என் மலர்tooltip icon

    மதுரை

    • தமிழகத்தில் பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற அடிப்படையில் காய்களை நகர்த்தி வருகிறது.
    • ஒத்தக்கடையில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.

    மதுரை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற துடிப்போடு தி.மு.க.வும், எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வும் தற்போது இருந்தே தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி செயல்பாடுகள், பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    மேலும் இதர கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற அடிப்படையில் காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பெற்ற பா.ஜ.க. இந்த முறை அ.தி.மு.க.வுடனான தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்த கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து நிர்வா கிகளிடம் ஆலோசிக்க பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று மதுரை வருகிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று இரவு அமித்ஷா மதுரை வருகிறார். அங்கு மாவட்ட கலெக்டர், கட்சியினர் வரவேற்கின்றனர்.

    தொடர்ந்து அவர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை (8-ந் தேதி) காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமித்ஷா செல்கிறார்.

    அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்ப டுகிறது. தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் 3 மணியளவில் ஒத்தக்கடையில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மண்டல நிர்வாகிகள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி, தொகுதிகளின் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு, சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் சாதக பாதகங்கள் குறித்து நிர்வாகிகளிடம் அமித்ஷா கலந்துரையாடுகிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார். அதன்படி விமான நிலையம், அமித்ஷா தங்கும் தனியார் ஓட்டல் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் போன்ற இடங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில், பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்துக்கு செல்லும் வழித்தடங்கள் முழுவதும் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கத்தை விட போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையம் செல்லும் சாலை மற்றும் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநகர் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    விமான நிலையம் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    • ராமதாஸ்- அன்புமணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வுக்கு சம்பந்தமில்லை.
    • தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு.

    மதுரை:

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இரண்டு நாட்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் அமித் ஷா, அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகளை சந்திக்கிறார்.

    * அமித்ஷா- அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை.

    * ராமதாஸ்- அன்புமணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வுக்கு சம்பந்தமில்லை.

    * குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயல்கிறார். அவர் ஒரு நலம்விரும்பி.

    * தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு.

    * மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள்.

    * திமுகவிற்கு ஷா என்றாலே பயம் என்றார். 

    • தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மதுரையை மையப்படுத்தி அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ளன.
    • மாநில அரசியலை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோரும் மதுரையில்தான் அரசியல் கட்சிகளை தொடங்கினர்.

    மதுரை:

    2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக வருகிற 8-ந்தேதி மதுரையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இதற்காக அவர் நாளை (7-ந்தேதி) இரவு மதுரை வருகிறார். தனியார் ஓட்டலில் வைத்து மாநில நிர்வாகிகளை சந்திக்கும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். மறுநாள் (8-ந்தேதி) மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மாலை ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி அருகே வேலம்மாள் திடலில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    கூட்டணியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்தல், தென்மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெற முனைப்பு காட்டுதல் உள்ளிட்டவைகளை இலக்காக கொண்டு இந்த கூட்டத்திற்கு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    அரசியலும், ஆன்மீகமும் கலந்த மதுரை மண்ணில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார பணியை தொடங்க முடிவு செய்துள்ள பா.ஜ.க., நிச்சயம் இந்த கூட்டம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்தநிலையில் மதுரையில் இன்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மதுரையை மையப்படுத்தி அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ளன. காரணம், மதுரை தமிழகத்தின் உணர்ச்சி களம். ஒட்டுமொத்த அரசியல் உணர்வு களமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது, தேசிய அளவிலான பிரசாரத்தை அப்போதைய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மதுரையில்தான் தொடங்கினார்.

    மாநில அரசியலை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோரும் மதுரையில்தான் அரசியல் கட்சிகளை தொடங்கினர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை, கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். தென் மாவட்டங்களுக்கு வரவில்லை என்ற குறை இருந்தது. அதனை போக்கவே தற்போது அவர் மதுரை வருகிறார். நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது மதுரை தொகுதியில் போட்டியிட்ட என்னை ஆதரித்து ரோடு-ஷோ நடத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அதற்கு பலனாக மதுரையில் பா.ஜ.க. இரண்டாவது இடத்தை பிடித்தது. அதன் முக்கியத்துவத்தை அறிந்தும் அமித்ஷா மதுரை வருகை தர உள்ளார். இந்த கூட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள், மண்டல் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இது முழுக்க முழுக்க நிர்வாகிகளுக்கான கூட்டம் தான். செயல்வீரர்களுடன் அமித்ஷா பேசுகிறார்.

