என் மலர்
கடலூர்
- இந்த ஆண்டு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் இருந்து வருகிறது.
- பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்த நிலையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
கடலூர்:
பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இன்று மாவட்ட முழுவதும் ஆற்று திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சையாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன.
மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை பகுதியில் பக்தர்கள் சாலையோரங்களில் நின்று சாமிகளை வழிபட்டனர். சாமிகளுக்கு பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடி சாமி கும்பிட்டனர். ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங்கினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
ஆற்று திருவிழாவின்போது பெரும்பாலும் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வரும். ஆனால் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இது மட்டுமின்றி ஆறுகளில் தண்ணீர் உள்ளதால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்த நிலையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்த ஆற்றுத் திருவிழாவில் வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.
ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சிவாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- கம்பெனி நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கிழக்கு ராமபுரத்தை சேர்ந்தவர் சிவா (வயது 21) இவர் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார் இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சிவா அங்குள்ள கன்வேயர் பெல்டில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது
அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் .
அப்போது சிவாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இத்தகவல் அறிந்த கடலூர் கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்த பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர் . பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் இறந்த சிவா குடும்பத்திற்கு 1 1/2 கோடி நிவாரண தொகையும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பொது மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கம்பெனி நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
- சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இந்த ஏரி மூலம் பாசனம் பெறுகிறது.
- கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாத நிலையில் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே பூதங்குடியில் தொடங்கும் வீராணம் ஏரி 14 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம் பரப்பில் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் முடிவடைகிறது.
அதிக நீர் பிடிப்பு ஆதாரமான வீராணம் ஏரியில் 47.50 அடி (1,465 மில்லியன் கன அடி) தண்ணீர் தேங்கி வைக்கப்படுகிறது.
சம்பா பருவ காலங்களில் காட்டுமன்னார் கோவில், குமராட்சி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இந்த ஏரி மூலம் பாசனம் பெறுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி முதல் கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏரியின் அனைத்து மதகுகளையும் அடைத்து முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாத நிலையில் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. தற்போதைய நிலவரப்படி 45.65 அடி தண்ணீர் உள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து பூதங்குடி நீரேற்று நிலையத்தில் மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீராக அனுப்பி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் ஏரியில் படிப்படியாக தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் உள்ள நிலையில் ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் கோடையில் சென்னைக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்தை சமாளிக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
- சித்சபையில் விஷேக ரகசிய பூஜை.
- 14-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்
இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி யது. 5-ந் தேதி வெள்ளி சந்திர பிரபைவாகன காட்சி,6-ந் தேதி தங்க ஸர்யபிரபை வாகன காட்சி, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனகாட்சி, 8-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி (தெருவடைச்சான்) ஆகியவை நடந்தது.
9-ந் தேதி வெள்ளி யானை வாகன காட்சி, 10-ந் தேதி தங்க கைலாஸ வாகன காட்சி,11-ந் தேதி தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி காட்சி, பின்னர் சோமாஸ் கந்தர் வெட்டுங்கு திரையில் வீதியுலா நடக்கிறது.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் ரதயாத்ராதானம் நடை பெற்றது. இதனை தொடர்ந்து நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கீழ ரத வீதியில் இருந்து தொடங்கி தெற்கு ரத வீதி, மேல வீதி, வடக்கு ரத வீதி வழியாக மாலை 4 மணியளவில் நிலையை வந்தடைகிறது.
நாளை ( 13-ந் தேதி)அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மகாபிஷேகம் நடைபெறும். 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சி, சித்சபையில் விஷேக ரகசிய பூஜை, 2 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.
14-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது. உற்ச வத்தில் 9 நாட்களும் மாலை சாயரட்சை காலத்தில் மாணிக்க வாசகர், நடராஜர் சன்னதிக்கு வந்தவுடன் திருவெம்பாவை பாடி விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.
- 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர் குழுவினர் பார்வையிட்டு அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் கேட்டறிந்தனர்.
