என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • இவ்விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும், பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.
    • சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியானம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தியானலிங்க வாசல் திறந்தே இருக்கிறது.

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 26-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (ஜூன் 24) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும், பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.

    சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியானம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தியானலிங்க வாசல் திறந்தே இருக்கிறது. இதை உணர்த்தும் விதமாக பல்வேறு மதங்களின் சின்னங்களை தாங்கிய 'சர்வதர்ம ஸ்தம்பம்' எனும் தூண் தியானலிங்க வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஆண்டுதோறும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைபெறுகிறது. 

    இந்தாண்டு பிரதிஷ்டை தின கொண்டாட்டங்கள் தியானலிங்கத்தில் காலை 6 மணிக்கு, ஈஷா பிரம்மச்சாரிகளின் "ஆஉம் நமசிவாய" மந்திர உச்சாடனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆதிசங்கரர் இயற்றிய 'நிர்வாண ஷடகம்' எனும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, கிருத்தவ பக்தி மற்றும் சூஃபி பாடல்களை ஈஷா ஆசிரமவாசிகள் பாடினர். பின்னர் புகழ்பெற்ற 'தேவார பதிகங்களை' மயிலை சத்குரு நாதன் அவர்களும், 'ருத்ர-சமக வேத பாராயணத்தை' சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும் அர்ப்பணித்தனர். அடுத்ததாக 'செரா மே' என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் 'புத்த மந்திர உச்சாடனம்' மற்றும் 'இஷால் முராத்தின்' இஸ்லாமிய அர்பணிப்பும் நடைபெற்றது.


    அதனைத் தொடர்ந்து குருத்வாரா சிங் சபா சார்பில் 'குருபானி பாடல்கள்', சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் பக்தி பாடல்கள், '

    நிஷாமி குஷ்ரூ சகோதரர்களின் 'சூஃபி பாடல்கள்' மற்றும் 'ஏடாகூடம் இசைக்குழு'வின் சார்பில் 'கிருத்தவ பக்தி பாடல்களும்' பாடப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து சத்குருவால் வடிவமைக்கப்பட்ட 'தீட்சை' எனும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சக்தி வாய்ந்த ஆன்மீக செயல்முறைகள், சிறப்பு நாத ஆராதனை, குரு பூஜை மற்றும் இசை அர்ப்பணிப்புகள் நடைபெற்றன. இறுதியாக சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவின் இசை நிகழ்ச்சியோடு இந்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றன.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆன்ம சாதனைகளுக்கு பிறகு சத்குருவால் 1999-ஆம் ஆண்டு, ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகிந்திரா கார் ஷோரூமுக்கு தண்ணீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் காவலாளி உயிரிழந்துள்ளார்.
    • சாலை இறக்கத்தில் ஓரமாக லாரியை நிறுத்த முற்பட்டபோது கவிழ்ந்து விபத்து.

    கோவை மாவட்டம் அவிநாசி சாலை ஹோப்ஸ் சிக்னல் அருகே தண்ணீர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மகிந்திரா கார் ஷோரூமுக்கு தண்ணீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் காவலாளி உயிரிழந்துள்ளார்.

    சாலை இறக்கத்தில் ஓரமாக லாரியை நிறுத்த முற்பட்டபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஷோரூமுக்கு வெளியே அமர்ந்திருந்த காவலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தைரியம் இல்லாதவர்.

    கோவை:

    கோவை ரத்தினபுரியில் நடந்த தி.மு.க. அரசின் சாதனை விளக்க பருக்கூட்டத்தில் தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி பங்கேற்று பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனவே வருகிற 2026-ம் ஆண்டிலும் தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் அமையும். 2026-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவி ஏற்கும்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பதவி ஏற்பு விழாவிற்கு நேரில் வந்து வாழ்த்து கூற வேண்டும்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 3 என்ஜின் பொருத்திய கூட்டணி என்று அண்ணாமலையும் தமிழிசை சவுந்தர்ராஜனும் கூறுகிறார்கள். ஆனால் அது சக்கரம் இல்லாத-பெட்ரோல் இல்லாத-மிஷின் இல்லாத என்ஜின்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தைரியம் இல்லாதவர். அண்ணாமலையும் தமிழிசை சவுந்தர்ராஜனும் 2026-ல் கூட்டணி ஆட்சி தான் என்கிறார்கள். கூட்டணி ஆட்சி இல்லை என்று கூற தைரியம் அவர்களுக்கு உள்ளதா?

