என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் வேட்பாளர் என இ.பி.எஸ். பெயரை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை - அன்வர் ராஜா
    X

    முதலமைச்சர் வேட்பாளர் என இ.பி.எஸ். பெயரை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை - அன்வர் ராஜா

    • கருத்தியல் ரீதியாக அ.தி.மு.க. தடம் புரண்டு விட்டது.
    • முதலமைச்சர் வேட்பாளர் என இ.பி.எஸ். பெயரை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்நிலையில் தி.மு.க.வில் இணைந்தது தொடர்பாக அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * மாண்புமிகு தளபதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டேன்.

    * கருத்தியல் ரீதியாக அ.தி.மு.க. தடம் புரண்டு விட்டது.

    * தனது கொள்கையில் இருந்து தடம்புரண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது அ.தி.மு.க.

    * முதலமைச்சர் வேட்பாளர் என இ.பி.எஸ். பெயரை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை.

    * அ.தி.மு.க.வை சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது.

    * 3 முறை கூட்டணி குறித்து பேட்டியளித்த அமித்ஷா முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கூறவில்லை.

    * எந்த கட்சியில் இணைந்தாலும் அக்கட்சியை சீரழிப்பது தான் பா.ஜ.க.வின் வேலை.

    * கூட்டணி ஆட்சி என அமித்ஷா பலமுறை கூறியும் முதல்வர் வேட்பாளர் நான்தான் என இ.பி.எஸ்.ஆல் கூற முடியவில்லை.

    * பலமுறை என் ஆதங்கத்தை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அதனால் அடுத்த சாய்ஸ் தி.மு.க.தான், அதனால் இணைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×