என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
    • கார் பந்தயத்தால் அந்நிய முதலீடுகள் குவியுமென்றால், அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்ன?

    250 கோடிகள் செலவழித்து ஆடம்பர கார் பந்தயம் நடத்தும் திராவிட மாடல் அரசிடம், 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லையா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையில் திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

    பள்ளிக்கல்வித்துறையின் சார்பாகக் கடந்த ஜூலை 1ஆம் நாள் வெளியிட்ட புதிய அரசாணை 150ன் படி, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த நிலையை மாற்றி, இனி 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளியில் பயிலும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் உடற்திறன் மேம்பாட்டைச் சீர்குலைக்கும் திமுக அரசின் இந்நடவடிக்கை எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

    ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 1997ஆம் ஆண்டு அரசாணை 525இன் படி 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 250க்கு அதிகமாகும்போது ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், பின்னர் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 300 மாணவர்கள் எண்ணிக்கைக்கும் கூடுதலாக ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் என ஒரு பள்ளிக்கு 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 400க்கும் அதிகமாகும் போது, அந்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்குப் பதிலாக, ஓர் உடற்கல்வி இயக்குநர் பணியிடமாகத் தரம் உயர்த்திடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

    கடந்த காலங்களில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று இருந்த நிலையிலேயே, மாணவர்களுக்கு முழுமையான உடற்திறன் பயிற்சி அளிக்க முடியாத நிலையில், தற்போது 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று மாற்றுவது எவ்வகையில் நியாயமாகும்?

    அதிலும், தற்காலத்தில் அலைபேசி மற்றும் கணினி உள்ளிட்ட நவீன அறிவியல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் மாணவ சமுதாயத்தின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் நலத்தைப் பேணவும் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, குறைப்பதென்பது தமிழ்நாடு அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவாகும்.

    இப்படி ஏழை மாணவர்களுக்கான கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துதான் அரசு தன்னுடைய நிதிநிலையைச் சீர் செய்ய வேண்டுமா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 இலட்சம் கொடுக்க நிதி இருக்கும் திமுக அரசிடம், படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி அளிக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணமில்லையா? மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, கற்பிக்கும் ஆசிரியரைக் குறைத்து அவர்களின் கல்வியை நிறுத்துவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

    250 கோடிகளை வாரியிறைத்து கார் பந்தயம் நடத்தப் பணம் இருக்கும் அரசிடம் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லை என்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை உலகத்தரத்திற்கு வளர்த்திடும் முறையா? கார் பந்தயத்தில் எத்தனை தமிழர்கள் இடம்பெற்று இருந்தனர்? எத்தனை ஏழைக்குழந்தைகள் அதனால் பயன்பெற்றனர்? ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கத்தையாவது இந்த ஆடம்பர கார் பந்தயத்தால் வாங்கித் தர இயலுமா? கார் பந்தயத்தால் அந்நிய முதலீடுகள் குவியுமென்றால், அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்ன?

    உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லாமல் ஆட்குறைப்பு செய்கின்ற அவலநிலையின் மூலம், மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் பல்லாயிரம் கோடிகள் அந்நிய முதலீடுகளைக் குவித்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டோம் என்று திராவிட மாடல் ஆட்சியாளர்கள் மார்தட்டுவது அனைத்தும் பச்சைப்பொய் என்பது உறுதியாகிறது.

    அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது என்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையாலும், தரமான கல்வியை வழங்கத் தவறியதாலும் நிகழும் கொடுமையாகும். அதனைச் சரி செய்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமல், அதனையே காரணம் காட்டி ஆசிரியர் பணியிடங்களைக் குறைப்பதென்பது அரசின் அறிவார்ந்தச் செயல் ஆகாது.

