என் மலர்
தெலுங்கானா
- பேருந்தை ஓட்டி வந்த மற்றொரு ஓட்டுநரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
- பேருந்தில் மற்ற பயணிகள் உள்ளபோதே ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்தின் ஓட்டுனரால் 26 வயது பெண் பயணி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவில் பேருந்து ஹைதராபாத் நகரில் இருந்தபோது நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு போன் செய்து கூறியுள்ளார்.
இதனையடுத்து, போலீசார் அந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுனரை கைது செய்ய முயன்றனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய போலீசார், "தப்பியோடிய ஓட்டுநர் ஓடும் பேருந்தில் அந்த பெண்ணின் வாயில் போர்வையை வைத்து அடைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது பயணிகள் பலரும் அந்த பேருந்தில் இருந்துள்ளனர். பேருந்தை ஓட்டி வந்த மற்றொரு ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 80க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
- ஜார்க்கண்டில் ரெயில்கள் மோதியதில் 2 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
ஐதராபாத்:
கேரள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 80க்கு மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இதேபோல், ஜார்க்கண்டில் ரெயில்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு மற்றும் ஜார்க்கண்ட் ரெயில் விபத்து தொடர்பாக ஐதராபாத் எம்பியான அசாதுதின் ஒவைசி கூறியதாவது:
வயநாட்டில் நிலச்சரிவு சம்பவம் இயற்கையானது. இதற்கு இயற்கையான காரணம் உண்டு.

ஆனால் அடிக்கடி ஏற்படும் ரெயில் விபத்துகளை சாதாரணம் என சொல்லமுடியாது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கமுடியாத அரசு இந்த வழக்கில் தவறு செய்துள்ளது. இந்த விபத்துகளால் உயிரிழப்பு மட்டுமின்றி, ரெயில்வே உடைமைகளும் சேதம் அடைகின்றன.
இது பா.ஜ.க.வுக்கு அரசியல் ரீதியாகவும் பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது குறித்து கூறுகையில், இது எங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம். இந்தப் பதக்கத்தைப் பெற அவர்கள் கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என பாராட்டு தெரிவித்துள்ளார்.
- ஜெயக்குமார் அரிவாளால் சேகரை வெட்டினார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா:
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு அசோக், சேகர் என இரு மகன்கள் உள்ளனர்.
விஜயகுமார், பத்மா இருவருக்கும் மது பழக்கம் இருந்தது. அப்போது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மூத்த மகன் அசோக் அவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், பத்மா இருவரும் மூத்த மகன் அசோக்கை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது, வீட்டில் 2-வது மகன் சேகர் போர்வையை மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தார். மூத்த மகன் என நினைத்து 2-வது மகன் சேகரை விஜயகுமார், பத்மா இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
பத்மா அவரது கால்களை பிடித்து கொண்டார். ஜெயக்குமார் அரிவாளால் சேகரை வெட்டினார். அவர் கத்தி கூச்சலிட்டார். அப்போதுதான் அவர்களுக்கு வெட்டு பட்டது சேகர் என்பது தெரியவந்தது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் சேகரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜயகுமார் அவரது மனைவி பத்மா இருவரையும் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 10 மாணவர்களுக்கு தாறுமாறாக முடியை வெட்டினார்.
- பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம், கல்லூர் அடுத்த பெரம வஞ்சாவில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சிரிஷா என்பவர் ஆங்கில ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வெட்டிக்கொண்டு வர வேண்டும் என மாணவர்களிடம் பலமுறை வலியுறுத்தினார்.
ஆனாலும் மாணவர்கள் ஆசிரியை கூறும் அறிவுரையை ஏற்காமல் புள்ளிங்கோ கட்டிங் நீண்ட தலைமுடியுடன் பள்ளிக்கு வந்தனர். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சிரிஷா கத்திரிக்கோலை எடுத்து வந்து 10 மாணவர்களுக்கு தாறுமாறாக முடியை வெட்டினார்.
உணவு இடைவேளையில் வீட்டிற்குச் சென்ற மாணவர்களின் தலையைக் கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த சம்பவம் குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மாணவர்களுக்கு தலைமுடி வெட்டிய ஆசிரியை சிரிஷாவை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
- இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார்.
ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பள்ளி வகுப்பறையின் மேற்கூறையில் நீர்க்கசிவு.
- கல்வி அதிகாரி உள்பட 2 பேர் சஸ்பெண்டு.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நென்னல் மண்டலத்தில் உள்ள குஷ்னேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறையின் மேற்கூறையில் நீர்க்கசிவு ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக பள்ளி வகுப்பறையில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்யும் போது பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் குடை பிடித்து அமர்ந்தபடி பாடம் கவனிக்கும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வெளியானது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாவட்ட கலெக்டர் குமார் தீபக் மற்றும் கல்வி அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர்.
