என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
    • அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.

    வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.

    60 வயதான அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

    கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.

    இந்நிலையில், அமுல் கந்தசாமி மறைவைத் தொடர்ந்து வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

    • ரோடு ஷோவின் போது வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார்.
    • சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே தங்கள் பணியை தொடங்கி விட்டன. ஆளும்கட்சியான தி.மு.க. 200 தொகுதிகளில் இலக்கு நிர்ணயித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

    அதேபோல் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்திருந்த, தற்போதைய பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. மீண்டும் அரியணையில் ஏறுவதற்காக மிக வேகமாகவும், சுறுசுறுப்புடனும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

    சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு அ.தி.மு.க கட்சியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பே திண்ணை பிரசாரத்தை தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் மக்களை அவர்களது வீட்டிற்கே சென்று சந்திக்கின்றனர். அப்போது, மக்களிடம் அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பதுடன், தி.மு.க ஆட்சியின் அவலநிலைகளையும் மக்களிடம் எடுத்து கூறி வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, இதில் உடன்பாடு உள்ள கட்சிகளை கூட்டணியில் இணைத்து மெகா கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் தேர்தல் பரப்புரையின் ஒரு கட்டமாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக அவர் வருகிற 7-ந் தேதி கொங்கு மண்டலமான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 21-ந் தேதி வரை முதற்கட்ட சுற்றுப்பயணம் செய்கிறார்.

    தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ரோடு ஷோ நடத்துகிறார். இந்த ரோடு ஷோவின் போது வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார்.

    மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் குறைகளை கேட்டறிவதுடன், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கிறார். தி.மு.க ஆட்சியின் அவல நிலைகள் குறித்தும் மக்களிடம் எடுத்து கூறுகிறார். ரோடு ஷோ முடியும் இடங்களில் மக்கள் மத்தியில் பிரசார வேனில் நின்றவாறு உரையாற்றவும் உள்ளார்.

    இதுமட்டுமின்றி சட்டசபை தொகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொழிலாளர்கள், நகை தொழிலாளர்கள், தொழில் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அந்த சந்திப்பின் போது தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட சுற்றுப்பயண தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்தந்த சட்டசபை தொகுதிகளில் தற்போது முன்னேற்பாடு பணிகளை கட்சியினர் தீவிரமாக செய்துவருகின்றனர்.

    முதலில் வருகிற 7-ந் தேதி கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அன்று காலை 9 மணிக்கு வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.

    9.30 மணிக்கு அங்குள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகள் சங்கத்தினரை சந்திக்கிறார். அதனை தொடர்ந்து 10.30 மணிக்கு பிளாக் தண்டர் சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    மாலை 3 மணிக்கு மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அப்போது மேட்டுப்பாளையத்தில் ரோடு ஷோ செல்கிறார். ரோடுஷோவில் நடந்து சென்று மக்களை நேரில் சந்திக்கிறார். 3 மணிக்கு தொடங்கும் ரோடு ஷோ 4 மணிக்கு நிறைவடைகிறது. ரோடு ஷோ நிறைவின் போது மக்கள் மத்தியில் அவர் உரையாற்ற உள்ளார்.

    5 மணிக்கு காரமடையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார்.

    மேட்டுப்பாளையம் தொகுதியை முடித்து விட்டு மாலை 6 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதியான பெரியநாயக்கன் பாளையத்திற்கு வருகிறார். அங்கும் அவர் ரோடு ஷோ நடத்த உள்ளார். 7 மணிக்கு துடியலூரிலும், 8 மணிக்கு சரவணம்பட்டியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி மக்களையும் சந்திக்கிறார்.

    அன்று இரவு கோவையில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கோவை தெற்கு, கோவை வடக்கு சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 8-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட வடவள்ளி பஸ் நிலையத்தில் 2-வது நாளாக சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அங்கு பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    அங்கிருந்து ரோடு ஷோ தொடங்குகிறது. அங்கிருந்து சாலை மார்க்கமாக நடந்து பி.என்.புதூர், லாலிரோடு, என்.எஸ்.ஆர் ரோடு வழியாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அதன்பிறகு கோவை கிராஸ்கட் ரோடு, சாய்பாபா காலனி, சங்கனூர் ரோடு வழியாக கணபதி நகர் செல்கிறார். கணபதி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

    கோவை தெற்கில் வடகோவையில் இருந்து ரோடு ஷோ தொடங்கி சிந்தாமணி, அர்ச்சனா தியேட்டர் மேம்பாலம் வழியாக, மரக்கடை, கோனியம்மன் கோவில் செல்கிறார். அங்கிருந்து சுங்கம் வழியாக புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் ரோடு ஷோ நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள், கட்சியினர் திரளாக பங்கேற்கின்றனர். கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி வருகையால் கோவையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது.
    • ஆழியார் அணையின் மூலமாக பாசன வசதி பெற்று வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.

    இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள ஒடைகள், நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    பொள்ளாச்சி அடுத்து ஆழியாரில் ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 120 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி ஆழியார் அணையின் நீர்மட்டம் 110.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,861 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக ஆழியாறு அணை விரைவில் தனது முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதால் ஆழியார் அணையின் மூலமாக பாசன வசதி பெற்று வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால், ஆழியாறு அணையின் நீர் கொள்ளளவைப் பொறுத்து, கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

    • அணையில் இருந்து மதகுகள் வழியாக வெளியேறும் நீரானது கேரள வனப்பகுதிக்குள் சென்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடைகிறது.
    • அணையின் பக்கவாட்டுப் பகுதியான சேடல் வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

    கனமழையால் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு, பச்சைமலையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    வால்பாறை அருகே சோலையார் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 165 அடியாகும். சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருந்தது.

    நேற்று அணையின் நீர்மட்டம் 157 அடியாக இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 163 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 6279 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2466 கன அடி. நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சோலையார் அணை தனது முழு கொள்ளளவையும் எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணை இன்று அதிகாலை திறக்கப்பட்டது.

    அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 4 மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து சென்றது. அணையில் இருந்து மதகுகள் வழியாக வெளியேறும் நீரானது கேரள வனப்பகுதிக்குள் சென்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடைகிறது. பின்னர் அங்கிருந்து சென்று அரபிக்கடலில் கலக்கும்.

    இதுதவிர அணையின் பக்கவாட்டுப் பகுதியான சேடல் வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஆனது மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்திற்கு சென்று அங்கிருந்து வனப்பகுதி வழியாக பரம்பிக்குளம் அணையை அடைகிறது.

    பின்னர் அங்கிருந்து தூணக்கடவு, சர்க்கார்பதி அணை வழியாக காண்டூர் கால்வாய்க்கு சென்று அங்கிருந்து அமராவதி அணைக்கு செல்கிறது.

    வால்பாறை சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:

    வால்பாறை-87, சின்னகல்லார்-121, சின்கோனா-81, சோலையாறு அணை-87 என பதிவாகி உள்ளது.

    • வடவள்ளி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • சந்திராபுரம், பூசாரி பாளையம் மற்றும் வாரப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    சுல்தான்பேட்டை:

    சுல்தான்பேட்டை அருகே உள்ள வடவள்ளி துணை மின்நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலப்பநாயக்கன் பாளையம், மேட்டு லட்சுமி நாயக்கன் பாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, பூராண்டாம் பாளையம், அக்கநாயக்கன் பாளையம், சந்திராபுரம், பூசாரி பாளையம் மற்றும் வாரப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் என்.ஏ.சங்கர் தெரிவித்துள்ளார்.

    • சுமார் 18 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
    • பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    வால்பாறை:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.

    மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் குடியிருப்பில் தங்கியிருந்து தேயிலை தோட்டத்திற்கு தனது மனைவியுடன் வேலைக்கு சென்று வருகிறார்.

    கடந்த வாரம் மோனிகா தேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அதன் அருகே அவரது மகள் ரோஷினிகுமாரி நின்றிருந்தார்.

    குடம் நிறைந்ததும் மோனிகா தேவி, தனது மகளை குழாயின் அருகே நிற்க கூறி விட்டு வீட்டிற்குள் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி மட்டும் வெளியில் நின்றிருந்தார்.

    அப்போது தேயிலை தோட்டத்திற்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று திடீரென வெளியே வந்து, அங்கு நின்றிருந்த சிறுமி ரோஷினி குமாரியின் மீது பாய்ந்து கழுத்தை கவ்வி தரதரவென இழுத்து சென்றது.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே மோனிகா தேவி வெளியில் ஓடி வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை, மோனிஷாகுமாரியை கவ்வி இழுத்து சென்றதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதார்.

    அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்தகறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. ஆனால் சிறுமியின் உடலை காணவில்லை.

    இதையடுத்து வனத்துறையினர் குடியிருப்பையொட்டி உள்ள தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 18 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்து கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

    • தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
    • தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.

    • தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.
    • தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

    கோவை:

    கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். 1974-ம் வருடம் ஜூன் 25-ந்தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் தீமைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் நெருக்கடியான அந்த காலகட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது என்பது குறித்து இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இன்று தி.மு.க., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் கொடுமைகளை அனுபவித்தார்கள். அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.

    எதற்காக நாங்கள் இதைச் சொல்கிறோம். கடந்த கால வரலாற்றை மறக்கக்கூடாது. இதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

    இன்று திருப்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. தனது அரசின் தோல்விகளை மறைக்கவே தி.மு.க.வினர் மத்திய அரசை குறை கூறுகிறார்கள்.

    தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.

    முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது.

    கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை தாங்குகிறது. தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குமார், எஸ்.ஆர். சேகர், வீர தமிழச்சி சரஸ்வதி, காளப்பட்டி மண்டல தலைவர் உமாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இவ்விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும், பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.
    • சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியானம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தியானலிங்க வாசல் திறந்தே இருக்கிறது.

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 26-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (ஜூன் 24) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும், பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.

    சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியானம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தியானலிங்க வாசல் திறந்தே இருக்கிறது. இதை உணர்த்தும் விதமாக பல்வேறு மதங்களின் சின்னங்களை தாங்கிய 'சர்வதர்ம ஸ்தம்பம்' எனும் தூண் தியானலிங்க வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஆண்டுதோறும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைபெறுகிறது. 

