என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை 26 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் குடும்பத்துடன் விவசாய வேலைக்கு சென்றார். அப்போது பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 26 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம், செல்போன் கொள்ளையடித்து சென்றனர்.

    தகவல் அறிந்த ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தார். பீரோவுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 23 பவுன் நகை கொள்ளையர்களிடம் சிக்கவில்லை.
    காஞ்சீபுரம் அரசு பள்ளியில் வகுப்பறையில் ஆசிரியை மீது 10-ம் வகுப்பு மாணவன் தாக்கிய சம்பவத்துக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் இடமாற்றம்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அய்யங்கார் குளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    10-ம் வகுப்பில் ஆங்கில ஆசிரியையாக ஹேனா ஜீன் என்பவர் உள்ளார். சம்பவத்தன்று அவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்.

    அப்போது ஒரு மாணவன் அனுமதியின்றி வகுப்பறையில் இருந்து வெளியே செல்ல முயன்றான். இதனை ஆசிரியை ஹேனா ஜீன் கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் திடீரென ஆசிரியை ஹேனா ஜீனை தாக்கினான்.

    பள்ளி ஆசிரியர்கள் இது பற்றி தலைமை ஆசிரியர் பசுபதியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆசிரியை தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். அதன்படி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதியை அதிரடியாக இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    அவர் காஞ்சீபுரம் அருகே உள்ள முசரவாக்கம் அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யங்கார் குளம் அரசு பள்ளி வளாகத்தில் கஞ்சா புழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில நாட்களுக்கு முன்பு பல்வேறு பிரச்சினை தொடர்பாக 21 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கஜா புயல் பாதித்த இடங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.1¼ கோடி நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. #GajaCyclone
    காஞ்சீபுரம்:

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நேற்று காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 25 வகையான பொருட்களை ரூ.2.26 லட்சம் மதிப்பிலான பொருட்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    இதே போல் மாவட்ட கருங்கல் குவாரி ஒப்பந்ததாரர்கள் சார்பில், 1008 குடும்பங்களுக்கு தேவையான 7 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து கலெக்டர் பொன்னையா கூறும்போது, “காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துதுறைகளின் சார்பில் இதுவரை கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு 1 கோடியே 26 லட்ச மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, திட்ட இயக்குனர் ஜெயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #GajaCyclone
    சென்னை விமான நிலையத்தில் குங்குமப்பூ, தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இலங்கை பயணியிடம் இருந்து ரூ.15 லட்சம் அமெரிக்க டாலரையும் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்தவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த 3 பேர் உரிய ஆவணங்கள் இன்றி 8 லேப்டாப், குங்குமப்பூ, வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    சோதனையின்போது ஒரு வாலிபர் தனது உடலில் 50 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருந்தார். அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

    இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 3 வாலிபர்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்க்ள.



    சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த இலங்கையை சேர்ந்த வாலிபரின் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரது பையை சோதனை செய்தபோது ரூ.15 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தன. இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirPort
    கஜா புயல் பாதித்த பகுதிகளில் தி.மு.க.தான் மக்களை போராட்டத்திற்கு தூண்டி விடுகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #DMDK #PremalathaVijayakanth #DMK
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து தே.மு.தி.க. அறிவித்த ரூ.1 கோடி நிவாரண பொருட்களை வழங்கினோம். மக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன்.

    புயல் பாதித்த இடங்களில் ‘டாஸ்மாக்’ மதுக்கடை மூடப்பட்டுள்ளது. ஆனால் பின்புற கதவு வழியாக வியாபாரம் ஜோராக நடக்கிறது. மீனவர்களின் படகு சேதத்துக்கு அரசு ரூ.5 லட்சம் அறிவித்து உள்ளது. ஆனால் மீனவர்கள், படகை சரி செய்ய ரூ.25 லட்சம் கேட்கிறார்கள். இந்த தொகையை அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியில் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையில் அரசியல் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கேரளாவில் அய்யப்பன் கோவில் விவகாரம் உள்பட ‘கஜா’ புயல் வரையும் அரசியல் செய்கிறார்கள்.


    புயல் பாதித்த பகுதிகளில் தி.மு.க.தான் மக்களை போராட்டத்திற்கு தூண்டி விடுகிறது.

    ஜெயலலிதா கைதின் போது அப்பாவி 3 மாணவிகளை எரித்து கொலை செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ராஜீவ்காந்தி கொலையில் 25 வருடம் தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்யலாம்.

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு தங்களது விருப்பப்படி மூடலாம், திறக்கலாம் என்று நினைக்க கூடாது. அப்படி மீண்டும் ஆலையை திறந்தால் அங்கு போராட்டம் வெடிக்கும்.