அப்போது பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மேற்கூறையில் கசிவு இருப்பதை கண்டனர். மேலும் அந்த பள்ளியில் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைகள் இருந்தாலும் கூரையில் கசிவு உள்ள வகுப்பறையில் மாணவர்களை வேண்டுமென்றே அமர வைத்து குடைபிடித்து வீடியோ எடுத்ததாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக நென்னல் மண்டல கல்வி அலுவலர் மற்றும் பள்ளி உதவியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
- பிரசவத்திற்காக பத்ராச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- அழகான ஆண் குழந்தை பிறந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், தும்முகுடேம் மண்டலம், டபிள்யூ ரெகுபள்ளியை சேர்ந்தவர் ஸ்வப்னா. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்திற்காக பத்ராச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நேற்று ஸ்வப்னாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது. பிரசவம் பார்ப்பதற்கு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் இல்லை. இதனால் அவர் பிரசவ வலியால் கதறி துடித்தார்.
இதனைக் கண்ட அவரது உறவினர்கள் இதுகுறித்து தெள்ளம் எம்.எல்.ஏ. டாக்டர் வெங்கட்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த எம்.எல்.ஏ. வெங்கட்ராவ் ஸ்வப்னாவை பரிசோதித்தார். அப்போது ஸ்வப்னாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே பிரசவம் பார்க்க முடியும் என்பதை அறிந்து அவரது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்வப்னாவை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்து எம்.எல்.ஏ. குழந்தையை வெளியே எடுத்தார்.
ஸ்வப்னாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்த எம்.எல்.ஏ வெங்கட்ராவுக்கு ஸ்வப்னாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர்.
- இந்த டெக்னிக்கை பயன்படுத்தி மேலும் சில சிறுவர்கள் இந்த முறையில் திருடியுள்ளனர்.
- ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் ATM இயந்திரத்தில் வித்தியாசமான முறையில் கொள்ளையடித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்காமல் பிளாஸ்டிக் மற்றும் பெவிகால் பயன்படுத்தி கொள்ளையடித்த சம்பவம் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுபம் என்ற சிறுவன் தனது காதலிக்கு செலவு செய்வதற்காக ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்களை பெவிகால் கொண்டு சுபமும் அவனது நண்பனும் ஒட்டியுள்ளனர்.
இதனால் ஏ.டி.எம். இல் பணம் வெளியே வராமல் இடையில் சிக்கி கொள்ளும். இதனால் வாடிக்கையாளர்கள் பணம் இல்லை என்று நினைத்து வெளியே சென்று விடுகின்றனர். பின்னர் உள்ளே வரும் சிறுவர்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்பை வெளியே எடுத்து ஏ.டி.எம். இல் சிக்கி கொண்ட பணத்தை வெளியே எடுக்கின்றனர்.
இந்த சிறுவர்களின் டெக்னிக்கை பயன்படுத்தி மேலும் சில சிறுவர்கள் இந்த முறையில் திருடியுள்ளனர்.
தொடர்ந்து வங்கிக்கணக்கில் இருந்து தங்களது பணம் திருடப்படுவதை அடுத்த வாடிக்கையாளர்கள் வங்கிகளில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுவர்கள் ஏ.டி.எம். இல் திருடுவது பதிவாகியுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபம் மற்றும் அவரது காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.
- இரண்டு பெண்களும் வேலை முடிந்து கடையை விட்டு செல்லும்போது அவர்களை தடுத்துள்ளனர்
- காரில் ஹிஜாபூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் டைல்ஸ் கடை உரிமையாளர்கள் இருவர் தங்களது கடையில் துப்புரவு வேலை பார்த்து வந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பேட்டில் உள்ள டைல்ஸ் கடையில் துப்புரவு வேலை பார்த்து வந்த இரண்டு பெண்களும் நேற்று முன் தினம் வேலை முடிந்து கடையை விட்டு வெளியேறும்போதுஅவர்களை அழைத்து வலுக்கட்டாயமாக மது ஊற்றி காரில் ஹிஜாபூர் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு காருக்குள் வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் போலீசில் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிந்த போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
- முசாபர்நகர் காவல்துறையின் இந்த உத்தரவு தீண்டாமையை ஊக்குவிப்பதாகும்.
- நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டும் பாடுபடுகிறீர்களா?
