என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இஸ்ரேல் நாட்டில் இன அழிப்பு போர் கண்டனத்துக்கு உரியது.
- வனத்துறை அமைச்சர் பழங்குடி மக்களையும், வனங்களையும் பாதுகாக்க வேண்டும்.
கோவை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இஸ்ரேல் நாட்டில் இன அழிப்பு போர் கண்டனத்துக்கு உரியது. இது உலகளவில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை முன்னாள் பிரதமர் நேரு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டார்.
ஆனால் தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் எதிரானது. எனவே நமது தேசம் இனஅழிப்புக்கு எதிராக செயல்பட வேண்டும். இதை வலியுறுத்தி இடதுசாரிகள் சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றும் 1500 தொழிலாளர்கள் தங்களுக்கென சங்கம் அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இதற்கு அவர்களுக்கு சட்டரீதியாக உரிமை உண்டு. இந்த விஷயத்தில் தலையிட்டு 3 அமைச்சர்கள் குழுவை அமைத்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி.
கோவை மாவட்டத்தில் பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களை அபகரித்து ஆக்கிரமிக்கும் போக்கு அதிகளவில் நடந்து வருகிறது. மேலும் வனத்துறையினர் பழங்குடியிருனக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து நவீன விடுதிகளை அமைத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தரப்பட்டு உள்ளது. இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சனை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தனிப்பட்ட உரிமையாளருக்கு ஆதரவாக செயல்படுவது ஆபத்தானது. எனவே வனத்துறை அமைச்சர் பழங்குடி மக்களையும், வனங்களையும் பாதுகாக்க வேண்டும்.
மின்கட்டண உயர்வு சிறு-குறு தொழில்களை பாதித்து உள்ள விஷயத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று உள்ளோம். தேர்தலுக்கு பிறகு மின்கட்டண உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென சொன்ன மாநில அரசு, மின்கட்டண உயர்வில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ராஜபாளையம் பகுதியில் மூடப்பட்ட நூற்பாலை தொழிலை காப்பாற்ற, மூலப்பொருட்கள் கிடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு இருப்பதாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். ஆனால் அனைத்திலும் அரசியல் செய்கிறீர்கள். கடவுளையாவது விட்டு வையுங்கள் என சுப்ரீம் கோர்ட்டு கண்டித்து விசாரணை குழுவும் அமைத்து உள்ளது. அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து விட்டது. நிறைய பிரச்சனைகள் உள்ள நிலையில் மக்களை திசை திருப்ப அற்பத்தனமாக அரசியல் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
- குதூகலத்துடன் பார்வையிட்டு விடுமுறையை கொண்டாடினார்கள்.
கன்னியாகுமரி:
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை யொட்டி கன்னியாகுமரியில் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.
இதற்காக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலாp பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி, சுசீந்திரம் தாணுமாலை சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில் போன்ற கோவில்களில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர்.
வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகள் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, அரசு பழத் தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதாகோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை கடற்கரை, கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இன்று காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குதூகலத்துடன் பார்வையிட்டு விடுமுறையை கொண்டாடினார்கள். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களை கட்டியது.
இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- விமானப்படை சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
- பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய வான்படையினர் பாராஷூட், ஹெலிகாப்டர், இலகு ரக விமானம், போர் விமானம் என இந்திய வான்படைக்கு சொந்தமான விமானங்களில் சாகசங்களை செய்து காண்பித்து மெரினாவில் கூடியவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய வான்படைக்கு சொந்தமான சுகோய் SU-30MKI போர் விமானம் செய்த சாகச வீடியோவை கீழே காணலாம்..,
சாரங் ஹெலிகாப்டர்கள் நிகழ்த்திக் காட்டிய சாகசங்கள் தொடர்பான வீடியோவை கீழே காணலாம்..,
சுகோய் Su-30MKI செய்த சம்பவத்தின் வீடியோவை கீழே காணலாம்..,
- குழந்தைகளை தவற விட்டு தவித்த பரிதாபம்.
- மெரினா கடற்கரையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம்.
மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் தினத்தில்தான் மக்கள் அதிக அளவில் வருவார்கள். அப்போது மாலை நேரத்தில் வெயில் ஓய்ந்த பிறகே மக்கள் கூட்டம் காணப்படும்.
ஆனால் இன்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காணும் பொங்கலை மிஞ்சும் அளவுக்கு பொதுமக்கள் வயது வித்தியாசம் இன்றி கடறகரை முழுவதும் திரண்டிருந்ததை காண முடிந்தது.

