என் மலர்tooltip icon

    சென்னை

    • அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பா.ஜ.க. தயாராகி வருகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வரும் 23-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பா.ஜ.க. தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

    இந்நிலையில் தனியரசு, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உள்ளார்.

    கடந்த நவம்பர் மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக தனியரசு பேசி இருந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 4 வழி மேம்பாலம் மற்றும் முனைய கட்டுமானத்திற்கான நிதியை இந்திய விமான ஆணையம் ஒதுக்கீடு செய்யும்.
    • அடையாறு ஆற்றின் வழியாக சென்று முனையத்தின் நுழைவு பகுதியை அடையும்.

    சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் செயற்கைக்கோள் முனையம் கட்டுமானம் மற்றும் அதற்கான உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து செயல்படுத்தும் வகையில் இந்திய விமான நிலைய ஆணையம் நீர்வளத் துறையிடம் ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது.

    புதிய திட்டமான சாட்டிலைட் முனையத்திற்கு இணைப்பு வழங்க கூடுதல் நிலம் வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்ததை தொடர்ந்து தற்போதைய நிலத்திலேயே உயர்மட்ட மேம்பாலம் கட்ட இந்திய விமான நிலைய ஆணையம் புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை தொடங்கும் இந்த மேம்பாலம் தண்டலம் பகுதியில் உள்ள மாதவ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் தொடங்கி அடையாறு ஆற்றின் வழியாக சென்று முனையத்தின் நுழைவு பகுதியை அடையும்.

    அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தூண்கள் மழைக்காலங்களில் அல்லது வெள்ள காலத்தில் நீரோட்டத்தை தடுக்குமா என்பதை ஆய்வு செய்யுமாறு மாநில அரசு கேட்டிருந்தது.

    இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்வள மையம் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையை தற்போது இந்திய விமான ஆணையம் நீர்வளத் துறையிடம் ஒப்படைத்து உள்ளது.

    நீர்வளத்துறை மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்தவுடன் இந்த 4 வழி மேம்பாலம் மற்றும் முனைய கட்டுமானத்திற்கான நிதியை இந்திய விமான ஆணையம் ஒதுக்கீடு செய்யும்.

    பரந்தூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வர இன்னும் 4, 5 ஆண்டுகள் ஆகும் என்பதால் தற்போதைய சென்னை விமான நிலையத்தில் நெரிசலை குறைக்க இந்த சாட்டிலைட் முனையம் திட்டம் மிகவும் அவசியமானது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்தத் திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவர திட்டமிடப்பட்டது. நீண்ட காலமாக தாமதமடைந்து வந்தது. 2024-ல் இதனை மீண்டும் இந்திய விமான நிலையம் கையில் எடுத்த பிறகு தற்போது வேகம் பெற்றுள்ளது.

    • மதுரை, கோவை - தென் இந்தியாவின் முக்கிய வளர்ச்சி மையங்கள் ஓசூர் - தொழில், லாஜிஸ்டிக்ஸ், வேலைவாய்ப்பின் முதுகெலும்பு.
    • ஏன் இந்த பாரபட்சம், மோடி? ஏன் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது?

    விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதுரை மெட்ரோ ❌ No

    கோவை மெட்ரோ ❌No

    இப்போது ஓசூர் விமான நிலையமும் ❌No

    ஒன்றுக்கொன்று தமிழ்நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் மறுக்கப்படுகின்றன. இந்த மாற்று அணுகுமுறை ஏன்?

    ஜிடிபி, ஏற்றுமதி, எம்.எஸ்.எம்.இ., வேலைவாய்ப்பு -

    இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது.

    ஆனால் மத்திய திட்டங்களில் மட்டும் புறக்கணிப்பா?

    மதுரை, கோவை - தென் இந்தியாவின் முக்கிய வளர்ச்சி மையங்கள் ஓசூர் - தொழில், லாஜிஸ்டிக்ஸ், வேலைவாய்ப்பின் முதுகெலும்பு.

    இந்த திட்டங்களை மறுப்பது கோடிக்கணக்கான மக்களின் வாய்ப்புகளை மறுப்பதுதான்.

    அரசியல் ஒத்துழைப்பின் அடிப்படையிலா வளர்ச்சி?

    கூட்டாட்சி என்பது பேச்சுக்காக மட்டுமா, நடைமுறையில்லையா?

    தமிழ்நாடு சலுகை கேட்கவில்லை.

    தன் உரிமையான பங்கையே கேட்கிறது.

