என் மலர்
புதுக்கோட்டை
திருவாரூர் மாவட்டம், மாவூர் அருகே உள்ள குன்னியூரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 42). இவர் லாரிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவருடன் ஆதமங்கலத்தைச் சேர்ந்த சேவியர் (49), மங்கப்பட்டினத்தைச் சேர்ந்த ரங்கசாமி (60) ஆகியோரும் இதே பணியில் ஈடுபட்டு வந்தனர்.
வேலை விஷயமாக இவர்கள் 3 பேரும் திருவாரூரில் இருந்து நேற்று இரவு காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் மதுரை அருகே உள்ள துவரிமான் 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நடுரோட்டில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.
அந்த சமயத்தில் எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த லாரன்ஸ், ரங்கசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
படுகாயம் அடைந்த சேவியரை அந்தப் பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள குறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 38). ஓமியோபதி டாக்டரான இவர் அதே பகுதியில் மருத்துவமனை வைத்துள்ளார்.
இவரது நண்பர் உதயகுமார். இவர்கள் இன்று காலை சொந்த வேலை காரணமாக புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி காரில் சென்றனர். காரை புதுக்கோட்டை கம்பன் நகரை சேர்ந்த டிரைவர் கனகராஜ் (40) ஓட்டிச்சென்றார்.
அவர்களது கார் இன்று காலை 6 மணியளவில் கந்தர்வக்கோட்டையை அடுத்த வளவம்பட்டி அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி பிரிவு ரோடு பகுதியில் சென்றது. அதே நேரத்தில் தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக அதிக வேகத்தில் வந்த காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் கார் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலும் நொறுங்கியது. காரின் மேற்பகுதியே இல்லாத நிலை ஏற்பட்டது.
காருக்குள் இருந்த டாக்டர் சுந்தர்ராஜ், அவரது நண்பர் உதயகுமார், டிரைவர் கனக ராஜ் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். தகவல் அறிந்ததும் அருகே உள்ள ஆதனக்கோட்டை மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் ஆதனக்கோட்டை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களை இரும்புக்கம்பியால் உடைத்து பெரும் சிரமத்திற்கிடையே மீட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மஞ்சப் பேட்டையை சேர்ந்த மணிகண்டனை பிடித்து விசாரித்து வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், டி.எஸ்.பி. ஆறுமுகம், கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்து காரணமாக தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. #tamilnews
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் சக்கராப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரை இலுப்பூர் பகுதியை சேர்ந்த குமாரசாமி, மலைராஜா ஆகியோர் அணுகினர். அவர்கள் ரவிச்சந்திரனிடம், உங்களது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருகிறோம். அதற்கு நீங்கள் ரூ.3½ லட்சம் தர வேண்டும் என்றனர்.
இதையடுத்து ரவிச்சந்திரன், 2பேரிடமும் ரூ.3½ லட்சம் பணத்தை கொடுத்தார். அதனை பெற்றுக் கொண்ட இருவரும், ரவிச்சந்திரனின் மகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு வருடம் ஆகியும் அந்த வேலை நிரந்தரமாக்கப்படவில்லை.
இது குறித்து ரவிச்சந்திரன், குமாரசாமி, மலைராஜாவிடம் முறையிட்டுள்ளார். மேலும் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறும் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனராம்.இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிச்சந்திரன் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 2பேரையும் கைது செய்தனர்.
பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கியதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
விராலிமலை:
புதுக்கோட்டை அருகே உள்ளது கட்டியாவயல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுர் என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தனது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். வீட்டில் அவரது மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர். பாப்பு என்ற பெயர்கொண்ட வளர்ப்பு நாய் ஒன்றை தங்களின் பாதுகாப்புக்காக வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில், பொன்னமராவதியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, சுப்பையாவின் மனைவியும் அவரது இரண்டு பிள்ளைகளும் நேற்று முன்தினம் மாலையில் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றனர். வீட்டில் நாய் மட்டும் காவலுக்கு இருந்தது.
இதனை நோட்டமிட்ட திருடர்கள், வீட்டைக் கொள்ளை அடிக்க திட்டமிட்டனர். அன்று இரவே வீட்டின் காவலுக்காக கட் டிப் போட்டிருந்த நாய்க்கு எலியை சாகடிக்க பயன்படுத்தும் பிஸ்கட்டை வைத்துள்ளனர். இதனை சாப்பிட்ட நாய் பரிதாபமாக இறந்தது.
பிறகு, வீட்டுக்குள் நுழைந்து பீரோ, அலமாரி போன்றவற்றை உடைத்து அதிலிருந்து கிடைத்ததை சுருட்டி கொண்டு கிளம்பி விட்டனர். திருவிழா முடிந்து நேற்று இரவு வீடு திரும்பிய சுப்பையாவின் மனைவி, வீடு திறந்து கிடந்ததோடு, நாய் இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
வீட்டுக்குள் நுழைந்தவருக்கு இன்னும் அதிர்ச்சிக் காத்திருந்தது. பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை மற்றும் கொள்ளை போயிருந்தது. இதுபற்றி உடனடியாக அவர் தனது கணவருக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். முன்னதாக அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வரவேற்று அழைத்து வந்தார்.
இதையடுத்து காலை 8 மணிக்கு கலெக்டர் கணேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்க விட்டார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மேலும் அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 274 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 8 துறைகளின் மூலம் 31 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 69 ஆயிரத்து 836 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, சப்-கலெக்டர சரயு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சரோஜா, மாவட்ட கல்வி அலு வலர் சத்தியமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் நகராட்சி ஆணையாளர் ஜீவா சுப்பிரமணியம் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். #Tamilnews