    பா.ஜ.க.வை பொறுத்தவரை தமிழக சட்டமன்ற தேர்தல் களம் வருகிற 8-ந்தேதி மதுரையில் அமித்ஷா வருகையுடன் தொடங்குகிறது. இது ஒரு அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரம் தான். அப்போது முதல் ஆபரேசன் கவுண்டவுன் தொடங்கிவிடுகிறது. அதாவது ஜூன் 8-ந்தேதி முதல் தி.மு.க. ஆட்சிக்கான கவுண்டவுன் தொடங்கி நாட்கள் எண்ணப்படுகிறது.

    அமித்ஷாவின் வருகையானது கூட்டணியை பலப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதனால் புதிய கட்சிகளை சேர்ப்பதாக அர்த்தமல்ல. இருக்கும் கட்சிகளின் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வியூகங்கள் வகுக்கப்படும். பொதுவான செயல்திட்டங்கள், தி.மு.க.வுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்படும். அதன் மூலம் தி.மு.க. மீதான அதிருப்தி ஆத்திரமாக மாறும்.

    உண்மையை எடுத்துச் சொல்லும்போது மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள். அதற்காக நாங்கள் பொய் சொல்லப்போவதில்லை. உண்மையை எடுத்துக்கூறுவதால் மக்கள் புரிதலோடு, விழிப்புணர்வாகவும் மாறும். சமீபத்தில் சென்னை வருகை தந்த மத்திய மந்திரி அமித்ஷா தங்களை சந்திக்கவில்லை என்று ஓ.பி.எஸ். கூறியிருந்தார். எங்களை பொறுத்தவரை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் எங்களது மதிப்புமிக்க தலைவர்கள். இந்த முறை மதுரை வருகை தரும் அமித்ஷா அவர்களை சந்திக்கலாம்.

    நாங்கள் இந்தியா கூட்டணி போல் கிடையாது. அனைவரையும் அழைத்து ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு உயர்த்தி காட்டி பலத்தை எடுத்துரைப்பது. விட்டால் அவர்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்பதால் அதுபோன்று நடந்து கொள்கிறார்கள். எங்கள் கூட்டணி அப்படி அல்ல.

    பழனியில் தமிழக அரசு நடத்திய முத்தமிழ் முருகன் மாநாடு என்பது வெளிப்படையான முருகன் மாநாடு. உள்ளுக்குள் சனாதன ஒழிப்பு மாநாடு. வெளிப்படையாக முருகனை பற்றி பேசிக்கொண்டு உள்ளுக்குள் இந்து விரோத காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகிறார்கள். இந்து தர்மம், இந்து மரபு, இந்து பண்பாடு, குறைந்தபட்சம் இந்து என்ற வார்த்தையில் கூட அவர்களுக்கு மரியாதை கிடையாது. நாங்கள் உள்ளும், வெளியி ம் முருக பக்தர்கள். அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலி, நாங்கள் எப்போதும் பசுதான்.

    பாராளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் நாங்கள் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி ஆகிய 5 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தோம். இது தவிர தமிழகத்தில் உள்ள மற்ற 29 தொகுதிகளில் கோவை, ஊட்டி, மத்திய சென்னை, தென்சென்னை, தர்மபுரி ஆகிய 5-ல் இரண்டாம் இடம் பிடித்தோம். ஒட்டுமொத்தமாக 29-ல் 5 இடங்களிலும், தென்மாவட்டங்களில் உள்ள 10-ல் 5 இடங்களிலும் இரண்டாம் இடத்தை பா.ஜ.க. பெற்றுள்ளது.

    சட்டமன்றத்திலும் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மத்தி, தெற்கு, கிழக்கு ஆகிய தொகுதிகளிலும் 2-ம் இடம் கிடைத்துள்ளது. தி.மு.க. வேண்டுமானால் தெற்கு தேய்கிறது என்று கூறலாம். பா.ஜ.க.வை பொறுத்தவரை தெற்கு வளர்கிறது. இதுபோன்ற காரணங்களால் தமிழ் நாட்டில் தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், குறிவைத்தும் பா.ஜ.க. செயலாற்றி வருகிறது. அதற்கான முன்னோட்டம் தான் அமித்ஷாவின் மதுரை வருகையும்.

