என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அணைக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீரின் வரத்து அதிகரித்து.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    பரம்பிக்குளம்-ஆழியாறு பிஏபி திட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட அணையாக பரம்பிக்குளம் அணை உள்ளது.

    இந்த அணையின் முழு கொள்ளளவான 17.82 டி.எம்.சியை எட்டிவிட்டால் ஒரு ஆண்டுக்கு குடிநீருக்கும், பாசனத்துக்கும் போதுமானதாக இருக்கும்.

    இந்த பிஏபி திட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்ததால் திட்டத்தில் உள்ள அனைத்து தொகுப்பு அணைகளும் நிரம்பின. இதையடுத்து பரம்பிக்குளம், ஆழியாறு ஆகிய அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    தென்மேற்கு பருவமழை குறைந்த பிறகு அணைகளில் இருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீரின் வரத்து அதிகரித்து. நேற்று பரம்பிக்குளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டி முழுவதுமாக நிரம்பியது.

    அணை நிரம்பியதை அடுத்து, பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து மதகுகள் வழியாக 2,500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    • மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை ஆபத்தானது.
    • முதல்வர் தலையிட்டு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் 500 ஆக இருந்தாலும் கடந்த 3 ½ ஆண்டுகளில் 600 மன மகிழ் மன்றங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. எப்.எல்.2 என்ற பெயரில் அரசின் உரிமம் பெற்றால் யார் வேண்டுமென்றாலும் மது விற்பனை செய்யலாம். இதற்கு தி.மு.க. அரசு பல சலுகைகள் வழங்குகிறது. மனமகிழ் மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விநியோகிக்க வேண்டும் என்ற விதி தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகள் வைக்கக்கூட வசதி இல்லாத இடத்திலும் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது.

    முந்தையை ஆட்சியோடு சேர்த்து தற்போது 1500 மனமகிழ் மன்றங்கள் திறந்து வைத்துக்கொண்டு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்றுவேலை. கடந்த தீபாவளிக்கு 467 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக தற்போது கடந்த ஆண்டைவிட 20 விழுக்காடு வைக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

    தீபாவளிக்கு முன்னும் பின்னும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூடவேண்டும். 1500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை ஆபத்தானது. ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி 31 ஆக குறைக்கப்பட உள்ளதை எதிர்த்து மத்திய அரசிடம் போராட வேண்டும். இப்போதே தரமான கல்வி, மருத்துவம் வழங்க இயலவில்லை. தமிழகத்தில் மக்கள்தொகை கட்டுப்பாட்டுப்பணிகள் இப்போது உள்ளபடியே இருக்க வேண்டும்.

    தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றவேண்டும். ஓசூரில் டாடா நிறுவனத்தில் பணியாற்றிய 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. அளித்த 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இச்சட்டத்தை நிறைவேற்றவேண்டும்.

    தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது புதிய ஊழலுக்கு வழிவகுக்கும். ஒரு தனியார் பேருந்து நாளொன்றுக்கு 600 கி.மீ. இயக்கப்பட்டால் 1000 பேருந்து இயக்கப்பட்டால் ரூ 1. 14 கோடி இழப்பு ஏற்படும். மின்வாரியம் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதில் கமிஷன் கிடைப்பது போல தனியார் பேருந்து இயக்கப்படுவதால் மின் கட்டணம் போல பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டபோதிலும் 17 முதல் 30 மாதங்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படவில்லை. முதல்வர் தலையிட்டு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்கவேண்டும். கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக, பகுதி நேர, ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒரு வாரம் முன்பாக இன்றோ, நாளையோ முன்கூட்டியே ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை. வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட மருதுபாண்டியர்களின் 223-ம் ஆண்டு நினைவு நாளை போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்

    பேட்டியின்போது பா.ம.க. பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கட்சி தொடர்பான அறிவிப்புகளை நடிகர் விஜய் அடிக்கடி வெளியிட்டார்.
    • மாநாட்டு திடல் பகுதி முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டது.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சி கொடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தார்.

