என் மலர்
நீங்கள் தேடியது "எய்ம்ஸ் மருத்துவர்கள்"
- மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு ஜனவரி 2024ல் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
- இரண்டரை மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் வால் அகற்றப்பட்டது.
தெலுங்கானாவில் உள்ள எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள மருத்துவர்கள், மூன்று மாத கைக்குழந்தையின் வாலை அகற்றும் அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், குழந்தையின் லும்போசாக்ரல் பகுதியில் அமைந்துள்ள 15 செ.மீ வால் அகற்றப்பட்டது.
எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள குழந்தைகள் துறையின் தலைவர் டாக்டர் ஷஷாங்க் பாண்டா தலைமையிலான இந்த அறுவை சிகிச்சை, உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான 40 அறுவை சிகிச்சையில் இதுவும் ஒன்றாகும்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆண் குழந்தை, 15 சென்டிமீட்டர் நீளமுள்ள மனித வால் லும்போசாக்ரல் பகுதியில் இருந்து வெளியேறி பிறந்தது.
மனித வால்கள் ஒரு அரிய பிறவி குறைபாடு ஆகும். இதைத்தவிர, குழந்தைக்கு S1 முதல் S5 முதுகெலும்புகள் மற்றும் முதுகெலும்பு நோய்க்குறி ஆகியவற்றுடன் தொடர்புடைய முதுகெலும்பு டிஸ்ராபிசம் இருந்தது. இது அறுவை சிகிச்சையின் சிக்கலை மேலும் அதிகரித்தது.
இருப்பினும், எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கடந்த ஜனவரி 2024ல் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. இரண்டரை மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் வாலை அகற்றி, குழந்தையின் முதுகெலும்பு சரிசெய்யப்பட்டது.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, குழந்தை நரம்பியல் குறைபாடுகள் இல்லாமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு காயம் ஆறியதோடு, சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்தவர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
அப்பல்லோ ஆஸ்பத்திரி, எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை ஏற்று ஓ.பன்னீர் செல்வம் வருகிற 1-ந்தேதி ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்.
ஏற்கனவே அவர் 2 முறை ஆஜராக முடிவு செய்த தேதி கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது 1-ந்தேதி ஆஜராக முடிவு செய்துள்ளார்.

இந்தநிலையில் விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக சாட்சியம் அளிப்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லாதது ஏன்? பார்வையாளர்களை அனுமதிக்க மறுத்தது யார்? என்பன உள்பட பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளிப்பவர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்து வருகிறார். அதுபோல் ஓ.பன்னீர்செல்வத்திடமும் அவர் குறுக்கு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். #OPS #JayaDeathProbe