    இந்த கூட்டம் தேர்தல் வந்துவிட்டது, தயாராகுங்கள் தொண்டர்களே என்பதை அறிவிக்கும் ஒரு பிரசாரமாகவும், பணியாகவும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோர்ட்டு உத்தரவு தொடர்பான ஆணை சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, சாலை நடுவே செடிகள் வைக்கவில்லை, முறையாக சீரமைக்கவில்லை என்பதுடன் கட்டண வசூலை மட்டும் குறிக்கோளாக கொண்டு எலியார்பத்தி சுங்கச்சாவடி செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையடுத்து எலியார் பத்தி சுங்கச்சாவடி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடி நிர்வாகம் சாலையில் உரிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டுமென தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இதை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு சங்கசாவடிகளுக்கும் கட்டண வசூலிக்க நேற்று முன்தினம் தடை விதித்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு குறித்து தங்களுக்கு முறையான ஆணை வரவில்லை எனக் கூறி தொடர்ந்து எலியார்பத்தி சுங்கச்சாவடி கட்டண வசூலில் ஈடுபட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து கோர்ட்டு உத்தரவு தொடர்பான ஆணை நேற்றைய தினம் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. கட்டண வசூலுக்கு தடை வித்த ஆணை கிடைக்கப்பெற்றதால் நள்ளிரவு முதல் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மதுரை-தூத்துக்குடி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன. கோர்ட்டு உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது.
    • போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2023 ஆண்டு தக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    மதுரையை தலைமையிடமாக கொண்டு அப்சல் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தினரின் ஆசை வார்த்தையை நம்பி, நான் உள்பட ஏராளமானவர்கள் பல கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தோம். எங்கள் பணத்தை அந்த நிறுவனம் மோசடி செய்தது. இதுகுறித்து புகார் அளித்ததால் 2017-ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வு பெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அப்சல் நிறுவன மேலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது.

    அந்த குழு, நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிறுவனத்தினர் இதற்கு ஒத்துழைக்கவும் இல்லை. இதற்கிடையே அப்சல் நிறுவன நிர்வாகி செந்தில்வேல் இறந்துவிட்டார். நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க போலீசார் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியாகவும் போலீசார் உள்ளனர். எனவே அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். இதற்கிடையே போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் இதுவரை நிதி நிறுவன மோசடி பிரிவின் கீழ் 1,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 6,90,166 நபர்கள் முதலீடு செய்துள்ளனர். இதற்காக இதுவரை 366 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 827 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வழக்கில் இணைக்கப்பட்டு உள்ளது.

    பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சுமார் ரூ.50 கோடியே 71 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் 373 கோடி ரூபாய் வைப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது. இதில் 264 கோடி ரூபாய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணையை முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. 7 ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது போல இந்த வழக்கு உள்ளது. இனியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும் காரணங்களை ஏற்க முடியாது.

    போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான்.

    எனவே அரசு இந்த விவகாரங்களை எளிதாக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்தால் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படும்.

    பொருளாதார மோசடியில் சிக்கியவர்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையை நம்பி தான் உள்ளனர். எனவே இந்த வழக்கை ஆறு மாதத்தில் விசாரணை செய்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • மதுரை வரும் அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
    • மதுரை ஒத்தக்கடையில் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ந்தேதி மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக மாநில நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.

    ஜூன் 2-வது வாரத்தில் மதுரைக்கு வரும் அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    ஏற்கனவே தி.மு.க. பொதுக்குழு மதுரையில் நடைபெற்ற நிலையில் மத்திய உள்துறை அமித்ஷா மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வரும் 8-ந்தேதி மதுரை ஒத்தக்கடையில் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சொகுசு காரில் முதலமைச்சர் வரும்போது மட்டும் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது.
    • ஒரு முறைக்கு மறுமுறை ஆட்சிக்கு வராத சுவாரசியம் தி.மு.க.விற்கு இருக்கிறது.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் வருகிறார் என்றால் போக்குவரத்து நிறுத்தம் செய்வது சகஜம் தானே, மதுரையில் முதல்வர் வருகைக்காக 3 மணி நேர போக்குவரத்து தடை செய்தார்கள். நடந்து செல்பவர்கள் கூட முதல்வரை காண வரவில்லை. 10 தொகுதியில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறுகிறார். வாயில் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் மக்கள் நினைக்க வேண்டுமே?

