என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anwar Raja"

    • சமீபத்தில் அன்வர் ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
    • தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததால் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து அன்வர் ராஜா விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்த நிலையில், தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜாவை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    தி.மு.க. இலக்கிய அணி தலைவராக புலவர் இந்திரகுமாரி பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அ.தி.மு.க.வை 8 பேர்தான் நடத்தி வருகிறார்கள்.
    • விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை விட்டு கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

    அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    பாரதிய ஜனதா திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுத்த காய்களை நகர்த்தி வருகிறது. பல விஷயங்களில் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருக்கிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகளில் இருந்து அவர் விலகி செல்கிறார். அ.தி.மு.க.வை 8 பேர்தான் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள பல மூத்த தலைவர்களுக்கு பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தது பிடிக்கவில்லை. தமிழகத்தில் 14 சதவீதம் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளை இழந்து விடுவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமியும் முதலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று தான் சொல்லி இருந்தார். ஆனால் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதும் பாரதிய ஜனதா பதறி விட்டது.

    அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் இடையே ரகசிய பேச்சு நடந்தது எனக்கு தெரியும். விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை விட்டு கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் விஜய் கட்சியினர் முதல்-மந்திரி பதவியை விட்டு தரவேண்டும் என்றனர். ஆனால் அதை அ.தி.மு.க. ஏற்கவில்லை. என்றாலும் பேச்சுவார்த்தை முடியாமல் தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருந்தது. இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் கூட்டணி வந்தால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தனர். அந்த பயத்தில்தான் அமித்ஷா அவசரம் அவசரமாக சென்னைக்கு வந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலமாக அறிவித்தார்.

    பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தால் அ.தி.மு.க. வுக்கு தான் பாதிப்பு ஏற்படப் போகிறது. இது அ.தி.மு.க.வில் உள்ள பல மூத்த தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்.
    • கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் தி.மு.க.வில் இணைந்தது தொடர்பாக அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்.

    * ஒரு தலைவரை நம்பித்தான் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள், மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராவார்.

    * அ.தி.மு.க.வில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை. இனி நிலையான தலைவர்கள் வருவார்களா என தெரியவில்லை.

    * தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் இல்லை. இம்முறை 15% கூடுதல் வாக்குகள் பெற்று தி.மு.க. வெல்லும்.

    * கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கருத்தியல் ரீதியாக அ.தி.மு.க. தடம் புரண்டு விட்டது.
    • முதலமைச்சர் வேட்பாளர் என இ.பி.எஸ். பெயரை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்நிலையில் தி.மு.க.வில் இணைந்தது தொடர்பாக அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * மாண்புமிகு தளபதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டேன்.

    * கருத்தியல் ரீதியாக அ.தி.மு.க. தடம் புரண்டு விட்டது.

    * தனது கொள்கையில் இருந்து தடம்புரண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது அ.தி.மு.க.

    * முதலமைச்சர் வேட்பாளர் என இ.பி.எஸ். பெயரை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை.

    * அ.தி.மு.க.வை சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது.

    * 3 முறை கூட்டணி குறித்து பேட்டியளித்த அமித்ஷா முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கூறவில்லை.

    * எந்த கட்சியில் இணைந்தாலும் அக்கட்சியை சீரழிப்பது தான் பா.ஜ.க.வின் வேலை.

    * கூட்டணி ஆட்சி என அமித்ஷா பலமுறை கூறியும் முதல்வர் வேட்பாளர் நான்தான் என இ.பி.எஸ்.ஆல் கூற முடியவில்லை.

    * பலமுறை என் ஆதங்கத்தை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அதனால் அடுத்த சாய்ஸ் தி.மு.க.தான், அதனால் இணைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
    • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அன்வர்ராஜா. அ.தி.மு.க.வில் சிறுபான்மை இன தலைவர்களில் இவர் முக்கிய பங்கு வகித்து இருந்தார்.

