என் மலர்
சேலம்
- சேலத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பவர் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி.
- சேலம் செவ்வாப்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
சேலத்தில் நடைபெற்ற விழாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:
* சேலத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பவர் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி.
* தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ஆட்சியர்களில் ஒருவர்.
* சேலத்திற்கு தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
* சேலத்தில் 9 உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* சேலத்தில் ரூ.548 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* கடந்த 4 ஆண்டுகளில் சேலத்திற்கு ரூ.7600 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* சேலம் மாவட்டத்தில் மட்டும 56 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்
* சேலத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்படும்.
* சேலம் செவ்வாப்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்டப்படும். மேட்டூர் நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி கட்டடங்கள் கட்டப்படும்.
* ஆத்தூரில் ரூ.5 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். தாரமங்கலம், எடப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் புதிய குடிநீர்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
* தலைவாசல் இழுப்பநத்தம் வேளாண் விற்பனை மையம் ரூ.10 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான் காரணம்.
- நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
சேலத்தில் நடைபெற்ற விழாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான்.
* 4 ஆண்டுகளாக குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம்.
* தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான் காரணம்.
* அணையிலிருந்து பொங்கிவரும் காவிரி போல் உங்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.
* விவசாயிகள் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 பெறுவார்கள்.
* சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,547-க்கு கொள்முதல் செய்யப்படும்.
* சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.131 உயர்வு, சன்னரகம் ரூ.156 உயர்த்தப்படும்.
* நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியையும் தொடங்கி உள்ளனர்.
- மேட்டூர் அணை வரலாற்றில் 92-வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
காவிரி டெல்டா மாவட்ட மக்ககளின் விவசாயத்திற்கு உயிர் நாடியாகவும், குடிநீருக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் 92 ஆண்டு காலமாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். நீர் இருப்பை பொறுத்து சில ஆண்டுகள் மட்டும் தண்ணீர் முன்னதாகவும், தாமதமாகவும் திறக்கப்பட்டது.
நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் 110 அடிக்கும் மேல் இருந்த நிலையில் அணைக்கு நீர்வரத்தும் கணிசமாக இருந்ததால் குறிப்பிட்ட நாளான இன்று (ஜூன் 12-ந் தேதி) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து அணையில் இருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ தூவினார்.
அப்போது அங்கிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை பூக்கள் தூவி உற்சாகத்துடன் வரவேற்றனர். முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.91 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து 6 ஆயிரத்து 339 கன அடியாகவும் இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ராஜேந்திரன், மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். டி.எம். எம்.பி.க்கள் செல்வகணபதி, மணி, மாதேஸ்வரன், மலையரசன், கலெக்டர் பிருந்தாதேவி, சதாசிவம் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேட்டூர் அணை திறப்பு மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை சென்றடையும். குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியையும் தொடங்கி உள்ளனர்.
அணையின் மேல்மட்ட மதகு வழியாக திறக்கப்பட்ட தண்ணீர், சிறிது நேரத்திற்கு பிறகு அணையையொட்டி உள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும். நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் கட்டப்பட்டுள்ள கதவணைகளில் அமைக்கப்பட்டு உள்ள மின் நிலையங்கள் மூலம் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணை வரலாற்றில் 92-வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. முதலில் குறுவை சாகுபடி, பின்னர் சம்பா, தாளடி சாகுபடி என முப்போக விவசாயத்திற்கு இந்த தண்ணீர் பயன்படும். 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.9 லட்சம் ஏக்கரில் சம்பாவும், 4.41 லட்சம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் நடக்கிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி 19 முறையும், காலதாமதமாக 61 முறையும், ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாக 11 முறை என ஏற்கனவே 91 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்ததாண்டு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஈரோடு மாவட்டம் பவானி வழியாக நேற்று மாலை சேலம் மாவட்டம் மேட்டூருக்கு வந்தார். அவருக்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி, மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி., கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்டாலின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- மழையின்மை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில ஆண்டுகளில் மட்டும் குறித்தபடி ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி பாசனப்பகுதிகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை கடந்த 1924 ம் ஆண்டு கட்டதொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டப்பட்டதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மழையின்மை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில ஆண்டுகளில் மட்டும் குறித்தபடி ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
குறிப்பாக அணையில் அதிக தண்ணீர் வந்த காரணத்தால் ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாக இதுவரை 11 முறை தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மற்றபடி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி பாசனப்பகுதிகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை 90 ஆண்டுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு 91-வது ஆண்டாக குறித்தபடி நாளை மறுநாள் (12-ந் தேதி) பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- அணைக்கு நேற்று வினாடிக்கு 5980 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 5482 கனஅடியாக குறைந்தது.
- மேட்டூர் அணையில் தற்போது 84.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.40 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5980 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 5482 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 84.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 64.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
- கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது.
சேலம்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் இந்த அணைகளில் இருந்து தமிழக காவிரியிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து ஆற்றில் தண்ணீர் அதிகரித்தும், குறைந்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அதே போல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.16 அடியை எட்டியது. வழக்கமாக ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தான் அணையில் இந்த அளவுக்கு தண்ணீர் இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஜூன் மாத தொடக்கத்திலேயே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் அணைக்கு இன்று காலை முதல் வினாடிக்கு 5 ஆயிரத்து 980 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 64.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 12-ந் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- கர்நாடக மாநிலத்சை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
- நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேம்பால்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் கர்நாடக மாநிலத்சை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- செல்லதுரையை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் 1-வது வார்டு கருக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 95).
கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் ராஜம்மாள் வசித்து வந்தார். அவருக்கு உதவியாக அவரது மகள் பழனியம்மாள் கடந்த சில வருடங்களாக உடனிருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீடு அருகே உள்ள அய்யனாரப்பன் கருப்பசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு சென்ற மூதாட்டி ராஜம்மாள் தனது பேரன்-பேத்திகள், உறவினர்களுடன் இருந்துவிட்டு மாலையில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 7 மணி அளவில் தனது வீட்டில் உள்ள கட்டிலில் ராஜம்மாள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து மகள் பழனியம்மாள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
மூதாட்டி இறந்த செய்தி அறிந்து உறவினர்கள் வீட்டிற்கு திரண்டனர். ராஜம்மாளின் மகன் வழி பேரன்களான சண்முகசுந்தரம், பாலகிருஷ்ணன் ஆகியோர் மூதாட்டியின் தலையில் 2 இடங்களில் பலத்த காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு, தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே உறவினர்கள் மூதாட்டி உடலை அடக்கம் செய்யும் வேலையில் தீவிரம் காட்டினர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார், அடக்கம் செய்யும் வேலைகளை தடுத்து நிறுத்தி ராஜம்மாளின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் குமார், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மூதாட்டி ராஜம்மாள் தவறி விழுந்து தானாக இறந்தாரா? அல்லது சொத்துக்காக யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜம்மாளை அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி செல்லான் என்கிற செல்லதுரை (55) என்பவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
செல்லான் என்கிற செல்லதுரை (55) என்பவர் குடிபோதையில் சம்பவத்தன்று ராஜம்மாள் வீட்டிற்கு சென்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதை கண்ட ராஜம்மாள் செல்லதுரையை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லதுரை தோசை கரண்டியால் ராஜம்மாளின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு ரத்த கரைகளை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு சென்றுள்ளார். பின்னர் தனது செருப்பை மறந்து அங்கேயே விட்டுவிட்டு சென்றதால் போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் போலீசாருக்கு முக்கிய தடயமாக கொலையாளியின் செருப்பு இருந்தது. இந்த செருப்பை வைத்து போலீசார் துப்பு துலக்கி கொலையாளியை எளிதாக கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து செல்லான் என்கிற செல்லதுரையை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது.
- பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
வாழப்பாடி:
சேலத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. இங்குள்ள கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆண்டி. டெய்லர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீகணேஷ் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் ஜெகதீஸ்வரி சங்ககிரியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆண்டி திடீரென இறந்து விட்டார். இதையடுத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்த அவரது மகன் ஸ்ரீ கணேஷ் தந்தையின் தொழிலான டெய்லரிங் வேலை செய்து வருகிறார். 2-வது மகள் ராஜேஸ்வரி கருமந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் கருமந்துறையில் உள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்தார். மாணவி ராஜேஸ்வரி 10-ம்வகுப்பு தேர்வில் 438 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு தேர்வில் 521 மதிப்பெண்களும் பெற்றார்.

கருமந்துறையில் வசித்து வரும் மாணவியின் வீடு.
ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
- கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
- தற்போது மேட்டூர் அணையில் 82.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு மே மாத இறுதியிலேயே தொடங்கியது. இதன் காரணமாக கடலோர மற்றும் மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பல்வேறு ஆறுகள், நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 908 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 6 ஆயிரத்து 234 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113 அடியை எட்டியுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் தான் அணையின் நீர்மட்டம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஜூன் மாத முதல் வாரத்திலேயே 113 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 82.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- மேட்டூர் அணையில் 81.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 2913 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3017 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 112.48 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 81.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக மலைப்பாதை யில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
- கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சேலம்:
கோடைவிடுமுறையை யொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையிலும் இன்று காலை முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
அவர்கள் அண்ணா பூங்காவில் பூத்துகுலுங்கும் பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல விளையாடி மகிழ்ந்தனர். மேலும் படகு சவாரி செய்தும் ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக மலைப்பாதை யில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது மழை பெய்து மலைப்பாதை முழுவதும் பசுமையாக மாறியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மலைப்பாதைகளில் நின்றும் இயற்கை காட்சியை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலமான மூலிகை நிறைந்த கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது கொல்லிமலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக கொல்லிமலை முழுவதும் சாரல் மழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.

தொடர் மழையின் எதிரொலியால் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி மற்றும் சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதேபோல் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூர் அணை பூங்கா விளங்குகிறது. இந்த பூங்காவிற்கு உள்ளூர் மட்டுமின்றி சேலம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து சென்றனர்.
இவர்கள் அணையின் கிளைவாய்க்கால் மட்டம் பகுதியில் நீண்ட நேரம் நீராடினர். பின்னர் அணை கட்டு முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் பூங்காவில் உள்ள ஊஞ்சல், விளையாடி மகிழ்ந்தனர்.






