என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் பலத்த மழை- சுற்றுலா பயணிகள் குதூகலம்
- சேலம் மாநகரம், வாழப்பாடி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
- ஓமலூர்-7.4, டேனிஷ் பேட்டை-21 என மாவட்டம் முழுவதும் 122.7 மி.மீ. மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் மேக கூட்டம் இருட்டாக திரண்டு மழை வருவது போல் இருந்தது.
இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென சாரல் மழை பெய்தது. குறிப்பாக நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. திடீரென ஏற்காட்டில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அது கனமழையாக சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பின்னர் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. இதை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ரசித்து குதூகலம் அடைந்தனர்.
இதே போல் சேலம் மாநகரம், வாழப்பாடி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் நிலவியது. இன்று காலையும் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சேலம்-16.5, ஏற்காடு-25.2, வாழப்பாடி-13, ஆனைமடுவு-6, ஆத்தூர்-2, கெங்கவல்லி-4, தம்மம்பட்டி-3, ஏத்தாப்பூர்-7, கரிய கோவில்-13, எடப்பாடி-1, மேட்டூர்-3.6, ஓமலூர்-7.4, டேனிஷ் பேட்டை-21 என மாவட்டம் முழுவதும் 122.7 மி.மீ. மழை பெய்தது.