    மக்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கானோர் கூடியிருப்பார்கள். முதல்வர் ரோடு-ஷோ இன்னொரு சித்திரை திருவிழாவாக மாறியிருக்கும். ரோடு-ஷோவிற்கு செயற்கையாக மக்கள் கூட்டப்பட்ட கூட்டம், தானா சேர்ந்த கூட்டம் அல்ல. மக்களுக்கான திட்டத்தை கொடுங்கள். திட்டங்கள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க நான் தயார்.

    முதல்வர் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார். அவர் சென்னை கூவம் கால்வாயை பார்த்ததே இல்லையா? மதுரக்காரர்கள் எதை செய்தாலும் சற்று வித்தியாசமாக செய்கிறார்கள். மதுரையில சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதில் தான் நாம் நடந்து செல்கிறோம். நடந்து சென்றால் கூட வரி விதிக்கும் அளவுக்கு வரி மேல் வரி போடுகிறார்கள். சொகுசு காரில் முதலமைச்சர் வரும்போது மட்டும் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது.

    பந்தல்குடி கால்வாயை பொருத்தவரை ஒருபுறம் இஸ்லாமியர்களும், மற்றொருபுறம் பட்டியலின மக்களும் வாழ்கிறார்கள். இந்த கால்வாயில் திரை அமைத்தது குறித்து நான் விமர்சனம் செய்தேன். என்னை தி.மு.க.வினர் விமர்சனம் செய்தார்கள். தெர்மாகோல் விஞ்ஞானியே நீ என்ன செய்தாய் என குறிப்பிட்டிருந்தார்கள். எங்க காலத்தில் சாக்கடை நீரை உறிஞ்சி சுத்தம் செய்வதற்கு இரண்டரை கோடி மதிப்பீட்டில் மறுசுழற்சி செய்து சாக்கடை நீர் தேங்காத அளவிற்கு மழைநீர் மட்டும் செல்வதற்கு வழிவகை செய்து கழிவுநீர் வைகையில் கலக்காமல் செய்தோம்.

    ஆட்சி மாற்றம் ஆன பிறகு மேம்பாலம் கட்டுவதற்காக இரண்டரை கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மறுசுழற்சி திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் பந்தல்குடி கால்வாய் சாக்கடையை பார்த்து விடக்கூடாது என திரைசீலைகள் அமைக்கப்பட்டது. முதல்வர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அலங்கார தோரணம் கட்டினார்கள். இதைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி நாங்கள் பல வருடமாக இங்கேதான் வாழ்கிறோம் என சண்டை போட்ட பிறகு அகற்றினார்கள்.

    திரைச்சீலைகள் அமைக்கப்பட்டதற்கு மாவட்ட கலெக்டர் ஒரு விளக்கம் கொடுத்தார். யார் கட்டினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார். இது மாதிரியான ஒரு மாவட்ட கலெக்டரை நான் பார்த்ததே இல்லை. எதிர்க்கட்சி என்றால் பேசத்தானே செய்வார்கள்.

    ஒரு முறைக்கு மறுமுறை ஆட்சிக்கு வராத சுவாரசியம் தி.மு.க.விற்கு இருக்கிறது. அதற்கான ஒரு சான்று, மதுரையில் பொதுக்குழு கூட்டினால் எப்பவும் வந்ததில்லை. கலைஞர் இருந்தபோதும் வந்ததில்லை. தி.மு.க.வில் தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தவரை ஆட்சிக்கு வந்தார்கள். தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு 2-வது முறையாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததே இல்லை.

    மதுரையில் தி.மு.க.பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. 1977-ல் நடந்த பொதுக்குழு அதன் பிறகு 12 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி தான் வந்தது. தி.மு.க.விற்கு வனவாசம் தான். இதனால் தான் மதுரைக்காரர்கள் என்றாலே தி.மு.க. தலைமைக்கு பிடிக்காது. யாரோ சொல்லி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் உலகக் கோப்பை வாங்கியதாக மாவட்ட கலெக்டர் முதல் முதல்வர் வரை ஏமாற்றியது போல பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்தி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள்.

