என் மலர்
சேலம்
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையில் தற்போது 92.83 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வந்த உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
இதையடுத்து அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே உபரிநீராக 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 58 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைய தொடங்கியது.
அணைக்கு நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 615கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 19 ஆயிரத்து 286 கனஅடியாக சற்று அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் 16 கண்மதகு வழியாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக குறைந்தது. அணையில் தற்போது 92.83 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மாமியார் சித்ராதேவியை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
- ரிதன்யாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாதுரை கூறுகையில்,
வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்கு காங்கிரஸ் தரப்பில் முயற்சி நடைபெறுகிறது. இந்த வழக்கு தொடர்பாக கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகிய 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மாமியார் சித்ராதேவியை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். கவின்குமாரின் தாத்தா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சி தலையிடுகின்றனர். காவல்துறையினரின் செயல்பாடு சரியில்லை. அலைக்கழிக்கிறார்கள். சிபிஐ விசாரணை வேண்டும். ரிதன்யாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை நிரம்பியது. மேலும் கபினி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரிநீராக காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நேற்று மாலை தனது முழு கொள்ளளவை எட்டியது. அணை கட்டியதில் இருந்து 44-வது முறையாக நிரம்பியதால் மேட்டூர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் காவிரி ஆற்றில் 16 கண் மதகு மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அந்த தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. இதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை கண்டு ரசித்து செல்போனில் போட்டோ எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் மேட்டூரில் காவிரி கரையோர பகுதியான தங்கமாபுரி பட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் இன்று 2-வது நாளாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அணை நிரம்பியதால் சரபங்கா நீரேற்றும் திட்டம் மூலம் 57 ஏரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் தண்ணீரை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும்.
- அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.
சேலம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.
அணை கட்டிய 91 ஆண்டு கால வரலாற்றில் 44வது முறையாக நிரம்பியுள்ளது.
ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும்.
மேட்டூர் அணை கட்டப்பட்ட 91 ஆண்டுகளில் 44வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
இதற்கு முன்பாக 1957ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. அதுன்படி, 68 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அன்புமணியால் ராமதாசுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
- தெருவில் இலந்தை பழம் விற்பது கேவலமா?
சேலத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட எந்த பதவிகளுக்கும் ஆசைப்படாதவர் ராமதாஸ்.
* அன்புமணியால் ராமதாசுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
* ராமதாஸ் தான் பா.ம.க.விற்கு தாய். சுயம்புவாக கட்சியை வளர்த்தவர் ராமதாஸ்.
* 5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தையாக மாறி விட்டார் என அன்புமணி சொல்கிறார். அந்த குழந்தைதானே 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக அறிவித்தது. குழந்தையின் அறிவிப்பு எப்படி செல்லும்?
* தெருவில் இலந்தைப் பழம் விற்பவர் கேவலமானவரா? ராமதாஸை அவமானப்படுத்துவதாக நினைத்து, தெருவோர வியாபாரிகளை, பாட்டாளிகளை அவமானப்படுத்தியுள்ளார் அன்புமணி.
இவ்வாறு அவர் கூறினார்.
ரோட்டில் இலந்தைப் பழம் விற்பவர்களை அழைத்து ராமதாஸ் பதவி தருவதாக அன்புமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மெயினருவி மற்றும் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- வெள்ள கட்டுப்பாட்டு அறையில், நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியதால் 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 25-ந் தேதி 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 26-ந் தேதி காலை 60 ஆயிரம் கன அடியாகவும், நேற்று இரவு 8 மணியளவில் 85 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.
இரவு 8 மணி நிலவரப்படி கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய 2 அணைகளிலிருந்தும் விநாடிக்கு 86 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 அணைகளில் இருந்தும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் அங்குள்ள மெயினருவி மற்றும் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 80 ஆயிரத்து 984 கன அடியில் இருந்து 68 ஆயிரமாக குறைந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக உள்ளது. முழு கொள்ளளவை 120 அடியை எட்டி உள்ளதால் இன்று காலை உபரி நீர் வெளியேறும் 16 கண் மதகிலிருந்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீர் பாசனம் பெறும் மாவட்ட கலெக்டர்களுக்கு அணை உபகோட்ட உதவி பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில், நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உபரி நீர் வெளியேறும் மதகுப்பகுதியில் ஷிப்ட் முறையில் பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கேற்ப மதகுகளை இயக்குவதற்கு பணியாளர்கள் தயாராக உள்ளனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
- சேலம் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளது.
சேலம்:
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது மாம்பழங்கள் தான். அந்த வகையில் தித்திக்கும் சுவை உடைய சேலம் மாம்பழங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் சேலம் மாம்பழத்தை ருசித்து வருகிறார்கள்.
இத்தகைய சுவை வாய்ந்த சேலம் மாம்பழங்கள் சேலம் அயோத்தியாபட்டினம் குப்பனூர், வலசையூர், காரிப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், வனவாசி, ஜலகண்டாபுரம், எடப்பாடி, நங்கவள்ளி, பனமரத்துப்பட்டி, மல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக சேலம் குண்டு, சேலம் பெங்களூரா, அல்போன்சா இமாம் பசந்த், பங்கணப்பள்ளி, மல்கோவா செந்தூரா, குதாதத், கிளி மூக்கு உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் அதிக அளவில் சேலத்தில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
விரைவில் சீசன் முடியும் தருவாயில் தற்போது சேலம் மார்க்கெட்டுகளுக்கு தினசரி 500 டன்னுக்கும் அதிகமாக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாம்பழங்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், அரபு நாடுகளுக்கும் அதிக அளவில் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெற்று அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர நேரடி விற்பனை மற்றும் பார்சல் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிகமான விளைச்சல் காணப்பட்டதால் சேலம் மார்க்கெட்டுகளில் மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலை ஓரங்களிலும் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளிலும் வைத்து வியாபாரிகள் தெரு தெருவாக விற்பனை செய்து வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகள் மளிகை கடைகள் என எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் இருக்கும் அந்த நேரத்தில் மாம்பழம் விற்பனை சூடு பிடிக்கும். பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கி ருசிப்பார்கள்.
