என் மலர்
கோயம்புத்தூர்
- சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
- சுற்றுலா தலங்களாக விளங்கும் கோவை குற்றாலம், ஆனைமலை அருகே உள்ள கவியருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதிகனமழைக்காக சிவப்பு நிற எச்சரிக்கை இன்றும் நீடிக்கிறது.
நேற்றும், இன்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வால்பாறை தாலுகா சின்னக்கல்லார் பகுதியில் 11 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. பொள்ளாச்சி தாலுகா பகுதியில் 8 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. மாவட்டத்தில் முக்கிய அணைகளாக உள்ள சிறுவாணி, ஆழியார், பில்லூர், சோலையாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளன.
சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் நீர்த்தேக்க உயரம் 49.53 அடி என்றாலும், அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.
அணையில் இருந்து பெறப்படும் நீர் வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும், மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும் வினியோகிக்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சிறுவாணி அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணையில் கடந்த 24-ந் தேதி 19.02 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. 25-ந் தேதி 21.55 அடி, 26-ந் தேதி 26.60 அடி, 27-ந் தேதி 30.24 அடி, நேற்று 32.73 அடியாக இருந்தது. இன்று காலை நீர்மட்டம் 34.80 அடியாக உயர்ந்தது.
கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 15.71 அடி உயர்ந்துள்ளது. மேலும் இன்று அணையில் 6 செ.மீ மற்றும் அடிவாரப்பகுதியில் 5 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. நீர் எடுப்பதற்காக உதவும் மூன்று வால்வுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
மற்றொரு குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 100 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை கடந்த 25-ந்தேதி நள்ளிரவு நிரம்பியது. அன்று முதல் அணையின் 4 மதகுகள் திறந்து உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று 5-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த 20-ந் தேதி 2 அடியாக இருந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3889.58 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 50 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலயில் 165 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 59.69 அடியாக உயர்ந்துள்ளது.
ஆழியாறு அணை நீர்மட்டம் கடந்த 24-ந் தேதி 75.30 கனஅடி நீர்மட்டம் இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்று காலை 80.20 அடியாக தண்ணீர் உயர்ந்துள்ளது.
இதேபோல சுற்றுலா தலங்களாக விளங்கும் கோவை குற்றாலம், ஆனைமலை அருகே உள்ள கவியருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பொது மக்கள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை கனமழை பெய்தது.
- மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதியே இருளாக காட்சியளிக்கிறது.
வால்பாறை:
கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால் கடந்த 3 தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரிகள், குளங்கள், குட்டைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.
வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை கனமழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது.
வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த மழைக்கு நேற்று இரவு வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் முனீஸ்வரன் கோவில் பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதேபோல் மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லும் சாலை, கருமலை எஸ்டேட் பகுதியில் குரூப் ஆபிஸ் அருகேயும் மரம் விழுந்தது.

வால்பாறை தலைநார், சக்தி எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதியே இருளாக காட்சியளிக்கிறது. அதேபோன்று பெரியகல்லாறு, சின்னகல்லார் ஆகிய எஸ்டேட் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இன்று காலை வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 6-வது கொண்ைட ஊசி வளைவில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே என 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
தொடர் கனமழையுடன் வீசிய சூறாவளி காற்றுக்கு சோலையார் அணை பகுதி சத்யா நகரில் உள்ள சுதர்சனன் என்பவரின் வீட்டின் மேல் கூரை காற்றில் பறந்து சேதம் அடைந்தது. அங்கு இருந்தவர்கள் மீட்கப்பட்டு சோலையார் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
கோவை மாநகரில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு கனமழை வெளுத்து வாங்கியது. இரவிலும் இந்த மழை நீடித்தது. மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கோவையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து அங்கிருந்து குளங்களுக்கும் தண்ணீர் செல்கிறது. இதனால் கோவையில் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 11 செ. மீ மழை பதிவாகி உள்ளது.
மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்னக்கல்லார்-116, சின்கோனா-70, சிறுவாணி அடிவாரம்-86, வால்பாறை பி.ஏ.பி-58, வால்பாறை தாலுகா-55, சோலையார்-61.
- கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
- கன மழை காரணமாக தென்காசி மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை:
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். அதன் எதிரொலியாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி உள்ள கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே அதாவது நேற்றுமுன்தினமே கேரளாவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாட்கள் அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் அதிகபட்சமாக 35 செ.மீ. மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
கனமழையால் கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆறு, வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பவானி ஆறு, ஆழியாறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மற்றும் சிறுவாணி அணை, ஆழியார் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பில்லூர் அணையில் நேற்று திடீரென நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து இரவில் 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் குளிப்பதற்கோ, துணி வைப்பதற்கோ யாரும் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடுரோட்டில் முறிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள். மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்துள்ளதால் பல கிராமங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
ஊட்டிக்கு சுற்றுலா வந்த 15 வயது சிறுவன் மரம் முறிந்து விழுந்ததில் பலியானதை தொடர்ந்து முன் எச்சரிக்கையாக ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகளும் தாங்களாகவே நீலகிரியில் இருந்து வெளியேறி வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைப்பயிர்த் தோட்டங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
இன்று 2-வது நாளாக கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு நிற அதிகனமழை எச்சரிக்கை நீடிக்கிறது. இதனால் மழை பொழிவு மேலும் அதிகரித்து சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கன மழை காரணமாக தென்காசி மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலும் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் 2-வது நாளாக அங்கு சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-
ஒரு வார காலம் முன்னதாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் தீவிரமடைந்து காணப்படுகிறது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ, மேல் பவானி 30 செ.மீ மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 21 செ.மீ அதி கனமழை பதிவாகியுள்ளது.
ரத்னகிரி அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தெலுங்கானா பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மே 31-ந்தேதி வரை பருவமழை தீவிரமடைந்து மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொடுக்க கூடும்.
இருவேறு காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மேற்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் மகராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மும்பை மாநகர் உள்ளிட்ட இடங்களில் தொடங்க கூடும். அவ்வாறு தொடங்கும் நிலையில் அது கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இயல்பிற்கு முந்தைய தொடக்கமாக அமையும்.
அதேபோல கடந்த 53 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வேகமாக தென்மேற்கு பருவமழை முன்னேறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2 மாவட்டங்களுக்கும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த 2 மாவட்டங்களுக்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 100 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 79.50 அடியாக இருந்தது.
நேற்று காலை 11 மணியளவில் ஒரே நாளில் 7.50 அடி உயர்ந்து 87 அடியாக இருந்தது. மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்கியதில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து இரவு 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 94.50 அடியை தாண்டியது.
இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 16,000 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஆனைமலை தேவிபட்டணம், சிறுமுகை, கிணத்துகடவு உள்பட 4 இடங்களில் வீடுகள் இடிந்தன.
- நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்தது.
கோவை:
கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தின.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை கொட்ட தொடங்கியது. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை நேற்றும் நீடித்தது.
இந்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கோவை மாவட்டத்தில் மலைப்பிரதேசமான வால்பாறையில் வில்லோணி எஸ்டேட் செல்லும் ரோடு மற்றும் உருளிக்கல் எஸ்டேட் செல்லும் ரோடு, குரங்குமுடி எஸ்டேட் ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் காபி தோட்டத்திற்குள் இருந்த மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் 2 மின் கம்பங்கள் சாய்ந்ததால், அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதுபோன்று கருமலை ஆறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வால்பாறை பகுதிக்கு குடிநீர் வழங்கும் அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிந்தது. அங்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர்(பொறுப்பு) விஸ்வநாதன், வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா, தாசில்தார் மோகன் பாபு, நகராட்சி ஆணையாளர் ரகுராமன் ஆகியோர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் வால்பாறை போலீசாருடன் சென்று கூழாங்கல் ஆற்று பகுதி, சோலையாறு சுங்கம் ஆற்று பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவை மதுக்கரை தாலுகா பிச்சனூர் ஊராட்சி நவகரை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பழனி ரங்கன்(வயது 85) என்பவரது வீட்டுச்சுவர் இடிந்தது. இதில் வீட்டில் இருந்த பழனி ரங்கன், அவரது மனைவி ராசம்மாள்(85) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை அமைச்சர் முத்துசாமி சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது கலெக்டர் பவன்குமார், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
அந்த பகுதியில் மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பிச்சனூர் ஊராட்சி செயலாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அங்கு பழுதான நிலையில் இருந்த 27 வீடுகளில் வசித்து வந்த 92 பேரை வெளியேற்றி அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். அவர்களுக்கு உணவு உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
இது தவிர ஆனைமலை தேவிபட்டணம், சிறுமுகை, கிணத்துகடவு உள்பட 4 இடங்களில் வீடுகள் இடிந்தன. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
தொடர் மழையால் பில்லூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 100 அடி. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 79 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து நேற்று 87 அடியாக இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நொய்யல் ஆற்றில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் சித்திரைச்சாவடி தடுப்பணையில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது. அங்கு ஆபத்தை மீறி பொதுமக்கள் குழந்தைகளுடன் தண்ணீரில் இறங்கி விளையாடி வருகின்றனர். மேலும் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்குள்ள சாடியாத்தா நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் கொட்டுகிறது. கோவை வின்சென்ட் ரோட்டில் அபாயகரமான நிலையில் மே பிளவர் மரம் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று அந்த மரத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெட்டி அகற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 சென்டி மீட்டர் மழை பதிவானது.