    கட்சி தொடர்பான அறிவிப்புகளை நடிகர் விஜய் அடிக்கடி வெளியிட்டார். இவை அனைத்தும் தமிழக மக்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த மாநிலம் தழுவிய முதல் அரசியல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் முடிவு செய்தார். அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

    மாநாட்டுக்காக நூற்றுக்கணக்கான ஏக்கரில் பார்வையாளர்கள் அமர தனி இடம், வாகனங்கள் நிற்க தனி இடம் என்று அனைத்து வசதிகளும் செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    தினசரி அங்கு நடைபெறும் ஒவ்வொரு பணிகளும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த விதத்தில் நேற்று முன்தினம் மாநாட்டு திடல் பகுதி முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டது.

    இந்த சூழலில் நேற்று மாநாட்டு திடலில் மேடை வடிவமைப்பு மற்றும் நுழைவு வாயில் பகுதிகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதுவும் வழக்கம் போல் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது. மேடை பணிகள் முழுமையாக முடிவடையாவிட்டாலும், அதன் முன்பகுதியில் கட்சியின் கொடி இரு யானைகளுடன் வரையப்பட்டு, அதற்கு கீழே 'வெற்றிக் கொள்கை திருவிழா' என்று குறிப்பிட்டுள்ளனர்.

    இதுதவிர இன்னும் மேடையில் என்னவெல்லாம் இடம்பெற்று கவனம் பெற போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் உள்ளனர். இதேபோன்று, மற்றொரு பணியாக மாநாட்டு திடல் நுழைவு பகுதி கோட்டை மதில் சுவர் போல் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு உள்ளே நுழையும் பாதையில் இரு புறங்களிலும் பிளிறும் இரு யானைகள் இடம் பெற்று இருக்கிறது.

    மழையால் பாதிக்காமல் இருக்க மாநாட்டு திடல் அமைந்துள்ள 85 ஏக்கர் பரப்பளவுக்கும் பச்சை நிறத்தில் தரைவிரிப்பு போடும் பணிகள் நேற்று தொடங்கியது. தரைவிரிப்புக்கு மேல் இருக்கைகள் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். தரைவிரிப்பு, அதற்கு மேல் பறக்கும் கட்சி கொடிகள் என்று அந்த பகுதியே வண்ணமயமாக மிளிருகிறது.

    மாநாட்டுக்காக திடல் எந்தஅளவில் தயாராகி வருகிறதோ, அதேபோன்று அங்கு வருகை தரும் தொண்டா்கள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.


    அதன் ஒருபகுதியாக குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் மற்றும் 350 நடமாடும் கழிவறைகள் வந்திறங்கின. அவற்றை மாநாட்டு திடலின் முக்கிய பகுதிகளிலும், மாநாட்டு திடலுக்கு வெளியே பிரதான இடங்களிலும் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

    மேலும் 700 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நேற்று முதல் தொடங்கியது. மாநாட்டு திடலில் 1500 பேர் அமரும் வீதம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி கொடிகள், சீரியல் விளக்குகள், சாலை நடுவே உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் மட்டும் நேரடியாக மேடைக்கு செல்ல தனிவழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாநாட்டின் போது போக்குவரத்தை சீரமைப்பதற்காக கட்சி சார்பில் போலீசாருக்கு 100 பேரிகார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதனிடையே விஜய்யின் கொள்கை என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதுபோன்ற சூழலில் நேற்று மாலையில் மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட்கள் வைக்கப்பட்டு, அவர்களுடன் விஜய் இருப்பது போன்ற கட்-அவுட் அமைக்கப்பட்டது. பலரது கவனத்தையும் பெற்றது.

    மேலும் 2 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் கரும்புகள் என்று வரவேற்புக்கு தேவையான அலங்கார பொருட்களும் பெருமளவில் அமைக்கதிட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த பொருட்கள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே அமைக்கவேண்டும் என்று கட்சியினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    பணிகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) முடிக்கப்படும் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து விஜய் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி புறப்படுவதற்கு தயாராகி வருகிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருவதற்கு தனித்தனி குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுக்குள் வரும்போது மற்றும் மாநாடு முடிந்து திரும்பி செல்லும்போது நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பிரத்யேக குழு உருவாக்கப்பட்டுள்ளது.

