என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி, தென்காசி, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநாட்டு திடலில் அமைக்கப்பட உள்ள அலங்கார வளைவுகள், பேனர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
    • உணவு வினியோகம் உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    மதுரை:

    த.வெ.க.வின் 2வது மாநில மாநாடு மதுரையில் அடுத்த (ஆகஸ்டு) மாதம் 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இதற்காக 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதற்கான கால்கோள் விழா கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அன்றைய தினமே மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாநாட்டுக்கு அனுமதி வேண்டியும், உரிய பாதுகாப்பு அளிக்க கோரியும் மனு வழங்கினார். அந்த மனுவில், மாநாடு தொடர்பான மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் த.வெ.க. நடத்தும் மாநாடு தொடர்பாக பல்வேறு விபரங்களை அளிக்குமாறு அந்த கட்சிக்கு மதுரை மாவட்ட காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி மாநாடு நடைபெறும் இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? மாநாடு தொடங்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரம், மாநாட்டு மேடையில் எத்தனை இருக்கைகள் போடப்படுகிறது? தொண்டர்கள் அமருவதற்காக எத்தனை நாற்காலிகள் கொண்டு வரப்படும்?

    மாநாட்டு திடலில் அமைக்கப்பட உள்ள அலங்கார வளைவுகள், பேனர்களின் எண்ணிக்கை எவ்வளவு? மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள்? என்ற தோராயமான எண்ணிக்கை, மாநாடு நடைபெறும் இடத்தில் நிறைவேற்றப்பட உள்ள அடிப்படை வசதிகள் குறித்த விபரங்கள், மருத்துவ வசதி, கழிப்பிட வசதி, தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பதற்காக என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளது? உணவு வினியோகம் உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக விரைவில் மதுரை மாவட்ட போலீசாருக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • வண்டுகள் அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில் அந்த வழியாக சென்ற 5-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது.
    • மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை சீவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று மதியம் அன்னதானம் நடந்தது. இதையொட்டி கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் விஷ வண்டு (கடந்தை குளவி) கூடு இருந்த நிலையில், அந்த கூடு திடீரென கலைந்து அதில் இருந்து வண்டுகள் அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில் அந்த வழியாக சென்ற 5-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது.

    இதனால் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகம் பிள்ளை (வயது 85) மற்றும் அவரது மனைவி மகராசி(78) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த தென்னை மரத்தில் இருந்த விஷ வண்டு கூட்டை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கொளத்தூர் தொகுதி நிகழ்ச்சிகள் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தன.
    • மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு அவரது முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சந்தித்து பேசினார். சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். அவரது வாகன அணிவகுப்பு புறப்பட்ட சிறிது நேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது காரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன அணிவகுப்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றது. அங்கு அவருக்கு டாக் டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற தகவல் அறிந்ததும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மருத்துவமனைக்கு சென்றனர்.

    இதற்கிடையே கொளத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துமாறு அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    • ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
    • அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

    இங்கு ஆண்டுதோறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆடி மாத திருவாதிரை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு ஆடி திருவாதிரை விழா வருகிற 23ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது.

    இதில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அங்கே சுமார் 3 மணி நேரம் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். இந்த விழாவானது ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை அவர் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்து சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.

    விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். மேலும் தொல்லியல் துறை சார்பில் அங்கு அமைக்கப்பட உள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். அதன் பின்னர் இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டுக்களிக்கிறார்.

    இளையராஜா, சமீபத்தில் லண்டனுக்கு சென்று திருவாசகம் சிம்பொனி இசை அமைத்து சாதனை நிகழ்த்தினார். அந்த திருவாசகம் சிம்பொனி இசையை கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜா நடத்துகிறார். இந்த இசையை பிரதமர் மோடி 20 நிமிடங்கள் அமர்ந்திருந்து கேட்டு ரசிக்கிறார். மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யட்டுள்ளது கோவிலுக்குள் அவர் நுழையும்போது 50 ஓதுவார்கள் மூலம் திருவாசகம் படிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 38 ஆதீனங்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

    விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பத்தாயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது.

    முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். இதற்காக கோவில் அருகாமையில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    விழாவின் தொடக்க நாளான 23-ந் தேதி முதலமைச்சர் மு. க ஸ்டாலின் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. ஆனால் அவரது வருகை உறுதிப்படுத்தப்படவில்லை. இதில் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் விழா கோலம் பூண்டு வருகிறது.

    • தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர்.
    • வாக்காளர்களின் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்.

    மதுரை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

    அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் வகையில் தி.மு.க. பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் வாக்கா ளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். கடந்த 1-ந்தேதி இந்த திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர். அப்போது வாக்காளர்களின் தொலைபேசி எண் மூலம் ஓ.டி.பி. பெறப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

    இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக தி.மு.க.வினர் வீடு, வீடாக செல்கின்றனர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொல்லை செய்கின்றனர்.

    எங்கள் வீட்டிற்கு தி.மு.க.வினர் 10 பேர் வந்து, அனுமதி இல்லாமல் தமிழக முதலமைச்சர் படத்துடன் கூடிய 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட சுவரொட்டியை வீட்டில் ஒட்டினர்.

    பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் உள்பட அடையாள அட்டைகளை கேட்டனர். அதனை தர மறுத்தபோது, வீட்டுப் பெண்கள் மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை நிறுத்தி விடுவோம் என மிரட்டினர். அதோடு அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களை கேட்டு வாங்கி, தி.மு.க.வில் சேர்த்து வருகின்றனர்.

    தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர். அரசியல் பிரசாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது. இது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனியுரிமையை மீறுவதாகும். எனவே இந்த நடவடிக்கைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

    பொதுமக்களிடம் தி.மு.க.வினர் சட்ட விரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, தி.மு.க. பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.ஆர்.பாரதி கண்ணன், ஆயிரம் செல்வகுமார், மகேந்திரன் ஆகியோர் ஆஜராகி, அது தொடர்பான வீடியோவும் சமர்ப்பித்தனர்.

    அதையடுத்து நீதிபதிகள், ஓ.டி.பி. எண்ணை எதற்காக கேட்கிறார்கள்? ஓ.டி.பி. விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படும்போது, எதற்காக ஓ.டி.பி.யை கேட்கிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசுத்தரப்பில், தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக இந்த பிரசாரம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீங்கள் அரசு வழக்கறிஞரா? அல்லது தி.மு.க. வழக்கறிஞரா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஆதார் விபரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம், அமெரிக்க நிறுவனத்திற்கு இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? இந்திய மக்கள் இவ்வாறு தான் கையாளப்படுவார்களா?

    தனது கட்சியின் உறுப்பினர் விபரங்களை சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த விபரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த திட்டமும், விபரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப தகவல் பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை.

    இது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழகத்தின் பிரபல அரசியல் கட்சி, ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது. தனிநபர் விபரங்களை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை. தனிநபர் விபரங்களை சேகரிக்க தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

    வாக்காளர்களின் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். அந்த விஷயங்கள் வெளிநாட்டுக்கு விற்கப்பட்டு விட்டால் என்ன செய்வது?

    ஆகவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின்போது ஓ.டி.பி.யை பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால் ஓ.டி.பி. விபரங்களை கேட்கக் கூடாது என குறிப்பிட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாக அறிவித்தனர். டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்தும், வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக் கினை நீதிபதிகள் 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்.
    • கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் தி.மு.க.வில் இணைந்தது தொடர்பாக அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்.

    * ஒரு தலைவரை நம்பித்தான் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள், மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராவார்.

    * அ.தி.மு.க.வில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை. இனி நிலையான தலைவர்கள் வருவார்களா என தெரியவில்லை.

    * தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் இல்லை. இம்முறை 15% கூடுதல் வாக்குகள் பெற்று தி.மு.க. வெல்லும்.

    * கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கருத்தியல் ரீதியாக அ.தி.மு.க. தடம் புரண்டு விட்டது.
    • முதலமைச்சர் வேட்பாளர் என இ.பி.எஸ். பெயரை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்நிலையில் தி.மு.க.வில் இணைந்தது தொடர்பாக அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * மாண்புமிகு தளபதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டேன்.

    * கருத்தியல் ரீதியாக அ.தி.மு.க. தடம் புரண்டு விட்டது.

    * தனது கொள்கையில் இருந்து தடம்புரண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது அ.தி.மு.க.

    * முதலமைச்சர் வேட்பாளர் என இ.பி.எஸ். பெயரை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை.

    * அ.தி.மு.க.வை சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது.

    * 3 முறை கூட்டணி குறித்து பேட்டியளித்த அமித்ஷா முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கூறவில்லை.

    * எந்த கட்சியில் இணைந்தாலும் அக்கட்சியை சீரழிப்பது தான் பா.ஜ.க.வின் வேலை.

    * கூட்டணி ஆட்சி என அமித்ஷா பலமுறை கூறியும் முதல்வர் வேட்பாளர் நான்தான் என இ.பி.எஸ்.ஆல் கூற முடியவில்லை.

    * பலமுறை என் ஆதங்கத்தை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அதனால் அடுத்த சாய்ஸ் தி.மு.க.தான், அதனால் இணைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டன.

    அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணி நில வரப்படி நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    • அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
    • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அன்வர்ராஜா. அ.தி.மு.க.வில் சிறுபான்மை இன தலைவர்களில் இவர் முக்கிய பங்கு வகித்து இருந்தார்.

    கடந்த 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது இவர் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அவருக்கு சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் பதவியையும் ஜெயலலிதா வழங்கி இருந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது இவர் ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அவர் சசிகலாவின் ஆதரவாளராக மாறினார்.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானதும் சசிகலாவிடம் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்தார். அவருக்கு சிறுபான்மை பிரிவில் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

    இதற்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அவர் சில கருத்துக்களை வெளியிட்டதால் அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    2023-ம் ஆண்டு அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து அவரை எடப்பாடி பழனிசாமி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் மீண்டும் கூட் டணி அமைக்கப்பட்டது. அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இந்த கூட்டணியை முன்னெடுத்து செல்கிறார்கள்.

    பாஜகவுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்தது அன்வர் ராஜாவுக்கு அதிருப்தியை கொடுத்தது. இது தொடர்பாக அவர் தனது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அன்வர் ராஜா தி.மு.க.வில் இணையப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதற்காக அவர் தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு காரில் சென்று கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்த தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் அவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார். அன்வர்ராஜா அ.தி.மு.க. வில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்து உள்ளார்.

    இதற்கிடையே அன்வர் ராஜா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    • நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது.

    கடந்த வாரத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,180 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    19-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    18-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,880

    17-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840

    16-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-07-2025- ஒரு கிராம் ரூ.126

    19-07-2025- ஒரு கிராம் ரூ.126

    18-07-2025- ஒரு கிராம் ரூ.125

    17-07-2025- ஒரு கிராம் ரூ.124

    16-07-2025- ஒரு கிராம் ரூ.124

    • அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
    • தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.

    தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ×