என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியரசு தின விழா: புதுக்கோட்டையில் கலெக்டர் கணேஷ் தேசிய கொடி ஏற்றினார்
    X

    குடியரசு தின விழா: புதுக்கோட்டையில் கலெக்டர் கணேஷ் தேசிய கொடி ஏற்றினார்

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து கலெக்டர் கணேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். முன்னதாக அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வரவேற்று அழைத்து வந்தார்.

    இதையடுத்து காலை 8 மணிக்கு கலெக்டர் கணேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்க விட்டார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மேலும் அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 274 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 8 துறைகளின் மூலம் 31 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 69 ஆயிரத்து 836 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, சப்-கலெக்டர சரயு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சரோஜா, மாவட்ட கல்வி அலு வலர் சத்தியமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் நகராட்சி ஆணையாளர் ஜீவா சுப்பிரமணியம் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். #Tamilnews
    Next Story
    ×