என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 3 மாத காலங்கள் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம்.
- கண்ணை கவரும் வகையில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை, சுந்தர பாண்டியபுரம், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 மாத காலங்கள் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் தற்போது சூரியகாந்தி சாகுபடி சுந்தர பாண்டியபுரம், சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது அவை அனைத்தும் அறுவடைக்கு தயாரான நிலையில், செழித்து வளர்ந்துள்ள அந்த சூரியகாந்தி பூவின் அழகு அந்த பகுதியில் கண்ணை கவரும் வகையில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
ஏற்கனவே கடந்த சில வருடங்களாக குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பூக்களின் அழகை ரசிப்பதற்காக கார்களில் குடும்பத்துடன் தென்காசியில் இருந்து ஆய்க்குடி வழியாக சுரண்டை செல்லும் சாலையில் வந்து சூரியகாந்தி தோட்டத்திற்கு படையெடுப்பார்கள்.
தொடர்ந்து கண்களை கவரும் சூரியகாந்திக்கு நடுவில் நின்று செல்பி எடுத்து மகிழ்வார்கள்.
இதனால் குற்றாலம் சீசன் காலத்தில் இந்த பகுதிகளும் சுற்றுலாத் தலமாக மாறிவிடும். அதன்படி இந்த ஆண்டும் சூரியகாந்தி பூக்கள் கம்பளி, சாம்பவர் வடகரை, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் குடும்பம் குடும்பமாக கார்களில் வந்து தங்கள் குழந்தைகளுடன் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்களுக்கு இடையில் நின்று உற்சாகமாக புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
கேரளாவில் திருமணமான புதுமண தம்பதிகள் பல்வேறு ரக ஆடைகளை அணிந்து கொண்டு சூரியகாந்தி மலர் இருக்கும் பகுதியை சுற்றிலும் போட்டோ சூட் நடத்தி வருகின்றனர். இதனால் வயல் வெளியில் உள்ள சாலைகளின் ஓரத்தில் வியாபாரிகள், விவசாயிகள் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர்.
- மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- ஏராளமான பக்தர்கள் கண்டும் கேட்டும் ரசித்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது.
பழனி பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதியரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முப்பரிமான பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி ஆகியவையும் இடம்பெற்றிருந்தது. குடவரைக்கோயில் போன்ற அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த இதனை ஏராளமான பக்தர்கள் கண்டும் கேட்டும் ரசித்தனர்.
முதல் அரங்கில் மாநாட்டு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

முதல் நாள் மாநாட்டில் 300 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 800 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொத்தம் 1300 ஆய்வறிக்கைகள் இறுதி செய்யப்பட்டு நீதியரசர் சுரேஷ்குமார் அவர்களுக்கான சான்றிதழை வழங்க உள்ளார்.
2ம் நாளான இன்று காலை திருவேல் இறைவன் தீந்தமிழர் இசையுடன் விழா தொடங்கியது. அதன் பின்பு முருகனும் பரதமும் என்ற தலைப்பில் வித்யா வாணி சுரேஷ் மற்றும் மகிதா சுரேசின் கலை நிகழ்ச்சி நடந்தது.
இசைத் தென்றல் சம்மந்தம் குருக்களின் திருப்புகழ் தேனிசை, டி.எம். சவுந்தர்ராஜனின் மகன் பால்ராஜின் இறை வணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வரவேற்புரையாற்றினார்.
அமைச்சர் அர.சக்கரபாணி தொடக்க உரையாற்ற கோவை கவுமாரமடம் குமரகுரு சுவாமிகள் ஆசியுரையும், சத்திய வேல் முருகனார் சிறப்புரையும் ஆற்றினர்.
அதன் பின்பு மொரிசீயஸ் தமிழக கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் செங்கண்குமரா வாழ்த்துரை வழங்கினார். பின்னர் நீதியரசர் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து கலைமாமணி தேச மங்கையர்கரசி, சுசித்ரா பாலசுப்பிரமணியம் குழுவினரின் யாமிருக்க பயமேன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
பின்னர் கர்நாடக பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் முருகனை காண 1000 கண் வேண்டும் என்ற இசை நிகழ்ச்சியும், ஐதராபாத் முனைவர் சிவா குழுவினரின் கந்தன் காவடி சிந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் திருவாரூர் சுருட்டை சுர்ஜித் நாட்டுப்புற கலைக்குழுவினரின் நாட்டுப்புற கலையில் நற்றமிழ் முருகன் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
2-ம் நாள் நிகழ்ச்சியை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாநாட்டு அரங்கு, கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை கண்டு ரசித்ததுடன் அரங்கம் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
பக்தர்கள் அனைவருக்கும் அதிகாலை முதல் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. மதியம் மற்றும் இரவு உணவுக்கும் ஊழியர்கள் தயார் நிலையில் அதற்கான பணிகளை செய்து வந்தனர். முன் பதிவு செய்து வந்த வெளிநாட்டு பக்தர்களுக்கு சிறப்பு அரங்கில் உணவு வழங்கப்பட்டது.

