என் மலர்
கோயம்புத்தூர்
- டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
- எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து இதனை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும்.
கோவை:
பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவையில் வருகிற 19-ந் தேதி தென்னிந்திய இயற்கை விவசாய சம்மேளம் சார்பில் இயற்கை விவசாய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகிற 19-ந்தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருகிறார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி 5 ஆயிரம் இளம் இயற்கை விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். தென்னிந்தியாவில் பணிபுரியும் 50 இயற்கை விஞ்ஞானிகளை சந்தித்து பேசுகிறார். நாட்டு மாடுகளை ஊக்குவிக்க வேண்டும். பிரதமர் விவசாய நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்கிறார். வேறு எந்த கட்சி நிகழ்ச்சிகளும் கிடையாது.
மருத்துவர்கள் பயங்கரவாதிகளாக செயல்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் இந்திய பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் குஜராத்தில் உள்ள டாக்டர்கள் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம், அவர்கள் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் ரசாயனம் கலந்து பலரை கொல்வதற்கும் சதி திட்டம் தீட்டியுள்ளனர். டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
மும்பையில் நடந்தது போன்று டெல்லியில் நடத்த வேண்டும் என்பதற்காக இதை செய்தோம் என தெரிவித்துள்ளனர். எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து இதனை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும் என்றார்.
- 2000-க்கு முன் 10 முறையும், 2000-க்குப் பின் 3 முறை SIR நடைபெற்று இருக்கிறது.
- SIR நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு.
கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இதற்கு முன்பு SIR நடைபெறவில்லையா?
* 2000-க்கு முன் 10 முறையும், 2000-க்குப் பின் 3 முறை SIR நடைபெற்று இருக்கிறது.
* ஏதோ பா.ஜ.க.வே பூதத்தைக்கொண்டு வந்தது போல கொடி பிடித்து போராட்டம் செய்வது ஏன்?
* வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு சூழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
* SIR என்றால் என்னவென்றே துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தெரியவில்லை. வாக்காளர் பட்டியல் ரிவிஷனை ரெஸ்டிரிக்ஷன் என்று கூறுகிறார்.
* SIR நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு.
* ஒரு இடத்தில் கூட வருமான வரித்துறை பதிவு செய்த வழக்குகள் பொய்யாகவில்லை.
* கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள் உள்ளனர். இதுபோன்ற போலி வாக்காளர்களை நீக்கவே SIR பணி.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது தி.மு.க.
- குவாரி உரிமையாளர்களை மிரட்டி ரூ.10 லட்சம் தர வேண்டும் என நிர்பந்தம் செய்கிறார்கள்.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை சொல்ல முடியுமா?
* அ.தி.மு.க.தான் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைமை என தெளிவாக அறிவிப்பு வந்தது.
* அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது தி.மு.க.
* கோவையில் பல பாலங்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க.தான்
* நிதியே ஒதுக்காமலேயே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் எனக்கூறுகிறது காங்கிரஸ். ஆனால் தி.மு.க. கொடுக்க மறுக்கிறது.
* 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக பொய் கூறுகிறார்கள்.
* குவாரி உரிமையாளர்களை மிரட்டி ரூ.10 லட்சம் தர வேண்டும் என நிர்பந்தம் செய்கிறார்கள்.
* புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டதா?
இவ்வாறு அவர் கூறினார்.
- எஸ்.ஐ.ஆர். நடைமுறை மூலம் போலி வாக்காளர்களை நீக்குவதில் என்ன தவறு உள்ளது?
- 21 ஆண்டுகளுக்குப் பிறகு தான் S.I.R. நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தகுதியான வாக்காளர்கள் இடம் பெற வேண்டும் என்பதற்காக எஸ்.ஐ.ஆர். நடைமுறை.
* இதற்கு முன்பு 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று இருக்கிறது.
* எஸ்ஐஆர் என்ற சொல்லை கேட்டாலே தி.மு.க. அலறுகிறது.
* 8 நாட்களில் எஸ்ஐஆர் படிவங்களை விநியோகித்து விடலாம், இதில் என்ன சிக்கல்?
