search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anwar Raja"

    • அ.தி.மு.க. பா.ஜனதாவோடு கூட்டணி வைக்க கூடாது.
    • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை வலிமையற்ற தலைமை.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நேற்று திடீரென்று மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவர் அ.தி.மு.க. பற்றியும், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது பற்றியும் அன்று சொன்னதும்... இன்று சொல்வதும்... கட்சியினர் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

    அன்று... பா.ஜனதா அரசு சி.ஏ.ஏ. சட்டத்தை கொண்டு வந்த போது அ.தி.மு.க. ஆதரித்தாலும் அன்வர் ராஜா பாராளுமன்றத்தில் அதை எதிர்த்து பேசினார். பா.ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி. அ.தி.மு.க. பா.ஜனதாவோடு கூட்டணி வைக்க கூடாது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை வலிமையற்ற தலைமை. கட்சி வலுப்பட சின்னம்மா வரவேண்டும்.

    இன்று... குழுவோடு ஒத்துபோக தெரியாதவன் உயிரோடு இருந்தாலும் செத்தவர்களுக்கு சமம் என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார். நான் அ.தி.மு.க. காரன்தான். இடையில் ஏற்பட்ட ஒரு சிறிய சறுக்கலால் இந்த நிலை ஏற்பட்டது. இப்போது மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். கட்சியின் சட்டத்திட்டங்கள் எனக்கு தெரியும். அதற்கு உட்பட்டு பணியாற்றுவேன். பா.ஜனதாவோடு எந்த கட்சிதான் கூட்டணி வைக்கவில்லை. காங்கிரஸ் தவிர எல்லா கட்சிகளும் பா.ஜனதாவோடு கூட்டணி கட்சிகள்தான். வருகிற தேர்தலில் ராமநாதபுரத்தில் பா.ஜனதா போட்டியிட்டால் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும் வாக்கு கேட்பேன்.

    அரசியல்ன்னா இப்படித்தான்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்வர் ராஜா 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தார்.
    • 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார் அன்வர் ராஜா.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், விலகியவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதையடுத்து பலர் சேர்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இன்று காலையில் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார். அவரது முடிவை வரவேற்று எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    பின்னர் தலைமை கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு சென்று முறைபடி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    அன்வர்ராஜா 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தார். 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் பேட்டியளித்ததால் கடந்த 2021-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதன்பிறகு எந்த பக்க மும் போகாமல் அமைதியாக இருந்து வந்த அன்வர் ராஜா இன்று மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துள்ளார்.

    • தினகரனும் இவர்களுடன் சேர்வதற்கு தயாராக இருக்கிறார்.
    • மாநில அரசாங்கம் பல தவறுகளை செய்கின்றது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அவரது இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்சியை வலுப்படுத்தி, ஆட்சியை பிடிக்க முடியும். அ.தி.மு.க மத்திய அரசையும், மாநில அரசையும் கொள்கை ரீதியாக ஒரு சேர எதிர்த்து அரசியலில் பயணித்தால் தான் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். இதைத்தான் 2014-லிருந்து 2016 வரை ஜெயலலிதா செய்தார்.

    மாநில அரசாங்கம் பல தவறுகளை செய்கின்றது. அதனை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்ல அ.தி.மு.க தவறி விட்டது. அ.தி.மு.க.வில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற தலைமை வேண்டும். அப்படி ஒரு தலைமை தற்போது இல்லை.

    எடப்பாடி பழனிசாமி ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறார். அதிலிருந்து அவர் வெளியே வர வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க.வுக்கு ஒரு பொதுவான தலைவராக அவர் இருக்க முடியும். ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்க்கு கருத்து முரண்பாடு இருக்கிறது என்று நான் சொன்னதால் தான் என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள்.

    அ.தி.மு.கவிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தற்போது உள்ள பொறுப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழல் வந்தால் கண்டிப்பாக ஓ.பி.எஸ்ஸை இணைத்துக் கொள்வார்.

    தினகரனும் இவர்களுடன் சேர்வதற்கு தயாராக இருக்கிறார். நீங்கள் ஒன்று சேருங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம் எனக் கூறுகிறார். இவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லுகின்ற ஆற்றல் சசிகலாவுக்கு மட்டும்தான் உண்டு.

    ஏனென்றால் ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகளாக உடனிருந்து பக்குவம் பெற்றவர். அவரால் தான் பொதுவான தலைவராக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதா அரசின் அடக்கு முறையை வெளிப்படுத்துகிறது என்று அன்வர்ராஜா எம்.பி. கூறினார். #ADMKMPs #Parliament #AnwarRaja #BJP
    ராமநாதபுரம்:

    மேகதாது அணை விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படாததால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. அன்வர் ராஜா உள்பட 24 எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து அன்வர் ராஜா எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மேகதாது அணை விவகாரத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பேச அனுமதி மறுப்பது ஜனநாயகத்துக்கு, அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரானதாகும். சபாநாயகரின் உத்தரவு ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்குவது போல் உள்ளது.


    இது பாரதிய ஜனதா அரசின் அடக்குமுறையை வெளிப்படுத்துகிறது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரை வரவிடாமல் செய்யும் கர்நாடகத்துக்கு மத்திய அரசு உதவுகிறது என்பதை இந்த சஸ்பெண்டு உத்தரவு காட்டுகிறது.

    தமிழகத்தின் உரிமையை காக்க நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #ADMKMPs #Parliament #AnwarRaja #BJP
    ×