    ஆகவே, அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று, பழைய நிலையே தொடர உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தெற்கு ஆசியாவிற்கே புதிய பெருமை தந்துள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு ஒவ்வொரு களத்திலும் முத்திரைகள் பதித்து வருகிறார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய வழிகாட்டலுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடத்திய ஃபார்முலா 4 கார் பந்தயம்! தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தெற்கு ஆசியாவிற்கே புதிய பெருமை தந்துள்ளது! தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு, இந்திய நாடாவில் எதிலும் முதலிடம் பெற வேண்டும் என்னும் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் புதிய பல திட்டங்களை உருவாக்கி வடிவமைத்து நிறைவேற்றி வெற்றிகளை ஈட்டிப் புகழ் பதித்து வருகிறார்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் உதயநிதி ஸ்டாலின்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு ஒவ்வொரு களத்திலும் முத்திரைகள் பதித்து வருகிறார். அத்துடன், இளைஞர்களின் அறிவுத் திறன். உடல்திறன் வளர்ச்சிகளுக்கு ஊக்கத்தையும் உந்து சக்தியையும் அளித்து வருகிறார்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் முயற்சியால் சென்னையில் உலகையே கலரும் வண்ணம் 31.8.2024 அன்று தொடங்கி சனி, ஞாயிறு இரண்டு நான்களும் நடைபெற்று முடிந்துள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து வலைகளப் பதிவில் ஃபார்முலா 4 சென்னை கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அலுவலர்கள் அணைவருக்கும் எனது பாராட்டுகள் என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

    தெற்கு ஆசியாவிலேயே இதுவரை நடைபெறாத மிக நீளமான சாலை கார் பந்தயம் இது என்னும் பெருமை இந்த பார்முயா 4 கார் பந்தயத்திற்கு உண்டு, இந்த 3.5 கி.மீ. நீள கார் பந்தயப் பகுதியில் மொத்தம் 19 வளைவுகள் இருந்தன.

    பந்தய இடம் சென்னை மாநகரில் தீவுத் திடலில் தொடங்கி, போர் நினைவு நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தாசாலை, அண்ணாசாலை வழியாக 3.5 கி.மீ. தூரத்தைக் கடந்து தீவுத் திடலிலேயே வந்து முடிவதாக இருந்தது.

    விளையாட்டுத்த்துறை அமைச்சர், இந்தப் போட்டியை நடத்துவதில் தனிக் கவணம் செலுத்தி முறையாகத் திட்டமிட்டு எந்தவித இடையூறுமின்றிப் போட்டி வெற்றிகரமாக நடத்திடும் ஆர்வத்துடன், போட்டி நடைபெறும் பகுதியில் இரவிலும், பகலிலும் வருகை தந்து பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    பந்தயத்தையொட்டித் தீவுத் திடலைச் சுற்றியுள்ள சுவாதி சிவானந்தா சாலை. நேப்பியர் பாலம் எனப் போட்டி நடைபெற்ற சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டு இரவையும் பகலாக்கி பந்தய வீரர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. பார்வையாளர்கள் போட்டிகளைப் பார்த்து ரசிக்க அண்ணாசாலை, சுவாமி சிவானந்தன சாலை. தீவுத் திடல் முதலிய இடங்களில் பார்வையாளர்களுக்கெனத் தனியே இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

    வாகனங்களை நிறுத்துவத சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகம், கலைவாணர் அரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தயை போட்டியைக் காண்பதற்கு வவருகை தந்த மக்களுக்குச் சிரமமின்றி அமைத்திருந்தது.

    ஃபார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் பேசிங்லீக் அணியாகவும் நடத்தப்பட்டது. ஃபாம்மு எப்4 புந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ்கோ ஏசஸ் ஜே ரேசிங் ஸ்டுடெமான்ஸ் டெங்லி பெங்களூரு, சிஸ்டர்ஸ் ராச்சிராம் பெங்கால் டைகர்ஸ் ஜதைராபாத் பிளாக்பேர்ட்ஸ். அகமதாபாத் ரேசர்ஸ், காப்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன. ஓர் அணிக்கு 7 வீரர்கள் விதல் 18 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியிலும் 2 ஊர்கள் பயன்படுத்தப்பட்டன.

    இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் (ஐ.ஆர்.எல்) 6 அணிகள் கலந்து கொண்டன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெற்றனர். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 18 வீரர்கள். வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் வீதம் 16 கார்கள் பயன்படுத்தப்பட்டன. மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாயின் அவர்கள் பந்தயத்தின் பயிற்சியை முதல்நாள் சனிக்கிழமையன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    முதல் நாளில் வீரர்கள் பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டனர். இரண்டாவது நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகுதிச் சுற்று மற்றும் பிரதான பந்தயங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன.

    தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் ஹகிபார்ட்டரே பந்தய தூரத்தை 19:42,952 வினாடிகளில் கடந்து இலக்கை அடைந்து போட்டியில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

    இந்தியாவின் ருற்றான் ஆல்வா பந்தய நூரத்தை 19:50.21 விணடில் இலக அடைந்து இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

    மூன்றாவது இடத்தில் பெங்களூரு dணியில் அய் மோகன் 2009.021 வினாடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன் எஷிப் போட்டியுடன் இந்தியன்ரசிங் லீக் போட்டியில் ஜேகே ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெற்றது.

    பிற்பகலில் தொடங்கி மின்னொளியில் இரவுவரை நடைபெற்ற இந்தப் பந்தயம் பார்வையார்களை வெகுவாக கணிந்தது. பார்யைளர்கள் போட்டிகளை சித்து ஆரவரம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ரசிகர்கள் அதிகளவில் குவிந்ததால் இந்த கர் பந்தயக் கொண்டாட்டத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

    இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

    அப்போது உரையாற்றுகையில் "சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள இந்த கார் பந்தயத்திற்குப் பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள இந்தக் கார் பந்தயப் போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்த ஆண்டிலும் தொடர்ந்து நடத்துவது குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.

    இந்தப் போட்டிகளில் இங்கிலாந்து போர்சுக்கல், செக்குடியரசு, டென்மார்க் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசிய, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

    கார் பந்தயங்களில் உலக நாடுகளில் பலமுறை பங்கேற்று வெற்றிகள் கண்ட அனுபவங்களுடன் இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்துக் கூறும்போது, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.கட தொலைநோக்குப் பார்வையில் ஆற்றல்மிக்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியன் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் விக் கற்றுகளுடன் இரவு நேர வீதிப் பந்தயத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    இந்த முன்முயற்சி இந்திய கார் பந்தய வீரர்களுக்குச் சர்வதேசத் தளத்தில் போட்டியிடுவதற்கு ஒரு முக்கியமான தலத்தை வழங்கும். மெலும் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் அவர்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறவும் உதவுகிறது. இந்த நிகழ்வு இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உயர்மட்ட பந்தலத்திற்கான மையமாகத் தமிழ்நாட்டை நிலைநிறுத்தும். தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை இந்தப் பந்தயத்தை நடத்துவது மேலும், சிறப்பாகும்" என்று கூறி தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளார்.

    உதயநிதி ஸ்டாயின் அவர்கள் முழு முயற்சி செய்து மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னின்று நடத்திய சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக இடம் பெற்றுவிட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு.
    • முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரது சகோதரர் சேகர் முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன்பு ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாரின் சகோதரர் சேகர், செல்வராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்ய்பப்பட்டுள்ளனர்.

    • வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
    • முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு.

    விழுப்பரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறீ சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் மாதம் 14ம் தேதி விர அவகாசம் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

    அமைச்சர் பொன்முடி வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்களாக சேர்க்கப்பட்டு இதுவரை 51 சாட்சியம் பெறப்பட்ட நிலையில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

    இதனால் கூடுதல் சாட்சிகளை சேர்த்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    • தி.மு.க. வெற்றிக்கு வாக்கு வங்கியை விட கூட்டணி பலம் தான் காரணம்.
    • இறந்தவர்கள், இடம் பெயர்ந்து போனவர்களின் பெயர்களை சரிபார்த்து நீக்க வேண்டும்.

