என் மலர்
நீங்கள் தேடியது "ரோடுஷோ"
- சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும்.
சென்னை:
கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், த.வெ.க. தலைவர் விஜய், குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காதபடி, அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும். நெறிமுறைகளை மீறும் பட்சத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட கட்சி தலைவர், ரோடு ஷோவில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் 'ரோடு ஷோ' நடத்த அனுமதி வழங்கக்கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். கரூர் துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி என்.செந்தில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
- திருச்சி விமான நிலையம் முதல் பிரதமர் தங்கும் ஓட்டல் வரை செல்லும் பாதையில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
- முதலில் பிரதமர் மோடி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குவதாக இருந்தது.
திருச்சி:
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளை மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு 10:30 மணிக்கு திருச்சி வருகிறார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் யார்டு மாரியாட் ஹோட்டலில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11:30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு செல்கிறார்.
அங்கு மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்கிறார்.
முன்னதாக நாளை காலை காரில் விமான நிலையம் செல்லும்போது, கோர்ட்டு யார்டு ஹோட்டலில் இருந்து மேஜர் சரவணன் ரவுண்டானா, எம்ஜிஆர் சிலை, நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, தலைமை தபால் நிலையம், குட் ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், புதுக்கோட்டை சாலை, விமான நிலையம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரதமர் மோடி ரோடு ஷோவாக சென்று மக்களை சந்திக்கிறார்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு பைபாஸ் சாலையை ஒட்டி பொன்னேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார்.
பின்னர் அங்கும் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு விழா நடைபெறும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் வரை ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார். ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளில் இரும்பு பேரிக்கார்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரோடு ஷோவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பதாக கூறப்படுகிறது. பிரதமர் தங்கும் ஓட்டலுக்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்பிஜி அதிகாரிகள், எல்.பி.ஜி. பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தமிழக காவல்துறையினர், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி விமான நிலையம் முதல் பிரதமர் தங்கும் ஓட்டல் வரை செல்லும் பாதையில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும் அரியலூர் கங்கைகொண்ட சோழபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் அமைக்கப்பட்ட பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் பொன்னேரி பகுதிக்கு மாற்றப்பட்டது.
அதேபோன்று முதலில் பிரதமர் மோடி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குவதாக இருந்தது. அதுவும் பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகாமையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு மாற்றப்பட்டது. பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகர் மற்றும் அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- ரோடு ஷோவின் போது வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார்.
- சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே தங்கள் பணியை தொடங்கி விட்டன. ஆளும்கட்சியான தி.மு.க. 200 தொகுதிகளில் இலக்கு நிர்ணயித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.
அதேபோல் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்திருந்த, தற்போதைய பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. மீண்டும் அரியணையில் ஏறுவதற்காக மிக வேகமாகவும், சுறுசுறுப்புடனும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.
சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு அ.தி.மு.க கட்சியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பே திண்ணை பிரசாரத்தை தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் மக்களை அவர்களது வீட்டிற்கே சென்று சந்திக்கின்றனர். அப்போது, மக்களிடம் அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பதுடன், தி.மு.க ஆட்சியின் அவலநிலைகளையும் மக்களிடம் எடுத்து கூறி வருகிறார்கள்.
தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, இதில் உடன்பாடு உள்ள கட்சிகளை கூட்டணியில் இணைத்து மெகா கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் பரப்புரையின் ஒரு கட்டமாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக அவர் வருகிற 7-ந் தேதி கொங்கு மண்டலமான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 21-ந் தேதி வரை முதற்கட்ட சுற்றுப்பயணம் செய்கிறார்.
தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ரோடு ஷோ நடத்துகிறார். இந்த ரோடு ஷோவின் போது வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார்.
மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் குறைகளை கேட்டறிவதுடன், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கிறார். தி.மு.க ஆட்சியின் அவல நிலைகள் குறித்தும் மக்களிடம் எடுத்து கூறுகிறார். ரோடு ஷோ முடியும் இடங்களில் மக்கள் மத்தியில் பிரசார வேனில் நின்றவாறு உரையாற்றவும் உள்ளார்.
இதுமட்டுமின்றி சட்டசபை தொகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொழிலாளர்கள், நகை தொழிலாளர்கள், தொழில் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அந்த சந்திப்பின் போது தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட சுற்றுப்பயண தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்தந்த சட்டசபை தொகுதிகளில் தற்போது முன்னேற்பாடு பணிகளை கட்சியினர் தீவிரமாக செய்துவருகின்றனர்.
முதலில் வருகிற 7-ந் தேதி கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அன்று காலை 9 மணிக்கு வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.
9.30 மணிக்கு அங்குள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகள் சங்கத்தினரை சந்திக்கிறார். அதனை தொடர்ந்து 10.30 மணிக்கு பிளாக் தண்டர் சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
மாலை 3 மணிக்கு மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அப்போது மேட்டுப்பாளையத்தில் ரோடு ஷோ செல்கிறார். ரோடுஷோவில் நடந்து சென்று மக்களை நேரில் சந்திக்கிறார். 3 மணிக்கு தொடங்கும் ரோடு ஷோ 4 மணிக்கு நிறைவடைகிறது. ரோடு ஷோ நிறைவின் போது மக்கள் மத்தியில் அவர் உரையாற்ற உள்ளார்.
