search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sholinganallur boy dies"

    சோழிங்கநல்லூர் அருகே கை கழுவ சென்ற போது கோவில் குளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த பொன்னியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது 5 வயது மகன் குகன். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை ரமேஷ், மனைவி மற்றும் மகன் குகனுடன் பொன்னியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    கோவிலில் கொடுத்த பிரசாதத்தை அனைவரும் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் சிறுவன் குகன் மட்டும் கைகழுவுவதற்காக கோவில் குளத்துக்கு சென்றான். அப்போது அவன் நிலை தடுமாறி குளத்துக்குள் விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குகனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குகன் பரிதாபமாக இறந்தான்.
    ×