    இந்தாண்டு பிரதிஷ்டை தின கொண்டாட்டங்கள் தியானலிங்கத்தில் காலை 6 மணிக்கு, ஈஷா பிரம்மச்சாரிகளின் "ஆஉம் நமசிவாய" மந்திர உச்சாடனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆதிசங்கரர் இயற்றிய 'நிர்வாண ஷடகம்' எனும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, கிருத்தவ பக்தி மற்றும் சூஃபி பாடல்களை ஈஷா ஆசிரமவாசிகள் பாடினர். பின்னர் புகழ்பெற்ற 'தேவார பதிகங்களை' மயிலை சத்குரு நாதன் அவர்களும், 'ருத்ர-சமக வேத பாராயணத்தை' சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும் அர்ப்பணித்தனர். அடுத்ததாக 'செரா மே' என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் 'புத்த மந்திர உச்சாடனம்' மற்றும் 'இஷால் முராத்தின்' இஸ்லாமிய அர்பணிப்பும் நடைபெற்றது.


    அதனைத் தொடர்ந்து குருத்வாரா சிங் சபா சார்பில் 'குருபானி பாடல்கள்', சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் பக்தி பாடல்கள், '

    நிஷாமி குஷ்ரூ சகோதரர்களின் 'சூஃபி பாடல்கள்' மற்றும் 'ஏடாகூடம் இசைக்குழு'வின் சார்பில் 'கிருத்தவ பக்தி பாடல்களும்' பாடப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து சத்குருவால் வடிவமைக்கப்பட்ட 'தீட்சை' எனும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சக்தி வாய்ந்த ஆன்மீக செயல்முறைகள், சிறப்பு நாத ஆராதனை, குரு பூஜை மற்றும் இசை அர்ப்பணிப்புகள் நடைபெற்றன. இறுதியாக சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவின் இசை நிகழ்ச்சியோடு இந்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றன.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆன்ம சாதனைகளுக்கு பிறகு சத்குருவால் 1999-ஆம் ஆண்டு, ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகிந்திரா கார் ஷோரூமுக்கு தண்ணீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் காவலாளி உயிரிழந்துள்ளார்.
    • சாலை இறக்கத்தில் ஓரமாக லாரியை நிறுத்த முற்பட்டபோது கவிழ்ந்து விபத்து.

    கோவை மாவட்டம் அவிநாசி சாலை ஹோப்ஸ் சிக்னல் அருகே தண்ணீர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மகிந்திரா கார் ஷோரூமுக்கு தண்ணீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் காவலாளி உயிரிழந்துள்ளார்.

    சாலை இறக்கத்தில் ஓரமாக லாரியை நிறுத்த முற்பட்டபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஷோரூமுக்கு வெளியே அமர்ந்திருந்த காவலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தைரியம் இல்லாதவர்.

    கோவை:

    கோவை ரத்தினபுரியில் நடந்த தி.மு.க. அரசின் சாதனை விளக்க பருக்கூட்டத்தில் தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி பங்கேற்று பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனவே வருகிற 2026-ம் ஆண்டிலும் தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் அமையும். 2026-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவி ஏற்கும்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பதவி ஏற்பு விழாவிற்கு நேரில் வந்து வாழ்த்து கூற வேண்டும்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 3 என்ஜின் பொருத்திய கூட்டணி என்று அண்ணாமலையும் தமிழிசை சவுந்தர்ராஜனும் கூறுகிறார்கள். ஆனால் அது சக்கரம் இல்லாத-பெட்ரோல் இல்லாத-மிஷின் இல்லாத என்ஜின்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தைரியம் இல்லாதவர். அண்ணாமலையும் தமிழிசை சவுந்தர்ராஜனும் 2026-ல் கூட்டணி ஆட்சி தான் என்கிறார்கள். கூட்டணி ஆட்சி இல்லை என்று கூற தைரியம் அவர்களுக்கு உள்ளதா?

    அமித்ஷா ஆங்கிலத்தில் பேச வெட்கப்பட வேண்டும் என்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்தபோது என்ன மொழியில் பேசிக் கொண்டார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை அழைத்து வந்து கூட்டம் நடத்திய போது தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி என்று தைரியமாக அறிவித்தார். தி.மு.க. கூட்டணி உறவு குடும்ப உறவு போன்றது.

    மதுரையில் பாஜக நடத்தும் முருகன் மாநாடு ஓட்டுக்காக நடத்தப்படுவது. உண்மையில் முருகனுக்காக நடந்த மாநாடு, தி.மு.க. அரசு பழனியில் நடத்திய மாநாடு தான். அதில் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும் கலந்து கொண்டார்கள்.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி பகுத்தறிவு பிரச்சாரத்தை நிறுத்த மாட்டோம், பக்தி மார்க்கத்தை தடுக்க மாட்டோம் என்று கூறினார். அதேபோல தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் 3000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியது தமிழக அரசு தான். திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
    • இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பவகத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மோகன் பகவத்திற்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.

    ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்து முன்னணி நடத்திய மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள்அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அண்ணா, பெரியாரை விமர்சிக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×