    சென்னை:

    2026 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகுமாறு அ.தி.மு.க.வினருக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார். அப்போது வாக்கு சதவீதம் சரிவதற்கான காரணம் பற்றி கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தின்போது 40 வயதை கடந்த கட்சியினரின் ஆதரவு குறையாமல் அப்படியே இருப்பதை கண்டறிந்துள்ளார்.

    தி.மு.க. வெற்றிக்கு வாக்கு வங்கியை விட கூட்டணி பலம் தான் காரணம். தி.மு.க.வை வீழ்த்த நமது வாக்கு வங்கியை மீட்டெடுத்தால் போதும் என்ற நிலையில் கீழ் மட்ட அளவில் பிரச்சனைகளை களையவும் வாக்கு வங்கியை பலப்படுத்தவும் புதிய வியூகம் வகுத்துள்ளார்.

    அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்ட, கிளை கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தவும் 81 மாவட்ட செயலாளர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த கூட்டங்களை நேரில் ஆய்வு செய்ய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் முதல் கூட்டம் சென்னை புறநகர் மாவட்டத்தில் உள்ள கொளப்பாக்கத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்துக்கு பூத் அளவிலான நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மேலிடப் பார்வையாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜய பாஸ்கர், பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதலில் ஒவ்வொரு நிர்வாகியாக பேச விட்டு அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்கள்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமியின் செயல் திட்டங்களை அவர்களிடம் விளக்கி கூறினார்கள்.

    பூத் அளவில் கட்சியை வலிமைப்படுத்த முக்கியமான செயல்திட்டங்களை வகுத்துள்ளார்கள். ஒரு பூத்தில் சராசரியாக 1000 வாக்காளர்கள் இருப்பார்கள். இந்த பூத் ஒவ்வொன்றிலும் 9 நிர்வாகிகள் கட்டாயம் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் ஒவ்வொருவரும் 100 வாக்களர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சியினர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சேர்க்க வேண்டும். இறந்தவர்கள், இடம் பெயர்ந்து போனவர்களின் பெயர்களை சரிபார்த்து நீக்க வேண்டும்.

    இளைஞர்களின் ஆதரவை பெற வேண்டும். அதற்காக புதிய இளைஞர்களை தேட வேண்டியதில்லை. அ.தி.மு.க.வினரின் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கட்சியில் சேருங்கள். அவர்கள் தமிழக வெற்றிக் கழகம், சீமான் கட்சிகளுக்கு செல்வதை தடுக்க வேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு லேப்-டாப் கொடுத்ததையும், இளம்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்ததையும் நிறுத்தி வைத்திருப்பதையும் எடுத்து சொல்லி அ.தி.மு.க. பக்கம் இழுக்க வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில் நடக்கும் சீர்கேடுகளையும் குறிப்பிட்டு அதை சீரமைக்க அ.தி.மு.க.வில் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.

    பா.ஜனதாவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சிறுபான்மையினருக்கு உண்மையாகவே நலத்திட்டங்களை செய்தது அ.தி.மு.க. என்பதையும் தற்போதைய தி.மு.க. அரசு செயல்படுத்தும் தேவையற்ற திட்டங்களையும் அடிமட்டத்தில் இருக்கும் மக்களிடமும் விளக்கி சொல்ல வேண்டும்.

    3 மாதங்களுக்கு ஒரு முறை வட்ட கழகம், கிளை கழகம் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். அந்த பகுதியில் இருக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்கள்.

    2 கோடியே 5 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ள நிலையில் நமது வெற்றி எளிதானது. அதற்கு நீங்கள் உழைத்தால் போதும் என்றனர்.

    சுமார் 4 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் ஆர்வமுடன் கேட்டு சென்றார்கள். இதேபோல் 81 மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தவும், தி.மு.க., பா.ஜனதா, த.வெ.க. ஆகிய கட்சிகளின் செயல்பாட்டை உரிய முறையில் கடுமையாக விமர்சிக்கும் படியும் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சியினர் குடும்பத்து இளம் வாக்காளர்களை வாட்ஸ் அப் குழுக்களில் இணைத்து தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    2026-க்கான தேர்தல் வேலை அ.தி.மு.க.வில் இப்போதே சூடுபிடித்துள்ளது.

    • வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி.
    • மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் உறுதி.

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது, காவல் துறை சார்பில் 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அனுமதி கேட்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது.

    வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • 90 காலி பணியிடங்களுக்கு நட்நத தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
    • குரூப் 1 முதன்மை தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறும்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டில் காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கு முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆண்கள் 1,25,726 பேர், பெண்கள் 1,12,501 பேர், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ஆவர்.

    குரூப் 1 தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். சென்னையில் மட்டும் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 பணிகளுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என 2 தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலை தேர்வு தகுதி தேர்வு மட்டுமே.

    இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் பணி நியமனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. குரூப் 1 முதல்நிலை தேர்வு நடந்து முடிந்து 50 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    90 காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

    முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    குரூப் 1 முதன்மை தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 11 ஆயிரத்து 743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • கொசு உற்பத்தியை தடுக்க அனைத்து பகுதிகளிலும் மருந்துகள் தெளிப்பது, புகை அடிப்பது போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 11 துறைகள் இணைந்து இன்று ஆலோசனை நடத்தியது.

    பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 11 ஆயிரத்து 743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பு விகிதம் கடந்த ஆண்டுகளை விட மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4 பேர் இறந்துள்ளார்கள்.

    இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு 66 பேரும், 2017-ம் ஆண்டு 65 பேரும் இறந்தனர். அரசு எடுத்த தீவிர முயற்சியால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    டெங்கு பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டும் பருவ மழை காலங்களில் பரவும் தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிகாய்ச்சல், பன்றி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்த 4,676 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படுகிறது.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், பரிசோதனை கருவிகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன.

    கொசு உற்பத்தியை தடுக்க அனைத்து பகுதிகளிலும் மருந்துகள் தெளிப்பது, புகை அடிப்பது போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கும் தேவையான மருந்துகள், எந்திரங்கள் கையிருப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரித்தாலும், அதன் பயன்கள் மனித வளத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
    • அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது மூலம் என்.எல்.சி நிறுவனம் பெரும் பணத்தை மிச்சம் செய்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பாட்டாளி மக்கள் வழங்கிய நிலங்களை ஆதாரமாகக் கொண்டு தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம், இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. 2023-24-ம் ஆண்டில் என்.எல்.சி நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.2,787 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,846 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் என்.எல்.சி நிறுவனத்தின் வருவாய் ரூ.3,376 கோடியாகவும், லாபம் ரூ.559.42 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது.

    எந்த ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரித்தாலும், அதன் பயன்கள் மனித வளத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், என்.எல்.சி நிர்வாகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. அதிக லாபம் ஈட்டி உள்ள என்.எல்.சி நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இயல்பாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறது. என்.எல்.சி நிறுவனம் இந்த அளவுக்கு லாபம் ஈட்டுவதற்கு காரணமாகத் திகழும் அதன் தொழிலாளர்கள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதற்குக் கூட என்.எல்.சி நிறுவனம் மறுத்து வருவது அடிப்படை மனித உரிமைகளுக்கும், தொழிலாளர் நல விதிகளுக்கும் எதிரானது ஆகும்.

    என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்யாமல், அவர்களை ஒப்பந்த ஊழியர்களாகவே வைத்திருந்து அவர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட பாதிக்கும் குறைவான ஊதியத்தை வழங்குவது, ஓய்வுக்குப் பிந்தைய உரிமைகளை வழங்க மறுப்பது, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது ஆகியவற்றின் மூலம் என்.எல்.சி நிறுவனம் பெரும் பணத்தை மிச்சம் செய்கிறது. என்.எல்.சி.யின் லாபம் அதிகரிக்க தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலும் ஒரு காரணம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போதைப்பொருள் புழக்கம் கடுகளவு குறைந்த பாடில்லை.
    • தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    விடியா திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன.

    வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை.

    விடியா திமுக ஆட்சியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது.

    இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது.

    வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பல ரெயில்களை தெற்கு மத்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது.
    • சில ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    சென்னை:

    ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகின்றன. இதனால் ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

    பல ரெயில்களை தெற்கு மத்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது. சில ரெயில்களை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களுக்கு செல்லும் பெரும்பாலானா ரெயில்கள் ஆந்திரா வழியாத்தான் கடந்து செல்ல வேண்டும்.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.

    தண்ட வாளத்தில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் ரெயில்களை இயக்க முடியாத நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    சென்ட்ரல்-பூரி, அகமதாபாத்-சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ், சென்ட்ரல்-சாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மைசூரு-ஹவுரா, ஹவுரா-மைசூரு எக்ஸ்பி ரஸ், ஐதராபாத்-தாம்பரம், சென்ட்ரல்-சாப்ரா கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், சாப்ரா-சென்ட்ரல், சென்ட்ரல்-டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ் பிரஸ், டெல்லி-சென்ட்ரல் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ஐதராபாத், சென்ட்ரல்-டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கொச்சுவேலி-கோர்பா எக்ஸ்பிரஸ், பிலாஸ்பூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், காக்கிநாடா-பெங்களூரு சேஷாத்திரி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ஆகியவை 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் நேற்று முதல் ரத்து செய்யப் பட்டதால் சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் பயணத்தை தொடர முடியாமல் தவிக்கின்றனர்.

    முன்பதிவு செய்த பயணிகள் சொந்த ஊர் செல்ல முடியாமல் சென்ட்ரல் நிலையத்தில் தங்கி உள்ளனர்.

    பயணிகளுக்காக உதவி மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. சென்ட்ரல் நிலையத்தில் 044-25354995, 044-25354151 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேசினால் தகவல் கிடைக்கும்.

    இதுதவிர விஜயவாடா, ராஜ முந்திரி, ஒங்கோல், தெனாலி, நெல்லூர், கூடூர், குடிவாடா, குண்டூர், ஐதராபாத், செகந்திரபாத் உள்ளிட்ட 18 ரெயில் நிலையங்களை தொடர்பு கொள்ளவும் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    இதேபோல ஆந்திரா மார்க்கமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பிற நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. 15 ரெயில்கள் வேறு வழிகளில் மாற்றி விடப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். அவர்களை நிலையத்திற்குள் விடாமல் முன் பகுதியிலே ரெயில்வே ஊழியர்கள் தகவல்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    ரெயில்கள் ரத்து, தாமதம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள 'கியூ ஆர் கோடு' வசதியை சென்ட்ரல் நிலையத்தின் நுழைவு பகுதியில் வைத்திருந்தனர்.

    இதனை ஸ்கேன் செய்தால் ரெயில்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ரெயில் நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டால் நெரிசல் ஏற்படும் எனக் கருதி முன்எச்சரிக்கையாக இந்த நடவடிக்கையினை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    • ஒரு மலையாள படப்பிடிப்பின்போது அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
    • ராதிகா சரத்குமாரின் பேட்டி திரை உலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை:

    மலையாள திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பாலியல் வன்முறைகள் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகிலும் உள்ளது.

    ஒரு மலையாள படப்பிடிப்பின்போது அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதுபற்றி கூட்டத்தில் தமிழ் தெரிந்த ஒருவரிடம் விசாரித்தபோது கேரவனில் ரகசியமாக கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    இதையடுத்து கேரவன் ஆட்களை அழைத்து கேரவனுக்குள் கேமரா வந்தால் செருப்பால் அடிப்பேன் என எச்சரித்தேன். தொடர்ந்து நான் கேரவனை பயன்படுத்துவதில்லை. ஓட்டலுக்கு சென்று விடுவேன் என கூறினார்.

    ராதிகா சரத்குமாரின் பேட்டி திரை உலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

    தொடர்ந்து கேரவனுக்குள் ரகசிய கேமரா பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பிய ராதிகாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ராதிகாவை தொலைபேசியில் கேரள போலீசார் தொடர்பு கொண்டு கேரவனுக்குள் ரகசிய கேமரா பயன்படுத்தப்பட்ட சம்பவம் பற்றி விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ×