பெரியார் தான் காரணம் - வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்

பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு அரசியல் தலைவர்கள் பெரியாரின் பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.
பெரியார் தான் காரணம் - வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்
Published on

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சீமானின் தொடர்ச்சியான அவதூறுகளால் பெரியார் மீண்டும் தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்கள் பெரியாரின் பணிகள் குறித்து தற்போது பேசி வருகின்றனர்.

அவ்வகையில், கடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "வீட்டில் கோலம் போட்டு, சாணம் அள்ளிக் கொண்டிருந்த பெண்ணும் மேயர் ஆகி இருப்பதற்கு காரணம் பெரியார் தான்" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com