    தமிழகம் பாலைவனமாக மாறிவருகிறது. மேகதாதுவில் தடுப்பு அணை கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது. அங்கு தடுப்பு அணை கட்டுவதை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கிறது.

    மக்கள் பிரச்சனைக்கு அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டால் முதலில் தே.மு.தி.க. பங்கேற்கும். தற்போது தி.மு.க. நடத்தும் அனைத்துகட்சி கூட்டத்தை ஒரு பொது இடத்தில் நடத்த வேண்டும். அறிவாலயத்தில் நடத்தக்கூடாது. அப்போது தான் அனைத்து கட்சியினரும் அதில் கலந்து கொள்ள முடியும்.

    தி.மு.க. தங்களை முன்னிறுத்துவதற்காக அவர்களுக்கு வேண்டிய இடங்களில் கூட்டத்தை நடத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #PremalathaVijayakanth #DMK
    சென்னை கொட்டிவாக்கத்தில் ரவுடி கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (28). இவருக்கு நதியா என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்.

    நேற்று மாலை சுமார் 7 மணியளவில் கொட்டிவாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்துச் சென்ற பாலாஜியை, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டியதில் பாலாஜி சாலையில் மயங்கி விழுந்தார்.

    இதைக்கண்டு அரசு மதுபான கடையில் மது அருந்த வந்தவர்களும் வாகன ஓட்டிகளும் அலறியடித்து ஓடினர். உடனடியாக பாலாஜியின் தந்தையும் உறவினர்களும் ஷேர் ஆட்டோவில் காயம் அடைந்த பாலாஜியை ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த நீலாங்கரை போலீசார் பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை தெற்கு மாவட்ட, இணை கமி‌ஷனர் மகேஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி மதுக்கடையில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பாலாஜி மீது நீலாங்கரை காவல் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வீட்டில் சோதனை நடத்தியபோது கைத்துப்பாக்கியும், சயனைடும் கைப்பற்றப்பட்ட வழக்கில் போலீசார் பாலாஜி உட்பட 3 பேரை கைது செய்தனர்.

    பாலாஜி மீது 5 வருடத்திற்கு முன்பு மடிப்பாக்கத்தில் ஒருவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    பாலாஜிக்கு பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் வி‌ஷ ஊசி போட்டு கொல்வதாக போலீசார் தெரிவித்தனர். வி‌ஷ ஊசி போட்டு ஏற்கனவே 3 பேரை கொன்றுள்ளார்.

    ரோட்டில் நடந்துசெல்லும் போது மற்றவர்களுக்கு தெரியாமல் ஊசி போடுவார். அவர்களுக்கு எறும்பு கடித்தது போல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் அவர் ஜெயில் தண்டனை அனுபவித்து வெளியே வந்துள்ளார்.

    பின்னர் ஜாமீனில் வெளிவந்த பாலாஜி திருந்தி வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான பஷில், விக்கி உள்ளிட்ட மூன்று பேரை நீலாங்கரை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர்.

    இந்த கைது சம்பவத்திற்கு பாலாஜி போலீசாருக்கு உளவாளியாக செயல்பட்டு காட்டி கொடுத்ததாக நினைத்து அவரை பழி வாங்கவே அவர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    பாலாஜி கொலை தொடர்பாக பட்டினம்பாக்கம் மோதார் பகுதியில் பதுங்கி இருந்த ஐவின், பசூல், ராஜா, கார்த்திக், சஞ்சய் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேருக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர் அருகே கை கழுவ சென்ற போது கோவில் குளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த பொன்னியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது 5 வயது மகன் குகன். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை ரமேஷ், மனைவி மற்றும் மகன் குகனுடன் பொன்னியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    கோவிலில் கொடுத்த பிரசாதத்தை அனைவரும் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் சிறுவன் குகன் மட்டும் கைகழுவுவதற்காக கோவில் குளத்துக்கு சென்றான். அப்போது அவன் நிலை தடுமாறி குளத்துக்குள் விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குகனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குகன் பரிதாபமாக இறந்தான்.
    செம்மஞ்சேரியில் கோர்ட்டு விசாரணைக்கு பயந்து கொலை வழக்கு குற்றவாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வம்(வயது 27). பெயிண்டர். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது.

    செம்மஞ்சேரியில் 7 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் செல்வம் 4-வது குற்றவாளி ஆவார். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை அடைந்து விட்டதால் கோர்ட்டு என்ன தண்டனை வழங்குமோ? என செல்வம் பயந்தபடி இருந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென செல்வம், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்மஞ்சேரி போலீசார், தற்கொலை செய்த செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டு விசாரணைக்கு பயந்து செல்வம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    காஞ்சீபுரம்-திருத்தணி-புட்லூரில் தாசில்தார் வீடு உள்பட 4 இடங்களில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், லிங்கப்பன் தெருவில் பறக்கும் படை தாசில்தார் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. நேற்று இரவு பூட்டி கிடந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை மூட்டைகட்டி அள்ளிச் சென்று விட்டனர்.

