என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • தம்பதிக்கு ஸ்ரீதா ரெட்டி (15 ), விஸ்வன் ரெட்டி (10) என ஒரு மகள், மகன் இருந்தனர்.
    • சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தார்.

    தெலுங்கானா மாநிலம் கல்குவத்தியை சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி (வயது 44). இவரது மனைவி கவிதா (வயது 35).

    தம்பதிக்கு ஸ்ரீதா ரெட்டி (15 ), விஸ்வன் ரெட்டி (10) என ஒரு மகள், மகன் இருந்தனர். சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் வருவாய் இல்லாமல் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர் ரெட்டி தனது மகளை தூக்கில் தொங்கவிட்டும், மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.

    பின்னர் கணவன், மனைவி இருவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் 4 பேரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரசேகர் ரெட்டி எழுதி வைத்த கடிதம் மூலம் அவர் கடன் தொல்லையால் மகன் மகளைக் கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்தது தெரியவந்தது.

    • தெலுங்கானா காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
    • காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளுடன் சேர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    திருப்பதி:

    பிரபல நடிகை விஜய சாந்தி. தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். தெலுங்கானா காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை விஜயசாந்தி நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளுடன் சேர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பின்னர் அவர் கூறுகையில் தெலுங்கானா காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    • மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, ​​பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    • 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

    தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த தலித் சமூக இளைஞர் பெருமாள பிரனாய் குமார் (24 வயது).

    மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை பிரனாய் குமார் காதலித்து வந்தார்.

    10ம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே, அறிமுகமாகியிருந்த இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் காதலித்து, திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டனர்.

    ஆனால் பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருணமத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    எனவே அவரின் எதிர்ப்பை ஜனவரி 30, 2018 அன்று ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் பிரனாய் - அம்ருதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த மாருதி ராவ், பிரனாயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. பல முறை பிரானாய் மீது தாக்குதல் முயற்சிகளும் நடந்துள்ளன.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் 14, 2018 அன்று மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த பரபரப்பான கொலை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது. விசாரணையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷ்ரவன் ராவும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

    மற்றொரு குற்றவாளி மூலம் தொழில்முறை கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு ரூ.1 கோடி கொடுத்து கொலை சதித்திட்டம் தீட்டியதாக மாருதி ராவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    பிரனாயின் தந்தை பி. பாலசாமி அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மாருதி ராவ், அவரின் தம்பி ஷ்ரவன் ராவ், அவரின் கார் ஓட்டுநர் சிவா, கொலையாளி சுபாஷ் குமார் சர்மா உள்ளிட்ட எட்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே கொலைக்கு மூளையாக செயல்பட்ட அம்ருதாவின் தந்தை, மாருதி ராவ், 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

     

     இந்நிலையில் 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு தெலுங்கானாவின் நல்கொண்டா நகர எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) இந்த ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    மற்ற குற்றவாளிகள் அஸ்கர் அலி, அப்துல் பாரி, எம்.ஏ. கரீம், மாருதி ராவின் சகோதரர் ஷ்ரவன் குமார் மற்றும் மாருதி ராவின் கார் ஓட்டுநர் சிவா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  

     

    • தலைமை நிர்வாக அதிகாரியான அமர் தீப் குமார் மற்றும் சிலர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியது.
    • இந்த விமானம் முதலீட்டு மோசடியின் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை நம்புகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ.850 கோடி வரை சுருட்டியதாக புகார் எழுந்தது.

    இந்த பண மோசடி தொடர்பாக அந்த நிறுவனம், அதன் தலைமை நிர்வாக அதிகாரியான அமர் தீப் குமார் மற்றும் சிலர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியது.

    இந்த வழக்கில் தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் இயக்குனரை கைது செய்துள்ள அமலாக்கத்துறை தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

    இதனிடையே அமர் தீப் குமார் தனது நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய விமானத்தில் கடந்த ஜனவரி மாதம் நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அமர் தீப் குமார் நாட்டை விட்டு வெளியேற பயன்படுத்தப்பட்ட விமானம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    உடனடியாக அங்கு விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விமானத்தை சோதனையிட்டனர். அதில், 8 பேர் அமரக்கூடிய அந்த விமானம் 1.6 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.14 கோடி) கொடுத்து கடந்த ஆண்டு வாங்கப்பட்டது தெரியவந்தது.