- ஆய்வின் போது தாசில்தார் சிவகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
காட்டுமன்னார் கோவில்:
தமிழக அரசு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் வேர்களை தேடி என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் பல தலைமுறைகளுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்து தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை கண்டறிந்து அவர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழகத்தில் பாரம்பரிய சிறப்பு மிக்க கட்டிட கலையின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் கோவில்கள், அகழ்வாராய்ச்சி மையங்கள், புகழ்பெற்ற நீர் நிலைகள் ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றின் பெருமைகளை உலகுக்கு தெரிவிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் படி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பராந்தக சோழனால் கட்டப்பட்ட வீராணம் ஏரியை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கண்காணிப்பாளர் கனிமொழி தலைமையில் இலங்கை, கனடா, உகாண்டா, தென் அமெரிக்கா, மோரிஷீயஸ், ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர் குழுவினர் பார்வையிட்டு அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் கேட்டறிந்தனர்.
முன்னதாக இந்த குழுவினர் கீழடி, தஞ்சை பெரிய கோவில், ராமேசுவரம், தாராசுரம் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு வந்ததாக கூறினார்கள்.
ஆய்வின் போது தாசில்தார் சிவகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்?
- மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா?
இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா? காம இச்சையை தாய், மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம் என கூறியவர் பெரியார்" என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருஷ்ணன், "பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதற்கு ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆதாரத்தை வழங்கவில்லை என்றால் நாளை (ஜனவரி 9] காலை 10 மணிக்கு சீமான் வீட்டிற்கு நேரில் செல்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
- நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள்.
- நிர்வாகிகள் விலகியதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை.
வடலூர்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூர் வந்தார். அங்குள்ள வள்ளலார் சத்ய ஞான சபையில் அவர் வழிபட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-
தி.மு.க.-அ.தி.மு.க. பிரச்சனை தெரு சண்டை. 60 ஆண்டுகளாக இதை தான் செய்து வருகிறார்கள். தி.மு.க.வினர் பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு விவகாரம் என்கிறார்கள். அ.தி.மு.க.வினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் என்று மாறி, மாறி கூறி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள். முட்டுக்கட்டை நிர்வாகிகளாக இருப்பார்கள்.
வெள்ளம் சீறிப்பாய்ந்து வரும் போது பாறையாக இருந்தாலும் உருட்டிக் கொண்டு தான் செல்லும். நிர்வாகிகள் விலகியதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை. நிர்வாகிகள் விலகல் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். சிற்றூர்களையெல்லாம் நகராட்சியுடன் இணைத்தால் மக்களுக்கு என்ன பிரயோஜனம்.
கிராமங்களில் இருந்துதான் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வருகிறது. அதனால்தான் எங்களை அப்படியே வாழ விடுங்கள் என்கிறார்கள், இதில் என்ன பிரச்சனை. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி உள்ளது. வில்லேஜ் சிட்டி உள்ளதா?
இவ்வாறு அவர் கூறினார்.
- சிதம்பரம் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம்.
- தொடர்ந்து 14-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15-ந் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.
இதனையத்து நாளை சந்திர பிரபை வாகன வீதியுலா, 6-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 12-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், 13-ந் தேதி மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்சபை பிரவேசமும் நடைபெறும். தொடர்ந்து 14-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15-ந் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் குழு செயலர் வெங்கடேச தீட்சிதர், துணைச்செயலர் சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியர் சிவராஜ தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் செய்து இருந்தனர்.
- பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் வரை வந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
- கடற்கரை ஓரமாக தண்ணீர் உட்புகாத வகையில் கருங்கல்கள் கொட்டப்பட்டு வருகின்றன.
கடலூர்:
வங்கக்கடலில் கடந்த பல நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவற்றால் தொடர்ந்து கடல் அலை அதீத சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் தண்ணீர் உட்புகுந்து உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் கடல் அலை முன்னோக்கி வந்து சென்றதால் மண் அரிப்பு அதிகளவில் ஏற்பட்டு வந்தது. தற்போது நாளுக்கு நாள் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் சுமார் 40 அடிக்கு கடல் அலை முன்னோக்கி பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் வரை வந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இது ஒரு புறம் இருந்து வரும் நிலையில் மற்றொரு புறம் தேவனாம்பட்டினம் ஊருக்குள் மீன் விற்பனை செய்யும் இடம் உள்ளது. அதன் அருகாமையில் மீன் வலை பின்னும் கட்டிடமும் செயல்பட்டு வருகின்றது. தற்போது கடல் அலை அதிகளவில் சீறி பாய்ந்து வருவதால் பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டு வலை பின்னும் கட்டிடம் கடல் அலையில் அடித்து இழுத்து செல்லும் அவல நிலையில் உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் தேவனாம்பட்டினம் ஊருக்குள் கடல் நீர் புகுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் தேவனாம்பட்டினம் ஊர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து அனைவரும் பார்வையிட்டு சென்று வருகின்றனர்.