    அதே பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி. நேற்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ½ கிலோ வெள்ளிப்பொருட்களை சுருட்டிச் சென்று விட்டனர்.

    திருத்தணி ஆசிரியர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி. ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று காலை அவர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். இரவு வீட்டுக்கு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு சவரன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

    இது குறித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    திருவள்ளூரை அடுத்த புட்லூரை சேர்ந்தவர் சங்கர். வேன் டிரைவர். இவர் சரக்கு ஏற்றி கொண்டு ஐதராபாத் சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு திருவாலங்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.14 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலத்தில் மத்திய அரசு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    திருமங்கலம் சி.பி.டபுள்யூ. குடியிருப்பு 46-வது பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஞானசேகர் (வயது52). தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு கணக்கு தணிக்கை அலுவலகத்தில் அதிகாரியாக இருந்தார். இவரது மனைவி மார்க்ரெட். இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர்.

    இன்று காலை வெகு நேரமாகியும் ஞானசேகரின் படுக்கையறை கதவு திறக்க வில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு ஞானசேகர் தற்கொலை செய்து இருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து திருமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா மற்றும் போலீசார் ஞானசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் ஞானசேகர் கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    குழந்தைகள் பாதுகாப்பில் ரஜினிகாந்துக்கு இருக்கும் அக்கறை அனைவருக்கும் இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #tamilisai #rajinikanth
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய குழு முடிந்த அளவிற்கு ஆய்வு செய்துகொண்டு இருக்கிறது. அனைத்து உள்பகுதிகளிலும் சென்று பார்ப்பது முடியாத காரியம். மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளை பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தற்போது யாரையும் திருப்திப்படுத்த முடியாது.

    பாரதீய ஜனதா தலைவர்கள் வரவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. நான் 5 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்து மருத்துவ முகாம்களை நடத்தி உள்ளேன். மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் 3 முறை மக்களை சந்தித்து உள்ளார். முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு தான் உள்ளார். பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

    புயல் இழப்பில் உள்ள மக்களை பார்த்துச் செல்வதைவிட அவர்களுடன் இருந்து உதவி செய்ய வேண்டும். தானே புயல் பாதிக்கப்பட்ட போது எத்தனை முறை மத்திய குழு விரைவாக வந்தது. பிரதமராக இருந்த மன்மோகன்சிங் எத்தனை முறை வந்தார். அரசியல் செய்துகொண்டே இருக்கக்கூடாது.

    புயல் பாதிக்கப்பட்ட முதல் நாளே பிரதமர், உள்துறை மந்திரி, சுகாதார துறை மந்திரி பேசி இருக்கிறார்கள். மத்திய மின்துறையின் உபகரணங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் இணக்கமான சூழ்நிலையை கெடுத்துவிடக் கூடாது. ஏற்கனவே நொந்துபோய் உள்ள மக்களை அரசியல் காரணமாக மறுபடியும் நோகடிப்பது சரியல்ல.

    குழந்தைகள் விஷயத்தில் ரஜினிகாந்த் என்ன காரணத்திற்காக அப்படி சொல்கிறார் என்று விளக்கினால் நன்றாக இருக்கும். மத்திய அரசு குழந்தைகள் பாதுகாப்புக்காக செயலாற்றி வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு என்பதில் ரஜினிகாந்திற்கு இருக்கும் அக்கறை எல்லோருக்கும் இருக்கிறது.

    கடலூரில் தானே புயல் வந்தபோது மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் ரூ.100 கோடி தான் கிடைத்தது. தமிழக மக்களிடம் இருந்து ரூ.600 கோடி கிடைத்ததாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கூறினார். ஆனால் தற்போது நிர்வாக ரீதியாக என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துகொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #tamilisai #rajinikanth 
    கல்பாக்கத்தில் மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்தராமையா (வயது 60) ஆந்திராவை சேர்ந்தவர். இவரது மகன் ஆனந்தராஜ். கல்பாக்கம் அணுசக்தி துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த வாரம் ஏற்பட்ட தகராறின் போது ஆனந்த ராஜ், தந்தை சித்தராமையாவை கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சித்தராமையா கடந்த 13-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறினார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இளையனார் குப்பம், கடற்கரை ஓரம் உள்ள முட்புதரில் சித்தராமையா பிணமாக கிடந்தார். மகனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×