என் மலர்
சென்னை
- சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை இனியாவது உணரவேண்டும்.
- நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கி நீக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்கள் திட்டமா, கட்சி விளம்பரமா?
நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்!
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கட்சி விளம்பர பாணியில் "ஸ்டாலின்" பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியதன் மூலம், மக்கள் பணத்தில் திமுக
அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அஇஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் அவர்கள் தொடர்ந்த இவ்வழக்கில் கிடைத்த இந்தத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது.
மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் நலத்திட்டங்களில் எல்லாம் "ஸ்டாலின்" என்று தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு திட்டங்கள் மக்கள் நலனை மேம்படுத்துவதற்குதானே தவிர, சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை இனியாவது உணரவேண்டும்.
மேலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பொதுமக்கள் வரிப்பணத்தில் இயங்கும் திட்டங்களுக்கு "உங்களுடன் ஸ்டாலின்", "நலம் காக்கும் ஸ்டாலின்" என்று விளம்பர அரசியலை மனதில் வைத்து சூட்டிய பெயரை உடனடியாக நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கி நீக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
- சேலம் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 19.05.2023 அன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்து, அதனை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
2000-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது.
அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி' என்பதை முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் விதமாக, மதுரை மாநகரில் ரூ.314 கோடி மதிப்பீட்டில், 5.34 லட்சம் சதுரடி கட்டுமான பரப்பளவுடனும், திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் ரூ.403 கோடி மதிப்பீட்டில், 5.58 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடனும், புதியடைடல் பூங்காக்களை நிறுவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 18.02.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இவற்றின் கட்டுமானப்பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் நடைபெற்று வருகின்றன. மேலும், 5.57 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவில், 21 தளங்களுடன் கட்டப்பட்ட பட்டாபிராம் டைடல் பூங்கா, முதலமைச்சரால் 22.11.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இவை மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க அரசு முடிவெடுத்து, விழுப்புரம் மற்றும் திருப்பூர் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.06.2022 அன்றும், வேலூர் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 18.02.2023 அன்றும், தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 19.05.2023 அன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அவற்றில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று விழுப்புரம் மினி டைடல் பூங்கா 17.02.2024 அன்றும், தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் 23.09.2024 அன்றும், தூத்துக்குடி மினி டைடல் பூங்கா 29.12.2024 அன்றும் முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டன. திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி மினி டைடல் பூங்காக்களின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவை விரைவில் செயல்பட துவங்கும். மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வடி வமைப்பு பணிகள் முடிவுற்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை, பெரும்பாக்கத்தில் 6.94 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய இடங்க ளில் 11.50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் ஆகிய 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்து, 91.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 முதல்வர் படைப்பகங்கள் உள்ளிட்ட 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் ரா. ராஜேந்திரன் சந்தித்து, தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு புதுடெல்லியில் 3.7.2025 அன்று நடைபெற்ற விழாவில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்று, கள்ளக்குறிச்சி-2 மற்றும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் லாப பங்கீட்டு ஈவுத்தொகையாக 22 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில், குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை மற்றும் மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகம் ஆகியவற்றில் 18 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகளையும், அருங்காட்சியக துறை சார்பில், சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் 6 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்ட மைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும் சென்னை-இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் உள்ள பூத் முகவர்கள் விவரம் புகைப்படத்தோடு பிரத்யேக செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.
- கட்சித் தலைவர் விஜய் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் பேசி ஆலோசனை செய்கிறார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்காக 'மை டி.வி.கே.' என்ற பிரத்யேக செயலியை த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 30-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு செயலி மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் கட்சித் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுமார் 69 ஆயிரம் பூத் முகவர்களை நியமனம் செய்துள்ளார்.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் தினந்தோறும் அந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று த.வெ.க. கொள்கைகள் மற்றும் வருங்கால முதல்வர் வேட்பாளர் விஜய் என்பதையும் மக்களிடையே பிரசாரம் செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி தொகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரச்சனைகளை தீர்க்க கோரி மனு செய்து வருகின்றனர்.