    அமித்ஷா ஆங்கிலத்தில் பேச வெட்கப்பட வேண்டும் என்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்தபோது என்ன மொழியில் பேசிக் கொண்டார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை அழைத்து வந்து கூட்டம் நடத்திய போது தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி என்று தைரியமாக அறிவித்தார். தி.மு.க. கூட்டணி உறவு குடும்ப உறவு போன்றது.

    மதுரையில் பாஜக நடத்தும் முருகன் மாநாடு ஓட்டுக்காக நடத்தப்படுவது. உண்மையில் முருகனுக்காக நடந்த மாநாடு, தி.மு.க. அரசு பழனியில் நடத்திய மாநாடு தான். அதில் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும் கலந்து கொண்டார்கள்.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி பகுத்தறிவு பிரச்சாரத்தை நிறுத்த மாட்டோம், பக்தி மார்க்கத்தை தடுக்க மாட்டோம் என்று கூறினார். அதேபோல தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் 3000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியது தமிழக அரசு தான். திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
    • இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பவகத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மோகன் பகவத்திற்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.

    ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்து முன்னணி நடத்திய மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள்அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அண்ணா, பெரியாரை விமர்சிக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்ற முடியுமா என்பதற்காகவே அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் டிஜிட்டல் ஐ.டி கார்டு கொடுக்கப்பட உள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதிக்கான 2026 தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சுரஜ் எம்.என்.ஹெக்டே ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கினர்.

    விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பாசிச சக்திகளை விரட்டுவதற்கும், பா.ஜ.க.வை ஒருபோதும் தமிழகத்தில் நுழைய விடாமல் இருப்பதற்கான முதல் தேர்தல் பிரகடனத்தை கோவையில் எடுத்திருக்கிறோம்.

    தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்ற முடியுமா என்பதற்காகவே அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர்.

    ஆதிகாலத்திலிருந்தே பா.ஜ.க.வின் செயல் அதுவாகத்தான் இருந்துள்ளது. முதலில் ரத யாத்திரை என தொடங்கினார். தற்போது முருகனைக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

    கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலில் இஸ்லாமிய கடவுளை வணங்கி கொண்டு தான் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்கிறார்கள்.

    அமித்ஷா, மற்ற மாநில முதல்வர்கள் மீது வழக்கு தொடுத்தது போல, எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது குடும்பத்தின் மீதும் வழக்கு தொடுப்போம் என்று கூறிய பிறகே அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளது.

    அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இந்தக் கூட்டணி பிடிக்கவில்லை. ஜெயலலிதா இருந்தபோது, பா.ஜ.க.வின் தலைவர், ஊழல் குற்றவாளியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று தெரிவித்தார். அதற்கு அமித்ஷாவும் மோடியும் ஒன்றும் கூறவில்லை. இப்படிப்பட்டவர்களுடன் தான் அ.தி.மு.க. கூட்டணி வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முருகன் என்பவர் நெருப்பைப் போன்றவர். சக்தி வாய்ந்த தமிழ் கடவுள். அவருடன் பாஜக தேர்தல் விளையாட்டு விளையாடினால், அவர் பா.ஜ.க.வை சூரசம்ஹாரம் செய்வார்.

    2026-ம் ஆண்டு நடக்ககூடிய தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சூரசம்ஹாரம் தான் என்பது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரகடனம்.

    தமிழகம் முழுவதும் டிஜிட்டல் ஐ.டி கார்டு கொடுக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை கோவையில் தொடங்கியுள்ளோம்.

    பா.ம.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். பாசிச பா.ஜ.க.வின் பக்கம் போகாமல் இருப்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. மாறி சென்றால், சமூக நீதிக்காக குரல் கொடுத்த பா.ம.க.வின் நிலைப்பாடு அடிபட்டுப் போகும்.

    தலைமுறையை பாழாக்குவதற்கு பா.ஜ.க தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளது. எல்லா மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள கடவுள்களை தொட்டுக்கொண்டு இருந்துவிட்டு, தற்போது தமிழ்நாட்டிற்கு 'முருகா' என்ற கோஷத்துடன் வந்துள்ளார்கள். முருகன் தமிழ் கடவுள், மிகுந்த சக்தி வாய்ந்தவர். எனவே, அவர்களை முருகர் சூரசம்ஹாரம் செய்வார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியா கூட்டணி வலிமையாக, வலுவாக இருக்கிறது.
    • மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் பா.ஜ.கவினர் கூறுவது போன்று எங்கள் கூட்டணியில் எந்தவித ஓட்டையும் இல்லை.

    கோவை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வலிமையாக, வலுவாக இருக்கிறது. மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் பா.ஜ.கவினர் கூறுவது போன்று எங்கள் கூட்டணியில் எந்தவித ஓட்டையும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது.

    எங்கள் கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படும், சிதறும், அதனால் தங்களுக்கு ஆதாயம் ஏற்படும் என அ.தி.மு.க.வும், பா.ஜ.கவும் பகல் கனவு காண்கிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணியில் எந்தவித குழப்பமும் ஏற்படாது.

    எங்கள் கூட்டணி ஒன்றும் சிதறுவதற்கு நெல்லிக்காய் மூட்டை கிடையாது. இந்த கூட்டணியானது எக்கு கோட்டையாகும். எங்கள் கூட்டணிக்குள் சிறு, சிறு பிரச்சினைகள் இருக்கலாம். அதனை எல்லாம் நாங்களே பேசி தீர்த்து கொள்வோம்.

    தமிழகத்தில் யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழ் கடவுள் முருகன் புறக்கணிப்பார்.

    தமிழகத்தில் முருகன் மாநாடு நடத்த வேண்டியதற்கான அவசியம் என்ன. எதற்காக நடத்துகிறார்கள். அயோத்தியில் ராமரை நாடினார்கள். ஆனால் அங்கு பா.ஜ.க.வை ராமர் கைவிட்டு விட்டார். பா.ஜ.க கட்சி மக்களை நம்பி இருப்பது இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்வது தான் பா.ஜ.கவின் வேலையாக உள்ளது.

    பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவே இல்லை. மணிப்பூருக்கு செல்லாமல் இங்கே இவர்கள் முருகன் மாநாடு நடத்தி விட்டால், அவர்களை முருகன் மன்னித்து விடுவாரா?. மேலும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு தர மறுக்கிறது.

    மத்தியில் காங்கிரஸ் இருந்தவரை தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் இருந்தது. பா.ஜ.க வந்த பிறகு தான் தமிழகத்தில் 3-வது மொழியை திணிக்கிறார்கள்.

    தமிழ் மொழியை நீங்கள் சிதைக்கிறீர்கள். தமிழகத்திற்கு துரோகம் செய்கிறீர்கள். மேலும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் தமிழ் கூடாது சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என கூறுகிறீர்கள்.

    அப்படி இருக்கையில் தமிழ்க்கடவுள் முருகன் உங்களை எப்படி ஏற்றுக்கொள்வார். தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் வருகிற 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் உங்களை அவர் சூரசம்ஹாரம் செய்வார். பா.ஜ.க.வினரின் வேஷம் சில மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் முருக கடவுளை ஏமாற்ற முடியாது.

    ஆங்கிலத்திற்கு எதிராக பேசும் அமித்ஷாவின் மகனே, ஆங்கிலேயர் உருவாக்கிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் தற்போது ஆங்கிலம் பேசி வருகிறார்கள். இவர்கள் ஆங்கிலம் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அப்படி பேசுகின்றனர். எடப்பாடி பழனிசாமியை பார்த்து அமித்ஷா, இ.பி.எஸ். என்கிறார். அவ்வாறென்றால் அவர் இ.பி.எஸ்.சை அவமானப்படுத்துகிறாரா?.

    விபூதி வைத்ததற்கு எரிச்சல் இருந்திருக்கலாம். அல்லது உபாதை இருக்கலாம். அதனால் அழித்து இருப்பார்கள். அதனை அரசியல் படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
    • உடல் மற்றும் மன நலனை முழுமையாக உங்களால் தீர்மானிக்க முடியும்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவை ஆதியோகி வளாகத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இன்று யோகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

    நாடு முழுவதும் ஈஷா சார்பில் நடைபெற்ற 2500-க்கும் மேற்பட்ட இலவச பயிற்சி வகுப்புகளில், 10,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர் உள்பட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த யோக வகுப்புகள், 11,000-க்கும் மேற்பட்ட யோக வீரா எனும் ஈஷா தன்னார்வலர்களால் நடத்தப்பட்டது.