    வளர்ச்சியில் பாகுபாடு ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    ஏன் இந்த பாரபட்சம், மோடி?

    ஏன் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது?

    மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களுக்கும் மக்கள் No சொல்லுவார்கள் 2026 யில்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
    • புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்க முடியும்.

    சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் 342 கோடி ரூபாய் செலவில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. சென்னையின் 6-வது நீர்த்தேக்கமான மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * காற்றும் நீரும் இந்த பூமியில் இருப்பதால் தான் உயிரினங்கள் உருவாகி வாழ்கிறோம்.

    * நீரின்றி அமையாது உலகு என உலகப் பொதுமறையில் எடுத்துக்கூறினார் வள்ளுவர்.

    * இயற்கையோடு இணைந்தது தான் தமிழர் வாழ்வு. அதை ஒட்டியே திராவிட மாடல் அரசு நடைபெறுகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை என பொய் சொல்கிறார்கள்.

    * 1967 - 2011 தி.மு.க. ஆட்சி கால கட்டங்களில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன.

    * 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    * மேட்டூர் அணை முழுவதும் நிரம்பி குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறோம்.

    * காவிரி டெல்டா பகுதிகளில் ரூ.459 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றன.

    * 121 தடுப்பணைகள், 63 அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    * ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது.

    * புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்க முடியும்.

    * 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும்.

    * 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது.

    * சென்னையைச் சுற்றி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள் ஏற்கனவே உள்ளன.

    * நிதி மேலாண்மை போல் நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம்.

    * தலைநகர் சென்னைக்காக தி.மு.க. அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறது.

    * சென்னையின் முகமே மாறக்கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வில் ஆளுநர் கூறியுள்ளதுபோல் இதுவரை மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
    • சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடும் சட்டசபை கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அதன் பின்னர் அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பதும் வழக்கமாக உள்ளது.

    ஆனால் கடந்த 2023-ம் ஆண்டில், அரசு கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே படிக்காமல், சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தார். எனவே பேரவை விதிப்படி அந்த உரையை ரத்து செய்துவிட்டு, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அரசு கொடுத்திருந்த ஆளுநர் உரை, அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டது.

    ஆனால் 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் புறக்கணித்தார். அதற்கு, தான் கேட்டுக்கொண்டபடி தேசிய கீதத்தை அவை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கவில்லை என்ற காரணத்தை கூறினார்.

    இந்தநிலையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் 20-ந் தேதி (அதாவது நாளை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது என்றும் அன்றைக்கு நடக்கும் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வில் ஆளுநர் கூறியுள்ளதுபோல் இதுவரை மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

    உரை நிகழ்த்துவதற்காக சட்டசபைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மரபுப்படி வரவேற்பு அளிக்கப்படும். அவரை அவைக்குள் சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் அழைத்து வருவார்கள். சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் அமர்வார். அருகில் உள்ள இருக்கையில் சபாநாயகர் உட்காருவார்.

    அனைவரும் எழுந்து நிற்கும் நிலையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன்பின்னர் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். உரையை சபாநாயகர் வாசித்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும். அதோடு அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.

    அதன்பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை எடுக்க வேண்டும்? போன்றவை குறித்து முடிவு செய்யப்படும். அதை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பார்.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளும் கட்சி மீதும் அரசு மீதும் என்னென்ன குற்றச்சாட்டுகளை வைக்கலாம்? என்பதை அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் பட்டியல் போட்டு கொண்டு வரும். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட அரசு தரப்பினரும் தயாராகி வருவார்கள். எனவே இந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசியல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

    • நேற்றைய நிலவரப்படி 13.03 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
    • பிப்ரவரி 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர்.

    தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பேர் நீக்கப்பட்டு, 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இருந்தனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு இருந்தது.

    வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறாதவர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக இந்திய தேர்தல் கமிஷன் கடந்த மாதம் (டிசம்பர்) 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தியது.

    தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 260, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 286, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 843 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்தனர்.

    விடுபட்டவர்கள், புதியவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அதாவது ஜனவரி 18-ந் தேதி (நேற்று) வரை இந்திய தேர்தல் கமிஷன் அவகாசம் அளித்திருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.

    இதில் கடந்த 16-ந் தேதி வரை 18 வயது நிரம்பிய தகுதியுடைய 12 லட்சத்து 80 ஆயிரத்து 668 பேர் படிவம் 6, 6ஏ மற்றும் இறந்த 32 ஆயிரத்து 388 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ஐ அளித்துள்ளனர்.

