என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு தொடங்கியது.
    • பள்ளி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா கொண்டு கண்காணிக்க வேண்டும்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

    இதுதொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி 3 ஆசிரியர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் காரணமாக பள்ளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு தொடங்கியது.

    முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் மாவட்ட கலெக்டரை நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    இதில் அந்தப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களும் மாற்றம் செய்து புதிய ஆசிரியர்களை நியமிக்கப்பட வேண்டும்.

    அதேபோல பள்ளி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா கொண்டு தொடர் கண்காணிப்பில் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உறுதி அளித்ததன் பேரில் இன்று மீண்டும் பள்ளி தொடங்கியுள்ளது. இதில் பலத்த போலீஸ் பாது காப்புடன் இன்று பள்ளி தொடங்கியது.

    • நவாப்பின் மனைவி பரிதா நவாப் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக உள்ளார்.
    • கடிகாரத்தில் ரகசிய கேமிராவை வைத்து யார் என்று விசாரணை.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் காந்தி சாலையில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு ஆணையாளராக கிருஷ்ண மூர்த்தி பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஆணையாளர் அறையில் கடந்த மாதம் 25-ந் தேதி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணனை, நகர தி.மு.க. செயலாளர் நவாப் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மாநில மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் தி.மு.க. நகர செயலாளர் நவாப்பை கண்டித்து துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதற்கிடையே நகராட்சியில் பணிபுரியும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் நகராட்சி தலைவர் பரிதா நவாப் மற்றும் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியுடம் ஒரு புகார் கொடுத்தனர். அதில் துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மன உளைச்சல் கொடுப்பதாகவும் கூறி இருந்தனர்.

    நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிய கூடிய டெங்கு தடுப்பு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு துப்புரவு அலுவலர் ராம கிருஷ்ணனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    தொடர் போராட்டங்களால் பரபரப்பாக இருந்த கிருஷ்ணகிரி நகராட்சியில், தற்போது அமைதி திரும்பிய நிலையில், மீண்டும் மற்றொரு சூறாவளியாக ஆணையாளர் அறையில் கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த வீடியோவில் ஆணையாளர் அறையில் கடந்த 25-ந்தேதி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், நகர தி.மு.க. செயலாளர் நவாப் ஆகியோர் அமர்ந்து காரசாரமாக பேசுவதும், நகராட்சி ஆணையாளர் அவர்களை சமாதானப் படுத்துவதுமான வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடிகாரத்தில் ரகசிய கேமிராவை வைத்து யார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப்பை தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டு அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நகர செயலாளர் எஸ்.கே.நவாப் கழக கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நவாப்பின் மனைவி பரிதா நவாப் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    உத்தனப்பள்ளி அருகே டிரைவர் தூக்க கலகத்தில் டேங்கர் லாரியை ஓட்டியதால் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் டிரைவர் உட்பட 2 பேர் பலியாகினர். ஆறாக ஓடிய பால் வீணானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு டேங்கர் லாரியில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு பால் ஏற்றி சென்றார். இந்த லாரியை நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த டிரைவர் ராஜேஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அந்த லாரியில் அருள் (வயது27) என்பவரும் பயணம் செய்துள்ளார்.

    பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கரடிகுட்டை என்ற இடத்தில் சென்றபோது தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் ராஜேஷ் குமாரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் ராஜேஷ் குமார் மற்றும் அவருடன் பயணம் செய்த அருள் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தொடர்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் டேங்கர் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட பால் சாலையில் கொட்டி அந்த பகுதி முழுவதும் ஆறாக ஓடி வீணானது.

    இந்த விபத்து குறித்து உத்தனபள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆசிரியர்கள் 3 பேரும் பணி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
    • போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய மாணவி பள்ளி ஆசிரியர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.


    இது தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் ஆறுமுகம் (வயது48), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்களை போலீசார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் தனி அறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் 3 பேரும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும், பள்ளி கல்வி துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக பள்ளிக்கு நேற்று முன்தினம் விடுமுறை விடப்பட்டது.

    இதற்கிடையே அரசு தொடக்கப்பள்ளி இணை இயக்குனர் சாந்தி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து நேற்று 2-வது நாளாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    நேற்று 2-வது நாளாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகிருஷ்ணன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள மற்ற மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி பள்ளியை திறக்க அதிகாரிகள் முடிவு செய்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது.

