என் மலர்
நீங்கள் தேடியது "bus fare hike"
- சொகுசு பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.12-லிருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்சமாக ரூ.36-லிருந்து ரூ.47 ஆகவும் உயர்வு.
- புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 75 பைசா என்பது 98 பைசாவாக உயர்வு. 25 கி.மீ., வரை ரூ.20 லிருந்து ரூ.25 ஆக அதிகரிப்பு.
புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பிற்கு பிறகு கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.
அதன்படி, ஏசி வசதியில்லாத நகரப் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.7 ஆகவும், அதிகபட்சமாக ரூ.13-லிருந்து ரூ.17 ஆகவும் கட்டணம் உயர்வு.
ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.10-லிருந்து ரூ.13 ஆகவும், அதிகபட்சமாக ரூ.26-லிருந்து ரூ.34 ஆகவும் அதிகரிப்பு. சொகுசு பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.12-லிருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்சமாக ரூ.36-லிருந்து ரூ.47 ஆகவும் உயர்வு.
புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 75 பைசா என்பது 98 பைசாவாக உயர்வு. 25 கி.மீ., வரை ரூ.20 லிருந்து ரூ.25 ஆக அதிகரிப்பு.
புதுச்சேரி எல்லைக்குள் ஏசி விரைவுப் பேருந்துக் கட்டணம் கி.மீ.,க்கு ரூ.1.30-லிருந்து ரூ.1.69 ஆக உயர்வு. புதுச்சேரி நகரத்திற்குள் வோல்வோ பேருந்துகளுக்கான கட்டணம் கி.மீ.,க்கு ரூ.1.70-லிருந்து ரூ.2.21 ஆக உயர்வு. புதுச்சேரியிரிலிருந்து கடலூருக்கான கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும், விழுப்புரத்திற்கு ரூ.25-லிருந்து ரூ.30 ஆகவும் அதிகரிப்பு.
- ஜனவரி 5ம் தேதி முதல் அரசு பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு.
- எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் அரசு பேருந்துகளின் கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் ஜனவரி 5ம் தேதி முதல் அரசு பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
- தலைமையில் உயர்மட்டக் குழு நியமித்து 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அரசாணை .
தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் வந்தது.
அப்போது, போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு நியமித்து 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு வாதித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொது மக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் தங்கி இருக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
இதனால் சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், ரெயில்களில் கூட்டம் அலைமோதும்.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் தீபாவளி பண்டிகையையொட்டி உள்ள நாட்களில் ஏற்கனவே டிக்கெட்டுகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அரசு சிறப்பு பஸ்களிலும் வேகமாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
பண்டிகை கால பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்கள் தங்களது கட்டணத்தை 2 மடங்கு உயர்த்திவிட்டன. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் ரூ.1650 முதல் 2250 வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
படுக்கை வசதி இல்லா பஸ்களில் ரூ.1300 முதல் ரூ.1490 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண விபரங்களை தனியார் ஆம்னி பஸ்கள் ‘ஆன்-லைனில்’ வெளிப்படையாகவே வெளியிட்டு உள்ளது.
இதேபோல் மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் பெங்களூர் செல்லும் ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டணம் உயர்த்தப்பட்டாலும் தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் டிக்கெட் முழுவதும் முன் பதிவு செய்யப்பட்டுவிட்டன. அரசு பஸ்களை விட குறிப்பிட்ட நேரத்துக்குள் சொகுசான பயணம் என்பதால் தனியார் ஆம்னி பஸ்களை பொதுமக்கள் நாடிச்செல்லும் நிலை உள்ளது.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்து உள்ளனர். எனினும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டண கொள்ளையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆயுதபூஜை மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வந்ததால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு ஏராளமானோர் வருகை தந்தனர்.
விடுமுறை முடிந்து இவர்கள் நேற்று ஊர் திரும்பினார்கள். இதனால் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் ஆம்னி பஸ் நிலையத்தில் அதிக அளவு பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
வழக்கமாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இருக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களில் ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படும். படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களில் ரூ.1500 கட்டணம் ஆகும். சில ஆம்னி பஸ்களில் நேற்று இந்த கட்டணங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.3000-ம் வரை வசூல் செய்யப்பட்டது.
இந்த கட்டண கொள்ளையால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்டண கொள்ளையை கண்டித்து குமரி மாவட்ட ஆதி திராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆம்னி பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் இடையில் உள்ள ஊர்களுக்கு பயணிகளை ஏற்றாமல் பல பஸ்கள் சென்றதால் பஸ் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
பழனி:
கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அன்னை தெரசா பல்கலைக்கழத்திற் குட்பட்ட கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு சீனிவாசபுரத்தில் விடுதி உள்ளது. விடுதியில் இருந்து கல்லூரிக்கு மாணவிகளை அழைத்து வர கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பஸ் இயக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக 6 மாதத்திற்கு ரூ.1500 வசூலிக்கப்பட்டது.
தற்போது ஒரு மாதத்திற்கு கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வந்தனர். ஆனால் நிர்வாகத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் ஏராளமானோர் வத்தலக்குண்டு- கொடைக்கானல் சாலையில் சீனிவாசபுரம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மலைச்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவம் குறித்து அறிந்ததும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளிடம் சமரசபேச்சு வார்த்தை நடத்தினர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்று கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.






