search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puratasi festival"

    • சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது.
    • சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன

    அவிநாசி:

    பழமை வாய்ந்ததும், திருப்பூா் மாவட்டத்திலேயே தனி சன்னிதியாய் நரசிம்மருக்கு இடதுபுறம் மகாலட்சுமி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் சிறப்புக்குரியதும், சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இக்கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 23-ந் தேதி தொடங்கி 5 வார சனிக்கிழமைகளிலும் ஒவ்வோரு வாரம் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தினா் உபயதாரா்களாக பங்கேற்று சிறப்பு பூஜைகளும், இரவு உற்சவமும் நடைபெற்றது.

    இதேபோல மேலத் திருப்பதி எனப் போற்றப்படும், சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 16-ந் தேதி சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன.

    இந்நிலையில் பிரசித்தி பெற்ற இரு கோவில்களிலும் இந்த வாரம் சனிக்கிழமையுடன் புரட்டாசி திருவிழா நிறைவு பெற்றது. 

    • அருநூற்றுமலை பெலாப்பாடி மலை உச்சியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் ஆகிய 3 மலைக் கோவில்கள் அமைந்துள்ளன.
    • புரட்டாசி மாதத்தில் பாரம்பரிய முறைப்படி திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலை பெலாப்பாடி மலை உச்சியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் ஆகிய 3 மலைக் கோவில்கள் அமைந்துள்ளன.

    புரட்டாசி மாத திருவிழா

    இக்கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பாரம்பரிய முறைப்படி திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை யொட்டி நடைபெற்ற இத்திருவிழாவில் கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் சாமிகளுக்கும் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி நிழலில் பூஜை பொருட்களை கொண்டு சென்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. பெலாப்பாடி கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து வசதியில்லாத நிலையிலும் பாத யாத்திரையாகவும், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்க ளிலும், சுற்றுப்புற கிராம மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் வாழப்பாடி பேளூர் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

    விழாவில் பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்க ளுக்கு பொங்கல் உருண்டைச்சோறும், முன்னோர் வழியில் மொச்சை, அவரைக் கொட்டை குழம்பும் கோவில் பிரசா தமாக அன்னதானமாகவும் வழங்கப்பட்டது.

    • இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.

    திருவொற்றியூர்:

    மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி மிகவும் பிரசித்தி பெற்றது, இங்கு ஆண்டு தோறும் 10 நாள் புரட்டாசி திருவிழா வெகு விமரிசையாக நடை பெறும். இந்த விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

    இதையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு நாமக்கொடியை கையில் ஏந்தியவாறு பள்ளியறையை 5 முறையும்,கொடி மரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி சுற்றி வந்தனர்.

    பின்னர் பதிவலம் வந்து காலை 6.30 மணியளவில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது.

    இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது.

    தினமும் இரவு அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனம், கருடவாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முக சிம்மாசன வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், இந்திரவாகனம், பூம்பல்லக்கு வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார்.

    விழாவின் 8-வது நாளான 13-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணி விடை, 9மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணிக்கு திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார்.

    தேரோட்டத்தை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை -தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன்.

    திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம் உள்ளிட்ட முக்கிய பரிமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது. பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்டநாமம், 1.45 வைகுண்ட சோபனம், அண்டநாமம், திரு நாமக்கொடி இறக்குதல், பள்ளி யுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி. துரைப்பழம், பொது செயலாளர் ஏ. சுவாமி நாதன், பொரு ளாளர். பி. ஜெயக் கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை செயலாளர் வி. சுந்தரேசன், இணை பொது செயலாளர் கே. ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    விழா நாட்களில் பக்தர்கள் சென்று வர போக்குவரத்து வசதி மற்றும் பொது சுகாதாரம் நவீன கழிப்பறைகள் உணவு வசதி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    • குரும்பபட்டி ஊராட்சியில் உள்ள ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா இன்று நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குரும்பபட்டி ஊராட்சியில் உள்ள ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா இன்று நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    இதைதொடர்ந்து, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. மேளதாளம் முழங்க சாமி முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தார். பின்னர், சுவாமிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சீரங்க கவுண்டர் வகையார் தர்மலிங்கம் ஊர் கவுண்டர் வெங்கடாசலம் ஆகியோர் செய்து இருந்தனர். 

    • 47-ம் ஆண்டு திருவிழா தொடங்கியது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஜவ்வாதுமலை ராஜகம்பிரம் (எ) கோட்டை மலையில் ராஜகம்பிர சம்புவராய மன்னரால் 2160 அடி உயர மலையில் கட்டப்பட்ட ஸ்ரீவேணுகோபாலசாமி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை 47-ம் ஆண்டு உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது.

    இதைமுன்னிட்டு கோவிலில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.அதிகாலை 4 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு, அபிஷேகம், ஆராதனை பஜனைகள் நடைபெற்றது. இக்கோயிலுக்கு தரையிலிருந்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல டிராக்டர் மூலமும், மலையடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு சென்றனர்.

    மேலும் தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    உற்சவர் அலங்காரம் செய்து கோவில் உட்பிரகார உலாவும் மாலையில் படவேடு பகுதியில் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று சாமிக்கு சீனிவாசர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 2-வது சனிக்கிழமை வருகிற அக்டோபர் 1ம்தேதி நர்ததன கிருஷ்ண அலங்காரம், 8ம்தேதி வைகுண்டநாதன் அலங்காரம், 15-ம்தேதி நாச்சியார் திருக்கோல அலங்காரம், 22-ம்தேதி வெண்ணைத் தாழி அலங்காரம் செய்யப்படுகிறது.

    மேலும் விழாவின் போது அதிகாலை சூரிய ஒளி மூலவர் மீது படுமாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை படைவீடு கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

    ×