என் மலர்
சென்னை
- தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிசுமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
15 மற்றும் 16-ந்தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19 மற்றும் 20-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிசுமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15 மற்றும் 16-ந்தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத உலகமாக தமிழகம் மாறிவிட்டது.
- நல்வாய்ப்புக் கேடாக தமிழ்நாடு தான் குழந்தைகளில் நரகமாக மாறிவிட்டது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்போம்!
ரோஜாவின் ராஜா என்றும், நேரு மாமா என்றும் குழந்தைகளால் போற்றப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் இருக்கும் உலகம் மகிழ்ச்சியானது; குழந்தைகளின் உலகம் உன்னதமானது.
ஆனால், நல்வாய்ப்புக் கேடாக தமிழ்நாடு தான் குழந்தைகளில் நரகமாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத உலகமாக தமிழகம் மாறிவிட்டது.
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
மொத்தத்தில், திமுக ஆட்சியில், தமிழ்நாடு குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டை குழந்தைகளின் சொர்க்கமாக மாற்றுவதற்காக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர கூறினார்.
- எதிர்க்கட்சிக்கு பீகார் மக்கள் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளனர்.
- இந்த வலுவான வெற்றி பீகாரின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் மேலும் துரிதப்படுத்தும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் பொய்களையும், ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் நிராகரித்து, பீகார் மக்கள் அதற்குப் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளனர்.
கூட்டணியின் கூட்டுத் தலைமை மற்றும் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அ.தி.மு.க. சார்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதிஷ்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வலுவான வெற்றி பீகாரின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் மேலும் துரிதப்படுத்தும் என்று நம்புகிறேன்.
- தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது.
- SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
* தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது.
* பா.ஜ.க.வின் வாக்குத்திருட்டு குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி உள்ளார்.
* SIR பணிகளை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
* மக்களின் வாக்குரிமையை பெற்றுத்தரும் பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.
* ஏற்கனவே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தி.மு.க. கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் பாக முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
* SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது.
* தமிழ்நாட்டில் உரிய கால அவகாசம் இல்லாமல் SIR பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
* SIR படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க. பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும்.
* தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்க மாநிலம் SIR-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துகிறது.
* மக்களை சந்திக்க தெம்பில்லாமல் SIR என்ற குறுக்கு வழியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் சென்றது வெட்கக்கேடு.
* தமிழகத்தில் இருக்கும் எதிர்க்கட்சி தற்போது எதிர்க்கட்சியாக இல்லை.
* அ.தி.மு.க.வை டெல்லியில் அடகு வைத்துவிட்டு SIR-ஐ ஆதரித்து பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.
- தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45 ஆயிரத்து 800 மின்மாற்றிகள் ரூ.1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு மின்மாற்றியும் 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு ரூ.387 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் அறப்போர் இயக்கம் 2023-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி புகார் அளித்தது.
இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக் கையுடன் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.
மின்மாற்றி ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் பேரம் என மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையாகும்.
மின்மாற்றிக் கொள்முதலில் தொடர்புடைய எதிரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு பதிலாக அவர்களுக்கு சன்மானம் வழங்கும் தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
எனவே, மின்மாற்றி கொள்முதலில் நடைபெற்ற ஊழல்கள், கூட்டுச் சதிகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் வகையில், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம்!!
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மனதை மயக்கும் மழலை மொழியாலும் - சின்ன சின்ன குறும்பாலும் - தூய அன்பாலும் - ஒவ்வொரு இல்லத்தையும் வண்ணமயமாக்குவது குழந்தைகள்!
இனிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் #ChildrensDay நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து - ஆரோக்கியம் - கல்வி - விளையாட்டு என 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம்! குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம்!! என்று கூறியுள்ளார்.
- கொளத்தூர் தொகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.
