என் மலர்
நீங்கள் தேடியது "நகை கடன்"
- கடன் வரம்பு, தங்க நகைகளின் மொத்த எடை 1 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- தனியார் நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்கக் காசுகளின் தரத்தையும் பரிசோதித்து தங்கக் கடன் வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 சதவீத மக்களுக்கு மேல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு அவசரத் தேவை ஏற்படின், அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைத்து, நிலைமையை சமாளிக்கும் சராசரி மக்கள் ஆவார்கள்.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நகை அடமானத்திற்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
* இதுவரை, நகை மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் அளிக்கப்பட்டு வந்தது. இனி, 75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
* நகை அடமானம் வைத்து கடன் வாங்குபவர்கள் இனி, இது தங்களது சொந்த நகைதான் என்பதற்கு உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும். அதாவது, கடன் வாங்குபவர்கள் தங்கத்தை வாங்கியதற்கான அசல் ரசீதுகள் இல்லையென்றால், ஒரு தகுந்த ஆவணம் அல்லது சுய சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
* தங்க நகைகள், ஆபரணங்கள் மற்றும் வங்கிகளால் விற்கப்படும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் (22 காரட் அல்லது அதற்கு மேற்பட்ட தூய்மையுடன் இருக்கும் நகைகளுக்கு) மட்டுமே நகைக் கடன் வழங்க தகுதியானவை ஆகும்.
* கடன் வரம்பு, தங்க நகைகளின் மொத்த எடை 1 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* தங்கக் காசு அடமானம் வைத்தால், அது 50 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த தங்கக் காசு, வங்கிகள் விற்கும் தங்கக் காசாக இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்கும் தங்கக் காசுகளுக்கு நகைக் கடன் கிடையாது.
* தங்கக் கடனை முழுமையாக அடைத்தால்தான் புதிய கடன் வழங்கப்படும். இதுதவிர, மேலும் பல புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
* தங்க நகைகளின் தரம், எடை, போன்றவைகள் துல்லியமாகக் கணக்கிடப்பட வேண்டும்.
மேற்கண்ட புதிய நிபந்தனைகளின்படி, தங்களின் அவசரத் தேவைகளுக்கு, சொந்த நகைகளின் பேரில் அருகில் உள்ள கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே, மக்கள் நலன் கருதி, இந்தப் புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, தனியார் நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்கக் காசுகளின் தரத்தையும் பரிசோதித்து தங்கக் கடன் வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
- வட்டிக்கடை கடைக்காரர் கூட வாடிக்கையாளர்களை கவர இலவசங்களை அறிவித்துள்ளார்.
- கும்மிடிப்பூண்டியில் இந்த அறிவிப்பு பலகையை பார்த்து கடனாளி ஆக்குவதற்கும், இலவசம் வந்து விட்டது என்று வேடிக்கையாக பேசிக்கொள்கிறார்கள்.
சென்னை:
வியாபாரத்தை பெருக்க ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி, இவ்வளவு ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் இந்த பொருள் இலவசம். தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம். இப்படி வாடிக்கையாளர்களை கவர விதவிதமான அறிவிப்புகளை பார்த்திருப்போம்.
இப்போது வட்டிக்கடை கடைக்காரர் கூட வாடிக்கையாளர்களை கவர இலவசங்களை அறிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டியில் தனியார் அடகு கடை ஒன்றியம் ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை நகை அடகு வைத்தால் அரை லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம்.
ரூ.30 ஆயிரம் வரை அடகு வைத்தால் அரை லிட்டர் சமையல் எண்ணையுடன் அரை லிட்டர் பெட்ரோலும் இலவசம், ரூ.40 ஆயிரம் வரை அடகு வைத்தால் கூடுதலாக 5 கிராம் வெள்ளியாம். ரூ.40 ஆயிரத்துக்கு மேல் அடகு வைத்தால் தலா ஒரு லிட்டர் பெட்ரோல், சமையல் எண்ணையுடன் 10 கிராம் வெள்ளி நகையாம்.
கும்மிடிப்பூண்டியில் இந்த அறிவிப்பு பலகையை பார்த்து கடனாளி ஆக்குவதற்கும், இலவசம் வந்து விட்டது என்று வேடிக்கையாக பேசிக்கொள்கிறார்கள்.
- 10 சதவீத பணம் ஏடிஎம் எந்திரம் மூலமும், மீதி பணம் அவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.
- வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள கோதவாடாவில் இந்திய மத்திய வங்கி சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக தங்க நகை கடன் வழங்கும் ஏ.டி.எம். எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஏ.டி.எம். எந்திரத்தை தலைமை நிர்வாக அதிகாரி எம்.விராவ் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட முதல் தங்க நகை கடன் ஏ.டி.எம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே சோதனை அடிப்படையில் முதன்முறையாக ஆதார் அட்டை செல்போன் எண் பயன்படுத்தி தங்க நகை கடனை இதில் பெற முடியும்.
ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்களது நகைகளை வைத்தால் ஏஐ தொழில்நுட்பத்துடன் தங்கத்தின் தரம் மற்றும் எடை அளவுகள் அன்றைய சந்தையின் விலைக்கு ஏற்ப பணம் தர முடியும். 10 சதவீத பணம் ஏடிஎம் எந்திரம் மூலமும், மீதி பணம் அவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.
இந்தியன் வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்கள் மட்டுமே இந்த சேவையை பெற முடியும். இதனால் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த சோதனை வெற்றி அடைந்தால் நாட்டின் பிற பகுதிகளிலும் நகை கடன் ஏ.டி.எம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.