தீர்க்கப்படாதபட்சத்தில் த.வெ.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பூத் முகவர்கள் விவரம் புகைப்படத்தோடு பிரத்யேக செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர் விஜய் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் பேசி ஆலோசனை செய்கிறார். மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பூத் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் த.வெ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 3-ந்தேதி சுமார் 80 மாவட்டங்களில் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு வாக்குச்சாவடியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாக்காளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது உள்பட 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் பற்றி தீவிரமாக ஆலோசனை நடைபெற இருக்கிறது.
பூத் முகவர்களாக அந்தந்த பகுதியில் இருப்பவர்களே நியமனம் செய்யப்பட்டுள்ளதால் ஒரு வீடு விடாமல் இரவு-பகல் பாராமல் த.வெ.க.வினர் பணியாற்றி வருகின்றனர்.
கூட்ட ஏற்பாடுகளை கட்சித் தலைவர் விஜய் உத்தரவின்படி, பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி 234 தொகுதிகளிலும் தீவிரமாக செய்து வருகின்றனர்.
- ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
- மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1 கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர். ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.
- நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டோம்.
நேற்று நடந்த மாணவரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.
நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.
மேலும், அவ்வகுப்பில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து நம்பிக்கையளிக்கும் விதமாக உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
- அ.தி.மு.க.வை 8 பேர்தான் நடத்தி வருகிறார்கள்.
- விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை விட்டு கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
பாரதிய ஜனதா திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுத்த காய்களை நகர்த்தி வருகிறது. பல விஷயங்களில் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருக்கிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகளில் இருந்து அவர் விலகி செல்கிறார். அ.தி.மு.க.வை 8 பேர்தான் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள பல மூத்த தலைவர்களுக்கு பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தது பிடிக்கவில்லை. தமிழகத்தில் 14 சதவீதம் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளை இழந்து விடுவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியும் முதலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று தான் சொல்லி இருந்தார். ஆனால் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதும் பாரதிய ஜனதா பதறி விட்டது.
அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் இடையே ரகசிய பேச்சு நடந்தது எனக்கு தெரியும். விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை விட்டு கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விஜய் கட்சியினர் முதல்-மந்திரி பதவியை விட்டு தரவேண்டும் என்றனர். ஆனால் அதை அ.தி.மு.க. ஏற்கவில்லை. என்றாலும் பேச்சுவார்த்தை முடியாமல் தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருந்தது. இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் கூட்டணி வந்தால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தனர். அந்த பயத்தில்தான் அமித்ஷா அவசரம் அவசரமாக சென்னைக்கு வந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலமாக அறிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தால் அ.தி.மு.க. வுக்கு தான் பாதிப்பு ஏற்படப் போகிறது. இது அ.தி.மு.க.வில் உள்ள பல மூத்த தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பதற்கு முன்பு 2 ஆண்டுகள் நாகலாந்து மாநிலத்தில் கவர்னராக இருந்தார்.
- கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் அவர் கவர்னர் பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுவார் என்று அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுவதும் பிறகு அது வதந்தி என்று அறிவிக்கப்படுவதும் வழக்கமாகி விட்டது. அந்த வகையில் நேற்று முதல் சமூக வலை தளங்களில் கவர்னர் ரவி மாற்றப்படுவார் என்று புதிய தகவல் பரவி வருகிறது.
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பதற்கு முன்பு 2 ஆண்டுகள் நாகலாந்து மாநிலத்தில் கவர்னராக இருந்தார். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவர் கவர்னர் பதவியில் இருக்கிறார்.
வருகிற செப்டம்பர் மாதம் வந்தால் அவர் தொடர்ச்சியாக கவர்னர் பதவியில் இருப்பது 6 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு சமமாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் அவர் கவர்னர் பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனால்தான் அவர் எந்த நேரத்திலும் மாற்றப்படுவார் என்று அடிக்கடி தகவல் பரவுகிறது. தற்போதும் அதன் அடிப்படையில்தான் தகவல் பரவி இருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
கவர்னர் ஆர்.என்.ரவி துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படலாம் என்றும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை கவர்னர் மாளிகை அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்தனர்.
கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது ஆகஸ்டு 15 சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் சுதந்திர தினத்தன்று விருந்து தொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.
- ஆகஸ்ட் 18-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறைவடைய உள்ளது.
- தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25ந்தேதி திருப்போரூர் நகரில் தொடங்கி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தின் முதற்கட்டம் வரும் 4-ந் தேதி மாலை திருப்பத்தூர் நகரில் நிறைவடைய உள்ளது.
அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் வரும் ஆகஸ்ட் 7-ந் தேதி வந்தவாசியில் தொடங்கி, ஆகஸ்ட் 18-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்ட பயணத்தின் விவரங்கள் வருமாறு:-
ஆகஸ்ட் 7 - வந்தவாசி, செய்யாறு
ஆகஸ்ட் 8 - பென்னாத்தூர், போளூர்
ஆகஸ்ட் 11 - திண்டிவனம், செஞ்சி
ஆகஸ்ட் 12 - மைலம், விழுப்புரம், விக்கிரவாண்டி
ஆகஸ்ட் 13 - ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை
ஆகஸ்ட் 17 - பர்கூர், ஊத்தங்கரை
ஆகஸ்ட் 18 - கிருஷ்ணகிரி, ஓசூர்
மூன்றாம் கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவையில் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார்.
- மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
சென்னை:
கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார்.
சென்னையில் இருந்து கோவை சென்று அங்கிருந்து திருப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கோவையில் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார்.
இதனைத்தொடர்து மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 12-ந்தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.
இந்த 2 நாட்கள் கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
- செப்டம்பர் 20-ந்தேதி திருச்சியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த இருக்கிறோம்.
- டிசம்பர் 17-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.
சென்னை:
சத்துணவு ஊழியர்கள் வருகிற 20-ந்தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சங்க தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:-
சத்துணவு துறையில் காலியாக உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 வருடங்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்.
ஆனாலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்போது 7 கட்ட தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
முதல் கட்டமாக வருகிற 20-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் மறியல் போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து செப்டம்பர் 20-ந்தேதி திருச்சியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த இருக்கிறோம்.
அதன்பிறகு அக்டோபர் மாதம் 8-ந்தேதி தற்செயல் விடுப்பு போராட்டமும், நவம்பர் 7-ந்தேதி சென்னையில் பேரணியும் நடத்த உள்ளோம். டிசம்பர் 17-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜயகாந்த் தலைவராக இருந்த போது 3 பாராளுமன்ற தேர்தல்களை கட்சி சந்தித்தது.
- 104 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட தே.மு.தி.க. வெற்றி பெற முடியவில்லை.
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா முதலமைச்சர் மு .க. ஸ்டாலினை நேரில் சந்தித்தது அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. முக்கியமாக தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்பப்படுகிறது .
உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பிய முதலமைச்சரை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும், ஏற்கனவே விஜயகாந்த் உடல்நலம் பாதித்து இருந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். எனவே அந்த நட்பின் அடிப்படையில் இதுவும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று பிரேமலதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சந்திப்பின்போது தே.மு.தி.க.முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றதும், தி.மு.க. தரப்பிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அது மட்டுமல்ல ஏற்கனவே தே.மு.தி.க வை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரும் உடன் இருந்துள்ளார்கள். எனவே தான் இந்த சந்திப்பை கூட்டணிக்கான அச்சாரமாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். திடீரென்று தி.மு.க. பக்கம் பிரேமலதாவின் பார்வை திரும்பியது ஏன்? என்பது பற்றி விசாரித்த போது கட்சி நிர்வாகிகள் கூறியதாவது :-
கடந்த 2005-ல் கட்சி தொடங்கப்பட்டு 2011-ல் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. விஜயகாந்த் தலைவராக இருந்த போது 3 பாராளுமன்ற தேர்தல்களை கட்சி சந்தித்தது. ஆனால் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.
கட்சி ஆரம்பித்த மறு ஆண்டு அதாவது 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். பின்னர் தனித்து போட்டியிடும் முடிவை மாற்றி 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல் முறையாக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் அப்போதுதான் தே.மு.தி.க.வுக்கு கிடைத்தது
எதிர்க்கட்சி அந்தஸ்து கூட அப்போது தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போனது அரசியல் களத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதை வைத்து அடுத்து வரும் காலம் விஜயகாந்த் காலம் தான் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு கட்சி எடுத்த முடிவுகள் கை கொடுக்காததால் 8 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி சுமார் ஒரு சதவீதம் என்ற அளவுக்கு இறங்கி விட்டது.
2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை அமைத்து ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டுகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில் 104 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட தே.மு.தி.க. வெற்றி பெற முடியவில்லை.
கருணாநிதி, ஜெயலலிதா, ஆகிய 2 மாபெரும் ஆளுமைகளும் சந்தித்த கடைசி தேர்தலும் அதுதான். அதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. எடுத்த முடிவு கை கொடுக்கவில்லை. 60 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் போனது.
விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கும் இருந்தது. அப்படி இருந்தும் கட்சியை சிகரம் தொட கொண்டு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் தான் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா பொதுச்செயலாளர் ஆனார். மீண்டும் கட்சியை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
இந்த நிலையில் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். அந்தத் தேர்தலும் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் கூட்டணி ஒப்பந்தப்படி தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவி தருவதாக கூறப்பட்டது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மோசமான தோல்வியை தழுவியது. இதையடுத்து பேசியபடி மேல் சபை எம்.பி. பதவியும் தே.மு.தி.க.வுக்கு வழங்கப்படவில்லை. அடுத்து வரும் வாய்ப்பில் உறுதியாக தரப்படும் என்று அ.தி.மு.க. உறுதி அளித்துள்ளது. இது பிரேமலதாவை அதிருப்தி அடைய வைத்தது. அவரது தம்பி எல்.கே.சுதீசை மனதில் வைத்தே எம்.பி. பதவி கேட்கப்பட்டதாகவும் அது நடக்காமல் போனது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியதாகவும் கூறுகிறார்கள்.
எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் சொதப்பி விடக்கூடாது என்று நினைக்கிறார். எனவே தான் தேசிய ஜனநாயக கூட்டணியை இனியும் நம்பி பலனில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஐக்கியமாகி விடலாம் என்று அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் கூட்டணியில் இடம் பெற்றால் மட்டும் போதாது. நினைத்த பேரத்தை முடிக்க வேண்டும் என்றால் கட்சியின் பலத்தையும் காட்ட வேண்டியது அவசியம். எனவே கட்சி இன்னும் பலமாக தான் உள்ளது என்பதை காட்டுவதற்காக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க.வை தொடர்ந்து பிரேமலதாவும் ரத யாத்திரை செல்ல உள்ளார். தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி கட்சிகள் அனைத்தும் உறுதியாக இருந்தாலும் மேலும் கட்சிகளை இணைத்து கூட்டணியை பலப்படுத்தி ஆட்சியை தக்க வைப்பதில் தி.மு.க. தலைமை தீவிரமாக உள்ளது. அந்த வகையில் தான் தே.மு.தி.கவையும் கூட்டணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளது. கூட்டணியில் சேர்வதற்கு பிரேமலதாவும் பெரிய அளவில் பேரம் எதையும் பேசவில்லை . மூன்றே மூன்று கோரிக்கை மட்டும் தான் அவர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதல் கோரிக்கை மேல்சபை எம்.பி பதவி ஒன்று கட்டாயம் வேண்டும். இரண்டாவதாக சட்டமன்றத் தேர்தலில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். மூன்றாவதாக தேர்தல் செலவுகளை தி.மு.க. ஏற்க வேண்டும் என்பதுதான்.
இந்த மூன்று கோரிக்கைகளையும் தி.மு.க.வும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் தி.மு.க.வில் கிடைக்கும் என்று பிரேமலதாவிடம் உறுதியும் அளித்துள்ளார்கள். எனவே விரைவில் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் பிரேமலதா போடுவது தேர்தல் கணக்கு மட்டும் தான். அதேநேரம் தனது கணவர் தொடங்கி உச்ச நிலைக்கு கொண்டு சென்ற கட்சி அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கும் நிலையில் மீண்டும் தனது தலைமையில் வழி நடத்தி கட்டி காப்பதில் பிரேமலதா சாதிப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
- உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
- கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும்.
சென்னை:
2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சூர்யமூர்த்தி சார்பில் சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்த மனுவில், பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சூரியமூர்த்தி, அ.தி.மு.க. உறுப்பினரே அல்ல. உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த 4-வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்தி வேல் கண்ணன், கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது எனக்கூறி, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






