என் மலர்
கோயம்புத்தூர்
- மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும்
- தொடர் மழையின் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை விளங்கி வருகிறது.
அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்ட த்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, அப்பர் பவானி, குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் தொட ர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வ ரத்து தொடர்ந்து அதிக ரித்து வருகிறது.
தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீலகிரி மாவட்ட த்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் கார ணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று காலை ஆறு மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 86 அடியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் பில்லூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.
தற்போது பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படு வதால் கரையோர பகுதி களில் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டுப்பா ளையம் ஓடத்துறை, லிங்கா புரம், சிறுமுகை, காந்தவ யல், ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பவானி ஆற்றில் குளிக்க வோ,துணி துவைக்கவும் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தி உள்ளனர்.
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்தனர்
- ஒன்றிய வாரியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூலூர்,
சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூலூர் பஸ் நிலையம், அப்பநாயக்கன்பட்டி, கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, பாப்பம்பட்டி, பதுவம்பள்ளி, கிட்டாம் பாளையம், காடுவெட்டி பாளையம், கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோவில், மாதப்பூர் ரோடு, கணியூர், சோமனூர் சந்தைப்பேட்டை முன்பு, கிருஷ்ணாபுரம் பிரிவு, க.ராயர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாரதீய ஜனதாவினர் ஒன்றிய வாரியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்தனர். மேலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், விவசாயிகளுக்கு இந்த அரசால் நன்மை இல்லை என்றும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தி.மு.க. அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பதுவம்பள்ளி மகேந்திரன், காடுவெட்டி பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் சதாசிவம், கருமத்தம்பட்டி மோகன், அசோக், கோவை மாவட்ட மகளிர் அணி தலைவி ரேவதி, பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்டச் செயலாளர் இருகூர் சிதம்பரம், சூலூர் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், நகரச் செயலாளர் அசோக், ரவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.
- 3 பேர் கரடி குரங்கு பொம்மை மற்றும் பொம்மை வேடம் அணிந்து மனு அளிக்க வந்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
கோவை,
தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசில் ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம், போலீஸ் துறை அலுவலகங்கள், மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் சைகை மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் காது கேளாத, வாய்ப்பேசாத மாற்றுத்திறனாளிகளை நிரந்தரமாக்க வேண்டும், அரசு பணிகளில் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தனியார் நிறுவனங்களிலும் தங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் இணைத்து மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ. 5000 உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விசில் ஊதி, கோரிக்கை பதாகைகளை ஏந்தி அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த 3 பேர் கரடி குரங்கு பொம்மை மற்றும் பொம்மை வேடம் அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புலியகுளம் மாரியம்மன் மற்றும் முந்தி விநாயகர் கோவிலில் கடை நிலை ஊழியர் ஒருவர் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து அறநிலையத்துறை செயல் அலுவலர், தக்கார் மற்றும் இணை ஆணையர் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. எனவே கலெக்டரிடம் இவர்களின் மெத்தன போக்கை கண்டிக்கும் விதமாக செயல் அலுவலர் தக்கார் மற்றும் இணை ஆணையாளர் ஆகியோர் பெயரில் குரங்கு கரடி மற்றும் பொம்மை வேடத்தில் மனு அளிக்க வந்துள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கோவை மாவட்டத்தில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற உள்ளது.
- மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளும் இணைக்க தேவையில்லை.
கோவை,
தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் என பெயர் வைக்கப்பட்டது.
இந்த திட்டமானது வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து இந்த திட்டத்தில் பயன் பெறுவர்களுக்கான வரை யறைகளும் வெளியிடப்ப ட்டது.
அதன்படி இந்த திட்டத்தில் பயன் பெறுப வர்கள் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகிக்கும் பணி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகித்தனர்.
கோவை மாவட்டத்தில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய முகாமானது அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்க உள்ளது.
