என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • ரெயில் ஓட்டுனர், இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
    • சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில், மது போதையில் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த நபர் மீது ரெயில் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நபர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சிடைந்த ரெயில் ஓட்டுனர், இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தண்டவாளத்தில் ஆய்வு செய்தபோது, நபர் ஒருவர் படுத்திருந்தது தெரிந்தது. அருகில் சென்ற பார்த்தபோது அந்த நபர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.

    பின்னர், அந்த நபரை எழுப்பி அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தபோது அவர் குடிபோதையில் இருப்பதும், தண்டவாளம் என்றுக்கூட தெரியாமல் படுத்து உறங்கியதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    இருப்பினும், அவர் மேல் ரெயில் ஒன்று கடந்து சென்றும் அந்த நபருக்கு எந்த சேதமும் ஏற்படுத்தாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த நபர் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெடுஞ்சாலையில் பால் டேங்கர் பின்னால் இருந்து லாரி மோதியது.
    • விபத்தில் உயிரிழந்த டிரைவர் பிரேம் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    "ஒருவரின் துரதிர்ஷ்டம் மற்றொருவருக்கு வாய்ப்பு" என்ற பழமொழிக்கேற்ப ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பால் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. ஏபிஇஎஸ் என்ஜினீயரிங் கல்லூரி அருகே நெடுஞ்சாலையில் பால் டேங்கர் பின்னால் இருந்து லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்

    இந்த விபத்தில் டேங்கரில் கசிவு ஏற்பட்டது. விபத்தை பார்த்த பலர் அடிபட்டவர்களை தவிக்கவிட்டு விட்டு டேங்கரில் இருந்து வெளியேறும் பாலை சேகரிக்கத் தொடங்கினர். விபத்திற்குள்ளான பால் டேங்கரை முற்றுகையிட்ட மக்கள் பாலை எடுத்துச்சென்றனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த டிரைவர் பிரேம் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார்.
    • இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று அந்த பெண் கேள்வியெழுப்பியுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் வளாகத்தின் வெளியே கணவனுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை பார்த்து ரேட் என்ன என்று தகாத முறையில் கேட்ட நபரால் அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் மற்றொரு பெண்ணுடன் வந்த நபர் ஒருவர், உனது ரேட் என்ன என்று கேட்டு , எங்க அப்பா, மாமா எல்லாமே டி.எஸ்.பி என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணின் கணவருக்கும் அந்த நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட அழுதுகொண்டே தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார். அதில், இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

    • கங்கை நீரைத் தெளிப்பது, ஓம் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது என இந்து மகாசபை அமைப்பினர் தாஜ் மஹால் கபளீகரம் செய்து வருகின்றனர்
    • மீரா ரத்தோர் தாஜ் மஹால் காவிக் கோடியை ஏற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

    மும்தாஜ் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய காதலின் சின்னம். தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

    தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகின்றன. தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் சமீப நாட்களாக, கங்கை நீரைத் தெளிப்பது, ஓம் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது என தீவிர வலதுசாரி இந்து அமைப்பான அகில பாரத இந்து மகாசபை அமைப்பினர் தாஜ் மஹாலை கபளீகரம் செய்து வருகின்றனர். கடந்த வாரம் சிவபெருமான் கனவில் வந்து கூறியதாகக் கங்கை நீரை எடுத்துவந்து பூஜை செய்ய முற்பட்ட பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இந்து மகாசபையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், ஷாஜகான்- மும்தாஜ் சமாதி அமைத்துள்ள இடத்தில் கங்கை நீரை ஊற்றும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர்கள் மத்திய தொழிற் பதுகாப்பு படையினர்களால் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், அதே இந்து மகாசபையைச் சேர்ந்த மீரா ரத்தோர் என்ற பெண், கங்கை நீரைக்கொண்டு பூஜை செய்து, தாஜ் மஹாலில் காவிக்கொடியை ஏற்றியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரும் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீரா ரத்தோர் தாஜ் மஹால் காவிக் கோடியை ஏற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்ட பின்பு ஏற்பட்டுள்ளது.
    • மகரிஷி தேவ்ரஹா பாபா மருத்துவக் கல்லூரியில் ஆகாஷ் மற்றும் நித்தேஷ் ஆகிய இரு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் உள்ள மெஹ்ரூனா கிராமத்தில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஆசிரம முறை இடைநிலைக் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 80 மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவர்கள் உணவு உண்டபின்பு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சாப்பிட்ட உணவில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நீதிபதி திவ்யா மிட்டல் செய்தியாளர்களிடம் கூறுகையில், மகரிஷி தேவ்ரஹா பாபா மருத்துவக் கல்லூரியில் ஆகாஷ் மற்றும் நித்தேஷ் ஆகிய இரு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் பள்ளியிலேயே தலைமை மருத்துவ அதிகாரி (CMO) தலைமையிலான மருத்துவர்கள் குழுவிடம் முதன்மை சிகிச்சை பெற்றனர்.

    அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக மருத்துவக் குழு பள்ளியில் உள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    இதையடுத்து மாவட்ட மாஜிஸ்திரேட் மிட்டல் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சங்கல்ப் சர்மா ஆகியோர் மருத்துவக் கல்லூரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்டனர்.

    உணவு பாதுகாப்பு உதவி ஆணையர் வினய் குமார் சஹய் கூறுகையில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தின் குழு கல்லூரிகளுக்கு இடையேயான சமையலறை, ஸ்டோரேஜ் ரூமில் ஆய்வு செய்தது. அங்கு தயார் செய்த ரொட்டி மற்றும் அங்கிருந்த பருப்பு, காய்கறிகள், மிளகாய்த்தூள், கடலைப்பருப்பு, கடுகு எண்ணெய், ஊறுகாய் உள்ளிட்டவைகளில் ஏழு மாதிரிகளை சேகரித்தனர்.

    மாதிரிகள் சோதனைக்காக உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    • அமித்-ஐ காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • காரில் வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    உத்தர பிரதேச மாநிலம் புலான்ஷர் பகுதியை சேர்ந்தவர் அமித். கடந்த 21 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, வீடு திரும்பிக் கொண்டிருந்த அமித்-ஐ காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு, அவர் வந்த காரில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்று கூறி அமித்-ஐ காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அமித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், சம்பவத்தன்று அமித் வந்த காரை போலீசார் நிறுத்துவது, அதன்பிறகு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்து காரில் வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    சிகர்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து வாலிபர் மீது பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் அவுட்போஸ்ட் இன்சார்ஜ், சிகர்பூர் காவல் நிலைய இன்சார்ஜ் மற்றும் இரு கான்ஸ்டபில்கள் என மொத்தம் நான்கு போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் மிஷ்ரா தெரிவித்தார். 

    • சமஜ்வாதி கட்சியின் தலைவர் மொயித் கான் கைது.
    • இந்த விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இச்சம்பவம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் மொயீத் கான் மற்றும் அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பேக்கரியில் வைத்து 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொயீத் கானும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

     


    சமீபத்தில் நடந்த மருத்துவ பரிசோதனை சிறுமி கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகள் சமஜ்வாதி கட்சியின் தலைவரான மொயித் கானை ஜூலை 30 ஆம் தேதி கைது செய்தனர்.

    சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்தார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "தவறுகள் நடக்கும் போது, நீதியை பெறுவதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்களிடனம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் யார் தவறு செய்தார்கள் என்று கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து இந்த விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது."

    "யார் தவறு செய்தாலும், அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும். டிஎன்ஏ பரிசோதனையில் முடிவுகள் தலைகீழாக மாறினால், தவறு செய்த அரசு அதிகாரிகள் யாரும் தப்பிக்கக்கூடாது. இதுவே நீதிக்கான கோரிக்கை," என்று தெரிவித்தார்.

    அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அமித் மால்வியா, "குற்றம்சாட்டப்பட்டவர் முஸ்லீம் என்பதாலும், பாதிக்கப்பட்ட சிறுமி நிஷாத் இனத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவர்களை காப்பாற்ற இப்படி துடிக்கின்றனர்." 

    "சமாஜ்வாடி கட்சி எப்போதும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சுரண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்தமுறை அநீதி எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளப்படாது. நிச்சயம் தண்டனை வழங்கப்படும்," என்று தெரிவித்தார்.

     


    அகிலேஷ் யாதவ் கருத்துக்கு பதிலளித்த பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதி, "அயோத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உத்தர பிரதேச அரசு மிக பொருத்தமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்ற சமாஜ்வாடி கட்சி கோரிக்கைக்கு நாம் என்ன செய்வது?"

    "அகிலேஷ் யாதவ் கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, எத்தனை முறை இதுபோன்ற டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பதை சமாஜ்வாடி கட்சி தெளிவுப்படுத்த வேண்டும்," என்று தெரிவித்தார்.

    தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை சேர்ந்த பிரியண்க் கனோங்கோவும் அகிலேஷ் யாதவ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பான பதிவில் அவர், "மைனர் சிறுமி கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள், குற்றச்சாட்டு உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மீது கூறப்படுகிறது. ஆனால், நீங்கள் அவற்றை பாதுகாக்கின்றீர்கள். இந்த டிஎன்ஏ தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு "ஆண்கள் தவறு செய்வார்கள்," என்று கூறியது," என குறிப்பிட்டுள்ளார்.