    நேற்றைய நிலவரப்படி 13.03 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து வருகிற பிப்ரவரி 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர்.

    இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் 12 நாட்களுக்கு அவகாசத்தை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பொங்கல் பண்டிகை காரணமாக விஜய் தரப்பில் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றும்படி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
    • சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விஜய்க்கும் சம்மன் அனுப்பி அவரிடமும் கடந்த 12-ந்தேதி அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் ஆஜரான விஜய்யிடம் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுடன் 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

    அவரிடம் அடுத்த நாளும் (அதாவது, 13-ந்தேதி) விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொங்கல் பண்டிகை காரணமாக விஜய் தரப்பில் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றும்படி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    அதனையேற்று, பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் சம்மன் வழங்கப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தை இரவு 7.15 மணிக்கு விமானம் சென்றடைந்தது. பின்னர் கார் மூலமாக டெல்லி சர்தார் படேல் சாலையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அவர் சென்றார். அங்கு அவர் இரவு தங்கினார்.

    இந்தநிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணைக்காக விஜய் ஆஜரான நிலையில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம், சிஜிஓ காம்பிளக்ஸ் சாலையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பட்டியல் வெளியிடப்படவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னை கிழக்கு கராத்தே ஆர்.செல்வம், மத்திய சென்னை மேற்கு கோபி, வட சென்னை கிழக்கு மதர்மா கனி, வட சென்னை மேற்கு தில்லிபாபு, தென் சென்னை மத்திய ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு விஜயசேகர், தென் சென்னை மேற்கு திலகர், செங்கல்பட்டு வடக்கு செந்தில்குமார், செங்கல்பட்டு தெற்கு பிரபு ஆகியோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர்களுக்கான பட்டியல் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,280-க்கும், ஒரு சவரன் 1,06,240-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,450-க்கும், சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 318 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

    15-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,320

    14-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-1-2026- ஒரு கிராம் ரூ.310

    17-1-2026- ஒரு கிராம் ரூ.310

    16-1-2026- ஒரு கிராம் ரூ.306

    15-1-2026- ஒரு கிராம் ரூ.310

    14-1-2026- ஒரு கிராம் ரூ.307

    • கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கலையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து விட்டு அவர்களும் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

    பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    இன்று முதல் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படுவதால், விடுமுறைக்காக குடும்பத்துடன் தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக திருச்சி சென்னை NH சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை நோக்கி வரும் கார்கள், பேருந்துகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பேருந்துகள் நகர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

    சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்புவதையடுத்து செங்கல்பட்டு டோல்கேட், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி ஜன. 21, 23-ந்தேதிகளிலும் நடைபெற உள்ளது.
    • ஜன.26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்ற உள்ளார்.

    சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ஜன.26-ந்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவுக்கான முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி ஜன. 21, 23-ந்தேதிகளிலும் நடைபெற உள்ளது.

    ஜன.26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்ற உள்ளார்.

    குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஜன.26, ஒத்திகை நடைபெறும் நாட்களான 21, 23 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

    அடையாறு பகுதியிலிருந்து காமராஜா் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உள்பட) காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்பட்டு, ராயப்பேட்டை 1 பாயிண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் சாலை, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டா்ஸ் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

    மயிலாப்பூா் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயப்பேட்டை 1 பாயிண்ட்டில், இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ அல்லது வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம்.

    மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே.சாலை.கொளடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம்.

    டாக்டா் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பிவிடப்படும். டாக்டா்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும்.

    காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் சாலை நோக்கி திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளா் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

    அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜா் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் செல்லாமல் வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜி.பி.சாலை, ராயப்பேட்டை மணி கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆா்.எச். சாலை, அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை), ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி டாக்டா்.ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.

    அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போா் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

    இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் விஜய் சென்னை திரும்பினார்.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து த.வெ.க. தலைவர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா?, நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்?, கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா?, கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா?, தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?' என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை விஜயிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர்.

    அனைத்து கேள்விகளுக்கும் விஜய் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் அவர் சென்னை திரும்பினார். அவர் அடுத்தகட்ட விசாரணைக்காக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு நாளை (ஜன.19-ந்தேதி) டெல்லியில் மீண்டும் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

    இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2-வது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சி.பி.ஐ. முன்பு 2-வது முறையாக இன்று விஜய் ஆஜராகிறார். இன்றும் சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    ×