    கடந்த 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது இவர் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அவருக்கு சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் பதவியையும் ஜெயலலிதா வழங்கி இருந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது இவர் ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அவர் சசிகலாவின் ஆதரவாளராக மாறினார்.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானதும் சசிகலாவிடம் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்தார். அவருக்கு சிறுபான்மை பிரிவில் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

    இதற்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அவர் சில கருத்துக்களை வெளியிட்டதால் அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    2023-ம் ஆண்டு அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து அவரை எடப்பாடி பழனிசாமி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் மீண்டும் கூட் டணி அமைக்கப்பட்டது. அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இந்த கூட்டணியை முன்னெடுத்து செல்கிறார்கள்.

    பாஜகவுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்தது அன்வர் ராஜாவுக்கு அதிருப்தியை கொடுத்தது. இது தொடர்பாக அவர் தனது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அன்வர் ராஜா தி.மு.க.வில் இணையப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதற்காக அவர் தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு காரில் சென்று கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்த தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் அவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார். அன்வர்ராஜா அ.தி.மு.க. வில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்து உள்ளார்.

    இதற்கிடையே அன்வர் ராஜா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    • அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
    • தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.

    தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் இருந்தே அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
    • தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது என அண்மையில் அன்வர் ராஜா கூறியிருந்தார்.

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் இருந்தே அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

    தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது என அண்மையில் அன்வர் ராஜா கூறியிருந்தார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழ்நாடு மக்கள் எந்தக் காலத்திலும் அதை விரும்பியதில்லை.
    • பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடு தான்.

    சென்னை:

    பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி உறுதியானது முதல் விமர்சனங்களும், சலசலப்பும் தொடர்ந்து கொண்டே உள்ளது. சில தினங்களுக்கு முன்பு நாளிதழுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜ.க. கட்சியின் பங்கு இருக்கும் என்றார்.

    மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என்று அமித் ஷா கூறியிருந்தார். இதனால் அ.தி.மு.க. -பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் ஒரு போதும் காலூன்ற முடியாது. கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க. தான், தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இதை பா.ஜ.க. ஏற்கவில்லை என்றால், இரு கட்சிகளுக்கான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை.

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் கிடையாது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாடு மக்கள் எந்தக் காலத்திலும் அதை விரும்பியதில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பா.ஜ.க.வின் திட்டம் ஒன்றும் பலிக்காது. எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்வர் ராஜா 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தார்.
    • 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார் அன்வர் ராஜா.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், விலகியவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதையடுத்து பலர் சேர்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இன்று காலையில் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார். அவரது முடிவை வரவேற்று எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    பின்னர் தலைமை கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு சென்று முறைபடி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    அன்வர்ராஜா 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தார். 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் பேட்டியளித்ததால் கடந்த 2021-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதன்பிறகு எந்த பக்க மும் போகாமல் அமைதியாக இருந்து வந்த அன்வர் ராஜா இன்று மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துள்ளார்.

    • அ.தி.மு.க. பா.ஜனதாவோடு கூட்டணி வைக்க கூடாது.
    • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை வலிமையற்ற தலைமை.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நேற்று திடீரென்று மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவர் அ.தி.மு.க. பற்றியும், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது பற்றியும் அன்று சொன்னதும்... இன்று சொல்வதும்... கட்சியினர் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

    அன்று... பா.ஜனதா அரசு சி.ஏ.ஏ. சட்டத்தை கொண்டு வந்த போது அ.தி.மு.க. ஆதரித்தாலும் அன்வர் ராஜா பாராளுமன்றத்தில் அதை எதிர்த்து பேசினார். பா.ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி. அ.தி.மு.க. பா.ஜனதாவோடு கூட்டணி வைக்க கூடாது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை வலிமையற்ற தலைமை. கட்சி வலுப்பட சின்னம்மா வரவேண்டும்.