5 மணிக்கு காரமடையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார்.
மேட்டுப்பாளையம் தொகுதியை முடித்து விட்டு மாலை 6 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதியான பெரியநாயக்கன் பாளையத்திற்கு வருகிறார். அங்கும் அவர் ரோடு ஷோ நடத்த உள்ளார். 7 மணிக்கு துடியலூரிலும், 8 மணிக்கு சரவணம்பட்டியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி மக்களையும் சந்திக்கிறார்.
அன்று இரவு கோவையில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கோவை தெற்கு, கோவை வடக்கு சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 8-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட வடவள்ளி பஸ் நிலையத்தில் 2-வது நாளாக சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அங்கு பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
அங்கிருந்து ரோடு ஷோ தொடங்குகிறது. அங்கிருந்து சாலை மார்க்கமாக நடந்து பி.என்.புதூர், லாலிரோடு, என்.எஸ்.ஆர் ரோடு வழியாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அதன்பிறகு கோவை கிராஸ்கட் ரோடு, சாய்பாபா காலனி, சங்கனூர் ரோடு வழியாக கணபதி நகர் செல்கிறார். கணபதி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
கோவை தெற்கில் வடகோவையில் இருந்து ரோடு ஷோ தொடங்கி சிந்தாமணி, அர்ச்சனா தியேட்டர் மேம்பாலம் வழியாக, மரக்கடை, கோனியம்மன் கோவில் செல்கிறார். அங்கிருந்து சுங்கம் வழியாக புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் ரோடு ஷோ நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள், கட்சியினர் திரளாக பங்கேற்கின்றனர். கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி வருகையால் கோவையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
- 3 கி.மீ தொலைவுக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார்.
ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8ம் தேதி திருச்சி வருகிறார். 8,9ம் தேதிகளில் அவர் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது திருச்சியில் 2 நாட்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி 8ம் தேதி மாலை திருச்சி தில்லைநகர்- தென்னூர் சந்திப்பு சாலையில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை சுமார் 2 கி.மீ தொலைவுக்கு பொதுமக்களை சந்தித்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே செல்கிறார்.
மறுநாள் 9ம் தேதி காலை, கிராப்பட்டி போலீஸ் பட்டாலியன் மைதானம் அருகில் இருந்து கிராப்பட்டி, எடமலைப் பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் பசுமைப் பூங்கா வரை சுமார் 3 கி.மீ தொலைவுக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார்.
இதையொட்டி இந்த பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பலத்த, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
- மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி அதற்கு முன்பு வருகிற 30-ந் தேதி, அயோத்தி விமான நிலையம் திறக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி 15 கி.மீ. தூரம் ரோடுஷோ நடத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். என்.எச்.27, தரம் பாதை, லதா மங்கேஷ்கர் சவுக், ராம் பாதை, டெதி பஜார், மொகாப்ரா சந்திப்பு வழியாக அவர் ரோடுஷோ நடத்துகிறார். ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.
- மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார்.
- நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.
கிருஷ்ணாநகர்:
பிரதமர் மோடி நேற்று மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றார். அங்கு ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ.720 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.
இன்று பிரதமர் மோடி ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார். அங்கு அவர் ரோடு ஷோ நடத்தினார்.
திறந்த ஜீப்பில் நின்றபடி ஊர்வலமாக சென்றார். இதில் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து கை அசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். அப்போது மோடியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.
கிருஷ்ணா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மின்சாரம், ரெயில், சாலை உள்ளிட்ட துறைகளில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்த திட்டங்கள் மேற்கு வங்காளத்தை வளர்ந்த மாநிலமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டவை. இது மேற்கு வங்காளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேகத்தை அளிக்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் ரெயில்வே கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக அரசு செலவிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராஜாம்பேட்டை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கிரண் குமார் ரெட்டிக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
- மோடி வருகையையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 13-ந்தேதி ஆந்திரா, தெலுங்கானாவில் நடைபெறுகிறது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ரோடு ஷோ மற்றும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இன்று காலை தெலுங்கானா மாநிலத்திற்கு வந்தார். கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ரோடு ஷோவில் கலந்து கொண்ட மோடி பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசினார்.
#WATCH | Telangana: Prime Minister Narendra Modi offers prayers at Sri Raja Rajeshwara Swamy Devasthanam in Vemulawada, Karimnagar district. pic.twitter.com/Jcm0uvVlLg
— ANI (@ANI) May 8, 2024
இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பீலேரு வருகிறார். அங்கு ராஜாம்பேட்டை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கிரண் குமார் ரெட்டிக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மாலை 5 மணிக்கு விஜயவாடா செல்கிறார். அங்கு பந்தர் சாலையில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தின் அருகில் இருந்து பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார்.
இந்த ரோடு ஷோவில் ஏராளமான பா.ஜ.க.வினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்.
மோடி வருகையையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரோடு ஷோ நடைபெறும் இடங்களில் பலூன்கள், டிரோன்கள் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.