* எஸ்.ஐ.ஆர். நடைமுறை மூலம் போலி வாக்காளர்களை நீக்குவதில் என்ன தவறு உள்ளது?
* தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் BLO-க்கள் உள்ளனர்.
* 21 ஆண்டுகளுக்குப் பிறகு தான் SIR நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
* குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்ட போதிலும் அங்கு வாக்குகள் இருந்தன.
* ஈரோடு கிழக்கு தொகுதியில் இடிக்கப்பட்ட வீடுகளில் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
* SIR குறித்து தவறான தகவல்களை தி.மு.க.வினர் பரப்பி வருகின்றனர்.
* தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க.வினர் முயற்சிக்கின்றனர்.
* போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெறலாம் என தி.மு.க. நினைக்கிறது.
* வேறு கட்சிகளின் வாக்காளர்கள் என்றால் படிவத்தை தி.மு.க.வினர் கிழித்து விடுகிறார்கள்.
* வாக்குரிமை பறிபோய் விடும் என தி.மு.க.வினர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து கிடக்கிறது.
- போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திண்டிவனத்தில் மாணவியை காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
* பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய காவலர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
* தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என எண்ணும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
* போக்சோ வழக்குகளில் ரூ.104 கோடி நிவாரணம் அளித்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.
* சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து கிடக்கிறது.
* காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு அச்சமில்லை என்பது தெரிய வருகிறது.
* போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன.
* தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
* இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும்கூட நிரந்தர டிஜிபியை நியமனம் செய்யாதது ஏன்?
* தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. காலதாமதம் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடி இன்று 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.
- தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
பிரதமர் மோடி இன்று வாரணாசியில் நடந்த விழாவில் 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.
அதன்படி, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தேபாரத் புதிய ரெயிலை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த ரெயில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
இந்தநிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு கோவை வந்த வந்தேபாரத் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கேரள மாநில வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
- கேரள அரசின் உயர்அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
கோவை:
தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு நேற்று புறப்பட்டு சென்ற சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை அந்த மாநில போக்குவரத்து அதிகாரிகள் திடீரென சிறைபிடித்ததுடன், அந்த பஸ்களில் இருந்த பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டனர். மேலும் பல்வேறு காரணங்களை கூறி அந்த பஸ்களுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அபராத தொகையை ரத்து செய்ய கோரியும் தமிழகத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்காக சுமார் 30 ஆம்னி பஸ்கள் இன்று காலை வாளையாறு சோதனைச்சாவடிக்கு வந்தன.
பின்னர் அந்த பஸ்களின் டிரைவர்கள் வாகனத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டு வாளையாறு சோதனைச்சாவடி முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பஸ்களில் வந்திருந்த பயணிகள் குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் நடுரோட்டில் தவிக்க நேரிட்டது.
இதற்கிடையே வாளையாறு சோதனை சாவடி முன்பாக ஆம்னி பஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கேரள அரசின் அதிகப்படியான வரிவிதிப்பை கண்டித்தும், ஆம்னி பஸ்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கேரள மாநில வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கேரள அரசின் உயர்அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
பின்னர் ஆம்னி பஸ் டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு பயணிகளை மீண்டும் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
வாளையாறு சோதனைச்சாவடியில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் போராட்டத்தால், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வாக்காளரிடம் விண்ணப்ப படிவங்களை வழங்கி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- 5 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் கடந்த 4-ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மாநில அளவில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு-வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் விண்ணப்ப படிவங்களை வழங்கி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மத்திய தேர்தல் துணை கமிஷனர் கே.கே.திவாரி, மாநில தலைமை தேர்தல் கமிஷனர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் தலைமையில்கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அதற்கு முன்பாக கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து நேரடியாக களஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் கமிஷனர்கள், அதன்பிறகு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி எவ்வாறு நடைபெறுகிறது? அடுத்து செய்ய வேண்டிய பணிகள் என்ன, இந்த பணியில் உள்ள தொய்வுகள் மற்றும் பிரச்சினைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை சிறப்பாக செயல்படுத்துவது, வாக்காளர் நீக்கம், சேர்த்தல் ஆகியவற்றில் சரியான, உண்மையான விவரங்களை கேட்டு பெற்று செயல்படுத்துவது ஆகியவை குறித்தும் தேர்தல் கமிஷனர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர்.