மாநகராட்சி பகுதியில் உள்ள 212 நியாய விலைக்க டைகள், அனைத்து வருவாய் மாவட்டங்களில் பகுதியில் உள்ள 584 நியாயவி லைக்கடைகள் மற்றும் வால்பாறை நகராட்சி பகுதியில் உள்ள 43 நியாயவிலை கடைகள் என மொத்தம் 839 இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடந்தது.
இந்த முகாமானது காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடந்தது. இன்று நடந்த சிறப்பு முகாமுக்கு ஏராளமான பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் விண்ணப்ப த்துடன் வந்து பதிவு செய்து சென்றனர். அனைவருக்கும் ஏற்கனவே டோக்கன் வினியோகிக்கப்பட்டு அதில் நேரம், கொடுக்கப்பட்டி ருந்ததால், அந்த நேரத்திற்கு வந்து விண்ணப்பித்து சென்றனர்.
2-ம் கட்டமாக 532 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட ரேஷன் கார்டு தாரர்களுக்கு விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து அதிகாரி கூறியதாவது:-
முதல் கட்ட விண்ணப்ப பதிவுக்கான ரேஷன் கார்டுதா ரர்களுக்கு டோக்கன் மற்றும் விண்ண ப்பங்கள் வழங்கப்பட்டு ள்ளது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட டோக்கனில் எந்த தேதியில் எந்த நேரத்திற்கு வர வேண்டும் மற்றும் முகாம் நடைபெறும் இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தில் குடும்ப தலைவியின் விவரங்கள் அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை முகாமின்போது கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பத்தில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குடும்ப ரசீது, வங்கி பாஸ் புத்தகம் எண் உள்ளிடவற்றை தவறின்றி குறிப்பிட வேண்டும்.
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளும் இணைக்க தேவையில்லை.
விண்ணப்ப பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்கத்தான் நேரம் ஒதுக்கீடு செய்து அளிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த நேரத்திற்கு ஏற்ப முகாமில் பங்கேற்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்ப ங்களும் பதிவு செய்யப்படும்.
மேலும் விண்ணப்ப பதிவு முகாமின் போது விண்ணப்பதாரரின் ஆதார் எண் பிவு செய்யப்பட்டு, விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலமாக சரிபார்க்க ப்படும். விரல் ரேகை சரியாக அமையவில்லை என்றால் ஆதார் அட்டை யுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிக்கு கடவுச்சொல் அளிக்க ப்படும்.
எனவே விண்ணப்பதாரர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போணை முகாமின் போது கொண்டு வந்தால் பயனுள்ளதாக இருக்கும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர் ஆவார்.
இந்த முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடக்கிறது. முகாமின் போது உதவுவதற்காக தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 கடைக்கு ஒரு பகுதி அலுவலர், 15 கடைக்கு ஒரு வட்டார அலுவலர் மற்றும் ஒவ்வொரு வட்டத்திற்கும் அந்தந்த தாசில்தார்கள் இந்த முகாம் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதுக்கரை, போத்தனூர் பகுதிகளில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- ைகதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் உள்ள திருமண மண்டபம் அருகே உள்ள தோட்டத்தில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து கோவில்பாளையம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த ஒடிசாவை சேர்ந்த பிபின்ரானா (வயது 27), பிரதீப்குமார் (34), பிடேஷ் பாண்டே ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் மது விலக்கு பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா தலைமையில் செட்டிப்பாளையம் - வடசித்தூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மொபட்டில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் மொபட்டில் கஞ்சாவை கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சேட்டு (37), செட்டிப்பா ளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (19) என்பது தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
போத்தனூர் போலீசார் மதுக்கரை மார்க்கெட் ரோடு சத்தியமூர்த்தி நகர் வழியாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த அர்ஜூன்குமார் (27), கண்ணன் (47) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருந்தது.
- பால்வியாபாரி வீட்டின் கதவை திறந்து கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 60). ஆவின் பால் வியாபாரி.
சம்பவத்தன்று இவரது மகன், வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை வெளியே உள்ள பகுதியில் மறைத்து வைத்து விட்டு வெளியே சென்றார். இதனை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்தார்.
