என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
    • மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.

    கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் மீது போலீசில் தாய் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை.

    உடனே இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம் எதற்காக சிறுமி பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பாமல் இருந்து வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த தாயார் எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கரு கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளோம் என்றார். இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

    மேலும், சிறுமியின் தாயார் கூறிய தகவலை கேட்டு அவர் திடுக்கிட்டார்.

    இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான் காரணம். 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார்.

    அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (வயது57). மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும், 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை காண்பிக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மாணவியின் உறவினர்கள் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

    • மாணவியை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் மீது போலீசில் தாய் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை.

    உடனே இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம் எதற்காக சிறுமி பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பாமல் இருந்து வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த தாயார் எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கரு கலைப்பு செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளோம் என்றார். இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

    மேலும், சிறுமியின் தாயார் கூறிய தகவலை கேட்டு அவர் திடுக்கிட்டார்.

    இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான். 3 பேரும் சேர்ந்து தான் அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார்.

    அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (வயது57). மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன்காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி என்.சி.சி. பயிற்சியாளர், பள்ளி தாளாளர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியுள்ளாகியது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் பயின்ற 8-ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.
    • தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் ஊராட்சி சவுளுகொட்டாய், பூசாரி கொட்டாய், சின்ன பாளேத்தோட்டம் மற்றும் மொளுகனூர் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த தார் சாலையானது தற்பொழுது வருவாய் துறை அதிகாரிகள் இந்த பாதையானது நீர் வழிப்பாதையெனவும் இந்த தார் சாலையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கிராமங்களுக்கு செல்ல வேறுமாற்று பாதை இல்லாத நிலையில் தற்பொழுது கிராம மக்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் தார் சாலையை தூர்வாரி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊரின் முகப்பு வரை கால்வாய் தூர்வாரும் பணியானது முடிவுற்ற நிலையில் தற்போது கிராம மக்கள் பயன்படுத்தி வந்த தார் சாலையில் தூர்வார அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.

    கிராம மக்கள் மாற்று பாதை அமைத்து தந்த பின்னரே கால்வாயினை தூர்வார வேண்டும் என நூதன முறையில் வீடுகளின் முன்பும், தெருக்களின் முன்பும் கருப்பு கொடியினை கட்டி தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    வீடுகளில் முன்பு கருப்பு கொடிகளை கட்டி பாதை கேட்டு போராட்டம் நடத்தி வரும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் விரைந்து பாதைக்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பெயரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

    • ஊத்தங்கரையில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட நபர்கள் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடை விற்பனையாளர்கள் கடை முடித்து கணக்கு வழக்குகளை ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பும் வேலையில் ஊத்தங்கரை போலீஸாரால் திடீரென கைது செய்யப்பட்டு ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் முன்பு சம்பள உயர்வு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த இருந்த நிலையில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஊழியர்கள் பஸ்கள் மூலமாக சென்னைக்கு செல்ல முற்பட்டனர்.

    இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அப்பொழுது டாஸ்மார்க் ஊழியர் அண்ணாமலை என்பவர் உரிமைகளுக்காக போராட சென்னையில் ஒன்றுகூட இருந்த டாஸ்மாக் ஊழியர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து உள்ளதாக கூறுகின்றனர்.

    எங்களது உரிமைகளை மீட்க கூட எங்களுக்கு ஏன் அனுமதி அளிக்க மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

    கைதானவர்களில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக மாத்திரை கூட எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் போலீசார் கைது செய்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு போலீசாரால் சார்பில் குடிநீர், உணவு ஏதும் வழங்காமல் பனிக்காலத்தில் தவிக்க விட்டதாகவும் இதனால் உடல் நலம் பாதிப்பு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

    • கரடுமுரடான வார்த்தை சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பெரியார்.
    • பெரியாரை பற்றி விமர்சனம் செய்வதற்கே பெரியார் தான் காரணம் என்பதை அவர் மறந்து விட்டார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், பெரியார் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என்று கே.பி.முனுசாமி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

    ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பி.முனுசாமி, "பெரியார் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. பெரியாரை பற்றி விமர்சனம் செய்வதற்கே பெரியார் தான் காரணம் என்பதை அவர் மறந்து விட்டார். எங்களை போன்ற சாதாரண மக்களை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் அரசியல் ரீதியா பல்வேறு பொறுப்புகளுக்கு வந்து உங்கள் முன் பேசுவதற்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது பெரியார்.

    இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பும் ஒரு குறிப்பிட்ட மக்களிடத்தில் தான் ஆட்சி இருந்தது. அந்த குறிப்பிட்ட மக்களிடத்தில் உள்ள குறைகளை எடுத்துச்சொல்லி, மூட பழக்க வழக்கங்களை பின்பற்றி வந்த ஏழை எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயர்ந்தவன் - தாழ்ந்தவன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற நிலையை மாற்றி மனிதர் அனைவரும் சமம் என்பதை மக்களிடத்தில் எடுத்து சொல்லி கரடுமுரடான வார்த்தை சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பெரியார்.

    பெரியாரின் மாணவராக இருந்த அண்ணா அவர்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து தந்தை பெரியாரின் கொள்கைகளை சட்டமாக கொண்டு வந்தார். இன்னும் 50 ஆண்டுகள் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி இருப்பதற்கு அடித்தளமிட்டது பெரியார் தான்" என்று தெரிவித்தார்.

    • முனியம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராமசாமி அவ்வப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தளி:

    தேன்கனிக்கோட்டையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளார். படுகாயம் அடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைதுக்கு பயந்து கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி (55). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி முனியம்மாள் (40). இவர் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    முனியம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராமசாமி அவ்வப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராமசாமி கத்தியால் முனியம்மாவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவருக்கு தலை, கை, கால், வயிறு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு காயம் விழுந்துள்ளது.

    படுகாயங்களுடன் அலறியபடி முனியம்மாள் வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு ஓடிவந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் முனியம்மாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அதே நேரத்தில் இந்த விவகாரம் வெளியே தெரிந்ததால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்ச உணர்வில் ராமசாமி தனது வீட்டிற்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கு போட்டு உயிரிழந்த ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் முனியம்மாள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கொரியர் மூலம் கஞ்சா விநியோகிக்கப்படுவதாக நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
    • வாலிபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டதில் மேலும் 30 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி, கர்நாடக, ஆந்திரா ஆகிய இருமாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள பகுதி என்பதால் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் கடத்துவதை தடுப்பது, குற்றச்சம்பவங்களை குறைப்பது என்பது போலீசாருக்கு சவாலானதாக இருந்து வருகிறது.

    இந்தநிலையில், ஓசூர் பகுதியில் கொரியர் மூலம் கஞ்சா விநியோகிக்கப்படுவதாக நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஒசூர் ரிங் ரோடு பகுதியில், இரண்டு நாட்களாக நோட்டமிட்டதில், கஞ்சா பார்சலை கொரியர் செய்ய வந்த இருவர் 2 கிலோ கஞ்சாவுடன் கையும் களவுமாக சிக்கினர்.

    இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த அபிலாஷ் (வயது21), விஷ்ணு சத்தியா (23) என தெரியவந்துள்ளது.

    மேலும் அவர்கள், ஓசூர் அருகே பேளகொண்டப் பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டு ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து அறையில் பதுக்கி வைத்து ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் சில்லரையாக கஞ்சா விற்றதும், கேரளாவிற்கு கிலோ கணக்கில் கொரியர் அனுப்பி வந்ததும் தெரியவந்தது.

    போலீசார், அந்த வாலிபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டதில் மேலும் 30 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 32 கிலோ கஞ்சாவை கைப்பற்றியதுடன் அவர்கள் இருவரையும் நுண்ணறிவு பிரிவு போலீசார், ஓசூர் போதைபொருட்கள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர்.

    எலுமிச்சங்கிரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதில் இவருக்கும், நிர்வாகத்தினருக்கும் இடையே மன வருத்தம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக வெங்கடேசனையும், அவரது குடும்பத்தையும் ஊரைவிட்டு தள்ளி வைத்ததாக தெரிகிறது.

