search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெலாப்பாடி வரதாரஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா
    X

    பெலாப்பாடி வரதராஜ பெருமாள் புரட்டாசி திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

    வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெலாப்பாடி வரதாரஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா

    • அருநூற்றுமலை பெலாப்பாடி மலை உச்சியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் ஆகிய 3 மலைக் கோவில்கள் அமைந்துள்ளன.
    • புரட்டாசி மாதத்தில் பாரம்பரிய முறைப்படி திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலை பெலாப்பாடி மலை உச்சியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் ஆகிய 3 மலைக் கோவில்கள் அமைந்துள்ளன.

    புரட்டாசி மாத திருவிழா

    இக்கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பாரம்பரிய முறைப்படி திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை யொட்டி நடைபெற்ற இத்திருவிழாவில் கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் சாமிகளுக்கும் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி நிழலில் பூஜை பொருட்களை கொண்டு சென்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. பெலாப்பாடி கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து வசதியில்லாத நிலையிலும் பாத யாத்திரையாகவும், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்க ளிலும், சுற்றுப்புற கிராம மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் வாழப்பாடி பேளூர் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

    விழாவில் பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்க ளுக்கு பொங்கல் உருண்டைச்சோறும், முன்னோர் வழியில் மொச்சை, அவரைக் கொட்டை குழம்பும் கோவில் பிரசா தமாக அன்னதானமாகவும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×