல், பள்ளி யுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி. துரைப்பழம், பொது செயலாளர் ஏ. சுவாமி நாதன், பொரு ளாளர். பி. ஜெயக் கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை செயலாளர் வி. சுந்தரேசன், இணை பொது செயலாளர் கே. ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    விழா நாட்களில் பக்தர்கள் சென்று வர போக்குவரத்து வசதி மற்றும் பொது சுகாதாரம் நவீன கழிப்பறைகள் உணவு வசதி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    • கதவில் உள்ள 108 திருவிளக்குகளும் ஏற்றப்பட்டு, வைகுண்ட தர்மபதியில் வைகுண்டர் ஒளி வெள்ளத்தில் எழுந்தருளினார்.
    • அய்யா, குதிரை வாகனத்தில் பதிவலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

    திருவொற்றியூர்:

    சென்னை, மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவில் காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் அய்யா வைகுண்டர் பதிவலம் வந்தார். தினமும் திருஏடு வாசிக்கப்பட்டது. 8-ம் நாளான, நேற்று இரவு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    முன்னதாக, திருக்கல்யாண சுருள் மற்றும் லட்டு, அதிரசம், பனியாரம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை, பக்தர்கள் செண்டை மேளம் முழங்க, ஊர்வலமாக எடுத்து கொண்டு பதிவலம் வந்து அய்யா வைகுண்டர் முன்பு படையலிட்டனர். சன்னதியின் வாயிலில் இருக்கும் பிரமாண்ட சரவிளக்குகள், கதவில் உள்ள 108 திருவிளக்குகளும் ஏற்றப்பட்டு, வைகுண்ட தர்மபதியில் வைகுண்டர் ஒளி வெள்ளத்தில் எழுந்தருளினார்.

    கோவில் வளாகத்தில், 1008-க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக அமர்ந்து, விளக்குகள் ஏற்றி, திருக்கல்யாண ஏடு வாசிப்பை உச்சரித்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் அய்யா, குதிரை வாகனத்தில் பதிவலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (15-ந்தேதி) காலை நடக்கிறது. காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார். தேரோட்டத்தை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், பொது செயலாளர் ஏ. சுவாமிநாதன், பொருளாளர். பி.ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை செயலாளர் வி. சுந்தரேசன், இணை பொது செய லாளர் கே.ராமமூர்த்தி மற்றும் நிர்வா கிகள் செய்து வருகிறார்கள்.

    • 36 அடி உயரம் 36டன் எடை கொண்ட தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளி மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.
    • அய்யா அர ஹர சிவ சிவ அய்யா உண்டு என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரை இழுத்து சென்றனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை, மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு, ஆண்டு தோறும் புரட்டாசி மாதம், 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் திருவிழாவில், அய்யா, காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்தார். தினமும் திருஏடு வாசிக்கப்பட்டது.

    முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை - உகப்படிப்பு நடைபெற்றது. பின்னர் தேர். அலங்காரம் செய்தல் பணிவிடை நடை பெற்றது. மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி பதிவலம் வந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஏறினார். முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் நாதஸ்வரம், செண்டை, உருமி மேளம் முழங்கப்பட்டது. இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரம் 36டன் எடை கொண்ட தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளி மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.

    தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை, ஞான திரவியம் எம்.பி., நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம், நாடார் பேரவை சட்ட ஆலோசகர் எம். கண்ணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடசென்னை மாவட்ட தலைவர் பி.ஆதி குருசாமி மாநில இணைச்செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்த னர்.

    தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அய்யா அர ஹர சிவ சிவ அய்யா உண்டு என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரை இழுத்து சென்றனர்.

    பிற்பகல் 1 மணிக்கு அன்ன தானம், மாலை 6 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பதிவலம் வருதல், இரவு10.30 மணிக்கு பட்டா பிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்ட நாமம், 1.45 மணிக்கு அய்யா பூம் பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதல், வைகுண்ட சோபனம், அண்டநாமம், திருநாமக்கொடி இறக்குதல், பள்ளியுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    • சாமித்தோப்பு பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 17-ந் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தலைமை பதி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்னதானம், அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 24-ந்தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் வைபவம் நடந்தது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,

    25-ந்தேதி இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் திருவிழாவான 26-ந்தேதி இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனியை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர் சென்றது.

    வடக்கு வாசல் முன்பு தேர் வந்ததும் பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, பழம் சுருள் வழங்கினர். தேரோட்ட விழாவில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் சாமித்தோப்பு பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து இழுக்கப்பட்ட தேர் மாலையில் திருநிலையை அடைந்தது.

    இன்று இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கொடி இறக்கியதும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு போதிப்பும், சிறப்பு வேண்டுதலும் நடைபெறுகிறது.

    விழாவில் அனைத்து சிறப்பு பணிவிடைகளையும் தலைமை குரு பால.பிரஜாபதி அடிகளார் தலைமையில் குருமார்கள் பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு, ஜனா. யுகேந்த், ஜனா. வைகுந்த், நேம்ரிஷ் செல்லா, அம்ரிஷ் செல்லா, கவுதம் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×