    தொலை தூரங்களில் இருந்து வரும் வெளி மாவட்ட நிர்வாகிகள் ஒரு நாளைக்கு முன்பே நாளை மறுநாள் விக்கிரவாண்டிக்கு புறப்பட வேண்டும் என்பதால் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விக்கிரவாண்டி வந்ததும் குளித்து தயாராக ஆங்காங்கே மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் காலையில் மாநாட்டு அரங்கு பகுதிக்கு வந்து உணவு அருந்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாநாட்டு அரங்கு பகுதியில் பல்வேறு நுழை வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து வாயில்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தொண்டர்கள் காலை மற்றும் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மாநாட்டு அரங்கில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் தொண்டர்கள் ஞாயிற்றுக் கிழமை காலை முதல் புறப்பட்டு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு காலை உணவு அவர்களது வாகனங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்களில் தொண்டர்களை அழைத்து வருவதற்கும், உணவு வழங்குவதற்கும் தனித்தனி குழுக்கள் பணியாற்றத் தொடங்கி உள்ளன.

    தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் அனைவரும் மதியம் 2 மணிக்குள் மாநாட்டு பந்தலுக்குள் வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் அனைவரும் விஜய் படம் போட்ட டிஷர்ட் மற்றும் தொப்பி அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெண்கள் சீருடைகளில் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பெண்கள் பாதுகாப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    தொண்டர்கள் 2 மணிக்கு அமர்ந்ததும் அந்தந்த பொறுப்பாளர்கள் மூலம் கண்காணிக்க கேட்டுக் கொள்ளப்படும். பிற்பகல் 4 மணிக்கு சரியாக மாநாடு தொடங்கும். முதலில் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றுவார்கள். இதைத் தொடர்ந்து கட்சி தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கை அறிக்கையாக வெளியிடப்படும். இதையடுத்து நடிகர் விஜய் சிறப்புரையாற்றுவார். இரவு 8 மணி அளவில் அவர் தனது பேச்சை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 அல்லது 9.30 மணிக்கு மாநாடு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியூர் தொண்டர்கள் அன்று இரவே பாதுகாப்புடன் ஊர் திரும்ப பொறுப்பாளர்கள் முன் நின்று பணிகளை கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விஜய் பேச்சை கேட்பதற்காக கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமூகவலை தளங்களில் விஜய் கட்சி மாநாடு பற்றிய தகவல்கள் வைரலாக பரவி டிரெண்டிங்காக உள்ளது. அரசியல் கட்சி தொடங்கி விஜய் நடத்தும் முதல் அரசியல் மாநாடு அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    • சண்முகத்தின் உறவினர் கடைசியில் இருந்த போது வாடிக்கையாளர் ஒருவர் வந்து அரிசி கேட்டுள்ளார்.
    • சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு வந்த சண்முகம் அந்த அரிசி மூட்டை இல்லாததை கண்டு திடுக்கிட்டுட்டார்.

