என் மலர்
கிருஷ்ணகிரி
- என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர்.
எலுமிச்சங்கிரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதில் இவருக்கும், நிர்வாகத்தினருக்கும் இடையே மன வருத்தம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக வெங்கடேசனையும், அவரது குடும்பத்தையும் ஊரைவிட்டு தள்ளி வைத்ததாக தெரிகிறது.
தன்னை கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி கடந்த, 8-ந் தேதி வெங்கடேசன் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம், வெங்கடேசன் எலுமிச்சங்கிரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு தனது உடல் மீது டீசலை ஊற்றி தீக்குளித்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை காப்பாற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு வெங்கடேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தீக்காயம் அடைந்த வெங்கடேசனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேசன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
என்னை கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கியதாக 9 பேர் மீது புகார் அளித்தேன். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடும் மன உளைச்சலால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன். என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாகவும் மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஊத்தங்கரையில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு நேற்று சென்றனர்.
- விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தை அடுத்த சின்னபனமுட்லுவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது33). கூலி தொழிலாளி.
அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் நாகன், (40), ஹரிஷ், (20) ஆகிய 3 பேரும் இருசக்கர வகானத்தில் ஊத்தங்கரையில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு நேற்று சென்றனர்.
பின்னர் 3பேரும் அதே வண்டியில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது மதியம் 3 பேரும் ஜெகதேவி பஸ் நிறுத்தம் அருகில் திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது கடலூரிலிருந்து ஓசூர் சென்ற அரசு பஸ், அவர்கள் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த 3 பேரின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் விபத்தில் பலியான சரத்குமார், நாகன், ஹரிஷ் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெகதேவி பஸ் நிறுத்த பகுதியில், தினமும் விபத்து நடக்கிறது. இதை கட்டுப்படுத்த இப்பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- தினமுன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.
- இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்.
தினமும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில், தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.
இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.
வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது, சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர்- வள்ளலார் அதனை மீட்டார்.
தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்படுவது எனக்கு வலியை தருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கெலமங்கலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராமத்திற்கு செல்ல நேரம் ஆகும்.
- காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரியும் காடுகள் வழியே பயணம் செய்தனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள தேவன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஆனந்தி (வயது23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான ஆனந்தி அவரது தாய் வீடான தொழுவ பெட்டா பழையூர் கிராமத்தில் தங்கி இருந்தார். இந்த கிராமம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் உள்ளது.
நேற்று இரவு 11.27 மணி அளவில் ஆனந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராம செவிலியர் இது குறித்து கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜேஷ் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கெலமங்கலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராமத்திற்கு செல்ல நேரம் ஆகும் என்பதால் தாயையும், சேயையும் உடனடியாக காப்பாற்ற மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நள்ளிரவு நேரத்தில் ஒரு காரில் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 10 கிலோ மீட்டர் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரியும் காடுகள் வழியே பயணம் செய்தனர்.
நீண்ட நேரத்துக்கு பின் பழையூர் கிராமத்திற்கு சென்ற மருத்துவ குழுவினர் 12.25 மணி அளவில் ஆனந்திக்கு பிரசவம் பார்த்தனர்.
அப்போது சுக பிரசவத்தில் அவருக்கு 2.700 கிலோ கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது.
ஆம்புலன்ஸ் அந்த பகுதி வழியாக வருவதற்கு நேரமாகவே மருத்துவர் ராஜேஷ் குமார் தனது காரில் தாயையும், சேயையும் பத்திரமாக வனவிலங்குகள் நடமாடும் அதே காட்டுப் பகுதி வழியாக உனி செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில் வனவிலங்குகள் நிறைந்த காட்டுப்பகுதி வழியாக சென்று தாயையும் சேயையும் காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
- கூண்டின் முன்பு ஒரு ஆட்டை உயிருடன் கட்டி வைத்து காண்கணித்து வந்தனர்.
- சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த சம்பவத்தால், அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிக்கோட்டையில் உள்ள அடிமைசாமிபுரத்தில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினர் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் அந்த பகுதியில் ஒரு கூண்டை வைத்தனர். அந்த கூண்டின் முன்பு ஒரு ஆட்டை உயிருடன் கட்டி வைத்து காண்கணித்து வந்தனர்.
கூண்டின் முன்பு இருந்த ஆட்டை கடிப்பதற்காக வந்த சிறுத்தை கூண்டுக்குள் லவகமாக சிக்கியது. கூண்டிற்குள் சிக்கிய அந்த சிறுத்தை சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களாக தேன்கனிக்கோட்டை பகுதியை அச்சத்தில் உறைய வைத்திருந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த சம்பவத்தால், அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
- சக்திவேல் குள்ளனூர் ஏரிக்கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு தலையின் பின்புறம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
- பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48) விவசாயி. இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழிலும் செய்து வந்தார்.