    இந்த விமானம் முதலீட்டு மோசடியின் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை நம்புகிறது. எனவே அந்த விமானத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • 10 சதவீத பணம் ஏடிஎம் எந்திரம் மூலமும், மீதி பணம் அவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.
    • வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள கோதவாடாவில் இந்திய மத்திய வங்கி சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக தங்க நகை கடன் வழங்கும் ஏ.டி.எம். எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த ஏ.டி.எம். எந்திரத்தை தலைமை நிர்வாக அதிகாரி எம்.விராவ் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட முதல் தங்க நகை கடன் ஏ.டி.எம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே சோதனை அடிப்படையில் முதன்முறையாக ஆதார் அட்டை செல்போன் எண் பயன்படுத்தி தங்க நகை கடனை இதில் பெற முடியும்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்களது நகைகளை வைத்தால் ஏஐ தொழில்நுட்பத்துடன் தங்கத்தின் தரம் மற்றும் எடை அளவுகள் அன்றைய சந்தையின் விலைக்கு ஏற்ப பணம் தர முடியும். 10 சதவீத பணம் ஏடிஎம் எந்திரம் மூலமும், மீதி பணம் அவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.

    இந்தியன் வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்கள் மட்டுமே இந்த சேவையை பெற முடியும். இதனால் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த சோதனை வெற்றி அடைந்தால் நாட்டின் பிற பகுதிகளிலும் நகை கடன் ஏ.டி.எம் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினர். 

    • தேவிகா - சரத் சந்திராவிற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவாவில் திருமணம் நடந்துள்ளது.
    • இந்த சம்பவம் தொடர்பாக தேவிகாவின் கணவர் சரத் சந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தெலுங்கானாவில் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரியும் இளம்பெண் (25) வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஐதரபாத்தில் நடந்தது.

    தேவிகா - சரத் சந்திராவிற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவாவில் திருமணம் நடந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ராய்துர்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் தேவிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேவிகா தற்கொலை செய்துகொண்டதையடுத்து, சரத் சந்திரா போலீசாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தார்.

    கூடுதல் வரதட்சணைக்காக தேவிகா பலமுறை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து தேவிகாவின் தாய் ராமலட்சுமி, அவரது மருமகன் மகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவரது புகாரின் அடிப்படையில், ராய்துர்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் சரத் சந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேவிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • தமிழகம், கர்நாடகா, தெலுங்கானாவிலும் ஆந்திராவின் கோழிகள் விற்பனை ஆகவில்லை.
    • இறந்த கோழிகளின் ரத்தம், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ஐதராபாத்:

    ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவை காய்ச்சலே இதற்கு காரணம் என ரத்தப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானாவிலும் ஆந்திராவின் கோழிகள் விற்பனை ஆகவில்லை. இதனால் கோழி வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. தெலுங்கானா மாநில எல்லைகளில் 24 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஆந்திர மாநில கோழிகளை தெலுங்கானாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்தனர். ஆனாலும், தெலுங்கானா மாநில எல்லையில் கம்மம் மாவட்டத்தில் கடந்த மாதம் பறவை காய்ச்சல் பரவியது.

    இதைத் தொடர்ந்து, வாரங்கல், நல்கொண்டா, சூர்யாபேட்டை, மேதக் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பண்ணை கோழிகளின் உயிரிழப்பு அதிகரித்தது. இதனால், தெலுங்கானா மக்களும் கோழி இறைச்சி உண்பதை தவிர்த்தனர்.

    இந்நிலையில், நேற்று சங்காரெட்டி, மேதக் மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பண்ணைக் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இப்பகுதிகளில் கோழிக்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறந்த கோழிகளின் ரத்தம், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    • 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • உயிரிழந்தவர்களில் இருவர் பொறியாளர்கள், 6 பேர் தொழிலாளர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்திற்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

    இதன் சுரங்கப்பாதை பணிக்காக இருபுறமும் இருந்து துளையிடும் எந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது கடந்த வாரம் ஏற்பட்ட மண் சரிவில் 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய மற்ற 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடைந்த இயந்திரத்தின் அடியில் சிக்கி மரணம் அடைந்தது உறுதியாகி உள்ளது

    தெலங்கானாவில் சுரங்கம் அமைக்கும் பணியில் மண் சரிவில் சிக்கிய 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    உயிரிழந்தவர்களில் இருவர் பொறியாளர்கள், 6 பேர் தொழிலாளர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • நிதி பங்களிப்பு அடிப்படையில், தொகுதிகளை மறுசீரமைக்கலாம்
    • தேசக் கட்டுமானத்தில் தென் மாநிலங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதி மறுவரையறை அறிக்கைக்கு தெலுங்கானா பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தொகுதி மறுசீரமைப்பை ஒன்றிய அரசு செயல்படுத்த விரும்பினால், மக்கள்தொகையை அடிப்படையாக கொள்ளாமல், மாநிலங்கள் அளிக்கும் நிதியை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தட்டும். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கையை பொறுப்புணர்வோடு செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களை தண்டிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை.
    • பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    2025-26 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அரசு ஜில்லா பரிஷத், மண்டல் பரிஷத், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் தெலுங்கு கற்பிப்பதை கட்டாயமாக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா (பள்ளிகளில் தெலுங்கு கட்டாயக் கற்பித்தல் மற்றும் கற்றல்) சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது.

    இருப்பினும், முந்தைய பி.ஆர்.எஸ். அரசு பல்வேறு காரணங்களால் இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்காக நிர்வாகங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மற்றும் பிற வாரியங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு தெலுங்கு கற்பிக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் ரேவந்த் ரெட்டி, தேர்வுகளை நடத்துவதற்கு 'எளிய தெலுங்கு' பாடப் புத்தகமான 'வெண்ணெலா'வைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். 'எளிய தெலுங்கு' பாடப்புத்தகம் தெலுங்கு தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரியங்களின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
    • புஷ்பா 2 திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் கடந்தாண்டு டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.

    இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்நிலையில், படம் வெளியாகி 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், புஷ்பா 2 படத்தை பார்த்து மாணவர்கள் கெட்டு போயுள்ளதாக ஐதராபாத் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கல்வி ஆணையத்துடன் நடந்த கலந்துரையாடலின் போது பேசிய ஆசிரியர், " அரசுப் பள்ளி மாணவர்களை கையாள்வது மிகவும் கடினமாகி வருகிறது. நான் பணி செய்யும் பள்ளியில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், புஷ்பா படத்தை பார்த்துதான் கெட்டுள்ளனர். அந்தப் படத்திற்கு எந்தவொரு பொறுப்புமின்றி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத ஹேர்ஸ்டைலை வைத்துக்கொண்டு, ஆபாசமான முறையில் மாணவர்கள் பேசுகின்றனர். இதெல்லாம் பார்க்கையில் நானே தோற்பதுபோல உள்ளது" என்று தெரிவித்தார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பேரிடர் மீட்பு படை குழுவினர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
    • சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்திற்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

    இந்த பணி கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஸ்ரீசைலம் இடது புற கால்வாய் என அழைக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை உலகிலேயே மிகவும் நீளமான அதாவது 44 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

    சுரங்கப்பாதை பணிக்காக இருபுறமும் இருந்து துளையிடும் எந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன. ஒரு பக்கத்தில் 20 கிலோ மீட்டர் மறுபுறம் 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு தோண்டப்பட்டது.

    இந்த பணியில் உத்தர பிரதேசம், ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று 60 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.

    அப்போது சுரங்க பாதையில் 14-வது கிலோமீட்டர் தொலைவில் திடீரென நீர்க்கசிவு ஏற்பட்டது. இதனை சரி செய்ய சில தொழிலாளர்கள் முயன்றனர். அப்போது சுரங்க பாதையில் இடிபாடு ஏற்பட்டது.

    சுரங்கத்திற்குள் பயங்கர சத்தம் கேட்டதும் அங்கிருந்த தொழிலாளர்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதில் சிலர் காயம் அடைந்தனர். அவர்களில் 52 பேர் பாதுகாப்பாக வெளியே வர முடிந்தது.

    உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஜெய் பிரகாஷ், பொறியாளர் மனோஜ் குமார், களப்பொறியாளர் ஸ்ரீநிவாஸ், ஜார்கண்ட்மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் சாஹு, ஜாதக்ஸ், சந்தோஷ் சாஹு மற்றும் அனுஜ் சாஹு மற்றும் ராபின்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2 எந்திர ஆப்ரேட்டர்களான சன்னி சிங் பஞ்சாப்பைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங் ஆகிய 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    அவர்களை மற்ற தொழிலாளர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    நிலைமை குறித்து தகவலறிந்த முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பணிகளை துரிதபடுத்த உத்தரவிட்டார்.

    பிரதமர் நரேந்திர மோடி ரேவந்த் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொழிலாளர்களை மீட்பதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

    இதைத் தொடர்ந்து தெலுங்கானா நீர்ப்பாசன மந்திரி உத்தமகுமார் ரெட்டி தலைமையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன.

    இந்திய ராணுவத்தின் ஒரு குழு செகந்திராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

    மேலும் பேரிடர் மீட்பு படை குழுவினர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சிறப்பு என்ஜினினீயர் குழுக்கள் வந்து மீட்பு பணிக்கான ஆய்வு தொடங்கினர்.

    ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுடன் மருத்துவ குழுவினர் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    கனரக என்ஜின்கள் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    சுரங்கபாதையில் பெரிய கல்பாறைகள் சரிந்து மூடி உள்ளது. இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளன.

    நேற்று பணி தொடங்கிய 30 நிமிடத்துக்குள் இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது.

    8 தொழிலாளர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    என்ஞ்சின் ஆபரேட்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்ததால் தான் தொழிலாளர்கள் பலர் தப்பமுடிந்தது. அதற்குள் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டதால் 8 பேர் சிக்கி கொண்டனர்.

    தொழிலாளர்களை மீட்க உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட ராணுவ குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    தொழிலாளர்களை உயிருடன் கொண்டு வரும் முயற்சியில் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என மந்திரி உத்தம குமார் ரெட்டி தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×