    'கொசுவுக்கு பயந்து வீட்டைகொளுத்துன' பழமொழியை நாம் கேள்விபட்டு இருக்கோம். அதுபோல திருடனுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை கடை உரிமையாளர் மறைத்து வைத்திருந்தார். இதனை அறியாத அவரது உறவினர் அந்த அரிசி மூட்டையை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சண்முகா அரிசி மண்டி  உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் சண்முகம். இவர் கடையில் வசூலான ரூ.15 லட்சம் பணத்தை திருட்டுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.10 லட்சத்தை ஒரு பையிலும், ரூ.5 லட்சத்தை மற்றொரு பையிலும் போட்டு மறைத்து வைத்து மற்ற அரிசி மூட்டைகளுடன் சேர்த்து வைத்துள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலையில் சண்முகத்தின் உறவினர் கடைசியில் இருந்த போது வாடிக்கையாளர் ஒருவர் வந்து அரிசி கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.15 லட்சம் மறைத்து வைத்திருந்த அரிசி மூட்டையை எடுத்து விற்பனை செய்துள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு வந்த சண்முகம் அந்த அரிசி மூட்டை இல்லாததை கண்டு திடுக்கிட்டுட்டார். இதுகுறித்து விசாரித்த போதுதான், விபரம் தெரியவந்தது. உடனே வாடிக்கையாளரின் முகவரி தேடி சென்று விசாரித்த போது அந்த மூட்டைக்குள் ரூ.10 லட்சம் தான் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் உரிய முறையில் விசாரித்து ரூ.5 லட்சத்தை மீட்டு தர வேண்டும் என்று சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சுருங்கும் தன்மை காரணமாக டைல்சில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது.
    • பூச்சு பணிகள் சரியாக செய்யப்படவில்லை என கூறுவது தவறான குற்றச்சாட்டு.

    சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென அதிர்வு உணரப்பட்டதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், விரிசலை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னை தலைமைச்செயலக கட்டிடம் உறுதியாக உள்ளது. அச்சம் வேண்டாம்.

    * தலைமைச்செயலக கட்டிடத்தின் உறுதித்தன்மை உருக்குலையவில்லை.

    * டைல்சில் ஏற்பட்ட ஏர் கிராக்கை அலுவலக ஊழியர்கள் விரிசல் என நினைத்து பயந்துவிட்டனர்.

    * சுருங்கும் தன்மை காரணமாக டைல்சில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது.

    * தற்போது பொறியாளர்கள் பரிசோதித்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிய வந்துள்ளது.

    * 1974-ல் கட்டப்பட்ட கட்டிடத்தில் 14 வருடங்களுக்கு முன் சிறுசிறு டைல்ஸ்கள் போடப்பட்டது.

    * பூச்சு பணிகள் சரியாக செய்யப்படவில்லை என கூறுவது தவறான குற்றச்சாட்டு.

    * 1-க்கு 1 என்று அளவில் போடப்பட்டுள்ள பழைய டைல்ஸ்கள் அகற்றப்பட்டு 2-க்கு 2 டைல்ஸ் நாளையே போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திட்டத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரெயிலை பயன்படுத்துவதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

    சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில், மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும் (45.4 கி.மீ), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பனிமனை வரையிலும் (26.1 கி.மீ), மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் (44.6 கி.மீ) என சுமார் 116.1 கி.மீ தொலைவிற்கு 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திட்டத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரெயிலை பயன்படுத்துவதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரெயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூபாய் 1,215.92 கோடிமதிப்பில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கியது.

    இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8-ந்தேதி ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டது. அதன் பிறகு முதல் ரெயிலினை கடந்த செப்டம்பர் 22-ந் தேதி தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.

    இந்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரெயிலினை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.

    அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 3 பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டம் வரும் 26-ந் தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சேகர்புரம் ஏரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 49). இவர், அங்குள்ள கூட்டுறவு சொசைட்டியில் தணிக்கையாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தண்டபாணி, உடல் நிலை பாதிப்பின் காரணமாக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டிற்குள் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ லாக்கரில் இருந்த 27 பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளி பொருட்கள் உள்பட மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பிலான நகை-பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    உடனே இது குறித்து தண்டபாணி உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளனர். அப்போது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் குரைக்கவே, கொள்ளையர்கள் நாய்க்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். நாய் மயங்கியதும் வீட்டிற்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • அச்சம் எதுவுமின்றி உள்ளே செல்லுங்கள் என்று காவல் துறையினர் அறிவுறுத்தினர்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைவரும் வெளியேறியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசலை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    வெளியே ஓடி வந்த ஊழியர்களிடம் ஒரு பிரச்சனையும் கிடையாது, அச்சம் எதுவுமின்றி உள்ளே செல்லுங்கள் என்று காவல் துறையினர் அறிவுறுத்தினர்.