இவருக்கு லதா (45) என்ற மனைவியும், சுகாசினி (22), சுலேச்சனா (20), என்ற 2 மகள்களும், கலை (17) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை சக்திவேல் மகன் கலையை போச்சம்பள்ளியில் இருந்து அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இந்த நிலையில் சக்திவேல் குள்ளனூர் ஏரிக்கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு தலையின் பின்புறம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்,
உடனே உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே உறவினர்கள் சக்திவேலின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சக்திவேல் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன் சக்திவேலின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சக்திவேலை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
சக்திவேலுக்கும் அவரது உறவினர்களுக்கிடையே நிலம் சம்பந்தாமாக பிரச்சனை இருப்பதால் யாராவது அவரை வெட்டி கொலை செய்தனரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தாமாக யாராவது வெட்டி கொன்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சக்திவேலின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாலேகுளி, பேவநத்தம் வழியாக சென்ற யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின.
- யானைகள் எந்த நேரத்திலும் சானமாவு அல்லது ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஜார்க்கலட்டி அருகே உள்ள முத்துார் கிராமத்தில் தனியார் மாந்தோப்பில் 6 யானைகள் முகாமிட்டிருந்தன.
அவற்றை நேற்று முன்தினம் மாலை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது சம்பத் நகர், பாலேகுளி, பேவநத்தம் வழியாக சென்ற யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பேவநத்தம் அருகே உள்ள புதூர் வனப்பகுதிக்கு யானைகள் சென்றன.
இந்த யானைகள் எந்த நேரத்திலும் சானமாவு அல்லது ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. 6 யானைகள் நடமாட்டத்தால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன.
- காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 35 க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை கடந்த சில நாட்களுக்கு முன் ஜவளகிரி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
இந்த யானைகளை கர்நாடகாவுக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 15 க்கு மேற்பட்ட காட்டு யானைகள் தனியாக முகாமிட்டு விவசாய பயிர்களின் நாசம் செய்து வருகின்றன.
அதேபோல் ஜவளகிரி வனப்பகுதியிலும் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.
- தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி குள்ளனுர் கோணனூர், வடமலம்பட்டி மற்றும் அதன் சுற்றிய வட்டார கிராமங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது.
கனமழைக்கு குள்ளனூர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.
மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரானது புகுந்து பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நேற்று இரவு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் வீட்டிலிருந்த அரிசி துணி மற்றும் பொருட்கள் ஆவணங்கள் சேதமாகியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
தற்பொழுது குடியிருப்பு வாசிகள் வீட்டில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் கிராம மக்களுக்கு கூறுகையில்,

குள்ளனூர் கிராமம் முதல் போச்சம்பள்ளி வரையில் தண்ணீர் செல்லும் பாதையானது தற்போது ஆக்கிரமிப்பு செய்து மண் கொட்டி சமப்படுத்தப்பட்ட நிலையில் தண்ணீரானது செல்ல பாதை இல்லாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்து அடிக்கடி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகளுக்குள் மழை நீர் புகுந்த பகுதிகளை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் ஏரி கால்வாய் பகுதிகளை அகலப்படுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கவும், உடனே உணவு வழங்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
- புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீசார் கிருஷ்ணகிரி-ஊத்தங்கரை சாலை பெருகோபனப் பள்ளி பக்கமாக ரோந்து சென்றனர். அந்த பகுதியில் இருந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு குட்கா காரில் கடத்தி வரப்பட்டதும், போலீசுக்கு பயந்து காரை விட்டு டிரைவர் தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.
ஓசூர் தாலுகா மத்திகிரி போலீசார் டி.வி.எஸ். சோதனை சாவடி பக்கமாக ரோந்து சென்றனர். அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 13 கிலோ 750 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் மணிகண்டன் (33), ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ரூ.19 ஆயிரத்து 600 மதிப்புள்ள ஸ்கூட்டர், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- காட்டு யானைகள் குட்டிகளுடன் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன.
- காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த காட்டு யானைகளும் ஏற்கனவே அங்கு முகாமிட்டிருந்த காட்டு யானைகள் என மொத்தமாக 50-க்கும் மேற்பட்ட யானைகள் சேர்ந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை கஸ்பா பகுதியில் முகாமிட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் தாவரக்கரை வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன.
இந்த காட்டு யானைகள் கவிக்கோவில், மாரசந்திரம் மேடு, சாப்ராணப்பள்ளி, சீனிவாசபுரம், லக்கசந்திரம் வழியாக அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை கொத்தூர், உச்சனப்பள்ளி, அர்த்தகூர், பாலதோட்டனப்பள்ளி, ரங்கசந்திரம், கோட்டை உலிமங்கலம் கிராமங்கள் வழியாக தாவரக்கரை வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். காட்டு யானைகள் விரட்டப்பட்டதால் ஓசூர் சானமாவு, ராயக்கோட்டை, ஊடேதுர்கம், தேன்கனிக்கோட்டை கஸ்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.
இதனிடையே, 20 யானைகள் தாவரக்கரை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் யானைகளை விரைந்து கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.
- நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.
நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
இதுதொடர்பாக, கிருஷ்ணகிரியில் நாதக நிர்வாகிகள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கொடி நட்டு, மேடை அமைப்பதில் இருந்து கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்கிற எங்களை எச்சில் என்கிறார் அண்ணன் சீமான். புதிதாக வருபவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்கள் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