இதற்கிடையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்தனர். ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைன்பாரஸ்ட் பகுதியில் 8-வது மைல் அருகே காரை நிறுத்தி இயற்கை காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது வீசிய சூறாவளி காற்றுக்கு மரக்கிளை முறிந்து ஆதிதேவ் என்ற 15 வயது சிறுவன் மீது விழுந்தது. இதில் அவன் படுகாயம் அடைந்தான்.
தகவல் அறிந்து வந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆதிதேவ் உயிரிழந்தான்.
- வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது
- நடப்பாண்டில் வெள்ளியங்கிரி மலை ஏறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.
இந்நிலையில், கோவையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உடல் நிலை மோசமான நிலையில் 5ஆவது மலையில் சிக்கியிருந்த நபர் உயிரிழந்தார். ஏற்கெனவே ஏழாவது மலையேறிய போது காரைக்காலைச் சேர்ந்த கௌசல்யா மயங்கி விழுந்து உயிரிழந்தார்
நடப்பாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
- கோவை வழியாக செல்லும் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
- நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சித்திரை சாவடி முதல் தடுப்பணையில் வெள்ளநீர் கரைபுரண்டு ஒடுகிறது.
வடவள்ளி:
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.
இதன்காரணமாக கோவை வழியாக செல்லும் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நொய்யலாற்று வழித்தடப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையே கோவையின் முக்கிய நதியாகவும், விவசாயிகள் வாழ்வாதாரமாகவும் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சித்திரை சாவடி முதல் தடுப்பணையில் வெள்ளநீர் கரைபுரண்டு ஒடுகிறது.
நீண்ட நாட்களாக மழை இல்லாமல் வறண்டு காணப்பட்ட சித்திரைசாவடி தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அழகை காண சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் அந்த பகுதியில் தொண்டாமுத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை பகுதியிலும் கனமழை வெளுத்து வாங்குவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, ஆழியார் கவியருவி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறையில் காலை 6:00 மணி வரை பெய்த மழைஅளவு விவரம் வருமாறு:-
வால்பாறை 51 மி.மீ., சோலையார் அணை-73 மி.மீ., சின்னக்கல்லார்-137 மி.மீ., சின்கோனா-95 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. மேலும் அதிகபட்சமாக சின்ன கல்லார் பகுதியில் 13 செ.மீ. மழை பெய்து உள்ளது.
- அரக்கோணத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
- தி.மு.க. நிர்வாகி தெய்வசெயல் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 3 ஆண்டுகள் தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தவர் முதலமைச்சர். 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் நிதியை பெற்றிருக்கலாம்.
* அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார்.
* எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பிரதமருக்கு கருப்பு பலூன் விட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
* ஆட்சிக்கு வந்தபிறகு வெள்ளைக்குடை பிடித்து சென்று பிரதமருக்கு வரவேற்பு அளித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு.
* தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றிருக்கிறது. அதனால் அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றது.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது.
* மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தி.மு.க. அரசு தவறிவிட்டது.
* அரக்கோணத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
* தி.மு.க. நிர்வாகி தெய்வசெயல் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* குற்றவாளிகள் முன்ஜாமின் பெற காவல்துறையை துணை புரிகிறது.
