என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.
மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்.
* தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி தீர்மானம்.
* ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* இஸ்லாமியர் சொத்துக்களை சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்.
* தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை கூடாது என தீர்மானம்.
* அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்.
* ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு பூத்களில் 30% வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக்க வேண்டும் என தீர்மானம்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






