search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாளக்கரை-மொண்டிபாளையம் பெருமாள் கோவில்களில்  புரட்டாசி திருவிழா   நிறைவு
    X

    கோப்பு படம்.

    தாளக்கரை-மொண்டிபாளையம் பெருமாள் கோவில்களில் புரட்டாசி திருவிழா நிறைவு

    • சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது.
    • சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன

    அவிநாசி:

    பழமை வாய்ந்ததும், திருப்பூா் மாவட்டத்திலேயே தனி சன்னிதியாய் நரசிம்மருக்கு இடதுபுறம் மகாலட்சுமி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் சிறப்புக்குரியதும், சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இக்கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 23-ந் தேதி தொடங்கி 5 வார சனிக்கிழமைகளிலும் ஒவ்வோரு வாரம் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தினா் உபயதாரா்களாக பங்கேற்று சிறப்பு பூஜைகளும், இரவு உற்சவமும் நடைபெற்றது.

    இதேபோல மேலத் திருப்பதி எனப் போற்றப்படும், சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 16-ந் தேதி சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன.

    இந்நிலையில் பிரசித்தி பெற்ற இரு கோவில்களிலும் இந்த வாரம் சனிக்கிழமையுடன் புரட்டாசி திருவிழா நிறைவு பெற்றது.

    Next Story
    ×