ஆனால் நடப்பாண்டில் வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோசன நிலவி வருகிறது. இதனால் மாம்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பதால் பொதுமக்கள் குறைந்த அளவே மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.
இதனால் அதிக அளவில் விளைச்சல் ஆன நிலையில் குறைந்த அளவிலே விற்பனையாவதால் சேலம் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் அதன் விலையும் கணிசமாக குறைந்து உள்ளது. குறிப்பாக கிளி மூக்கு மாம்பழங்கள் 100 ரூபாய்க்கு 5 கிலோ வரை கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் அதையும் வாங்க ஆட்கள் இல்லாததால் சாலையோரம் ஆங்காங்கே அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விவசாயிகளிடம் வியாபாரிகள் 1 கிலோ 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக கூறப்படுவதால் மாம்பழ விவசாயிகள் பெரும்இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தாங்கள் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை என்றும் வரும் காலங்களில் மாம்பழ விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கும் வகையில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். அரசே மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அதனால் சேலத்தில் அதிக அளவில் மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கோடை காலம் தொடங்கியதிலிருந்து மழை பெய்ததால் விற்பனை கணிசமாக சரிந்துள்ளது. இதனால் போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு இழப்பீடு வழங்கி மாம்பழ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார்.
- சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளின் மூலம் மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது.
- மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பாலியல் கொடுமை அதிகமாக உள்ளது.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டியில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வலுவான கூட்டணி. இந்த கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சி செய்கின்றனர்.
எங்களது கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என சமீப காலமாக தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது.
மக்கள் விரோத தி.மு.க. அரசை அகற்ற வேண்டும் எனில், தமிழகத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க.வின் 4 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளின் மூலம் மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பாலியல் கொடுமை அதிகமாக உள்ளது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலத்தை இழந்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யார் முதலமைச்சர் என்று அனைவருக்கும் தெரியும். விவசாய பயன்பாட்டிற்கான நிலத்தடி நீருக்கு கட்டணம் என்பது தவறான தகவல். இதை திட்டமிட்டு சிலர் பரப்பி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த அரசு தேர்வில் தி.மு.க. தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும். அரசியல் கலப்பு இல்லாமல் அரசு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டு வருகிறது.
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று தமிழகத்துக்கு வினாடிக்கு 63 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று வினாடிக்கு 81 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
கபினி அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 31 ஆயிரத்து 644 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 52 ஆயிரத்து 829 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 81 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.73 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 114 அடியை எட்டியது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 43 ஆயிரத்து 892 கனஅடி தண்ணீர் வ்ந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட 81 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வரத்தொடங்கினால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 112.73 அடியாக இருந்தது.
- பாசனத்துக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிவரும் மழையின் காரணமாக 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.90 அடியாக இருந்தது. இதே போல் கபினி அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் நேற்று மாலை முதல் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.
இதற்கிடையே கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 63 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர்பாசன அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறையினர் கரையோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 112.73 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 13,332 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 18,290 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து பாசனத்துக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 82.34 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்மெதுவாக குறைந்து வருகிறது. அதே நேரம் கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக வரத்தொடங்கினால் அணையின் நீர்மட்டம் உயரும்.
- தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.
- தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.
சேலம்:
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதையொட்டி சேலத்தில் அதன் லோகோவை அறிமுகப்படுத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் லோகோவை வெளியிட்டு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று திரும்ப திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல தலைவர்களும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.
பா.ஜ.க. விரும்பும் கூட்டணி பலமான கூட்டணியாக அமையும், எதிரிகளால் எதிர்கொள்ள முடியாத கூட்டணியாக அமையும் என்று கற்பனையாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர பாரதிய ஜனதா கூட்டணி கருவே உருவாகவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணி கட்சிகளை உடைத்து அங்கிருந்து பல கட்சிகள் எங்களுக்கு வருவார்கள் என்று பா.ஜ.க. தலைவர்களும் சொல்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கூட்டணியும் இவ்வளவு நாள் நீடித்தது கிடையாது.
இந்த கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல, கொள்கைக்காக அமைந்த கூட்டணி. 2 பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க. கூட்டணி ஒரு போதும் உடையாது.
தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.
முருகனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பா.ஜ.க. முருகன் மாநாட்டால் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது. நெருக்கடி நிர்பந்தத்தின் பேரில் அ.தி.மு.க. வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மடியில் கனம் இருந்ததால் பா.ஜ.க.வின் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- இந்து முன்னணியின் செயலை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கண்டிக்கிறது.
- முருக பக்தர்கள் மாநாடு என்று அழைத்துவிட்டு விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்பி இருக்கக்கூடாது.
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்துள்ள நிலையில், அதில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
* இந்து முன்னணியின் செயலை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கண்டிக்கிறது.
* எங்களின் வழிகாட்டியாக உள்ள பெரியாரையும், அண்ணாவையும் இழிவு செய்வதை ஏற்க முடியாது.
* முருக பக்தர்கள் மாநாடு என்று அழைத்துவிட்டு விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்பி இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.