2-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று இரவு 8.30 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா மற்றும் சிறந்த ஆய்வறிக்கைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
விருதுகளை நீதியரசர் வேல்முருகன் வழங்க உள்ளார். அதன் பின்பு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்குகிறார்.
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார் நன்றியுரையுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெறுகிறது. மாநாட்டில் இடம்பெற்றுள்ள கண்காட்சி மற்றும் அரங்குகளை வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் பார்வையிடலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் மாநாட்டுக்கு இலவச அனுமதி என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பார்வையிட்டனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் மலைக்கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
- ஆவணி திருவிழா என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை நாள், நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் ஆவணித் திருவிழா நடைபெற்று வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்தும், சிலர் பரிகார பூஜைகள் செய்தும் சாமி தரிசனம் செய்தனர்.

விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலை மோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஞாயிறு விடுமுறை தினம், நாளை கிருஷ்ண ஜெயந்தி, ஆவணி திருவிழா என்பதாலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
வழக்கம் போல் அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியால் போக்கு வரத்து ஸ்தம்பித்தது. ஆனாலும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வாறு சரி செய்தனர்.
பக்தர்கள் வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
- தேமுதிக கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த்-க்கு இன்று 72-வது பிறந்தநாள்.
- விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் பொது மக்கள் மரியாதை செலுத்தினர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவன தலைவரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த கேப்டன் விஜயகாந்த்-க்கு இன்று 72-வது பிறந்தநாள்.
இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார்.
அதில், ""இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

இதோபோன்று நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், "நீங்காத நினைவுகளுடன், என்றும் ரசிக பெருமக்களின் இதயங்களில் வாழும், அன்பு நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த இனிய தருணங்களை எண்ணி நெகிழ்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.
- கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலையில் திடீரென டெல்லி சென்றார்.
- வி.ஐ.பி.க்கள் யாரையும் கவர்னர் சந்திக்க வில்லை.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலையில் திடீரென டெல்லி சென்றார். அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் யாரையும் சந்தித்து பேசவில்லை. இதுபற்றி கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறுகையில், தனிப்பட்ட விஷயமாக கவர்னர் டெல்லி சென்று உள்ளார். வி.ஐ.பி.க்கள் யாரையும் அவர் சந்திக்க வில்லை.
கவர்னர் இன்று இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- குட்டையில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருவகரையை சேர்ந்தவர் கஸ்பர். இவரது மகள் அலானா(வயது6). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
அலானா நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டை அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது,எதிர்பாராத விதமாக குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து வானூர் போலீசாருக்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி அலானா உடலை மீட்டனர்.
இது குறித்து வானூர் இன்ஸ்பெக்டர் சிவராஜன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவக்கரை பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளது. கல் எடுத்து பின் அதனை மூடாமல் விட்டு சென்றதால் அங்கு தேங்கியுள்ள தண்ணீரில் பலர் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குட்டையில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
- மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இந்திரா காந்தி சிலைக்கு அம்மாவட்ட காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மாலை அணிவித்தார்.
- எம்.பி விஜய் வசந்த் வாகனத்தில் நன்றி தெரிவித்தபடி ஊர்வலமாக சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊரம்பு சந்திப்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு அம்மாவட்ட காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மாலை அணிவித்தார்.
இதைதொடர்ந்து, காங்கிரஸ், இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நன்றி தெரிவிக்கும் பயணத்தை மேற்கொண்டனர்.
அப்போது, எம்.பி விஜய் வசந்த் வாகனத்தில் நன்றி தெரிவித்தபடி ஊர்வலமாக சென்றனர். வழிநெடுகிலும் பொது மக்கள் நின்று வரவேற்றனர்.
இதுதொடர்பாக விஜய் வசந்த் தனது இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- கலைஞர் எனும் தாய் புத்தகத்தில் கட்டுரை தொகுப்பின் தலைப்புகளே புத்தக தலைப்புகள் போன்றுள்ளன.
- இனம், மொழி, மாநில உரிமைகளுக்காக உழைப்பதே கலைஞருக்காக செலுத்தும் அஞ்சலி.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்கிற புத்தக வெளியீடு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் .
இந்த புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், கலைஞர் எனும் தாய் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பின்னர் உரையாற்றினார்.
அவர் உரையாற்றியதாவது:-
கலைஞரின் தாய் தங்களை எப்படி பேணி வளர்த்தார் என சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோர் கூறுவார்கள். பலருக்கும் தாய் போலவே செயலாற்றிய கலைஞரை தாய் என விளிப்பது சாலப் பொருத்தம்.
