என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை.
- அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில் திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.
மார்ச் மாதத்திற்குள் முதலமைச்சர் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-
மேய்க்கால் புறம்போக்கு நிலம் தொடர்பாகவும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு வழங்குவது குறித்தும், ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- 6 ஆண்டு அரசியல் பயணம் எனக்கு நிறைய அனுபவங்களை கற்று தந்துள்ளது.
- எல்லா கட்சியும் ஒன்று சேர்ந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கட்சித்தலைவர் கமல்ஹாசன் இதில் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதன்பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று 7-வது ஆண்டில் மக்கள் நீதி மய்யம் அடியெடுத்து வைத்து உள்ளது. இந்த 7 ஆண்டுகளில் நேர்மையான அரசியலை முன்னெடுத்து சென்று உள்ளோம். அதனை பெரிய சாதனையாகவே கருதுகிறோம்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும். கெட்ட செய்தி டெலிகிராம் மூலம் வரும். நல்ல செய்தி கடிதம் மூலமாகவே வரும்.
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். அதுபற்றியும் விரைவில் உங்களிடம் தெரிவிப்போம். உங்களிடம் எதையும் சொல்லாமல் தப்பிக்க முடியாது. அதனை சொல்வது எனது கடமை ஆகும்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும் அவரை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து சொன்னது நான்தான்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் 6 ஆண்டு நிறைவில் எதை செய்யக்கூடாது என்பதையும் மற்றவர்கள் செய்யாமல் மறந்தது எது என்பதையும், நியாயமான விஷயங்களை யார் சொல்லாமல் விட்டார்கள் என்பதையும் கற்றுக்கொண்டு உள்ளோம்.
எங்களது நேர்மையை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் எங்களுக்கு டார்ச்லைட் சின்னம் வழங்கி உள்ளது.
எங்களது கட்சியின் 7 ஆண்டு சாதனை என்ன என்று கேட்கிறீர்கள். பாண்டு பத்திரங்களை நாங்கள் வாங்கியது இல்லை. கடந்த 28 ஆண்டுகளாக தூசுபடிந்து கிடந்த கிராம சபை கூட்டங்களை தூசி தட்டி எழுப்பி உள்ளோம். அதுவும் மிகப்பெரிய சாதனைதான்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
#WATCH | Chennai, Tamil Nadu | Actor and Makkal Needhi Maiam chief Kamal Hassan says, "I have already told that this is the time when you have to blur party politics and think about the nation. Anybody who thinks selflessly about the nation, my Makkal Needhi Maiam will be a part… pic.twitter.com/B9XfBmRvck
— ANI (@ANI) February 21, 2024
- பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்.
- தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பா.ஜ.க. நிர்வாகி திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். பின்னர் அங்குள்ள காளாத்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும். திரு காளாத்தீஸ்வரர், ராகு, கேது பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு வந்துள்ளேன். இந்த கோவிலில் 1984 ஆண்டு சிலை கடத்தப்பட்டு அங்கு காவலுக்கு இருந்த மாணிக்க தேவரை கொலை செய்த வழக்கில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வெட்கக்கேடாக உள்ளது. தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை சிறப்பாக செய்துள்ளார். பிரதம மந்திரியின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் பேரூராட்சி பகுதியில் அமல்படுத்தப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு கிராமப்புற கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று அறிவிப்பு செய்துள்ளனர். இதேபோல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தை இந்த அரசு முறையாக செயல்படுத்தவில்லை. 2024-ம் ஆண்டுக்கு மட்டும் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கபடும். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட்டு விவரங்கள் குறித்தும் பேசுவதற்கு அகில இந்திய அளவில் பாராளுமன்ற போர்டு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள். நான் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. மக்களுக்கு உதவாத உதவாக்கரை அரசை மக்கள் உதறித்தள்ளும் காலம் விரைவில் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டிலேயே 40 சதவீதம் பேர் வாக்களிப்பது இல்லை.
- முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது.
சென்னை:
மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கட்சி கொடியேற்றி வைத்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
* திமிராக பேசுவதை எல்லாம் பெரியாரிடம் கற்றுக் கொண்டேன்.
* நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன்.
* கோவை தெற்கில் நான் தோல்வியடைய காரணம் 90,000 பேர் வாக்களிக்கவில்லை.
* நாட்டிலேயே 40 சதவீதம் பேர் வாக்களிப்பது இல்லை.
* முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது.
* எனது சொந்த காசில் தான் அரசியல் செய்து வருகிறேன்.
* என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள்... போக வைப்பது அதை விட கஷ்டம்.
* என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து விட்டது... அழுத்தமாக நடைபோடுவேன்.
* கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு எந்த லாபமும் இல்லை... நஷ்டம் தான்.
* விவசாயிகளுக்கு மாநில அரசு செய்தது கூட மத்திய அரசு செய்வதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம்.
- அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது.
* ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம்.
* கட்சி ஒரு குடும்பத்திற்கு போகக்கூடாது என்பது தான் நோக்கம்.
* தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம்.
* அதிமுக சுயமாக முடிவு எடுத்து செயல்பட தான் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை.
* தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் அப்படியே நடக்காது.
* அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும்.
* அதிமுக சிறப்பான கூட்டணி அமைக்கும் என்று கூறினார்.
- சிலர் வீடுகளில் வைத்தே சிறிய மிஷின் மூலமாக பஞ்சு மிட்டாய்களை தயாரித்து வருகிறார்கள்.
