என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • முதற்கட்ட சுற்றுப்பயணத்தை வருகிற 23-ந்தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிகளில் நிறைவு செய்கிறார்.
    • பல்வேறு முன்னேற்பாடு பணிகளையும் அ.தி.மு.க.வினர் வேகமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    கோவை:

    தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் மீண்டும் அரியணையில் ஏறும் முனைப்பில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

    அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தில் அவர் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்திக்கிறார். தனது முதற்கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் இருந்து தொடங்குகிறார்.

    அன்று மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிகளிலும், மறுநாள் 8-ந் தேதி கோவை தெற்கு, வடக்கு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறார். அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் ஒரே நாளில் 3 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    முதற்கட்ட சுற்றுப்பயணத்தை வருகிற 23-ந்தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிகளில் நிறைவு செய்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ரோடு ஷோ மேற்கொள்வதுடன், அதன் நிறைவில் மக்கள் மத்தியில் பேசி அ.தி.மு.க.வுக்கு ஆதரவும் திரட்டுகிறார்.

    இந்த ரோடு ஷோவின் போது அவர் வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்க உள்ளார். இதுதவிர அந்தந்த தொகுதிகளில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரையும் சந்தித்து பேசுகிறார்.

    இந்த நிலையில் தனது சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

    அந்த அழைப்பை ஏற்று வருகிற 7-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் பா.ஜ.க.வினர் பங்கேற்க உள்ளனர். இதுதவிர எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி, அந்த பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வினரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதை முன்னிட்டு மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு சட்டசபை தொகுதிகளில் அவர் ரோடு ஷோ நடத்தக்கூடிய இடம், மக்களை சந்தித்து பேசும் இடங்களை கட்சியினர் தேர்வு செய்துள்ளனர்.

    அங்கு பல்வேறு முன்னேற்பாடு பணிகளையும் அ.தி.மு.க.வினர் வேகமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக கோவைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அவரை மேள, தாளங்கள் முழங்க வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    அதேபோன்று எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்க கூடிய இடங்களிலும் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோரை திரட்டி தங்கள் பலத்தை காட்டுவதற்கும் அ.தி.மு.கவினர் தயாராகி வருகின்றனர்.

    • கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருசிலர் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டமிட்டு உள்ளனர்.
    • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து அந்த கடிதம் கோவைக்கு அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் கருதி 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தபால் வந்தது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரசு வக்கீல் பெயரில் வந்திருந்த தபாலை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பிரித்து பார்த்தனர்.

    அந்த கடித்தத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருசிலர் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் பற்றிய விவரம் எனக்கு தெரியும். என் உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விபரத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் கந்தசாமி விசாரணை நடத்தினார்.

    மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த அரசு வக்கீலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது பெயரில் யாரோ ஒருவர் கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.

    மேலும் இதே போன்ற கடிதம் அனைத்து மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து அந்த கடிதம் கோவைக்கு அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து அந்த கடிதத்தை அனுப்பிய நபரை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பள்ளிக்கல்வித்துறையில் மும்மொழி கொள்கைக்கு உடன்படாததால் அவர்கள் தமிழகத்திற்கு நிதியை அளிக்கவில்லை.
    • செப்டம்பர் 15-ந் தேதி திருச்சியில் தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய மாநாட்டை நடத்த உள்ளோம்.

    கோவை:

    திருப்பூரில் இன்று ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைவைகோ இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ம.தி.மு.க குறைந்தபட்ச அங்கீகாரம் பெற வேண்டும். அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு குறிப்பிட்ட சீட்டை பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. ஆனால் இறுதி முடிவை, கூட்டணியுடன் பேசி தலைமை தான் முடிவு எடுக்கும்.

    அதேசமயம் நாங்கள் இத்தனை சீட்டை எதிர்பார்க்கிறோம். இத்தனை சீட் கேட்டு கோரிக்கை வைக்கிறோம் என்பது தவறான சித்தரிப்பு.