    தன்னை கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி கடந்த, 8-ந் தேதி வெங்கடேசன் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம், வெங்கடேசன் எலுமிச்சங்கிரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு தனது உடல் மீது டீசலை ஊற்றி தீக்குளித்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை காப்பாற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு வெங்கடேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் தீக்காயம் அடைந்த வெங்கடேசனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேசன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    என்னை கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கியதாக 9 பேர் மீது புகார் அளித்தேன். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடும் மன உளைச்சலால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன். என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாகவும் மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஊத்தங்கரையில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு நேற்று சென்றனர்.
    • விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தை அடுத்த சின்னபனமுட்லுவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது33). கூலி தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் நாகன், (40), ஹரிஷ், (20) ஆகிய 3 பேரும் இருசக்கர வகானத்தில் ஊத்தங்கரையில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு நேற்று சென்றனர்.

    பின்னர் 3பேரும் அதே வண்டியில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது மதியம் 3 பேரும் ஜெகதேவி பஸ் நிறுத்தம் அருகில் திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது கடலூரிலிருந்து ஓசூர் சென்ற அரசு பஸ், அவர்கள் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த 3 பேரின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் விபத்தில் பலியான சரத்குமார், நாகன், ஹரிஷ் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெகதேவி பஸ் நிறுத்த பகுதியில், தினமும் விபத்து நடக்கிறது. இதை கட்டுப்படுத்த இப்பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமுன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.
    • இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்.

    தினமும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில், தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.

    இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.

    வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது, சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர்- வள்ளலார் அதனை மீட்டார்.

    தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்படுவது எனக்கு வலியை தருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கெலமங்கலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராமத்திற்கு செல்ல நேரம் ஆகும்.
    • காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரியும் காடுகள் வழியே பயணம் செய்தனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள தேவன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஆனந்தி (வயது23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான ஆனந்தி அவரது தாய் வீடான தொழுவ பெட்டா பழையூர் கிராமத்தில் தங்கி இருந்தார். இந்த கிராமம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் உள்ளது.

    நேற்று இரவு 11.27 மணி அளவில் ஆனந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து கிராம செவிலியர் இது குறித்து கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜேஷ் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    கெலமங்கலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராமத்திற்கு செல்ல நேரம் ஆகும் என்பதால் தாயையும், சேயையும் உடனடியாக காப்பாற்ற மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நள்ளிரவு நேரத்தில் ஒரு காரில் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 10 கிலோ மீட்டர் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரியும் காடுகள் வழியே பயணம் செய்தனர்.

    நீண்ட நேரத்துக்கு பின் பழையூர் கிராமத்திற்கு சென்ற மருத்துவ குழுவினர் 12.25 மணி அளவில் ஆனந்திக்கு பிரசவம் பார்த்தனர்.

    அப்போது சுக பிரசவத்தில் அவருக்கு 2.700 கிலோ கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது.

    ஆம்புலன்ஸ் அந்த பகுதி வழியாக வருவதற்கு நேரமாகவே மருத்துவர் ராஜேஷ் குமார் தனது காரில் தாயையும், சேயையும் பத்திரமாக வனவிலங்குகள் நடமாடும் அதே காட்டுப் பகுதி வழியாக உனி செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு இருவருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில் வனவிலங்குகள் நிறைந்த காட்டுப்பகுதி வழியாக சென்று தாயையும் சேயையும் காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

    • கூண்டின் முன்பு ஒரு ஆட்டை உயிருடன் கட்டி வைத்து காண்கணித்து வந்தனர்.
    • சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த சம்பவத்தால், அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிக்கோட்டையில் உள்ள அடிமைசாமிபுரத்தில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினர் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் அந்த பகுதியில் ஒரு கூண்டை வைத்தனர். அந்த கூண்டின் முன்பு ஒரு ஆட்டை உயிருடன் கட்டி வைத்து காண்கணித்து வந்தனர்.

    கூண்டின் முன்பு இருந்த ஆட்டை கடிப்பதற்காக வந்த சிறுத்தை கூண்டுக்குள் லவகமாக சிக்கியது. கூண்டிற்குள் சிக்கிய அந்த சிறுத்தை சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களாக தேன்கனிக்கோட்டை பகுதியை அச்சத்தில் உறைய வைத்திருந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த சம்பவத்தால், அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

    ×