    தி.மு.க.வின் பொதுக்குழுவில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் இருப்பதை நேற்றுதான் நான் பார்த்தேன். மதுரையில் பொதுக்குழு நடத்தி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட தி.மு.க. இனிமேல் 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. முதல்வர் ஏதோ அ.தி.மு.க. பொதுச்செயலாளரை திட்டுகிறார். திட்டதிட்ட திண்டுக்கல் நாங்க. எங்க பொதுச்செயலாளர் அவ்வளவு பவர்புல்லாக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு.
    • ரெயில்வே திட்டங்களில் தமிழ் நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.

    மதுரை:

    மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    1. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி தினத்தை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்.

    2. தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றது முதல் எதிர்கொண்ட 2019 பாராளுமன்றத் தேர்தல், 2020 ஊரகஉள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 பாராளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்க ளங்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றிடும் வகையில் வியூகத்தை வழங்கி, அந்த வெற்றிக்கு ஓயாது உழைத்திட்டவரும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருபவருமான கழகத் தலைவர் முதலமைச்சருக்கு பாராட்டு தல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

    மேலும் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகக் கூட்டணி முழுமையான வெற்றிபெற்று, தி.மு.க. தலைவர் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பு ஏற்க நாம் அனைவரும் அயராது உழைப்போம்.

    3. இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு. பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கிறது.

    4. உழவர்கள்-நெச வாளர்கள்-மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனை களை மக்களிடம் கொண்டு சேர்க்க பரப்புரை செய்வோம்.

    5. தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு.

    6. ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களான மகளிர் கட்டணம் இன்றி பஸ்களில் பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்.

    7. தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர்-இளம் தலைவன் பணி தொடரத் துணை நிற்போம்!

    8. ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக் கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்.

    9. தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம். கல்வி நிதி ரூ.2152 கோடி தர வலியுறுத்துவதுடன் வரிப் பகிர்வின் பங்கை 50 சதவீதம் ஆக உயர்த்திட வேண்டும்.

    10. தமிழர்களின் மொழி உணர்வுடன் விளை யாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிட வேண்டும்.

    11. கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.

    12. ரெயில்வே திட்டங்களில் தமிழ் நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.

    13. சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறை யாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

    14. பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில் மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம் அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கான கைப்பாவைகளாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரைஅரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறுகள் அமைத்தல்,

    தமிழ்நாட்டின் திட்டங்களுக்குப்போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு எனத் திட்டமிட்ட வஞ்ச கங்களும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்துதல், அரசியல் எதிரிகள்மீது வெறுப்பு பரப்புரைப் பேச்சுகளை உமிழ்தல், பொய் வழக்குகள் யாய்ச்சுதல், அரசு எந்திரங்களைச் சட்ட மீறலாகப் பயன்படுத்தி மாநிலஅரசுகளுக்கு மிரட்டல் விடுத்தல், ஒன்றிய அரசின் இலஞ்ச-ஊழல்களை ஆதாரத்துடன் எதிர்த்து எழுதும், பேசும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதுபொய் வழக்குகள், சிறை போன்ற அநீதிகளுமே தொடர்வதால், இத்தகைய சர்வாதிகாரப் போக்கை நடத்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

    15. மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகளுக்கு கண்டனம்.

    16. மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிட வேண்டும்.

    17. சாதிவாரிக் கணக் கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!

    18. தமிழ்நாட்டின் பாராளுமன்றப் பிரதிநிதித்து வத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.

    19. கவர்னரின் அதி கார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலை நாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு பாராட்டு.

    20. கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு பொதுக்குழு வன்மையான கண்டனம் தெரிவிக்கிறது.

    21. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.

    22. உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திட வேண்டும்.

    23. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் தன் னாட்சி உரிமை பெற்றிட சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின் மூலம் மாநில சுயாட்சி கருத்தி யலுக்கு செயல் வடிவம் கொடுத்திட உயர்நிலைக் குழுவை நியமித்த தமிழக அரசுக்கு பாராட்டு.

    24. காலநிலை மாற்றத்தால் பருவமழை காலங்கள் மாறி வரும் சூழலில் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள களத்தில் நிற்கும் முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும், கழக தோழர்கள் உறுதுணையாக நின்று பணிபுரிய வேண்டும்.