இதனால் கடற்கரை மணற்பரப்பே தெரியாத அளவுக்கு மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. குழந்தைகளை தவற விட்டு தவித்த பரிதாபம்
மெரினா கடற்கரையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது. சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிப்பதற்காக குடும்பத்தோடு பலரும் வந்திருந்தனர். இவர்களில் பலர் தங்களது குழந்தைகளை தொலைத்து விட்டு கண்ணீருடன் தேடி அலைந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- வெயில் அதிகமாக இருந்ததால் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தனர்.
- பிரமுகர்களுக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
சென்னை:
விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் மெரினா கடற்கரை பகுதிக்கு வந்தார்.
அங்கு அமைக்கப்பட்டு இருந்த நிழல் பந்தலில் மு.க.ஸ்டாலின், மனைவியுடன் விமான சாகசங்களை பார்த்தார். வெயில் அதிகமாக இருந்ததால் மு.க.ஸ்டாலினும், துர்கா ஸ்டாலினும் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தனர். அவர்கள் கைதட்டி ரசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை ஏர்மார் ஷல் ஏ.பி.சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விமான சாகசத்தை கண்டு களித்தனர்.
விமான சாகசத்தை பார்ப்பதற்காக மெரினாவில் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். இதனால் முக்கிய பிரமுகர்களுக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இருந்து சாகச நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்செந்தூர்:
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருவதால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இங்கு சத்ரு சம்ஹார பூஜை, குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுவதால் ஏராளமானோர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.
இங்கு வழங்கப்படும் நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும். இலை விபூதி பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த கோவிலில் சுப முகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது. தற்போது புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா நடப்பதால் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கும் வந்து தரிசனம் செய்வதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

அதற்காக பக்தர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் முருகப்பெருமானையும், பெருமாளையும் ஒரு சேர தரிசிக்க வாய்ப்பு உள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதாலும் விடுமுறையை கொண்டாட பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து இருந்தனர்.
- அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.
சென்னை:
மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகசத்தை பார்க்க 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து இருந்தனர். இதனால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. விமானங்கள் சீறிப்பாய்ந்த போது பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
- இல்லம் தேடி சென்றும் பரிசோதனை நடத்துகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நல வாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மையம் என 198 சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் பரிசோதனை செய்வதுடன், இல்லம் தேடி சென்றும் பரிசோதனை நடத்துகின்றனர்.
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 478 பேருக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 816 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 699 பேர் வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. 86 ஆயிரத்து 63 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கும், 62 ஆயிரத்து 880 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 9 பேருக்கும் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மொத்தம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 642 பேருக்கு பரிசோதனை செய்ததில் 53 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- போலீசார் அந்த ஓட்டலில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
- தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கோவை:
கோவை அவினாசி ரோட்டில் உள்ள 3 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஓட்டல் ஒன்றில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதனால் போலீசார் அந்த ஓட்டலில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
ஓட்டல்களுக்கு வந்த இ-மெயில் மிரட்டலில் கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஜமேஷா முபின் இறந்து இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஐ.எஸ்.அமைப்பினர் அந்த ஓட்டல்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், காலை 10.30 மணிக்கு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வெடிகுண்டு சோதனையில் அது புரளி என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
காரணம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் தான் கோவையில் கார்குண்டு வெடித்து ஜமேஷா முபின் பலியானான். கோவையில் தீபாவளி கூட்டத்தில் கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்து பெரும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த சதியில் ஜமேஷா முபினே சிக்கி பலியானான்.
இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதுதொடர்பாக 5-க்கும் மேற்பட்ட முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாநிலம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் தற்போது தீபாவளி பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புதுத்துணிகள், நகைகள் எடுப்பதற்காக கோவையின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் இப்போதே கூடத் தொடங்கி விட்டனர். இதை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மக்கள் அதிகம் கூடும் கோவை ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி மற்றும் காந்திபுரம் கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு போன்ற இடங்களில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் நின்றவாறும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுமாறும், சந்தேக நபர்கள் யாராவது தென்பட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் ஒலிபெருக்கிகள் மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
தீபாவளியை நெருங்கும் வேளையில் ஆயிரக்கணக்கான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- காலை 10 மணியளவில் மெரினா கடற்கரை மணற் பரப்பு முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன.
- வண்ண புகைகளை கக்கிய படியே மிக அருகாமையில் வட்டமிட்டபடியே பறந்து சென்றன.
சென்னை:
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி என்பதால் அதனை கண்டு ரசிக்க பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது.
விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மெரினா கடற்கரைக்கு இன்று காலை 7 மணியில் இருந்தே பொதுமக்கள் வர தொடங்கினார்கள். கோவில் திருவிழாக்களுக்கு செல்வது போன்று கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் மெரினா கடற்கரை நோக்கி பொதுமக்கள் குடும்பத்தோடு படையெடுத்தனர்.
மெரினா கடற்கரை சாலை பகுதி மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அமதிக்கப்படவில்லை. இதனால் தங்களது வாகனங்களை தூரத்திலேயே நிறுத்தி விட்டு கடற்கரைக்கு மக்கள் நடந்தே சென்றனர்.
காலை 10 மணியளவில் மெரினா கடற்கரை மணற் பரப்பு முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. 11 மணிக்கு சாகச நிகழ்ச்சி தொடங்கியதும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதனை கண்டு ரசித்தார்கள்.
சிறுவர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருமே விமான சாகச நிகழ்ச்சியை கைதட்டி ரசித்து மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்கள். விமானங்கள் தொடர்ச்சி
க சாகசத்தில் ஈடுபட்டதை மெய்சிலிர்த்த படியே கண்டு ரசித்தனர். தங்களது செல்போன்களில் சாகச காட்சிகளை வீடியோக்களாகவும் படம் பிடித்தனர்.
இன்று காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில் சாகச நிகழ்ச்சி தொடங்கிய போது வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள மிகுந்த உற்சாகத்தோடு சாகச நிகழ்ச்சிகளை பிரமித்து பார்த்தார்கள்.