* மோசமான ஆட்சி நடந்து கொண்டிருப்பதற்கு அரக்கோணமே சாட்சி என்றார்.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு வந்ததும் அங்கு பொதுமக்கள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவர்.
பேரூர்:
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை குற்றாலம் அருவி சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் வரத்து இருக்கும்.
எனவே கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்துக்கு வந்திருந்து, அங்குள்ள அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வனத்துறை ஊழியர்கள் இன்று காலை கோவை குற்றாலம் அருவியின் நீர்வரத்து அம்சங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர். அப்போது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து கோவை குற்றாலம் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை குறைந்து கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு வந்ததும் அங்கு பொதுமக்கள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆழியார்-வால்பாறை சாலையில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் முகாமிட்டு உள்ளனர்.
- யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக தற்போது வனத்தில் இருந்து வெளியேறி, ஆழியாரின் வறண்ட அணைப்பகுதியில் சுற்றிதிரிகின்றன.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. இங்கு புலி, மான், வரையாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெயில் வாட்டி வதைப்பதால், ஆழியார் அணையில் நீர்மட்டம் வறண்டு பாறைகள் தென்படுகின்றன.
இதனால் நீலகிரி வனத்தில் உள்ள காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக தற்போது வனத்தில் இருந்து வெளியேறி, ஆழியாரின் வறண்ட அணைப்பகுதியில் சுற்றிதிரிகின்றன.
ஆழியார்-வால்பாறை சாலையில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் முகாமிட்டு உள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக பொதுமக்களை காட்டு யானைகள் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் ஆழியார் பகுதியில் உலா வரும் யானைகள் கூட்டத்தை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
காட்டு யானைகள் கூட்டம் ஆழியார் பகுதியில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும். வனவிலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம். மேலும் வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்கவோ, வனவிலங்குகளை கண்டதும் சாலையில் வாகனங்களை நிறுத்தவோ கூடாது. மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எங்களது நபர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள்.
- நாங்கள் சொல்லும் பணத்தை நீங்கள் வைத்து விட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
கோவை:
அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி.
இவர் குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இவரது வீட்டிற்கு காளப்பட்டி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரித்து பார்த்தார். அதனை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த கடிதத்தில், ஜூலை 30-ந் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வெடிப்பு நடத்த உள்ளோம். நாங்கள் உங்களை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.
எங்களது நபர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒரு பையில் வைத்து, 25-ந் தேதி 2 மணி முதல் 2.30 மணிக்குள் காளப்பட்டி-வெள்ளானைப்பட்டி ரோடு கலியபெருமாள் குட்டை அருகே உள்ள குப்பை மேட்டில் வைக்க வேண்டும்.
நாங்கள் சொல்லும் பணத்தை நீங்கள் வைத்து விட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி இல்லையென்றால், 3 மாதத்துக்குள் உங்களையும், உங்கள் குடும்பத்தில் 3 பேரையும் கொல்வோம். இது வெறும் குறுஞ்செய்தி அல்ல. எச்சரிக்கை எனவும் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் அ.தி.மு.க வக்கீல் பிரிவு செயலாளர் தாமோதரன் தலைமையில் இன்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலைமிரட்டல் வந்துள்ளது.
எனவே முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காட்டு யானைகள் கூட்டம் ஆழியார் பகுதியில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும்.
- வனவிலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. இங்கு புலி, மான், வரையாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெயில் வாட்டி வதைப்பதால், ஆழியார் அணையில் நீர்மட்டம் வறண்டு பாறைகள் தென்படுகின்றன.
இதனால் நீலகிரி வனத்தில் உள்ள காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக தற்போது வனத்தில் இருந்து வெளியேறி, ஆழியாரின் வறண்ட அணைப்பகுதியில் சுற்றி திரிகின்றன.
ஆழியார்-வால்பாறை சாலையில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் முகாமிட்டு உள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக பொதுமக்களை காட்டு யானைகள் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
மேலும் ஆழியார் பகுதியில் உலா வரும் யானைகள் கூட்டத்தை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
காட்டு யானைகள் கூட்டம் ஆழியார் பகுதியில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும். வனவிலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம். மேலும் வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்கவோ, வனவிலங்குகளை கண்டதும் சாலையில் வாகனங்களை நிறுத்தவோ கூடாது. மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