    • பலமுறை ரெயில்வே அமைச்சரை நேரில் சந்தித்தும், பாராளுமன்றக் கூட்டத்திலும் வலியுறுத்தினேன்.
    • கடந்த ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட தென்னக ரெயில்வே பொது மேலாளர் உடனான கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்தேன்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை ரெயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாக தமிழர்களின் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது. ரெயில்வே நிர்வாகத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்கு உரியது.

    இது குறித்து ஏற்கனவே நான் பலமுறை ரெயில்வே அமைச்சரை நேரில் சந்தித்தும், பாராளுமன்றக் கூட்டத்திலும் வலியுறுத்தினேன். நல்ல முடிவு எடுப்பதாக அப்போது உறுதி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட தென்னக ரெயில்வே பொது மேலாளர் உடனான கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்தேன்.

    அப்பொழுதும் நல்ல முடிவினை தெரிவிப்பதாக பொது மேலாளர் கூறினார். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரெயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
    • வெயிலின் தாக்கமானது முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று மாலை முதல் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இரவு முழுவதும் மிதமான மழை பெய்து வந்த நிலையில் காலையில் மழைப்பொழிவு குறைந்ததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் சீரானது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் குளிக்க அனுமதிக்கப் பட்டனர்.

    தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கமானது முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது.

    • மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தகராறு.
    • 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை.

    கோவை:

    தேனி மாவட்டம், பங்களா மேடு, பழைய டி.வி.எஸ். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராகுல் (வயது 18). இவர் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கோவை சவுரி பாளையம் ரோட்டில் அண்ணா நகர் பகுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி வருகிறார்.

    இந்த நிலையில் ராகுலுக்கும், அதே கல்லூரியில் பி.பி.ஏ.முதலாம் ஆண்டு படிக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி என்பவருக்கும் சீனியர்-ஜூனியர் பிரச்சனை தொடர்பாக மோதல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கல்லூரியில் கடந்த 19-ந் தேதி தனியார் டி.வி. நிகழ்ச்சி அங்கு உள்ள ஆடிட்டோரியத்தில் நடந்தது. அப்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படடது. சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    நேற்று முன்தினம் ராகுல் அங்கு உள்ள டீக்கடை அருகில் நின்ற போது மீண்டும் ராகுல்காந்தி மற்றும் அவரது நண்பர்கள் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ராகுலுடன் தங்கி படிக்கும் மாணவர் கதிர் என்பவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அப்போது ராகுல் காந்தியின் நண்பர்கள் அவரது மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு சென்றனர்.

    அந்த மோட்டார் சைக்கிளில் ஜிபிஎஸ் கருவி வசதி இருந்ததால் அதன் மூலம் மோட்டார் சைக்கிள் ராம நாதபுரம் ஒலம்பஸ், பாரதி நகரில் இருப்பதை கண்டு பிடித்து நேற்று மாலை கதிர் மற்றும் நண்பர்கள் மீண்டும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தனர்.

    நேற்று மாலை ராகுல் காந்தி, தனது நண்பர்கள் சிலருடன் ராகுல் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கிருந்த ராகுல் மற்றும் கதிர் அவரது நண்பர்களை அடித்து உதைத்து கத்தியால் குத்தினர்.

    இதில் ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ் பாண்டியன், ரோஷன் ராஜா ஆகியோருக்கு தலை, கை, மார்பு, கழுத்து பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது.

    அதோடு நிற்காமல் ராகுல் காந்தி மற்றும் அவரது நண்பர்கள் அவர்கள் தங்கியிருந்த அறையையும் அடித்து நொறுக்கினர். அதன் பிறகு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதை பார்த்த மற்ற மாண வர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். காயம் அடைந்த மாண வர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகி ச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ராகுல் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி, கெவின் சதீஷ் மற்றும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
    • போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்.

    போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என வீடியோ வெளியிட்டு தமிழக மக்கள், இளைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    * தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தை சார்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள்...

    * போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

    * போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும். போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்று தெரிவித்துள்ளார்.

    ×