பின்னர் வீட்டின் கதவை திறந்து மர்மநபர் உள்ளே சென்றார். மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம், டாலர் உள்பட 15 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.
வீட்டிற்கு திரும்பிய சதாசிவம் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்வியாபாரி வீட்டின் கதவை திறந்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 60). ஆவின் பால் வியாபாரி.
சம்பவத்தன்று இவரது மகன், வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை வெளியே உள்ள பகுதியில் மறைத்து வைத்து விட்டு வெளியே சென்றார். இதனை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்தார்.
பின்னர் வீட்டின் கதவை திறந்து மர்மநபர் உள்ளே சென்றார். மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம், டாலர் உள்பட 15 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.
வீட்டிற்கு திரும்பிய சதாசிவம் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்வியாபாரி வீட்டின் கதவை திறந்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- ஒற்றை யானை மட்டும் கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து உள்ளது.
- யானை கூட்டத்தை விரட்டுவதில் வனத்துறையினர் மெத்தனம் காட்டுகின்றனர்
வடவள்ளி,
கோவை நவாவூர் - சோமையம்பாளையம் செல்லும் வழியில் சுல்தானியபுரம் ரேஷன் கடை உள்ளது.
வனப்பகுதியை ஒட்டி இருக்கும் இந்த கடைக்கு இன்று அதிகாலை 5 யானைகள் வந்தன. கடையில் இருந்த அரிசியால் ஈர்க்கப்பட்ட அந்த யானைகள் கடையின் ஷட்டரை பலமாக தாக்கி உடைத்தன. இதில் ஷட்டர் உடைந்தது.
பின்னர் உள்ளே சென்ற யானைகள் அங்கிருந்த 10 மூட்டை அரிசியை சிதறடித்து தின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதே கடையில் யானைகள் புகுந்து அரிசியை ருசித்து சென்றிருந்தது. ருசி கண்ட பூனை போல் மீண்டும் யானைகள் அதே கடைக்கு வந்து அரிசியை தின்றுள்ளது.
கடந்து 10 நாட்களாக ஐ.ஓ.பி காலனி மருதமலை அடிவாரம் கல்வீரம்பாளையம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதியில் யானைக்கூட்டம் இரவு நேரங்களில் சுற்றி திரிந்து வருகிறது. இதில் ஒற்றை யானை மட்டும் கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து உள்ளது.
இன்று அதிகாலை அந்த யானை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை உடைத்து அங்கே ஸ்டோர் ரூமில் இருந்த உளுந்தம் பருப்பை ருசித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து நடையை கட்டியது. யானை கூட்டத்தை விரட்டுவதில் வனத்துறையினர் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர். யானைகள் செய்து வரும் அட்டகாசத்தால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.
- ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது
கோவை,
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் 26 வார்டுகள், 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு நீராதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இருந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி, மார்ச் மாதத்தில் அணையின் நீர்மட்டம் 6 அடியாக சரிந்தது.
அதைத்தொடர்ந்து ஏப்ரல்,மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் வந்தது.
ஜூன் மாதத்தில் ஒரு அடிக்கும் குறைவாக சரிந்தது. இதனால், சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டன.
இந்நிலையில், ஜூன் மாத இறுதியில் இருந்து சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருவதால், சிறுவாணி அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்தது.
இது தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறுகையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 7 கோடி லிட்டரில் இருந்து 8 கோடி லிட்டராக அதிகரிக்கப்ப ட்டுள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது என்றார்.
- கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.
- கார்த்திக்கை தொடர்பு கொண்ட பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார்.
குனியமுத்தூர்:
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). வெல்டர். இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.