    • ஏன் நீங்கள் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றீர்கள் என்று கேட்ட போலீசார் எப்.ஐ.ஆர் பதிய மறுத்துள்ளனர்.
    • இதனால் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வீடியோவில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், இரவு 7:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றதாலதான் துன்புறுத்தலுக்கு ஆளாகியுளீர்கள் எனக் கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டார் 48 பகுதியில் இளம்பெண் ஒருவர் இரவு 7.30 மணியளவில் மழையை வீடியோ எடுக்க வீட்டின் வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர், தன்னை தகாத முறையில் தொட்டு, தான் அணிந்திருந்த ஷார்ட்ஸை கிழித்ததாக போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார். அவரிடம், ஏன் நீங்கள் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றீர்கள் என்று கேட்ட போலீசார் எப்.ஐ.ஆர் பதிய மறுத்துள்ளனர்.

    இதனால் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வீடியோவில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
    • சமீபத்தில் நடந்த மருத்துவ பரிசோதனை சிறுமி கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இச்சம்பவம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் மொயீத் கான் மற்றும் அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பேக்கரியில் வைத்து 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொயீத் கானும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    சமீபத்தில் நடந்த மருத்துவ பரிசோதனை சிறுமி கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரி சமஜ்வாதி கட்சியின் தலைவரான மொயித் கானை ஜூலை 30 ஆம் தேதி கைது செய்தனர்.

    முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவியும் செய்வதாக கூறினர்.

    இந்த நிலையில், பணத்தை வாங்கிக் கொண்டு இந்த வழக்கை முடித்துக் கொள்ள தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து உள்ளூர் தலைவரான ரஷித் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது ரஷித் பத்ரஸா நகர் பஞ்சாயத்திற்கான சமாஜ்வாதி கட்சி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர், சிறுமியின் தாயார் வழக்கில் சமரசம் எட்ட தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார்.

    • பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
    • உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களின் கட்சி ஏற்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள் ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் இந்த ஒருமித்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். தமிழக முதலவர் ஸ்டாலின்  உள்ளிட்ட  பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் அருந்ததியினருக்கு வழங்கப்பட 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என்றும் இந்த தீர்ப்பின்மூலம் உறுதியாகியுள்ளது.

    இந்நிலையில் பட்டியலினத்தவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்களது அரசியல் கொள்கையாக முன்னிறுத்தும் பகுஜன் சமாஜ் கட்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரித்துள்ளது.

    இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, ஒட்டுமொத்தமாக ஒரு குளுவாகவே பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர். தற்போது அவர்களுக்கிடையில் உட்பிரிவுகளை ஏற்படுத்துவது சரியானதல்ல. சட்டரீதியாகவே இடஒதுக்கீட்டை ஒழிக்க அரசு முயல்கிறது. அதில் தற்போது பாதி வெற்றியும் கண்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களின் கட்சி ஏற்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

    • சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இருவரும் தண்ணீர் பாட்டில்களில் கங்கை நீரை எடுத்து வந்தனர்
    • கங்கை நீரை ஊற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது.

    தனது மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

    தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

    தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் அகில பாரத இந்து மகாசபையை [ABHM] சேர்ந்த சேர்ந்த சியாம்பாபு சிங், வினேஷ் சவுத்ரி என்ற இரு இளைஞர்கள் தாஜ் மாலின் உள்ளே  மும்தாஜ் -ஷாஜகானின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட  கல்லறைப் பகுதியில் கங்கை நீரை ஊற்றியுள்ளனர். மேலும் அங்குள்ள சுவர்களில் ஓம் ஸ்டிக்கர்களையும் ஒட்டியுள்ளனர்.

    சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இருவரும் தண்ணீர் பாட்டில்களில் கங்கை நீரை எடுத்து வந்து, கல்லறை அமைந்துள்ள தரைதளத்தின் கதவைப் பூட்டிவிட்டு கங்கை நீரை அங்கு ஊற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது. இதனையடுத்து இருவரையும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • பஸ்சில் 60 பேர் பயணம் செய்தனர்.
    • விபத்தில் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் இன்று அதிகாலை ரேபரேலியில் இருந்து டெல்லியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 60 பேர் பயணம் செய்தனர். அப்போது லக்னோவில் இருந்து ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தவறான பாதையில் வந்தது.

    இதில் கார் மீது பஸ் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பேரும், காரில் பயணம் செய்த 3 பேரும் பலியானார்கள். 25 பேர் காயம் அடைந்தனர்.

    ×