என் மலர்
உத்தரப் பிரதேசம்
- பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
- இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
இந்தநிலையில், மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 53 சமூக ஊடக கணக்குகளை முடக்கி போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். கும்பமேளாவில் கூட்ட நெரிசல், தீ விபத்து என பழைய வீடியோக்களை வெளியிட்டு தவறான தகவலை பரப்பி பதற்றம் ஏற்படுத்திய பல சமூக ஊடக கணக்குகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- கும்பமேளாவிற்கு 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்துள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.
- ஜான்பூரை சேர்ந்தவர் சிந்தா.
- இவருக்கு 3 திருமணங்கள் நடந்துள்ளதாம்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவர் 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார். ஜான்பூரை சேர்ந்தவர் சிந்தா. பேய்களால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்த இவர் பெண் வேடமிட்டு வாழ்ந்தால், ஆவிகளிடம் இருந்து தப்பிக்கலாம் என கருதி உள்ளார்.
அதன்படி சேலை கட்டி கடந்த 36 வருடங்களாக பெண் வேடத்திலேயே வாழ்ந்து வருகிறாராம். இவருக்கு 3 திருமணங்கள் நடந்ததாகவும், அதில் 2-வது மனைவியின் மரணத்திற்கு பிறகு ஒரு ஆவி தன்னை தொந்தரவு செய்வதாகவும், அந்த ஆன்மா தன்னை ஒரு பெண் போல வாழ கட்டாயப்படுத்தியதால் அவ்வாறு வாழ்வதாகவும் கூறி வருகிறார்.
அதோடு தனக்கு 9 மகன்கள் பிறந்ததாகவும், அதில் 7 பேர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி வைரலான நிலையில் சிலர், அவருக்கு மனநலம் தொடர்பான பிரச்சினை இருப்பதாக கூறுகின்றனர்.
சிலர், இது மூடநம்பிக்கை, இந்த நபருக்கு சரியான சிகிச்சை தேவை என தெரிவித்தனர்.
- 'பெஹெச்சான்' நடவடிக்கையின் கீழ் 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 10 நாட்களுக்கு முன்பு கிஷன்கஞ்ச் வழியாக வந்து நொய்டா வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 8 வங்கதேச புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டிசிபி ராம் பதன் சிங் கூறுகையில், 'பெஹெச்சான்' நடவடிக்கையின் கீழ் 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலி ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 நாட்களுக்கு முன்பு கிஷன்கஞ்ச் வழியாக நொய்டா வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அடையாள அட்டைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
- காதலை இரு வீட்டாரும் ஏற்காததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி.
- காதலி உயிரிழந்த நிலையில், ரஜத் குமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷிப் பண்ட். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி டெல்லியில் இருந்து டேராடூனுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளாகி எரியத் தொடங்கியது.
அதிகாலை நேரத்தில் கார் எரிந்து கொண்டிருப்பதை கண்ட ரஜத் குமார் மற்றும் அவரது நண்பர் நிஷு உடனடியாக காரில் சிக்கிக் கொண்டிருந்த நபரை மீட்டனர். அப்போதுதான் அது ரிஷிப் பண்ட் என அவர்களுக்கு தெரியவந்தது.
படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிய ரிஷப் பண்ட்-ஐ உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவினர். துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து மீட்டதால் ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஜத் குமார் மற்றும் அவரது நண்பர் நிஷு ஆகியோருக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான் ரஜத்தின் காதல் விவகாரத்தில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. 25 வயதான ரஜத் 21 வயதான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வெறு பிரிவினர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்னதாக இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் ரஜத் காதலியை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்த்த நிலையில், காதலியின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல குறியாக இருந்தனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காதலி உயிரிழந்த நிலையில் ரஜத்தை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். ரஜத்தை ரிஷப் பண்ட் இன்னும் ஒரிரு நாட்களில் நேரில் சென்ற பார்க்க வாய்ப்புள்ளதாக, ரிஷப் பண்டின் தனிப்பட்ட உதவியாளரை மேற்கோள் காட்டி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நட்சத்திர கிரிக்கெட் வீரரை காப்பாற்றி அந்த பகுதியில் ஹீரோவாக வலம் வந்த ரஜத்தின் காதல் வெற்றி பெறாத நிலையில் காதலி உயிரிழந்ததை சம்பவம் அப்பகுதி மக்களுக்கு வேதளையளித்துள்ளது.
- ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு.
- இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது.
லக்னோ:
ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.
இந்த நடை பயணத்தின் போது 2022-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி நிருபர்களை சந்தித்த ராகுல் காந்தி, எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது, அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்துகிறது என்பது உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்துக்கு அப்போதே ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குனர் சங்கர் ஸ்ரீவத்சவா இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். அதில், ராகுல் காந்தியின் விமர்சனம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த லக்னோ கோர்ட்டு மார்ச் 24-ந் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
- மூளை பக்கவாதம் காரணமாக ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- அவரது உடல் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் தகனம் செய்யப்படும்.
