என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டெங்கு காய்ச்சலை தடுக்க 11 துறைகள் இணைந்து நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    டெங்கு காய்ச்சலை தடுக்க 11 துறைகள் இணைந்து நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 11 ஆயிரத்து 743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • கொசு உற்பத்தியை தடுக்க அனைத்து பகுதிகளிலும் மருந்துகள் தெளிப்பது, புகை அடிப்பது போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 11 துறைகள் இணைந்து இன்று ஆலோசனை நடத்தியது.

    பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 11 ஆயிரத்து 743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பு விகிதம் கடந்த ஆண்டுகளை விட மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4 பேர் இறந்துள்ளார்கள்.

    இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு 66 பேரும், 2017-ம் ஆண்டு 65 பேரும் இறந்தனர். அரசு எடுத்த தீவிர முயற்சியால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    டெங்கு பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டும் பருவ மழை காலங்களில் பரவும் தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிகாய்ச்சல், பன்றி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்த 4,676 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படுகிறது.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், பரிசோதனை கருவிகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன.

    கொசு உற்பத்தியை தடுக்க அனைத்து பகுதிகளிலும் மருந்துகள் தெளிப்பது, புகை அடிப்பது போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கும் தேவையான மருந்துகள், எந்திரங்கள் கையிருப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×