    25. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என அழகிய தமிழ்ப் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுவோம். வணிகப் பெருமக்கள் தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெயர் எழுத வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

    26. அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவிப்பதுடன், சென்னையில் மாணவி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு 5 மாதங்களில் நீதியை பெற்று தந்த முதலமைச்சருக்கும், தமிழக காவல் துறைக்கும் பொதுக் குழு பாராட்டு தெரிவிக்கி றது.

    27. எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வஞ்சக பா.ஜ.க.வையும், துரோக அ.தி.மு.க.வையும் முழுமையாக விரட்டிய டித்து, இந்தியாவின் ஜனநாயகக் காவலராம் நம் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திட அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இன்று முதல் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி, அயராது பாடுபடுவோம். தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர வைக்க பொதுக்குழு சூளுரைக்கிறது.

    • கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் நான் அல்ல.
    • தி.மு.க. இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன் பிறப்புகள் தான் காரணம்.

    மதுரையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தடம் மாறாத கொள்கை கொண்ட கூட்டம் நாம். அதனால் எந்த கோமாளி கூட்டமும் நம்மை வெல்ல முடியவில்லை. இனியும் வெல்ல முடியாது. அடுத்தாண்டு இந்த நேரத்தில் தமிழகத்தில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது என்பது தலைப்பு செய்தியாக இருக்க வேண்டும்.

    கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் நான் அல்ல. ஆணவமோ, மமதையோ எனக்கு எப்போதும் வராது. பணிவு தான் தலைமைத்துவத்தின் அடையாளம்.

    தி.மு.க. இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன் பிறப்புகள் தான் காரணம். சூரியன் நிரந்தரமானது. அதேபோல் தி.மு.க.வும் நிரந்தரமானது. தி.மு.க. எப்படி நிரந்தரமானதோ, அதேபோல் தி.மு.க. ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க.- பா.ஜ.க. ஆட்சியில் அதலபாதாளத்திற்கு சென்றுள்ள தமிழகத்தை நாங்கள் மீட்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

      மதுரை:

      தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மதுரை உத்தங்குடியில் இன்று நடைபெற்றது.

      உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், கலைஞர் அறிவாலயம் முகப்பு தோற்றத்துடன் கூடிய பொதுக்குழு கூட்ட திடலின் முன்பாக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை முதலஅமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் சரியாக 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

      முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்கள், தி.மு.க.வின் அமைப்பு ரீதியிலான 23 அணிகளின் நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வின் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 76 மாவட்டச் செயலாளர்கள் என 7 ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் நேற்று முதலே மதுரை வந்தடைந்தனர்.

      அவர்களுக்கு கூட்ட அரங்கில் தனித்தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு அங்கு பொதுக்குழுவில் பங்கேற்பதற்கான படிவம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட நிர்வாகிகள் பூர்த்தி செய்து கொடுத்து மினிட் புத்தகத்தில் கையெழுத்திட்டனர். தொடர்ந்து வழங்கப்பட்ட அனுமதி கடிதம் மற்றும் பேட்ஜூடன் 8 மணி முதலே தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று அமர்ந்தனர்.

      பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மேடை கலைஞர் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டு நவீன டிஜிட்டல் வடிவில் கலை நுணுக்கங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு 11 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பல்வேறு மலர் அலங்காரத்துடன் கூடிய மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்ததும், ஏற்கனவே வந்திருந்தவர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்து வணக்கம் தெரிவித்தார்.

      பின்னர் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

      பின்னர் ஆர்.எஸ்.பாரதி தொடக்கவுரையாற்றினார். மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி வரவேற்றார். இதையடுத்து இரங்கல் தீர்மானத்தை டி.கே.எஸ்.இளங்கோவன் வாசித்தார்.

      இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து ராணி எலிசபெத், போப்பாண்டவர் பிரான்சிஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங், ராம்விலாஸ் பஸ்வான், அஜித்சிங், மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் என்.சங்கரய்யா, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரெங்கன், இ.வி.கே.எஸ்.இளங்கோவன், கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, தா.பாண்டியன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், குமரி அனந்தன், புற்றுநோய் மருத்துவர் சாந்தா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், விவேக், அவ்வை நடராஜன், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்அ.மா.சாமி, முரசொலி செல்வம், முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உள்ளிட்ட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

      தி.மு.க. பொதுக்குழுவில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

      'எல்லாருக்கும் எல்லாம்' எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. துளியும் சமர சமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு "ஓரணியில் தமிழ் நாடு" என உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.