- கலர் சேர்த்தால் அது குற்றமாக கருதப்படும். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
கடற்கரைகள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் விற்பனையாகும் பிங்க் கலர் பஞ்சு மிட்டாயில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் கலந்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் உடலுக்கு கேடு விளை விக்கும் புற்று நோயை உருவாக்கும் நச்சுப் பொருள் கலப்பது உறுதியானது. இதை தொடர்ந்து 'பிங்க்' கலர் பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பொருள் நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவு பொருள் அலுவலர்கள் சென்னையில் கலர் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக உணவு பொருள் அதிகாரி சதீஷ் குமார் கூறியதாவது:-
உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய 'பிங்க்' நிறத்தில் தயாரிக்கப்படும் பஞ்சு மிட்டாய் சென்னையில் தற்போது எந்த பகுதியிலும் விற்பனை செய்யப்படவில்லை. கலர் சேர்க்காத வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய கலர் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கலர் பஞ்சு மிட்டாயை தெருக்களில் விற்பனை செய்யும் நபர்கள் அதனை எங்கிருந்து வாங்கி வருகிறார்கள் என்பதை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலர் வீடுகளில் வைத்தே சிறிய மிஷின் மூலமாக பஞ்சு மிட்டாய்களை தயாரித்து வருகிறார்கள்.
அதில் கலர் சேர்த்தால் அது குற்றமாக கருதப்படும். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார்.
- முக்கிய செய்திகள் நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்து அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று (21.02.2024) முதல் அதிகாரப்பூர்வமான முகநூல் பேஸ்புக் (Facebook), X தளம், இன்ஸ்டாகிராம், (Instagram) மற்றும் வாட்ஸ் அப் (WhatsApp Channels) போன்ற சமூகவலைதளங்களை தொடங்கி கட்சி ரீதியான அறிவிப்புகளும், மக்களுக்கான செய்திகளும், தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகள் இந்த நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்து அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தின் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Premallatha Vijayakant (General Secretary - Desiya Murpokku Dravida Kazhagam) Official Social Media Links
Twitter X
https://x.com/PremallathaDmdk?t=ajELDtyUff-iRQ3jgZd4mg&s=09
https://www.instagram.com/_premallathadmdk?igsh=NGdIOGJIYzh5a210
https://www.facebook.com/profile.php?id=61556479832259&mibextid=ZbWKwL

- ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் முன்ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர்.
- தற்போது 137 நாட்கள் கடந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக 150 பேரிடம் நேரடி விசாரணை நடத்தினர்.
திருவட்டார்:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சுகிர்தா. குலசேகரம் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்த இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 6-ந்தேதி கல்லூரி விடுதியில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்கொலை செய்த மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம் உடன் படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் எனது மரணத்திற்கு காரணம் என கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மாணவியின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தான் விசாரிக்க வேண்டும் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவு போட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்-டாப்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.
அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். அதுபோல் ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் முன்ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர்.
தற்போது 137 நாட்கள் கடந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக 150 பேரிடம் நேரடி விசாரணை நடத்தினர். பின் பரமசிவம், ஹரீஷ் ப்ரீத்தியிடம் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப் அதன் விபரங்களை சென்னையில் உள்ள லேபில் அனுப்பி அதன் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
லேப்டாப்பில் உள்ள முழு விவரங்கள் விரைவில் கிடைத்துவிடும். அதன் பிறகு கோர்ட்டில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். இந்த குற்றப்பத்திரிகை மூலம் மாணவி சுகிர்தா மரணத்தில் நீதி கிடைக்கும் என அவரது தந்தை மற்றும் உறவினர்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள்.
- 24,700 மாணவர்களை பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.
- சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை :
சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ, 2 செட் சாக்ஸ் வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு.
* 24,700 மாணவர்களை பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* 255 பள்ளிகளுக்கு 7.64 கோடி ரூபாயில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
* சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு ரூ.1.32 கோடி வழங்கப்படும்.
* சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம்.
- மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில்,
மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.
மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது. ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு.
மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது என்று தெரிவித்துள்ளார்.
- சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது.
- போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மேல்பட்டி:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மசிகம் ஊராட்சியை சுற்றி சுமார் 9-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தின் காப்புக்காட்டில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அமோகமாக நடந்து வந்தது.
சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது. சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதால் போலீஸ் அடிக்கடி இந்த கிராமத்திற்கு ரோந்து வருவார்கள். சாராயம் குடிப்பதற்கும் அறிமுகம் இல்லாத நபர்கள் அதிகளவில் வந்து, செல்வதால் அந்த பகுதி பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
மசிகம் ஊராட்சியில் கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி மசிகம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து போலீசார் உதவியுடன் இந்த ஊராட்சியில் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்கள் அனைவரையும் கைது செய்து, அதனை முற்றிலுமாக ஒழித்தனர்.
மேலும் கிராமத்தில் முழுமையாக சாராயம் ஒழிக்கப்பட்டது என்று பஸ் நிறுத்தத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பு பலகை வைத்தனர்.
மசிகம் ஊராட்சியில் சாராயம் குடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் நபர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
- அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
- நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அதிமுக முன்னாள் நிர்வாகி சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
* ஏ.வி.ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.
* ஏ.வி.ராஜுவின் பேச்சை நிச்சயமாக ஏற்க முடியாது என்று கூறினார்.