    இன்று... குழுவோடு ஒத்துபோக தெரியாதவன் உயிரோடு இருந்தாலும் செத்தவர்களுக்கு சமம் என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார். நான் அ.தி.மு.க. காரன்தான். இடையில் ஏற்பட்ட ஒரு சிறிய சறுக்கலால் இந்த நிலை ஏற்பட்டது. இப்போது மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். கட்சியின் சட்டத்திட்டங்கள் எனக்கு தெரியும். அதற்கு உட்பட்டு பணியாற்றுவேன். பா.ஜனதாவோடு எந்த கட்சிதான் கூட்டணி வைக்கவில்லை. காங்கிரஸ் தவிர எல்லா கட்சிகளும் பா.ஜனதாவோடு கூட்டணி கட்சிகள்தான். வருகிற தேர்தலில் ராமநாதபுரத்தில் பா.ஜனதா போட்டியிட்டால் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும் வாக்கு கேட்பேன்.

    அரசியல்ன்னா இப்படித்தான்.

    • தினகரனும் இவர்களுடன் சேர்வதற்கு தயாராக இருக்கிறார்.
    • மாநில அரசாங்கம் பல தவறுகளை செய்கின்றது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அவரது இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்சியை வலுப்படுத்தி, ஆட்சியை பிடிக்க முடியும். அ.தி.மு.க மத்திய அரசையும், மாநில அரசையும் கொள்கை ரீதியாக ஒரு சேர எதிர்த்து அரசியலில் பயணித்தால் தான் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். இதைத்தான் 2014-லிருந்து 2016 வரை ஜெயலலிதா செய்தார்.

    மாநில அரசாங்கம் பல தவறுகளை செய்கின்றது. அதனை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்ல அ.தி.மு.க தவறி விட்டது. அ.தி.மு.க.வில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற தலைமை வேண்டும். அப்படி ஒரு தலைமை தற்போது இல்லை.

    எடப்பாடி பழனிசாமி ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறார். அதிலிருந்து அவர் வெளியே வர வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க.வுக்கு ஒரு பொதுவான தலைவராக அவர் இருக்க முடியும். ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்க்கு கருத்து முரண்பாடு இருக்கிறது என்று நான் சொன்னதால் தான் என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள்.

    அ.தி.மு.கவிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தற்போது உள்ள பொறுப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழல் வந்தால் கண்டிப்பாக ஓ.பி.எஸ்ஸை இணைத்துக் கொள்வார்.

    தினகரனும் இவர்களுடன் சேர்வதற்கு தயாராக இருக்கிறார். நீங்கள் ஒன்று சேருங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம் எனக் கூறுகிறார். இவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லுகின்ற ஆற்றல் சசிகலாவுக்கு மட்டும்தான் உண்டு.

    ஏனென்றால் ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகளாக உடனிருந்து பக்குவம் பெற்றவர். அவரால் தான் பொதுவான தலைவராக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதா அரசின் அடக்கு முறையை வெளிப்படுத்துகிறது என்று அன்வர்ராஜா எம்.பி. கூறினார். #ADMKMPs #Parliament #AnwarRaja #BJP
    ராமநாதபுரம்:

    மேகதாது அணை விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படாததால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. அன்வர் ராஜா உள்பட 24 எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து அன்வர் ராஜா எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மேகதாது அணை விவகாரத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பேச அனுமதி மறுப்பது ஜனநாயகத்துக்கு, அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரானதாகும். சபாநாயகரின் உத்தரவு ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்குவது போல் உள்ளது.


    இது பாரதிய ஜனதா அரசின் அடக்குமுறையை வெளிப்படுத்துகிறது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரை வரவிடாமல் செய்யும் கர்நாடகத்துக்கு மத்திய அரசு உதவுகிறது என்பதை இந்த சஸ்பெண்டு உத்தரவு காட்டுகிறது.

    தமிழகத்தின் உரிமையை காக்க நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #ADMKMPs #Parliament #AnwarRaja #BJP
    ×