பிரியாவின் தங்கை வீடு கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சிகோணம்பாளைத்தில் உள்ளது. இங்கு அவர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது பிரியாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த டிரைவர் தினேஷ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கணவரிடம் கோபித்துக்கொண்டு பிரியாக 2 குழந்தைகளுடன் கோவையில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தார். இங்கு வந்த பின்னர் தினேசுடன் நெருக்கம் அதிகமானது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். இந்த தகவல் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு ஏற்கனவே நடந்தவற்றை மறந்து விடு, என்னுடன் வா நாம் சேர்ந்து வாழலாம் என அழைத்தார்.
இதுகுறித்து பிரியா தனது கள்ளக்காதலன் தினேஷிடம் கூறினார். கார்த்திக் உயிரோடு இருந்தால் நாம் 2 பேரையும் சேர்ந்து வாழவிட மாட்டார். எனவே அவரை கொலை செய்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் என அவர்கள் 2 பேரும் கொலை திட்டம் தீட்டினர்.
அதன்படி தனது கணவர் கார்த்திக்கை தொடர்பு கொண்ட பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார். சம்பவத்தன்று அவரும் சேலத்தில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வந்தார்.
பிரியா தனது கணவரை கஞ்சிகோணாம் பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனி பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே கள்ளக்காதலன் தினேஷ் கத்தியுடன் மறைந்து இருந்தார். அவர் பாய்ந்து சென்று கார்த்திக்கை கத்தியால் குத்தினார். கார்த்திக் தடுக்க முயன்றதில் அவரது கையில் கத்திக்குத்து விழுந்தது.
வலிதாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் தினேசும், பிரியாவும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கார்த்திக் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற பிரியா, அவரது கள்ளக்காதலன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மக்கள் நீதிமய்யம் தொடங்கி விட்டது.
- தங்கவேலு தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
கோவை:
கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தொகுதி வாரியாக மக்களோடு மய்யம் என்கிற தலைப்பில் வீடு வீடாக சென்று, மக்களிடம் நேரடியாக குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. மக்கள் தெரிவிக்கும் குறைகளை கேட்டு, உடனே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மக்கள் நீதிமய்யம் தொடங்கி விட்டது. அதற்கான பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம்.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இருந்தாலும் இதில் தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது.
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணியுடன் இணைந்து நிற்கலாமா என்பது குறித்து மக்களிடம் வீடு, வீடாக சென்று கேட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்கள் செல்ல, செல்ல அந்த பால் பிரவீனின் உண்மை முகம் தெரிய வந்தது.
- புகாரின் பேரில் போலீசார் மாணவியின் தாயையும், அவரது கள்ளக்காதலனையும் பிடித்து விசாரித்தனர்.
சூலூர்:
கோவை சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று சூலூர் போலீஸ் நிலையத்திற்கு தனது பாட்டியுடன் வந்து புகார் அளித்தார்.
நான் சூலூர் பகுதியில் எனது தாயுடன் வசித்து வருகிறேன். எனது தாய் இங்கு அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். எனது தாய், எனது தந்தையை கடந்த 11 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டார். இதனால் நானும், எனது தாயாரும் மட்டும் தனியாக வசித்து வந்தோம். எனது தந்தை யார் என்பதே தெரியாமல் இருந்தேன்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு எனது தாயார் சென்னை அயனாவரத்தை சேர்ந்த பால்பிரவீன் (35) என்பவரை அழைத்து வந்தார். இவர் யார் என்று கேட்டபோது, இனி இவர் தான் உன் தந்தை என எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நானும் அவருடன் தந்தை என்ற முறையிலேயே பழகி வந்தேன்.
அவர் என்னிடம் அடிக்கடி செல்போனிலும் வீடியோ காலிலும் பேசி வந்தார். நானும் தந்தை என்ற முறையிலேயே பேசினேன்.
ஆனால் நாட்கள் செல்ல, செல்ல அந்த நபரின் உண்மை முகம் தெரிய வந்தது. பால்பிரவீன் செல்போனில் வீடியோ காலில் பேசும் போது, அவர் லேப்-டாப்பில் வைத்துள்ள ஆபாச படங்களை போட்டு வீடியோ கால் மூலமாக காண்பித்து வந்தார். நான் பார்க்க மறுத்தாலும் நீ பார் என வற்புறுத்தி வந்தார்.