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் காலமானார். அவருக்கு வயது (85).
லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையின்போது தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் உயிரிழந்ததை அவரது சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
மூளை பக்கவாதம் காரணமாக ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் அவர் இன்று காலமானார். அவரது உடல் நாளை அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் தகனம் செய்யப்படும். தற்போது அவரது உடல் லக்னோவிலிருந்து புனித நகரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்று கூறினார்.
ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மறைவுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மறைவு ஆன்மிக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.
- திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் (ம) அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது.
- அனைவரின் நிலையும் நார்மலாக உள்ளதாக என்று தாகுர்த்வாரா தொகுதியின் முன்னாள் தலைவர் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் மொராபாத்தில் தாகுர்த்வாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரித்நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் (ம) அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது. உணவுடன் கேரட் அல்வாவும் பரிமாறப்பட்டது.
இரவு உணவு சாப்பிட்ட பிறகு, சில விருந்தினர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விருந்தில் சுமார் 400 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 150 பேருக்கு வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரின் நிலையும் நார்மலாக உள்ளதாக என்று தாகுர்த்வாரா தொகுதியின் முன்னாள் தலைவர் கூறினார்.
இனிப்பு உணவை தயாரிக்கும்போது சேர்க்கப்பட்ட கோவா (மாவா) என்ற மூலப்பொருளில் கலப்படம் செய்யப்பட்டதால் அதனை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
- அந்த தம்பதியினர் மீது லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி 24 மணிநேரம் காவலில் வைத்துள்ளனர்.
- நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் 28 வயது விவசாயியை வீடு புகுந்து தாக்கி, அவரது 25 வயது மனைவியை 5 பேர் கொண்ட கும்பல் ஆடைகளை அவிழ்த்து அத்துமீறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிலிபிட் பகுதியில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி இரவு விவசாயியின் வீட்டிற்குள் அக்கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தத் துவங்கியது. அவரது மனைவி தனது கணவரைக் காப்பாற்ற முயன்றபோது, அந்த நபர்கள் அவரது ஆடைகளை கழற்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின் அந்த தம்பதி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றனர். ஆனால் புகாரை ஏற்க மறுத்த அதிகாரிகள், அந்த தம்பதியினர் மீது லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி 24 மணிநேரம் காவலில் வைத்துள்ளனர்.
அவர்களின் உடல்களில் மோசமான காயங்கள் இருந்தபோதிலும் எந்தவிதமான மருத்துவ உதவிகளும் வழங்கப்படாவில்லை. இந்நிலையில் கூடுதல் நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட குற்றப்பின்னணி இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. முன் பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது. புகாரை ஏற்காத அதிகாரிகள் குறித்தும் தம்பதியினரின் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
- மவுனி அமாவாசை தினத்தன்று 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
- மகர் சங்கிராந்தி நாளில் 3.35 கோடி பக்தர்களும், பசந்த் பஞ்சமி நாளில் 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடியுள்ளனர்.
மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ந்தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது.
மகா கும்பமேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மகா கும்பமேளா தொடங்கியபோது சுமார் 40 கோடி மக்கள் புனித நீராட பிரயாக்ராஜ் வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கும்பமேளா முடிவடைய இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை 45 கோடி பக்தர்களுக்கு மேல் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மகர் சங்கிராந்தி, மவுனி அமாவாசை, பசந்த் பஞ்சமி நாட்களில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர் வருகை தந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமையான இன்று காலை 10 மணி வரை 74.96 லட்சம் மக்கள் புனித நீராடியுள்ளனர். மவுனி அமாவாசை தினத்தன்று 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகர் சங்கிராந்தி நாளில் 3.35 கோடி பக்தர்களும், பசந்த் பஞ்சமி நாளில் 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடியுள்ளனர்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் புனித நீராடியுள்ளனர். வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமானோர் பிரயாக்ராஜியில் புனித நீராடியுள்ளனர்.
அதேபோல் பாலிவுட் பிரபலங்கள் பலரும் புனித நீராடியுள்ளனர்.
மவுனி அமாவாசை முன்னிட்டு கடந்த மாதம் 29-ந்தேதி அதிகாலையில் ஏராளமான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். 60 பேர் காயம் அடைந்தனர். ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம். இதை உத்தர பிரதேச அரசு மறைக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
- குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் மணிக்கணக்கில் பசியையும் தாகத்தையும் எதிர்கொள்கின்றனர்.
- அனைவரையும் திருப்ப செல்லும்படி அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மகா கும்பமேளா
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெறும்.
உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவுக்கு ரெயில் மற்றும் சாலை மார்கமாக பலவேறு இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு வரும் வழியில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.