    கோவை ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் வெள்ளலூர் அதிவிரைவு படை வீரர்கள், மதுக்கரை 35-வது ரெஜிமெண்ட் மற்றும் சூலூர் 43-வது ரெஜிமெண்டை சேர்ந்த வீரர்கள் என 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.

    மேலும் சென்னை ஐ ஐ டி (IIT) வளாகம் மற்றும் ஹெச் டி எப் சி வங்கி, ஐ பி எம் (IBM), கோத்ரேஜ் (Godrej) எச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ், L&T, மற்றும் எஸ் பேங்க் (Yes Bank) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலும் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

    அதே போன்று பெங்களூருவில் உள்ள சத்குரு சன்னிதியில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, எல்லை பாதுகாப்பு படை (BSF) மற்றும் தேசிய மாணவர் படை (NCC) ஆகியவற்றைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    மேலும் சில தனியார் நிறுவனங்கள் ஈஷா அறக்கட்டளையுடன் ஒன்றிணைந்து, தமிழகத்தில் கோவை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், பாண்டி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 இடங்களில் பிரம்மாண்டமான முறையில் யோக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன. இதில் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

    சத்குருவின் யோகா தின செய்தியில், "யோகா என்பது, கட்டாயமான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் அடிமையாகாமல், விழிப்புணர்வுடன் கூடிய தேர்வுகளின் மூலம் ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரத்தை உங்களுக்கு வழங்கும் ஒரு அமைப்பு. நீங்கள் விழிப்புணர்வு பெற்று, அந்த கட்டாயத் தன்மையைக் கடந்து செல்லும்போது மட்டுமே, உங்கள் உடல் மற்றும் மன நலனை முழுமையாக உங்களால் தீர்மானிக்க முடியும்." எனக் கூறியுள்ளார்.

    முன்னதாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள புல்மேன் ஹோட்டலில் "மிராக்கிள் ஆஃப் மைண்ட்" 7 நிமிட தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இலவசமாக வழங்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகளில், சத்குருவால் வடிவமைக்கப்பட்ட எளிய, சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக மூட்டுகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும் 'யோக நமஸ்காரம்' எனும் பயிற்சி, உடல் மற்றும் உள்நிலையில் சமநிலை அதிகரிக்கும் 'நாடி சுத்தி' பயிற்சி மற்றும் மன அமைதி, தெளிவு, கவனத்தை மேம்படுத்தும் 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' தியானப் பயிற்சியும் வழங்கப்பட்டன.

    • கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் அமுல்கந்தசாமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அமுல்கந்தசாமியிடம் உடல் நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவை வந்தார்.

    அவர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.

    • சிறுத்தை, மோனிஷாகுமாரியை கவ்வி இழுத்து சென்றதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதார்.
    • கோவையில் இருந்து 2 மோப்பநாய்கள் பச்சைமலை எஸ்டேட் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.

    வால்பாறை:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.

    மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் குடியிருப்பில் தங்கியிருந்து தேயிலை தோட்டத்திற்கு தனது மனைவியுடன் வேலைக்கு சென்று வருகிறார்.

    நேற்று மாலை மோனிகா தேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அதன் அருகே அவரது மகள் ரோஷினிகுமாரி நின்றிருந்தார்.

    குடம் நிறைந்ததும் மோனிகா தேவி, தனது மகளை குழாயின் அருகே நிற்க கூறி விட்டு வீட்டிற்குள் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி மட்டும் வெளியில் நின்றிருந்தார்.

    அப்போது தேயிலை தோட்டத்திற்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று திடீரென வெளியே வந்து, அங்கு நின்றிருந்த சிறுமி ரோஷினி குமாரியின் மீது பாய்ந்து கழுத்தை கவ்வி தரதரவென இழுத்து சென்றது.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே மோனிகா தேவி வெளியில் ஓடி வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை, மோனிஷாகுமாரியை கவ்வி இழுத்து சென்றதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதார்.

    அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்தகறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. ஆனால் சிறுமியின் உடலை காணவில்லை.