- கொளத்தூரில் கட்டப்படும் ரத்த சுத்திகரிப்பு, மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை பெரியமேட்டில் பதிவுத்துறை சார்பில் ரூ.3.86 கோடியில் கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து கொளத்தூர் தொகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம், முழு நேர நூலகம், ஐ.ஏ.எஸ். பயிற்சி கூடம் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே கட்டப்பட உள்ள பெரவள்ளூர் புறக்காவல் நிலையம் கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூரில் கட்டப்படும் ரத்த சுத்திகரிப்பு, மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
- ஒளிமயமான எதிர்காலமும் ஒருங்கே அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளான இன்று ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அன்பிற்குரிய தமிழகத்தின் செல்லக் குழந்தைகள் அனைவருக்கும் எனது இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவமும், ஒளிமயமான எதிர்காலமும் ஒருங்கே அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் கனவுகள் பெரியதாக இருக்கட்டும்; அந்தக் கனவுகளை நிறைவேற்ற முயற்சி, சக்தி, துணிவு மூன்றும் துணை நிற்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 12 செ. மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்தர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த மாதம் இயல்புக்கு அதிகமாகவே 23 செ.மீ.அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
அதே நேரத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பருவமழையில் தொய்வு நிலவியது. இந்த நிலையில் நாளை (15-ந் தேதி இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.
இது படிப்படியாக தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் வழியாக லட்சத்தீவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வருகிற 16-ந்தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தொடங்கும் மழை 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் வருகிற 20-ந்தேதி வரையில் அடுத்த சுற்று மழையை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 17, 18-ந்தேதிகளில் பரவலாக கன மழையும் ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 செ. மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வங்கக் கடல் பகுதியில் உருவாக உள்ளது. இதில் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
வருகிற 21-ந்தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 25-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். பின்னர் இந்த மாத இறுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறுவதற்கு சாதகமான சூழல் தென்படுகிறது.
இருப்பினும் முதல் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளும் தமிழகத்துக்கு நல்ல மழையை கொடுக்கும். 25-ந்தேதிக்கு பிறகு உருவாகும் புயலும் மழையை கொடுக்கும். இந்த புயல் வட தமிழகத்தில் கரையை கடக்குமா? காவிரி டெல்டா பகுதியில் கரையை கடக்குமா? என்பது அதன் நகர்வை பொறுத்து தெரிய வரும். இந்த புயலால் காற்று பாதிப்பு ஏற்படாது. மழை பொழிவே அதிகம் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தங்கம் விலையை பொறுத்தவரையில், கடந்த 4 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.600-ம், சவரனுக்கு ரூ.4,800-ம் உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதாவது, கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
அதனையடுத்து தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் நிலையும் நீடித்து வந்ததை பார்க்க முடிந்தது. இப்படியாக விலை இருந்த நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து ஏறுமுக கணக்கை மீண்டும் தங்கம் தொடங்கியுள்ளது.
அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,440-க்கு உயர்ந்திருந்தது. அதற்கு மறுநாள் (11-ந்தேதி) ஒரு சவரன் ரூ.1,760-ம் அதிகரித்து, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது.
இந்த நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்து அனைவருக்கும் 'ஷாக்' கொடுத்துவிட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலையை பொறுத்தவரையில், கடந்த 4 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.600-ம், சவரனுக்கு ரூ.4,800-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் 14-ந் தேதி ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்து இருந்தது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,840-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.94,720 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,200
12-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800
11-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,600
10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840
09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-11-2025- ஒரு கிராம் ரூ.183
12-11-2025- ஒரு கிராம் ரூ.173
11-11-2025- ஒரு கிராம் ரூ.170
10-11-2025- ஒரு கிராம் ரூ.169
09-11-2025- ஒரு கிராம் ரூ.165
- குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
- வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16327) வருகிற 22-ந் தேதி கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16328) 23-ந்தேதி குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த ரெயில் மதியம் 12.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12695) வருகிற 21-ந் தேதி கோட்டயம்-திருவனந்தபுரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இதே வழித்தடத்தில் 25-ந்தேதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22207) பகுதிநேரமாக எர்ணாகுளம் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12696) வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127) 25-ந் தேதி 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும். அதே தேதியில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- லட்சுமிபுரம், பெரியார் நகர், கோனிமேடு, கங்கை நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.11.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
திருமுல்லைவாயல்: லட்சுமிபுரம், பெரியார் நகர், கோனிமேடு, கங்கை நகர், சரத் கண்டிகை, பம்மத்துக்குளம், எல்லம்மன் பேட்டை, ஏராங்குப்பம்.