மேலும் எங்கள் வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்குவார். அப்போது இரவில் நான் தூங்கிய பிறகு தொடக்கூடாத இடங்களில் தொட்டு என்னிடம் பாலியல் சில்மிஷத்திலும் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து அவரின் செயல்கள் அதிகரிக்கவே எனது தாயாரிடம் இது குறித்து நான் தெரிவித்தேன்.
ஆனால் எனது தாய், அவரை எதுவும் சொல்லாமல் என்னை திட்டி தாக்கினார். இதனால் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்தநிலையில் எனது தாயின் ஆண் நண்பருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தகவல் அறிந்தேன். இனிமேல் பிரச்சினை இருக்காது என்று தான் நினைத்திருந்தேன். ஆனாலும் அந்த நபர் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச படங்களை காண்பித்து பார்க்க கூறினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பால் பிரவீன் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கினார். அப்போதும் அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்து வந்தேன். பள்ளியில் நான் மிகவும் கவலையுடன் இருப்பதை பார்த்த ஆசிரியர்கள் என்னவென்று கேட்டனர்.
அப்போது நான் எனக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை என்றும், எனக்கு எனது தாயின் கள்ளக்காதலன் கொடுத்த பாலியல் தொந்தரவுகளையும் தெரிவித்தேன்.
அவர்களும் எனது பாட்டியை அழைத்து விசாரித்து விட்டு புகார் கொடுக்க அறிவுறுத்தினர். அதன்படி புகார் கொடுத்துள்ளேன். எனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வரும் எனது தாயாரின் கள்ளக்காதலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் மாணவியின் தாயையும், அவரது கள்ளக்காதலனையும் பிடித்து விசாரித்தனர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தவர்கள் போலீசாரின் விசாரணையை அடுத்து ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பால்பிரவீனை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் தாயும் கைது செய்யப்பட்டார்.
2 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத்துறை என்னை விசாரணைக்காக அழைத்து சென்றது.
- காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையிட வேண்டும்.
கோவை:
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சசிகலா சுற்று ப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்தார். பின்னர் நேற்று மாலை அவர் கோவை வழியாக விமானம் மூலம் சென்னை சென்றார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கொங்கு மண்டல பகுதி மக்கள் நல்லவர்கள், அவர்கள் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்பார்கள். நான் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மக்களை சந்திக்க உள்ளேன். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இருந்த போது இருந்த நிலை இப்போது இல்லை. அனைவரையும் ஒன்று சேர்ப்பதுதான் எனது வேலை. பாராளுமன்ற தேர்தலுக்கள் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன். ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. அரசு உரிமைத் தொகை வழங்குவதாக கூறி உள்ளது. நிதிநிலை சரியில்லாத நேரத்தில் எப்படி கொடுப்பார்கள். இது சாத்தியமில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத்துறை என்னை விசாரணைக்காக அழைத்து சென்றது. இரவு 11.30 மணிவரை என்னிடம் விசாரணை நடத்தினார்கள். இரவு 11.30 மணிக்கு என்னை கைது செய்ததாக கூறினார்கள். நானும் முழு ஒத்துழைப்பு அளித்தேன். எனவே, அமலாக்கத்துறை விசாரணைக்கு யாராக இருந்தாலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆனால் ஒரு அமைச்சரிடம் விசாரணை நடத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் அளிக்கிறார்.
தி.மு.க அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், தனது கட்சியின் பிரச்சினையில் முனைப்பு காட்டி வருகிறது.
சட்டம்-ஒழுங்கு தமிழ்நாட்டில் சரியில்லை. உரிமம் இன்றி 24 மணிநேரமும் பார் செயல்படுகிறது. ஆனால் தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போட்ட அரசு, விவசாயிகளுக்கான நல்ல முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையிட வேண்டும். தி.மு.க.வுக்கு வாக்களித்ததால் மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் சரியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