என் கண் அசைவை புரிந்து கொண்டு செயலாற்றுபவர் எ.வ.வேலு என கலைஞர் கூறுவார். இப்போது எனக்கும் அதே போன்ற செயல்மிக்க அமைச்சராக எ.வ.வேலு செயல்பட்டு வருகிறார். எத்தனை வேலை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுத்தி முடிப்பவர் எ.வ.வேலு.
தாய் "தாய் காவியத்தை தமிழ் வடிவில் தீட்டிய கலைஞருக்கு தமிழோவியம் தீட்டியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. எனக்கு தந்தை மட்டுமல்ல, தாயுமாகவும் இருந்தவர் கலைஞர். எனக்கு மட்டுமல்ல, லட்சோபலட்சம் பேருக்கு தாயாய், தந்தையாய் இருந்தவர் கலைஞர்.
கலைஞர் எனும் தாய் புத்தகத்தில் கட்டுரை தொகுப்பின் தலைப்புகளே புத்தக தலைப்புகள் போன்றுள்ளன.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று சம்பவங்களை படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. கலைஞரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய அனுபவங்கள் அனைத்தும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
கலைஞரின் வரலாறு மட்டுமல்ல, கழகத்தின் வரலாறும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இனம், மொழி, மாநில உரிமைகளுக்காக உழைப்பதே கலைஞருக்காக செலுத்தும் அஞ்சலி.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்திற்கு நன்றி. என்னை விட வயதில் மூத்தவர் ரஜினி அவர் அறிவுரையை ஏற்கிறேன். பயப்பட வேண்டாம்.. நான் என்றும் கவனமாக இருப்பேன். நீங்கள் மனம் திறந்து பாராட்டியதற்கு நன்றி.
ரஜினிகாந்த், என்.ராம் உள்ளிட்டோரும் கலைஞரின் உடன் பிறப்புகள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை கலைவாணர் அரங்கில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
- 'கலைஞர் எனும் தாய்' எனும் புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்கிற புத்தக வெளியீடு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் .
இந்த புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், "எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் மட்டுமல்ல, எழுத்திலும் வல்லவர்"என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், " இந்த நூலை எழுத உந்து சக்தியாக இருந்தது கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி" என்றார்.
புத்தகத்தை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், "
முதலமைச்சரின் கையில் புத்தகத்தை பெற்றது பெருமை அளிக்கிறது. கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
கருணாநிதி என்று கூறினால், சினிமா, இலக்கியம், அரசியல். கலைஞர் எனும் தாய் என்ற நூல் காவியமாக அமைந்துள்ளது.
தமிழினத்திற்காக தொடர்ந்து போராடிய தலைவர் கருணாநிதி. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு ஆலமரம். கருணாநிதி மறைவுக்கு பிறகு, அவரது புகழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக கையாண்டவர் கலைஞர். தற்போது அலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் | மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.
பேச்சு, செயலில் தனக்கான பாணியை உருவாக்கியவர் அமைச்சர் உதயநிதி. அறிவார்ந்தவர்கள் சபையில் பேசாமல் இருப்பது தான் நல்லது. ஆனால் தற்போது பேசி தான் ஆக வேண்டும்.
கலைஞர் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகில் எந்த தலைவருக்கும் இவ்வளவு சிறப்பாக விழா கொண்டாடியது கிடையாது.
எதை பேச வேண்டும் என்பதைவிட, எதை பேசக் கூடாது என்பது முக்கியமானது. முதலமைச்சர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப் பெரிய வெற்றி.
ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம். அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். பள்ளியில் புதிய மாணவர்களை விட, பழைய மாணவர்களை சமாளிப்பது கடினம்.
திமுகவில் பழைய தலைவர்களை சிறப்பாக சமாளித்து விருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலை சென்ற என்னை சிறப்பாக கவனித்தார் எ.வ.வேலு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாணவர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் ஏற்கனவே முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
- கன்னியாகுமரி மாவட்ட எம்.பி விஜய் வசந்த் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.
தமிழகத்தில் கடந்த 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வசந்த் & கோ சார்பில் வசந்த் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் ஏற்கனவே முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விதமாக இன்று இரண்டாம் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வசந்த் & கோ சார்ப்பில் "வசந்த் விருதுகள்" வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எம்.பி விஜய் வசந்த் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.
- இந்து சமய அற நிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது.
- மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழ் கடவுளான முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் இன்று இந்து சமய அற நிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது.
மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிலையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், " எல்லோருக்கும் எல்லாம் என்ற நமது திராவிட மாடல் அரசில், நாள்தோறும் அறப்பணிகளால் ஆன்மீகப் பெரியோர்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் " என்று அமைச்சர் சேகர்பாபுவை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.






