என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கடந்த வாரம் வெளியான மாமன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • நடிகர் சூரி கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    கோவை:

    நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    6 வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையிலான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் வெளிவந்துள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், மாமன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பின், கோவிலில் இருந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்களைச் சந்தித்த சூரி, மாமன் திரைப்படத்தைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

    • கல்லாறு முதல் வளைவு அருகே வந்த போது கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்தது.
    • திவ்ய பிரியா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள்வழி பேத்தி திவ்ய பிரியா(28). திவ்ய பிரியா மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். இவர், அவரது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றார். இன்று மாலை காரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை சென்றனர்.

    பார்த்திபன் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்.. மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு முதல் வளைவு அருகே வந்தபோது கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் திவ்ய பிரியா, பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. வளர்மதிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்ய பிரியா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்சியில் இருந்து தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக கூறி த.வெ.க.வில் இருந்து விலகுவதாக அறிக்கை.
    • வைஷ்ணவியுடன், மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர்.

    கோவை கவுண்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தார் வைஷ்ணவி.

    இவரை கட்சியில் இருந்து தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக கூறி த.வெ.க.வில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    இந்நிலையில், வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

    ரசியல் கட்சியில் இணைந்து மக்கள் சேவையாற்ற விரும்பினால் பாஜகவில் இணையலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். மதிமுக தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர்.

    • மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அங்கு நின்ற யானையை சத்தம் எழுப்பி வனத்திற்குள் விரட்டினர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் டேம் அருகே இடதுகரை குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதி வனத்தையொட்டி உள்ளது.

    இதனால் அவ்வப்போது வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய யானை இடதுகரை குடியிருப்புக்குள் புகுந்தது.

    குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த யானை, அங்குள்ள ஜோசப் என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த மேரி (வயது77) என்பவர் எழுந்தார். யானை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர், அங்கிருந்து ஓட முயன்றார்.

    ஆனால் அதற்குள்ளாகவே யானை அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவருடன் தங்கியிருந்த தெய்வானை(75) என்பவர் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அங்கு நின்ற யானையை சத்தம் எழுப்பி வனத்திற்குள் விரட்டினர்.

    இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த மானாம்பள்ளி வனசரகர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

    பின்னர் இறந்த மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறது.

    • சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 300-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
    • விசாரணையில் எழுந்த சந்தேகங்கள் காரணமாக சிலருக்கு சமன் அனுப்பப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொட நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.

    இதுதொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமினில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 300-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இறந்த கனகராஜின் உறவினரான ரமேஷ் என்பவருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இதையடுத்து ரமேஷ் இன்று காலை கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறும்போது, இந்த வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. விசாரணையில் எழுந்த சில சந்தேகங்கள் காரணமாக சிலருக்கு சமன் அனுப்பப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

    • விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
    • கேரளாவை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தனர்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க, சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து ஹாங்காக் வழியாக கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது.

    இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களது உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    அப்போது கேரளாவை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் உயர் ரக கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

    இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் வழியாக அதை கடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 5 கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
    • கடந்த 3 நாட்களாக கால்நடை டாக்டர்கள் யானைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலை அருகே கடந்த 17-ந்தேதி நோய்வாய்ப்பட்டு தனது குட்டியுடன் ஒரு பெண் யானை மயங்கிய நிலையில் இருந்தது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை கண்காணித்தனர்.

    துரியன் மற்றும் சுயம்பு ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, கும்கிகள் உதவியுடன் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

    கடந்த 3 நாட்களாக கால்நடை டாக்டர்கள் அந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஹைட்ரோ தெரபி சிகிச்சை வழங்குவதாக கூறி யானையை குழிக்குள் இறக்கி நீரை ஊற்றி சிகிச்சை அளித்தனர்.

    அப்போது சிறிது நேரத்திலேயே அந்த யானை உயிரிழந்தது.

    இன்று காலை இறந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

    மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், வனவர் அய்யப்பன், வனக்காப்பாளர் சரவணக்குமார், ஆனைமலை புலிகள் காப்பாக கால்நடை டாக்டர் சுகுமார், கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், முகில் அரசு ஆகியோர் முன்னிலையில் யானை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    அப்போது வயிற்றில் 15 மாத குட்டி யானை இருந்தது தெரியவந்தது.

    அந்த குட்டி யானையை வனத்துறையினர் வெளியில் எடுத்தனர். அந்த குட்டி யானையும் இறந்த நிலையிலேயே இருந்ததும் தெரியவந்தது.

    கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளித்து வந்த வனத்துறையினர் பெண் யானை கருவுற்று இருந்ததை கண்டறியாமல் இருந்தது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    • ஆய்விற்காக சத்குருவால் வழங்கப்படும் சம்யமா தியான பயிற்சியை மேற்கொண்டவர்கள் 40 நாட்கள் கடுமையான செயல்முறைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
    • ஆழமான மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் தூக்கம் அவர்களின் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

    கோவை:

    "சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு ஈஷா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் தியான பயிற்சிகளினால் மூளையின் வயது 5.9 ஆண்டுகள் வரை இளமையாகிறது" என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்த மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் பெத் இஸ்ரேல் டீக்கனஸ் மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள், ஈஷாவில் வழங்கப்படும் யோகா மற்றும் தியானங்கள் மூலம் மூளையில் நடைபெறும் மாற்றங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    இந்த ஆய்விற்காக சத்குருவால் வழங்கப்படும் சம்யமா தியான பயிற்சியை மேற்கொண்டவர்கள் 40 நாட்கள் கடுமையான செயல்முறைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் தினமும் சைவ உணவு எடுத்துக் கொள்வது ஈஷாவில் வழங்கப்படும் ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா, ஷக்தி சலன க்ரியா, யோகாசனங்கள், சூன்ய தியானம் மற்றும் சுக க்ரியா உள்ளிட்ட யோக பயிற்சிகளை மேற்கொள்வது ஆகியன அடங்கும்.

    இந்த ஆய்வு ஒருவர் தூக்கத்தில் இருக்கும் போது எடுக்கப்படும் EEG ஸ்கேன் முறையைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஆய்வாளர்கள் EEG தரவுகள் மூலம் 'மூளை வயது குறியீட்டை' (BAI) அளவிட்டனர். இந்த அளவீடுகள் மூலம் மூளையின் வயது எவ்வளவு இளமையாகவோ அல்லது முதிர்ந்ததாகவோ இருக்கிறது என்பதை அறிய முடியும்.

    இந்த ஆய்வின் முடிவுகளின்படி, சத்குருவின் தியான முறைகளை மேற்கொள்ளும் நபர்களுடைய மூளையின் வயது அவர்களின் உண்மையான வயதை விட கணிசமாக இளமையாக இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, மூளையின் வயது சராசரியாக 5.9 ஆண்டுகள் இளமையாவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    மேலும் இந்த ஆய்வில் சில முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. சத்குரு வழங்கும் உயர்நிலை தியான பயிற்சிகளில் ஈடுபடுபவர்களின் மூளை இளமையாவதோடு அதன் வயதாகும் தன்மையும் வெகுவாக குறைந்து இருந்தது. அவர்களின் தூக்கத்தின் தரம் மேம்பட்டு இருந்தது, ஆழமான மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் தூக்கம் அவர்களின் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நினைவாற்றல் கூர்மையாகவும், சிந்தனை தெளிவாகவும் இருந்தது. மன அழுத்தம் மற்றும் தனிமையாக உணரும் தன்மை வயதானவர்களை விட குறைவாக இருந்தது.

    மொத்தத்தில், தியானம் மூளையை வயதாவதில் இருந்து பாதுகாக்கவும், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவலாம் என ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. இந்த ஆய்வு முடிவுகள் 'Mindfulness' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

    https://doi.org/10.1007/s12671-025-02583-y

    இதுகுறித்து இந்த ஆய்வின் மூத்த இணை ஆசிரியரும் மருத்துவருமான பாலசந்தர் சுப்ரமணியம் கூறுகையில் "இந்த ஆய்வு, சத்குருவால் வழங்கப்படும் "சம்யமா" மற்றும் "ஷக்தி சலன கிரியா" போன்ற ஆழமான யோக பயிற்சிகள் மூளை இளமையாக இருக்க உதவுகின்றன என்பதற்கு வலுவான ஆதாரங்களை அளிக்கின்றது. நம் பண்டைய யோகப் பயிற்சிகள் அறிவியல் சோதனைகளில் நிறுபிக்கப்படுவது ஊக்கமளிக்கிறது." எனக் கூறினார்.

    இதுகுறித்த சத்குருவின் எக்ஸ் தள பதிவில், "இன்றைய அறிவியலால், மனித இயந்திரத்தின் மீது உள்நிலை அறிவியல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கண்டறிந்து அளவிட முடிவது அற்புதமானது. மனித இயந்திரத்தின் உயிரோட்டம் மற்றும் துடிப்பை மேம்படுத்துவது, முதுமையின் செயல்முறையையும் அறிவாற்றல் குறையும் செயல்முறையையும் இயற்கையாகவே மெதுவாக்கும். ஒவ்வொரு மனிதரும் தங்களது மனம் மற்றும் உடல் நலனில் முதலீடு செய்ய வேண்டும். நாம் இதை நமக்காகவும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காகவும், வருங்கால தலைமுறைகளுக்காகவும் செய்ய வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

    • கோவை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர்.
    • 22 கேரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் என்பதும், பழைய நகையை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறுகுறு தொழில்முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:-

    வங்கிகள் மற்றும் தங்க நகைக்கடன்கள் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு நகைக்கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் 9 கட்டுப்பாடுகள் அனைவரையும் கடுமையாக பாதிக்கும்.

    குறிப்பாக சிறு, குறு, தொழில் செய்பவர்கள் மற்றும் விசைத்தறி தொழில் செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    கோவை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர்.

    சிறு, குறு தொழில் செய்பவர்கள், தங்களது தொழிலுக்கு, அவசர தேவை என்றால், உடனே வங்கிக்கு சென்று தங்க நகையை அடமானம் வைத்து கடன் பெற்று அதனை சரி செய்து கொள்வார்கள்.