    அப்போது மாணவர் களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு இன்று காலை திரண்டு வந்து இனி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி திடீரென்று ஆசிரியர்களு டனும், அதிகாரிகளுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து பள்ளி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதான ஆசிரியர்கள், வேறு மாணவிகள் யாரிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கைதான 3 பேருக்கு ஆதரவாக நீதிமன்ற வழக்கு களில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக போவ தில்லை என்று கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    இதேபோல் மாணவி கூட்டு பலாத்காரத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரியில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

    • 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவத்தில் அப்பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் கைது.
    • 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

    கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவத்தில் அப்பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், "பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    "அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, "எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்" என்று சொன்ன ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

    அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல்,

    ஸ்டாலின் மாடல் திமுக அரசே இக்கொடுரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

    பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    கொஞ்சமேனும் மனசாட்சி இருப்பின், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

    போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
    • மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.

    கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் மீது போலீசில் தாய் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை.

    உடனே இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம் எதற்காக சிறுமி பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பாமல் இருந்து வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த தாயார் எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கரு கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளோம் என்றார். இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

    மேலும், சிறுமியின் தாயார் கூறிய தகவலை கேட்டு அவர் திடுக்கிட்டார்.

    இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான் காரணம். 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார்.

    அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (வயது57). மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும், 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை காண்பிக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மாணவியின் உறவினர்கள் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

    • மாணவியை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் மீது போலீசில் தாய் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை.

    உடனே இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம் எதற்காக சிறுமி பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பாமல் இருந்து வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த தாயார் எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கரு கலைப்பு செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளோம் என்றார். இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

    மேலும், சிறுமியின் தாயார் கூறிய தகவலை கேட்டு அவர் திடுக்கிட்டார்.

    இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான். 3 பேரும் சேர்ந்து தான் அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார்.

    அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (வயது57). மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன்காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி என்.சி.சி. பயிற்சியாளர், பள்ளி தாளாளர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியுள்ளாகியது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் பயின்ற 8-ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.
    • தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் ஊராட்சி சவுளுகொட்டாய், பூசாரி கொட்டாய், சின்ன பாளேத்தோட்டம் மற்றும் மொளுகனூர் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த தார் சாலையானது தற்பொழுது வருவாய் துறை அதிகாரிகள் இந்த பாதையானது நீர் வழிப்பாதையெனவும் இந்த தார் சாலையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கிராமங்களுக்கு செல்ல வேறுமாற்று பாதை இல்லாத நிலையில் தற்பொழுது கிராம மக்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் தார் சாலையை தூர்வாரி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊரின் முகப்பு வரை கால்வாய் தூர்வாரும் பணியானது முடிவுற்ற நிலையில் தற்போது கிராம மக்கள் பயன்படுத்தி வந்த தார் சாலையில் தூர்வார அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.

    கிராம மக்கள் மாற்று பாதை அமைத்து தந்த பின்னரே கால்வாயினை தூர்வார வேண்டும் என நூதன முறையில் வீடுகளின் முன்பும், தெருக்களின் முன்பும் கருப்பு கொடியினை கட்டி தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    வீடுகளில் முன்பு கருப்பு கொடிகளை கட்டி பாதை கேட்டு போராட்டம் நடத்தி வரும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் விரைந்து பாதைக்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பெயரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

    • ஊத்தங்கரையில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட நபர்கள் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடை விற்பனையாளர்கள் கடை முடித்து கணக்கு வழக்குகளை ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பும் வேலையில் ஊத்தங்கரை போலீஸாரால் திடீரென கைது செய்யப்பட்டு ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் முன்பு சம்பள உயர்வு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த இருந்த நிலையில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஊழியர்கள் பஸ்கள் மூலமாக சென்னைக்கு செல்ல முற்பட்டனர்.

    இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அப்பொழுது டாஸ்மார்க் ஊழியர் அண்ணாமலை என்பவர் உரிமைகளுக்காக போராட சென்னையில் ஒன்றுகூட இருந்த டாஸ்மாக் ஊழியர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து உள்ளதாக கூறுகின்றனர்.