    இதையடுத்து வனத்துறையினர் குடியிருப்பையொட்டி உள்ள தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மாலையில் தொடங்கிய தேடுதல் பணியானது நள்ளிரவை தாண்டியும் விடிய, விடிய நீடித்தது. அதிகாலை 3 மணி வரை தேடியும் சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இன்று 2-வது நாளாக வனத்துறையினர் சிறுமியின் உடலை தேடும் பணியை தொடங்கினர். அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். மேலும் சிறுமியின் உடலை கண்டறிவதற்காக கோவையில் இருந்து 2 மோப்பநாய்கள் பச்சைமலை எஸ்டேட் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.

    வனத்துறையினர் மற்றும் போலீசார் மோப்பநாய்களை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், 18 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை முதல் தேடி வந்த நிலையில், வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே மோனிகா தேவி வெளியில் ஓடி வந்து பார்த்தார்.
    • 2 மோப்பநாய்கள் பச்சைமலை எஸ்டேட் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.

    வால்பாறை:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.

    மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் குடியிருப்பில் தங்கியிருந்து தேயிலை தோட்டத்திற்கு தனது மனைவியுடன் வேலைக்கு சென்று வருகிறார்.

    நேற்று மாலை மோனிகா தேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அதன் அருகே அவரது மகள் ரோஷினிகுமாரி நின்றிருந்தார்.

    குடம் நிறைந்ததும் மோனிகா தேவி, தனது மகளை குழாயின் அருகே நிற்க கூறி விட்டு வீட்டிற்குள் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி மட்டும் வெளியில் நின்றிருந்தார்.

    அப்போது தேயிலை தோட்டத்திற்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று திடீரென வெளியே வந்து, அங்கு நின்றிருந்த சிறுமி ரோஷினி குமாரியின் மீது பாய்ந்து கழுத்தை கவ்வி தரதரவென இழுத்து சென்றது.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே மோனிகா தேவி வெளியில் ஓடி வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை, மோனிஷாகுமாரியை கவ்வி இழுத்து சென்றதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதார்.

    அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்தகறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. ஆனால் சிறுமியின் உடலை காணவில்லை.

    இதையடுத்து வனத்துறையினர் குடியிருப்பையொட்டி உள்ள தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மாலையில் தொடங்கிய தேடுதல் பணியானது நள்ளிரவை தாண்டியும் விடிய, விடிய நீடித்தது. அதிகாலை 3 மணி வரை தேடியும் சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இன்று 2-வது நாளாக வனத்துறையினர் சிறுமியின் உடலை தேடும் பணியை தொடங்கினர். அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    மேலும் சிறுமியின் உடலை கண்டறிவதற்காக கோவையில் இருந்து 2 மோப்பநாய்கள் பச்சைமலை எஸ்டேட் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.

    வனத்துறையினர் மற்றும் போலீசார் மோப்பநாய்களை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டிற்கு வெளியே தாயுடன் தண்ணீர் பிடிப்பதற்காக நின்றிருந்த 6 வயது சிறுமியை சிறுத்தை கவ்வி சென்ற சம்பவம் வால்பாறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.
    • ஆங்கிலத்தை விட தாய்மொழிதான் முக்கியம் என்பதைத்தான் அமித்ஷா அவ்வாறு கூறியுள்ளார்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை, அந்த அடிப்படையில் மதுரை பா.ஜ.க. முருக மாநாட்டுக்கு வாழ்த்துகள்.

    * கீழடி அகழாய்வுக்கு அ.தி.மு.க. தான் காரணம். அகழாய்வுக்கு ஜெயலலிதா இருக்கும்போது எடுத்த நடவடிக்கை, அதற்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்து நேற்றே விளக்கம் அளித்துள்ளோம்.

    * தி.மு.க. ஐடி விங் வெளியிட்ட கேலிச்சித்திரம் குறித்த கேள்விக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.

    * ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.

    * ஆங்கிலத்தை விட தாய்மொழிதான் முக்கியம் என்பதைத்தான் அமித்ஷா அவ்வாறு கூறியுள்ளார்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். 

    • ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.
    • தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.

    கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் தாயின் கண்முன்னே 4 வயது சிறுமி ரோஷினியை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பச்சமலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.

    வீட்டின் அருகே சிறுமி ரோஷினிகுமாரி விளையாடி கொண்டிருந்தபோது சிறுத்தை பாய்ந்து கவ்விச் சென்றுள்ளது.

    இதை நேரில் கண்ட தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.

    ×