    ரெயில்வே துறையில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.

    பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் இல்லாமல், இதர மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு ஓரளவு உண்மைதான்.

    பள்ளிக்கல்வித்துறையில் மும்மொழி கொள்கைக்கு உடன்படாததால் அவர்கள் தமிழகத்திற்கு நிதியை அளிக்கவில்லை. இதனால் பல்வேறு அடிப்படை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக துறை சார்ந்த மந்திரிகளிடமும் எங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் அரசியல் செய்யக்கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

    தமிழக அரசு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர்களால் முடிந்ததை செய்து இருக்கிறார்கள். ஓரிரு குறைகள் இருக்கிறது. இருந்தாலும் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவிற்கு நிவர்த்தி செய்துள்ளனர். மேலும் வரக்கூடிய தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    செப்டம்பர் 15-ந் தேதி திருச்சியில் தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய மாநாட்டை நடத்த உள்ளோம். தேர்தல் வரக்கூடிய காலம் என்பதால் எங்களுடைய கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பூத் கமிட்டிகள் அமைப்பது உள்பட 7 மண்டலங்களில் செயல்வீரர் கூட்டம் நடத்த உள்ளோம்.

    வட மாநிலங்களில் அமித்ஷா ஆங்கில மொழி என்பது அந்நிய மொழி. ஆங்கிலம் என்பது புறக்கணிக்கப்பட வேண்டும். ஆங்கிலம் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று பிரசாரம் மேற்கொண்டு உள்ளார்.

    ஆங்கிலம் இல்லாமல் நாம் எப்படி இருக்க முடியும்? உலக தொடர்பு மொழியே ஆங்கிலம் தான். நம்முடைய தாய்மொழி ஒரு புறம் இருந்தாலும், உலக தொடர்பு மொழி என்பது ஆங்கிலம் தான். மொழியை வைத்து பா.ஜ.க தான் அரசியல் செய்கிறது.

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தட்டுப்பாடு இருப்பதை மறுக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக நிகழ்ந்த சில குளறுபடிகள் மற்றும் இன்றைக்கு இருக்கக்கூடிய நிதிச் சுமை, நிதி பற்றாக்குறையால் அதனை சரி செய்ய முடியாமல் இருக்கிறது.

    10 ஆண்டுகள் ஏற்பட்டதை 3,4 ஆண்டுகளில் சரி செய்து விட முடியாது. காலப்போக்கில் அதனை தமிழக அரசு சரி செய்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    2009-ல் இலங்கை போர் முடிந்ததில் இருந்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது தொடர்கிறது.

    இதனால் மீனவர்கள் அவர்களது குழந்தைகளை இந்த மீனவத் தொழிலுக்கு அனுப்ப வேண்டாம் என்று நினைக்கிறார்கள். அடுத்த தலைமுறை இந்த மீனவத் தொழிலே செய்ய முடியாது என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

    வாரந்தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும், கொடுமையாக தாக்குவதும் நிகழ்ந்து வருகிறது.

    இதற்கு உரிய நிரந்தர தீர்வை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அது எந்த அரசாக இருந்தாலும் சரி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
    • அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.

    வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.

    60 வயதான அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

    கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.

    இந்நிலையில், அமுல் கந்தசாமி மறைவைத் தொடர்ந்து வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

    • ரோடு ஷோவின் போது வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார்.
    • சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே தங்கள் பணியை தொடங்கி விட்டன. ஆளும்கட்சியான தி.மு.க. 200 தொகுதிகளில் இலக்கு நிர்ணயித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

    அதேபோல் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்திருந்த, தற்போதைய பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. மீண்டும் அரியணையில் ஏறுவதற்காக மிக வேகமாகவும், சுறுசுறுப்புடனும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

    சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு அ.தி.மு.க கட்சியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பே திண்ணை பிரசாரத்தை தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் மக்களை அவர்களது வீட்டிற்கே சென்று சந்திக்கின்றனர். அப்போது, மக்களிடம் அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பதுடன், தி.மு.க ஆட்சியின் அவலநிலைகளையும் மக்களிடம் எடுத்து கூறி வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, இதில் உடன்பாடு உள்ள கட்சிகளை கூட்டணியில் இணைத்து மெகா கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் தேர்தல் பரப்புரையின் ஒரு கட்டமாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக அவர் வருகிற 7-ந் தேதி கொங்கு மண்டலமான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 21-ந் தேதி வரை முதற்கட்ட சுற்றுப்பயணம் செய்கிறார்.

    தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ரோடு ஷோ நடத்துகிறார். இந்த ரோடு ஷோவின் போது வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார்.

    மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் குறைகளை கேட்டறிவதுடன், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கிறார். தி.மு.க ஆட்சியின் அவல நிலைகள் குறித்தும் மக்களிடம் எடுத்து கூறுகிறார். ரோடு ஷோ முடியும் இடங்களில் மக்கள் மத்தியில் பிரசார வேனில் நின்றவாறு உரையாற்றவும் உள்ளார்.

    இதுமட்டுமின்றி சட்டசபை தொகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொழிலாளர்கள், நகை தொழிலாளர்கள், தொழில் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அந்த சந்திப்பின் போது தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட சுற்றுப்பயண தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்தந்த சட்டசபை தொகுதிகளில் தற்போது முன்னேற்பாடு பணிகளை கட்சியினர் தீவிரமாக செய்துவருகின்றனர்.

    முதலில் வருகிற 7-ந் தேதி கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அன்று காலை 9 மணிக்கு வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.

    9.30 மணிக்கு அங்குள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகள் சங்கத்தினரை சந்திக்கிறார். அதனை தொடர்ந்து 10.30 மணிக்கு பிளாக் தண்டர் சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    மாலை 3 மணிக்கு மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அப்போது மேட்டுப்பாளையத்தில் ரோடு ஷோ செல்கிறார். ரோடுஷோவில் நடந்து சென்று மக்களை நேரில் சந்திக்கிறார். 3 மணிக்கு தொடங்கும் ரோடு ஷோ 4 மணிக்கு நிறைவடைகிறது. ரோடு ஷோ நிறைவின் போது மக்கள் மத்தியில் அவர் உரையாற்ற உள்ளார்.

    5 மணிக்கு காரமடையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார்.

    மேட்டுப்பாளையம் தொகுதியை முடித்து விட்டு மாலை 6 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதியான பெரியநாயக்கன் பாளையத்திற்கு வருகிறார். அங்கும் அவர் ரோடு ஷோ நடத்த உள்ளார். 7 மணிக்கு துடியலூரிலும், 8 மணிக்கு சரவணம்பட்டியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி மக்களையும் சந்திக்கிறார்.

    அன்று இரவு கோவையில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கோவை தெற்கு, கோவை வடக்கு சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 8-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட வடவள்ளி பஸ் நிலையத்தில் 2-வது நாளாக சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அங்கு பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    அங்கிருந்து ரோடு ஷோ தொடங்குகிறது. அங்கிருந்து சாலை மார்க்கமாக நடந்து பி.என்.புதூர், லாலிரோடு, என்.எஸ்.ஆர் ரோடு வழியாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அதன்பிறகு கோவை கிராஸ்கட் ரோடு, சாய்பாபா காலனி, சங்கனூர் ரோடு வழியாக கணபதி நகர் செல்கிறார். கணபதி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

    கோவை தெற்கில் வடகோவையில் இருந்து ரோடு ஷோ தொடங்கி சிந்தாமணி, அர்ச்சனா தியேட்டர் மேம்பாலம் வழியாக, மரக்கடை, கோனியம்மன் கோவில் செல்கிறார். அங்கிருந்து சுங்கம் வழியாக புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் ரோடு ஷோ நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள், கட்சியினர் திரளாக பங்கேற்கின்றனர். கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி வருகையால் கோவையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது.
    • ஆழியார் அணையின் மூலமாக பாசன வசதி பெற்று வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.

    இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள ஒடைகள், நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    பொள்ளாச்சி அடுத்து ஆழியாரில் ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 120 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி ஆழியார் அணையின் நீர்மட்டம் 110.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,861 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக ஆழியாறு அணை விரைவில் தனது முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதால் ஆழியார் அணையின் மூலமாக பாசன வசதி பெற்று வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால், ஆழியாறு அணையின் நீர் கொள்ளளவைப் பொறுத்து, கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

    • அணையில் இருந்து மதகுகள் வழியாக வெளியேறும் நீரானது கேரள வனப்பகுதிக்குள் சென்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடைகிறது.
    • அணையின் பக்கவாட்டுப் பகுதியான சேடல் வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

    கனமழையால் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு, பச்சைமலையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    வால்பாறை அருகே சோலையார் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 165 அடியாகும். சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருந்தது.

    நேற்று அணையின் நீர்மட்டம் 157 அடியாக இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 163 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 6279 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2466 கன அடி. நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சோலையார் அணை தனது முழு கொள்ளளவையும் எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணை இன்று அதிகாலை திறக்கப்பட்டது.

    அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 4 மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து சென்றது. அணையில் இருந்து மதகுகள் வழியாக வெளியேறும் நீரானது கேரள வனப்பகுதிக்குள் சென்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடைகிறது. பின்னர் அங்கிருந்து சென்று அரபிக்கடலில் கலக்கும்.

    இதுதவிர அணையின் பக்கவாட்டுப் பகுதியான சேடல் வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஆனது மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்திற்கு சென்று அங்கிருந்து வனப்பகுதி வழியாக பரம்பிக்குளம் அணையை அடைகிறது.

    பின்னர் அங்கிருந்து தூணக்கடவு, சர்க்கார்பதி அணை வழியாக காண்டூர் கால்வாய்க்கு சென்று அங்கிருந்து அமராவதி அணைக்கு செல்கிறது.

    வால்பாறை சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:

    வால்பாறை-87, சின்னகல்லார்-121, சின்கோனா-81, சோலையாறு அணை-87 என பதிவாகி உள்ளது.

    • வடவள்ளி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • சந்திராபுரம், பூசாரி பாளையம் மற்றும் வாரப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    சுல்தான்பேட்டை:

    சுல்தான்பேட்டை அருகே உள்ள வடவள்ளி துணை மின்நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலப்பநாயக்கன் பாளையம், மேட்டு லட்சுமி நாயக்கன் பாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, பூராண்டாம் பாளையம், அக்கநாயக்கன் பாளையம், சந்திராபுரம், பூசாரி பாளையம் மற்றும் வாரப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் என்.ஏ.சங்கர் தெரிவித்துள்ளார்.

    • சுமார் 18 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
    • பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    வால்பாறை:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.

    மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் குடியிருப்பில் தங்கியிருந்து தேயிலை தோட்டத்திற்கு தனது மனைவியுடன் வேலைக்கு சென்று வருகிறார்.

    கடந்த வாரம் மோனிகா தேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அதன் அருகே அவரது மகள் ரோஷினிகுமாரி நின்றிருந்தார்.

    குடம் நிறைந்ததும் மோனிகா தேவி, தனது மகளை குழாயின் அருகே நிற்க கூறி விட்டு வீட்டிற்குள் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி மட்டும் வெளியில் நின்றிருந்தார்.

    அப்போது தேயிலை தோட்டத்திற்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று திடீரென வெளியே வந்து, அங்கு நின்றிருந்த சிறுமி ரோஷினி குமாரியின் மீது பாய்ந்து கழுத்தை கவ்வி தரதரவென இழுத்து சென்றது.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே மோனிகா தேவி வெளியில் ஓடி வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை, மோனிஷாகுமாரியை கவ்வி இழுத்து சென்றதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதார்.

    அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்தகறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. ஆனால் சிறுமியின் உடலை காணவில்லை.

    இதையடுத்து வனத்துறையினர் குடியிருப்பையொட்டி உள்ள தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 18 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்து கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

    • தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
    • தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.

    • தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.
    • தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

    கோவை:

    கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். 1974-ம் வருடம் ஜூன் 25-ந்தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் தீமைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் நெருக்கடியான அந்த காலகட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது என்பது குறித்து இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இன்று தி.மு.க., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் கொடுமைகளை அனுபவித்தார்கள். அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.

    எதற்காக நாங்கள் இதைச் சொல்கிறோம். கடந்த கால வரலாற்றை மறக்கக்கூடாது. இதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

    இன்று திருப்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. தனது அரசின் தோல்விகளை மறைக்கவே தி.மு.க.வினர் மத்திய அரசை குறை கூறுகிறார்கள்.

    தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.

    முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது.

    கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை தாங்குகிறது. தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குமார், எஸ்.ஆர். சேகர், வீர தமிழச்சி சரஸ்வதி, காளப்பட்டி மண்டல தலைவர் உமாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இவ்விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும், பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.
    • சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியானம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தியானலிங்க வாசல் திறந்தே இருக்கிறது.

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 26-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (ஜூன் 24) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும், பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.

    சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியானம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தியானலிங்க வாசல் திறந்தே இருக்கிறது. இதை உணர்த்தும் விதமாக பல்வேறு மதங்களின் சின்னங்களை தாங்கிய 'சர்வதர்ம ஸ்தம்பம்' எனும் தூண் தியானலிங்க வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஆண்டுதோறும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைபெறுகிறது. 

    இந்தாண்டு பிரதிஷ்டை தின கொண்டாட்டங்கள் தியானலிங்கத்தில் காலை 6 மணிக்கு, ஈஷா பிரம்மச்சாரிகளின் "ஆஉம் நமசிவாய" மந்திர உச்சாடனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆதிசங்கரர் இயற்றிய 'நிர்வாண ஷடகம்' எனும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, கிருத்தவ பக்தி மற்றும் சூஃபி பாடல்களை ஈஷா ஆசிரமவாசிகள் பாடினர். பின்னர் புகழ்பெற்ற 'தேவார பதிகங்களை' மயிலை சத்குரு நாதன் அவர்களும், 'ருத்ர-சமக வேத பாராயணத்தை' சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும் அர்ப்பணித்தனர். அடுத்ததாக 'செரா மே' என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் 'புத்த மந்திர உச்சாடனம்' மற்றும் 'இஷால் முராத்தின்' இஸ்லாமிய அர்பணிப்பும் நடைபெற்றது.


    அதனைத் தொடர்ந்து குருத்வாரா சிங் சபா சார்பில் 'குருபானி பாடல்கள்', சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் பக்தி பாடல்கள், '

    நிஷாமி குஷ்ரூ சகோதரர்களின் 'சூஃபி பாடல்கள்' மற்றும் 'ஏடாகூடம் இசைக்குழு'வின் சார்பில் 'கிருத்தவ பக்தி பாடல்களும்' பாடப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து சத்குருவால் வடிவமைக்கப்பட்ட 'தீட்சை' எனும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சக்தி வாய்ந்த ஆன்மீக செயல்முறைகள், சிறப்பு நாத ஆராதனை, குரு பூஜை மற்றும் இசை அர்ப்பணிப்புகள் நடைபெற்றன. இறுதியாக சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவின் இசை நிகழ்ச்சியோடு இந்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றன.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆன்ம சாதனைகளுக்கு பிறகு சத்குருவால் 1999-ஆம் ஆண்டு, ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×