அதுவும் தவிர தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடைபெறுவதால் இந்த பணிகளில் ஈடுபட்டு உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் என்ன நிலவரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதில் உள்ள நிறை குறைகள் என்ன மற்றும் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
- 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு.
கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் இருந்த காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.
பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை இருகூர் அத்தப்பகவுண்டன்புதூர் ரோட்டில் 25 வயது இளம்பெண் ஒருவரை 3 பேர் தாக்கி காருக்குள் தூக்கிப் போட்டுள்ளனர். பின்னர் அந்த கார் அங்கிருந்து இருகூர் நோக்கிச் சென்றுள்ளது. அந்த காரில் இருந்த பெண் சத்தம் போட்டு அலறி இருக்கிறார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளை நிற கார் சம்பவ இடத்தில் இருந்து வேகமாக செல்வதும், காரில் இருந்து பெண் கதறி அழுவதும் பதிவாகி இருந்தது.
இந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காரில் கடத்தப்பட்ட பெண் யார், அவரை கடத்தியவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை. அந்த காரின் எண்ணை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்துகிறார்கள். குடும்ப பிரச்சினை எதாவது இருந்து காரில் அழைத்து செல்லும் போது சத்தம் போட்டாரா அல்லது காதல் விவகாரத்தில் அந்த பெண் கடத்தப்பட்டாரா, பணிக்கு சென்று திரும்பிய பெண் யாராவது கடத்தப்பட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் இளம்பெண் யாரும் மாயமாகி உள்ளனரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே காரில் கடத்தப்படும் இளம்பெண் கதறி அழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- 3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரெயில் புதன்கிழமை தவிர நாள்தோறும் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். ரெயில் 8.15 மணிக்கு சேலம், 9.47 மணிக்கு திருப்பூர், 10.35 மணிக்கு கோவைக்கு வரும்.
இதேபோல எர்ணா குளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தை அடையும். 5.23 மணிக்கு கோவை, 6.05 மணிக்கு திருப்பூர், 6.50 மணிக்கு ஈரோடு, 7.20 மணிக்கு சேலம் வழியாக ரெயில் பெங்களூரு செல்லும்.
இந்த ரெயிலின் தொடக்க நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் வருகிற 8-ந் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது. பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் புதிய வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
- 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
- கைதான 3 பேர் மீதும் 6 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கோவை:
மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது காதலனுடன் காரில் விமான நிலையத்தின் பின்புறம் பிருத்தாவன் நகர் காட்டுப்பகுதியில் பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன், மதுரையை சேர்ந்த குணா என்ற தவசி ஆகிய 3 பேர் காதலனை அரிவாளால் வெட்டி விட்டு மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் பலத்காரம் செய்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் 3 பேருக்கும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் 6 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரிடமும் கோவை நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான், நேற்று இரவு நேரில் சென்று, ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் 3 பேரையும் வருகிற 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
- மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தது அவரது விருப்பம்.
- அ.தி.மு.க.வில் பலரிடம் பேசி வருகிறேன்.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நான் 53 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னை யாரும் இயக்க முடியாது.
* இ.பி.எஸ். குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அ.தி.மு.க.வில் அதிகம் இருக்கிறது. மகன், மைத்துனர், மருமகன் தலையிடுகிறார்கள். மூத்த நிர்வாகிகளுக்கு அது இடையூறாக இருக்கும்.
* மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தது அவரது விருப்பம்.
* அ.தி.மு.க.வில் பலரிடம் பேசி வருகிறேன்.
* யார் யாரிடம் பேசுகிறேன் என்பதை தெரிவித்தால் அவர்களுக்கு ஆபத்து.
* தனது அடுத்தகட்ட நகர்வுகளால் நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