    எங்களது உரிமைகளை மீட்க கூட எங்களுக்கு ஏன் அனுமதி அளிக்க மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

    கைதானவர்களில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக மாத்திரை கூட எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் போலீசார் கைது செய்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு போலீசாரால் சார்பில் குடிநீர், உணவு ஏதும் வழங்காமல் பனிக்காலத்தில் தவிக்க விட்டதாகவும் இதனால் உடல் நலம் பாதிப்பு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

    • கரடுமுரடான வார்த்தை சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பெரியார்.
    • பெரியாரை பற்றி விமர்சனம் செய்வதற்கே பெரியார் தான் காரணம் என்பதை அவர் மறந்து விட்டார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், பெரியார் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என்று கே.பி.முனுசாமி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

    ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பி.முனுசாமி, "பெரியார் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. பெரியாரை பற்றி விமர்சனம் செய்வதற்கே பெரியார் தான் காரணம் என்பதை அவர் மறந்து விட்டார். எங்களை போன்ற சாதாரண மக்களை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் அரசியல் ரீதியா பல்வேறு பொறுப்புகளுக்கு வந்து உங்கள் முன் பேசுவதற்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது பெரியார்.

    இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பும் ஒரு குறிப்பிட்ட மக்களிடத்தில் தான் ஆட்சி இருந்தது. அந்த குறிப்பிட்ட மக்களிடத்தில் உள்ள குறைகளை எடுத்துச்சொல்லி, மூட பழக்க வழக்கங்களை பின்பற்றி வந்த ஏழை எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயர்ந்தவன் - தாழ்ந்தவன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற நிலையை மாற்றி மனிதர் அனைவரும் சமம் என்பதை மக்களிடத்தில் எடுத்து சொல்லி கரடுமுரடான வார்த்தை சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பெரியார்.

    பெரியாரின் மாணவராக இருந்த அண்ணா அவர்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து தந்தை பெரியாரின் கொள்கைகளை சட்டமாக கொண்டு வந்தார். இன்னும் 50 ஆண்டுகள் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி இருப்பதற்கு அடித்தளமிட்டது பெரியார் தான்" என்று தெரிவித்தார்.

    • முனியம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராமசாமி அவ்வப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தளி:

    தேன்கனிக்கோட்டையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளார். படுகாயம் அடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைதுக்கு பயந்து கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி (55). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி முனியம்மாள் (40). இவர் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    முனியம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராமசாமி அவ்வப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராமசாமி கத்தியால் முனியம்மாவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவருக்கு தலை, கை, கால், வயிறு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு காயம் விழுந்துள்ளது.

    படுகாயங்களுடன் அலறியபடி முனியம்மாள் வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு ஓடிவந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் முனியம்மாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அதே நேரத்தில் இந்த விவகாரம் வெளியே தெரிந்ததால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்ச உணர்வில் ராமசாமி தனது வீட்டிற்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கு போட்டு உயிரிழந்த ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் முனியம்மாள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கொரியர் மூலம் கஞ்சா விநியோகிக்கப்படுவதாக நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
    • வாலிபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டதில் மேலும் 30 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி, கர்நாடக, ஆந்திரா ஆகிய இருமாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள பகுதி என்பதால் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் கடத்துவதை தடுப்பது, குற்றச்சம்பவங்களை குறைப்பது என்பது போலீசாருக்கு சவாலானதாக இருந்து வருகிறது.

    இந்தநிலையில், ஓசூர் பகுதியில் கொரியர் மூலம் கஞ்சா விநியோகிக்கப்படுவதாக நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஒசூர் ரிங் ரோடு பகுதியில், இரண்டு நாட்களாக நோட்டமிட்டதில், கஞ்சா பார்சலை கொரியர் செய்ய வந்த இருவர் 2 கிலோ கஞ்சாவுடன் கையும் களவுமாக சிக்கினர்.

    இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த அபிலாஷ் (வயது21), விஷ்ணு சத்தியா (23) என தெரியவந்துள்ளது.

    மேலும் அவர்கள், ஓசூர் அருகே பேளகொண்டப் பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டு ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து அறையில் பதுக்கி வைத்து ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் சில்லரையாக கஞ்சா விற்றதும், கேரளாவிற்கு கிலோ கணக்கில் கொரியர் அனுப்பி வந்ததும் தெரியவந்தது.

    போலீசார், அந்த வாலிபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டதில் மேலும் 30 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 32 கிலோ கஞ்சாவை கைப்பற்றியதுடன் அவர்கள் இருவரையும் நுண்ணறிவு பிரிவு போலீசார், ஓசூர் போதைபொருட்கள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×