உத்தர பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என முசாபர்நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐதராபாத் தொகுதி எம்.பி.யான அசாதுதீன் ஒவைசி "முசாபர்நகர் காவல்துறையின் இந்த உத்தரவு தீண்டாமையை ஊக்குவிப்பதாகும். உத்தர பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் ஹிட்லரின் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அரசிலமைப்பின் 17 பிரிவின் தீண்டாமை தடையை மீறுவதாக அமையும். இந்த உத்தரவுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். பெயர் மற்றும் மதத்தை காண்பிக்க சொல்லும் இந்த உத்தரவு சட்டப்பிரிவு 21 (வாழ்வதற்கான உரிமை), சட்டப்பிரிவு 19 (வாழ்வாதார உரிமை) ஆகியவற்றை மீறுவதாகும். இதனால் ஏராளமான முஸ்லிம் பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் மெக்டொனால்டு, கேஎஃப்சி, பிசா ஹட் உள்ளன. அவற்றிற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவர்களுடன் நீங்கள் (அரசு) ஏதாவது ஏற்பாடு செய்துள்ளீர்களா?. இந்த உத்தரவு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹிட்லின் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார் என்பதை தெளிவாக காட்டுகிறது.
"நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டும் பாடுபடுகிறீர்களா? அரசியலமைப்பின் பொருத்தம் எங்கே? அரசியலமைப்புச் சட்டத்தை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டீர்களா? நரேந்திர மோடி அரசியலமைப்பை எடுத்து முத்தமிடுவதைப் பார்க்கிறோம், இது எல்லாம் கேலிக்கூத்து மற்றும் நாடகம்" என்றார்.
- மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு ஜனவரி 2024ல் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
- இரண்டரை மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் வால் அகற்றப்பட்டது.
தெலுங்கானாவில் உள்ள எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள மருத்துவர்கள், மூன்று மாத கைக்குழந்தையின் வாலை அகற்றும் அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், குழந்தையின் லும்போசாக்ரல் பகுதியில் அமைந்துள்ள 15 செ.மீ வால் அகற்றப்பட்டது.
எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள குழந்தைகள் துறையின் தலைவர் டாக்டர் ஷஷாங்க் பாண்டா தலைமையிலான இந்த அறுவை சிகிச்சை, உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான 40 அறுவை சிகிச்சையில் இதுவும் ஒன்றாகும்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆண் குழந்தை, 15 சென்டிமீட்டர் நீளமுள்ள மனித வால் லும்போசாக்ரல் பகுதியில் இருந்து வெளியேறி பிறந்தது.
மனித வால்கள் ஒரு அரிய பிறவி குறைபாடு ஆகும். இதைத்தவிர, குழந்தைக்கு S1 முதல் S5 முதுகெலும்புகள் மற்றும் முதுகெலும்பு நோய்க்குறி ஆகியவற்றுடன் தொடர்புடைய முதுகெலும்பு டிஸ்ராபிசம் இருந்தது. இது அறுவை சிகிச்சையின் சிக்கலை மேலும் அதிகரித்தது.
இருப்பினும், எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கடந்த ஜனவரி 2024ல் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. இரண்டரை மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் வாலை அகற்றி, குழந்தையின் முதுகெலும்பு சரிசெய்யப்பட்டது.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, குழந்தை நரம்பியல் குறைபாடுகள் இல்லாமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு காயம் ஆறியதோடு, சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்தவர்கள் அறிவித்துள்ளனர்.
- ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
- இதற்கான 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது- தெலுங்கானா முதல்வர்.
ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகள் பயிர்க்கடன்கள் நாளை தள்ளுபடி செய்யப்படும் என தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். காங்கிரஸ் அரசின் வாக்குறுதிப்படி தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள், எம்எல்சி-க்கள், எம்.பி.க்கள் மற்றும் மற்ற அதிகாரிகள் இடையிலான ஆலோசனைக் கூட்டத்தின்போது மாநில அரசின் இரண்டு லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வாக்குறுதியின் ஒரு பகுதியாக நாளை முதல் படிப்படியாக விவசாயிகளின் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட இருக்கிறது. ஜூலை மாதம் இறுதியில் ஒன்றரை லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆகஸ்ட் மாதத்துடன் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு விவசாயியையும் கடன் சுமையிலிருந்து விடுவிப்பதே காங்கிரஸ் அரசின் நோக்கம். கடந்த சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் அரசு செய்ததைப் போல, கடன் தள்ளுபடி என்ற பெயரில், தனது அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றவில்லை என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
2 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி ஒரே தவணையில் விவசாயிகள் கணக்கில் செலுத்தப்படும். மொத்தமாக 31 ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக தெலுங்கானா அரசு ஒதுக்கியுள்ளது.
2022 தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றுவது அரசின் கடமை எனவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.