      தி.மு.க.வின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட - பகுதி - நகர - ஒன்றிய - பேரூர் - வட்ட - கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும். அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும்.

      புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

      இவ்வாறு அந்த சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

      தேர்தல் களப்பணி தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வினர் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றியை அள்ளிக்குவித்திட களப்பணி ஆற்றுவது, ஒற்றுமையுடன் செயல்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை தனித்தனியாக சந்தித்து திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறி அவர்களின் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் பெற்றுத்தருவது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

      மேலும் தி.மு.க.வின் தணிக்கைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.

      தொடர்ந்து இந்திய அரசியல் மற்றும் தமிழ் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் வகையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

      மதியம் 1 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து பொதுக்குழுவில் பங்கேற்றவர்களுக்கு சைவ, அசைவ உணவு பரிமாறப்பட்டது.

      • தென்னகத்தில் தலைசிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு உணவுகள் தயார் செய்யப்பட்டன.
      • அயிரை மீன் குழம்பு, மட்டன் குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், ஐஸ்கிரீம், ஜிகிர்தண்டா, பீடா, வாழைப்பழம் இடம் பெற்றுள்ளது

      மதுரை உத்தங்குடியில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

      உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், கலைஞர் அறிவாலயம் முகப்பு தோற்றத்துடன் கூடிய பொதுக்குழு கூட்ட திடலின் முன்பாக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் சரியாக 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

      முன்னதாக கூட்டத்தில் 3 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்கள், தி.மு.க.வின் அமைப்பு ரீதியிலான 23 அணிகளின் நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வின் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 76 மாவட்டச் செயலாளர்கள் என 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

      தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட உணவுக்கூட அரங்கில் 48 வகையான சைவ, அசைவ உணவுக்கு சுடச்சுட பரிமாறப்பட்டன. இதற்கான நேற்று முதலே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகளை தொடங்கினர். தென்னகத்தில் தலைசிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு இந்த உணவுகள் தயார் செய்யப்பட்டன.

      அதன்படி அசைவ உணவில் பன் அல்வா, மட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் காடி சாப்ஸ், மட்டன் உப்புக்கறி, மட்டன் கோலா உருண்டை, மட்டன் ஒயிட் குருமா, வஞ்சிரமீன் வறுவல், நாட்டுக்கோழி மிளகு கறி, சிக்கன் 65, ஆம்லெட், மட்டன் பிரியாணி, எலும்பு குழம்பு, தயிர் வெங்காயம், எலும்பு தால்சா, சாதம், அயிரை மீன் குழம்பு, மட்டன் குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், ஐஸ்கிரீம், ஜிகிர்தண்டா, பீடா, வாழைப்பழம் இடம் பெற்றுள்ளது.

      சைவ உணவில் குல்கந்து பர்பி, பனங்கற்கண்டு மைசூர்பா, கதம்ப பொரியல், உருளைக்கிழங்கு காரகறி, சவ்சவ் கூட்டு, சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் பிரை, வெண்டைக்காய் பிரை, காளிபிளவர் சில்லி, வெஜ் கட்லெட் (சாஸ்), பருப்பு வடை, சப்பாத்தி, சிப்பி காளான் குழம்பு, வெஜிடேபிள் பிரியாணி, ஆனியன் தயிர் பச்சடி, வெள்ளை சாதம், பருப்பு பொடி (நெய்), சாம்பார், எண்ணைய் கத்திரிக்காய் காரக்குழம்பு, தக்காளி ரசம், சேமியா பால் பாயாசம், அப்பளம், தயிர், இஞ்சி புளி ஊறுகாய் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

      • கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
      • தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

      தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.

      மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

      பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

      * கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்.

      * தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி தீர்மானம்.

      * ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

      * விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

      * இஸ்லாமியர் சொத்துக்களை சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்.

      * தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை கூடாது என தீர்மானம்.

      * அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்.

      * ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்க வேண்டும்.

      * ஒவ்வொரு பூத்களில் 30% வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக்க வேண்டும் என தீர்மானம்.

      உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

      ×