    தற்போது தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனையும் 75 சதவீதம் மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது மிகவும் கடுமையாக பாதிக்கும்.

     

    22 கேரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் என்பதும், பழைய நகையை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று ஒரு நபருக்கு ஒரு கிலோ தங்கம் மட்டுமே அடமானம் வைக்க முடியும்.

    உரிமையாளர்கள் நாங்கள் தான் என்பதற்கு சான்று கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளும் அவசர தேவைக்காக அடகு வைத்து பணம் உதவி பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

    ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் உள்ள தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறு, குறு தொழில் செய்பவர்கள் இந்த கட்டுப்பாடுகளால் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    எனவே மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகளை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கோவை வையம்பாளையத்தை சேர்ந்த முரளி என்பவர் கூறும்போது, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.

    சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு ஆண்டுதோறும் வட்டியை கட்டி அதனை மீண்டும் திருப்பி வைத்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டால் பணத்தை முழுமையாக செலுத்தி நகையை திருப்ப வேண்டும் என்பது முடியாத காரியம்.

    எனவே இந்த கட்டுப்பாடுகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

    • அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சண் தோட்டம் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
    • நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் நல்லாம்பாளையம் மின்பாதையில் உள்ள ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லம்பாளையம் ரோடு, டி.வி.எஸ். ரோடு மற்றும் ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல் சாய்பாபா காலனி மற்றும் இடையர்பாளையம் மின் பாதைக்கு உட்பட்ட இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜவீதி, கே.கே.புதூர் 6-வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி. லே-அவுட், கிரிநகர், தேவி நகர், அம்மாசைக்கோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி.வீதி, சின்னம்மாள் வீதி ஒரு பகுதி, பி.டி. காலனி, இ.பி.காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்.நகர், அருண்நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சண் தோட்டம் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவத்தை பொறுத்தவரை தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது.
    • தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது.

    கோவை:

    கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவாக உள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவத்தை பொறுத்தவரை தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது.

    எதிர் முகாமில் உள்ள அ.தி.மு.க கட்சி பெரிய வாக்கு வங்கி வைத்துள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து இருப்பதை அ.தி.மு.க.வின் கடைமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை.

    பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்று கூறி விட்டு, ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இப்போது மீண்டும் கூட்டணி வைத்தது ஏன் என அவர்கள் கேட்கின்றனர். எனவே அந்த கூட்டணியை வெல்லும் கூட்டணி என சொல்ல முடியாது.

    நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தேர்தலில் எந்த அளவு வாக்கு பெறும் என்று தெரியவில்லை. அவர்கள் தனித்து நிற்பார்களா? அவர்கள் முடிவு என்ன என்று தெரியவில்லை.

    காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆங்காங்கே சுவரொட்டி ஒட்டுவதில் தவறில்லை. அனைத்து கட்சிகளுக்குமே அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோருக்கும் அந்த ஆசை இருக்கும்.

    தமிழகத்தில் 1967-க்கு பிறகு காங்கிரஸ் கட்சி அவ்வாறு இல்லை. இதில் எனக்கு வருத்தம் தான். தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க பெறக்கூடிய தொகுதிகளை வைத்து, காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிட கேட்டு பெறுமா என்று கூற முடியாது. கூட்டணி தர்மம் என்று உள்ளது.

    ஆளும் கட்சியாகவும் இல்லாமல் எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் இருப்பதால் காங்கிரஸிற்கு ஒரு தர்ம சங்கடமான நிலை உள்ளது.

    தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது.

    முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர் பா.ஜ.க. கட்சி வலிமையாக உள்ளது. தேர்தலில் அவர்களை எதிர் கொள்வதற்கு இந்தியா கூட்டணியில் வலிமை தேவை என்ற அர்த்தத்தில் தான் பேசியுள்ளார்.

    பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை நாங்கள் வரவேற்கிறோம்.

    அதே நேரத்தில் பல கேள்விகள் உள்ளன. அங்கே பாதுகாப்பு இல்லாதது குறித்தும், பாதுகாப்பு குறைபாடு குறித்தும் கேள்விகள் இருக்கின்றன. எனவேதான் பாராளுமன்ற கூட்டத்தில் இதுகுறித்த விவாதத்தின் போது பிரதமர் மற்றும் ராணுவ மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளோம்.

    தமிழக கவர்னர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் பிற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி எடுத்திருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார், தேசிய ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் கோவை ஹரிஹரன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, ஐ என்.டி எஸ். சி மாவட்ட பொறுப்பாளர் கோவை செல்வம், ராஜாமணி, சோபனா செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் தடைபடும்.

    கோவை:

    முத்துக்கவுண்டன்புதூர் துணை மின்நிலையத்தில் நாளை (20-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் வருமாறு:-

    நீலாம்பூர், அண்ணா நகர்-நீலாம்பூர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன்புதூர் ரோடு, பைபாஸ் ரோட்டின் ஒருபகுதி மற்றும் குரும்பபாளையத்தின் ஒரு பகுதி. மேற்கண்ட தகவலை சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஆர்.சபரிராஜன் தெரிவித்து உள்ளார்.

    ×