இதன் காரணமாக மெரினா கடற்கரை பகுதி காணும் பொங்கல் தினத்தன்று காணப்படுவது போல களை கட்டி கோலாகலமாக காட்சியளித்தது. விமான சாகசத்தில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்கியும், பாராசூட் மூலம் கீழே குதித்தும் சாகசத்தில் ஈடுபட்டனர்.
அதனை கடற்கரை மணற் பரப்பில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மிரட்சியோடு கண்டு ரசித்ததை காண முடிந்தது.
சாகசத்தில் ஈடுபட்ட விமானங்கள் 4 திசைகளிலும் பயங்கர சத்தத்தோடு சீறிப் பாய்ந்தன. அப்போது வண்ண புகைகளை கக்கிய படியே மிக அருகாமையில் வட்டமிட்டபடியே பறந்து சென்றன. இது கூடியிருந்த பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்திருந்தது.
மெரினா கடற்கரையில் மட்டும் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரை விமான சாகசத்தை இன்று கண்டு களிக்கின்றனர்.

மெரினாவில் நடைபெறும் இந்த விமான சாகச நிகழ்ச்சியை கோவளம் முதல் மெரினா வரை உள்ள கடற்கரை பகுதி முழுவதும் கண்டு களிக்கலாம் என விமானப் படை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இதன்படி கோவளத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிகள் மற்றும் மயிலாப்பூர், சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதுமே இன்று தங்கள் வீட்டு மாடிகளில் நின்றபடி பொதுமக்கள் விமான சாகசத்தை கண்டு ரசித்தனர்.
இதன் மூலம் 15 லட்சம் பேர் வரை இன்றைய விமான சாகசத்தை கண்டு ரசித்ததாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சாகச நிகழ்ச்சி விமான சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
- சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகு படுத்துகின்றன.
- நாளை மாலை 6 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை:
சென்னை. கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்கா அமைந்துள்ள இடம் முன்னர் ஒரு சங்கத்தின் கட்டுப்பாட்டில் தனியாரிடமிருந்தது. இதனைத் தொடர்ந்து, நீண்ட சட்டப்போராட் டத்திற்குப் பிறகு அரசால் மீட்கப்பட்டு தோட்டக் கலைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.8.2023 அன்று சுதந்திர தினவிழா உரையில் 'சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்' என்னும் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி சென்னை மாநகர மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவினை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 27.2.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்பூங்காவில், பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம் பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம்.
தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்டப்பாதை. 2600 சதுர அடியில் அமைக் கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில், அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுர அடிப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை.

அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பூங்கா 45 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. பூங்கா அனுபவத்தினை என்றென்றும் நினைவுகூரும் வகையில் நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது.
இணையதளத்தின் வாயிலாக நுழைவுகட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச்சீட்டினை: https://Inhorticulture.in/kcpetickets விரைவுத்துலங்கல் குறியீடு வழியாகவும் நுழைவுச் சீட்டினை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மேயர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், துறை செயலாளர் அபூர்வா பங்கேற்கிறார்கள்.
- ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர்’ மீதான எனது அன்பும் அபிமானமும், சென்னையில் நான் வளர்ந்ததில் ஒரு அங்கம்.
- புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று பவன் கல்யாணம் கூறியிருந்தார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமத்துவம்-சமூகநீதி தழைக்க, ஜாதி-மதசார்பற்று அனைவரும் அனைத்தும் பெற, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கண்டெடுத்து, புரட்சித்தலைவி வளர்த்த, எனது தலைமையிலான மாபெரும் இயக்கமாம் அதிமுகவின் 53வது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' மீதான எனது அன்பும் அபிமானமும், சென்னையில் நான் வளர்ந்ததில் ஒரு அங்கம். அது இன்னும் அப்படியே இருக்கிறது. 'அதிமுகவின் 53-வது தொடக்க நாளான அக் 17ஆம் தேதி புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று பவன் கல்யாணம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