இதை உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாம் என பலரும் குறிப்பிடுகின்றனர். 48 மணி நேரமாக வாகனங்கள் காத்துக்கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. சனி, ஞாயிறுகளில் அதிகப்படியான மக்கள் மகா கும்பமேளாவை நோக்கிப் படையெடுக்கின்றனர்.
டிராபிக் ஜாம்
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ஒட்டி லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்தனர்.
இதனால் உத்தரப் பிரதேச எல்லை வரை சுமார் 200 முதல் 300 கிலோமீட்டருக்கு வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் யாரும் பிரயாக்ராஜுக்குள் சாலை மார்க்கமாக வர வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
பிரயாக்ராஜை இணைக்கும் வாரணாசி, ஜான்பூர், மிர்சாபூர், கௌசாம்பி, பிரதாப்கர், ரேவா மற்றும் கான்பூர் ஆகிய அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் வாகனங்களின் நீண்ட வரிசை மட்டுமே தென்படுகிறது.

மக்கள் அவதி
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் மணிக்கணக்கில் பசியையும் தாகத்தையும் எதிர்கொள்கின்றனர். நகரத்திற்கு வெளியே உள்ள நெடுஞ்சாலையில் தனித்தனி வாகன நிறுத்துமிடங்களை நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
இருப்பினும், பெரும்பாலான பார்க்கிங் இடங்கள் நிரம்பியதால், வாகனங்கள் சாலைகளில் சிக்கித் தவிக்கின்றன. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சிவில் மற்றும் போக்குவரத்து போலீசாரைத் தவிர, துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் அறிவுரை
மத்தியப் பிரதேசத்தின் கட்னி, ஜபல்பூர், மைஹார் மற்றும் ரேவா மாவட்டங்களில் சாலைகளில் பல ஆயிரம் கார்கள் மற்றும் டிரக்குகள் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரேவா மாவட்டத்தில் உள்ள சக்காட்டில் கட்னி பகுதியில் இருந்து மத்தியப் பிரதேச- உத்தரப் பிரதேச எல்லை வரை 250 கிமீ தூரத்திற்கு மோசனமான டிராபிக் நிலவுகிறது.
சூழலை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர். அனைவரையும் திருப்ப செல்லும்படி அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் பிரயாக்ராஜ் வந்து மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
போக்குவரத்து நெரிசல் குறித்து ஆளும் பாஜக அரசை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"நெரிசலில் சிக்கிக் கொண்ட மக்கள் மணிக்கணக்கில் தங்கள் வாகனங்களிலேயே அடைந்து கிடக்க நேர்கிறது. பெண்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட இடமில்லை. சாலைகளில் மயங்கி விழுபவர்களைக் கவனித்துக் கொள்ள எந்த ஏற்பாடும் இல்லை. பக்தர்களின் மொபைல் போன்களில் பேட்டரி தீர்ந்து போனதால், அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தொடர்பு மற்றும் தகவல் இல்லாததால், மக்களிடையே பதட்டம் அதிகரித்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த எந்தப் பொறுப்பான அமைச்சரோ அல்லது அதிகாரியோ இருப்பதாகத் தெரியவில்லை. முதலமைச்சர் முழுமையான தோல்வியடைந்துவிட்டார். துணை முதலமைச்சர் மற்றும் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல முக்கிய அமைச்சர்களும் காணவில்லை.
பொதுமக்களிடையே இருந்திருக்க வேண்டியவர்கள் வீட்டிலேயே அமர்ந்திருக்கிறார்கள். இரவும் பகலும் பசியும் தாகமும் தாங்காமல் களத்தில் நிற்கும் காவலர்களுக்கும், ஊழியர்களுக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் உணவு மற்றும் தண்ணீருக்கு எந்த ஏற்பாடும் இல்லை என்று தெரிகிறது. அதிகாரிகள் அறைகளில் அமர்ந்து உத்தரவுகளை வழங்குகிறார்கள், ஆனால் களத்தில் இறங்குவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
- இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
- சுமார் 20 ஆண்களும் பெண்களும் என்ஜின் பெட்டியை ஆக்கிரமித்திருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. எனவே பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரெயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு கிளம்பிய பக்தர்கள், ரெயில் பெட்டிகளில் இடம் கிடைக்காமல் ரெயில் என்ஜின் பெட்டிக்குள் பக்தர்கள் ஏறி அமர்ந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கான்ட் ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 8) அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாரணாசியில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் ரெயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தபோது, இருக்கைகள் கிடைக்காத சில பயணிகள் ரயில் என்ஜினுக்குள் நுழைந்து கதவை உள்ளே இருந்து மூடினர். சுமார் 20 ஆண்களும் பெண்களும் என்ஜின் பெட்டியை ஆக்கிரமித்திருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முக்கியமான செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் இருப்பதால், என்ஜின் பெட்டியில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என்று அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கினர்.
முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.