மேலும் கடற்கரை ஓரமாக தண்ணீர் உட்புகாத வகையில் கருங்கல்கள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் வேகமாக மண் அரிப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைவு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்.
- அ.தி.மு.க.வினர் கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
கடலூர்:
பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடு மைகள் கட்டுப்படுத்த தவறியதும், சட்டம்-ஒழுங்கு பாதுகாக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனும திமறுத்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் அ.தி.மு.க. சார்பில் மேடை அமைக்காத வகையில் போலீசார் வாகனங்களை நிறுத்தி வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வாகனத்தை திடீரென்று போலீசார் அங்கிருந்து எடுத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து வாகனத்தில் பேனர் வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமையில் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
அப்போது தி.மு.க. அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலை மையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார், மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று போலீசார் மைக் இணைப்பை நிறுத்தினர். பின்னர் அ.தி.மு.க.வினர் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பிய போது மீண்டும் மைக் இணைப்பு கொடுத்தனர். பின்னர் 2-வது முறை மைக்கை நிறுத்திய போது அ.தி.மு.க.வினர் கோஷத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருந்த போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கூறி வாகனத்தில் நின்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு முயன்ற போது அ.தி.மு.க.வி னருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருந்த நிலையில் தள்ளுமு ள்ளாக மாறியது. பின்னர் போலீசார் அனைவரையும் வாகனத்தில் ஏற்றி கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதில் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
- வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
- செல்போன் மூலம் தொடர்பு கொண்டது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர், கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதற்கிடையே மருத்துவ மனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகளும், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் வெடி குண்டு மிரட்டலால் பீதியடைந்தனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை அறிந்ததும் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் காவல்துறை கட்டுப்பட்டறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு வைத்ததாக பேசி இணைப்பை துண்டித்தது தெரிய வந்தது.
மேலும் இந்த மாணவன் விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பத்தை சேர்ந்தவர் என்பதும், தனது உறவினர் வீடான கடலூர் முதுநகருக்கு வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மாணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்தது.
- இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் சுனாமி நினைவு தினம் 20-ம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி என்கின்ற பேரலை கடலூர் மாவட்டத்தில் தாக்கியதில் சுமார் 610 பேர் பேரலையில் சிக்கி உயிரிழந்தனர்.
இதனையொட்டி இன்று மீனவ கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சுனாமி தினத்தை அனுசரித்தனர்.
இந்தநிலையில் இன்று காலை சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமி பேரலையில் இறந்த நபரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் பகுதிக்கு வந்தனர். பின்னர் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து வணங்கினர்.
பின்னர் கடற்கரை ஓரமாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் தாங்கள் கொண்டு வந்த பால் மற்றும் கூடை நிரம்ப கொண்டு வந்த பூக்களையும் கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்தபடி நினைவு அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் கொண்டு வந்த மலர் வளையம், மலர்கள் மற்றும் மெழுகுவத்தி ஆகியவற்றை கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து பெண்கள் இறந்த குடும்பத்தினரையும் மற்றும் உறவினர்களை நினைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனை பார்த்த அனைவரும் கண் கலங்கியபடியே கடந்து சென்றதை காண முடிந்தது.
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு சுனாமி பேரலை தாக்கி அன்று எப்படி இருந்ததோ அதேபோல் இன்றும் கடற்கரை பகுதிகள் அமைதியான இட த்தில் அழுகை மற்றும் அலறல் குரல் இன்றும் நிலைத்திருந்தது. இந்த நிலையில் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நினைவு தினத்தையொட்டி கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பு கடலில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.






