என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநாட்டு பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளையும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்ற உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பணிகளை காணொலி காட்சி வாயிலாக விஜய் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டு திடலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் அவ்வப்போது பணிகளை விஜய் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
தொடர் கண்காணிப்பில் உள்ள விஜய் அவ்வப்போது மாநாட்டு பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளையும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குடிநீர், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் குறித்து நிர்வாகிகளுடன் விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
பொது மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத அளவிற்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.
மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்ற உள்ளார். விஜய் கொடியேற்ற உள்ள கொடி கம்பத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநாட்டு திடலில் விஜய் கொடியேற்றும் கொடிக்கம்பத்தை 10 ஆண்டுகளுக்கு அகற்றாதபடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- தமிழக அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
- ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்.
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி முன்னிட்டு இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊருக்க படையெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, தமிழக அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
இதுதொடர்பாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேருந்துகளை தொடர்ந்து நடத்துகின்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை.
தனியார் செயலிகள் மூலமாகவும், புதிதாக பேருந்து இயக்குபவர்களும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் தொடர்பில் இல்லாதவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
அவர்கள் மீதான புகார்கள் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசு தரப்பில் கட்டணமில்லா எண் வெளியிடப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கான பணிமனை கட்டுமான வேலை இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. விரைவில் முடிவடையும். அதுவரை, ஆம்னி பேருந்துகள் அவர்களின் சொந்த பணிமனையில் இருந்து இயக்குவார்கள். அந்த பேருந்துகள் 400 அடி புறவழிச்சாலை வழியாக செல்லும்.
அரசுக்கு சில கடமைகள் இருக்கிறது. பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்திக் கொடுக்கும் கடமை. அரசு கூடுதலாக எத்தனை பேருந்துகள் இயக்குகிறது என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.
அந்த கூடுதல் பேருந்துகளில் அரசு பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியார் பேருந்துகளையும் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு செயலிகளையும் அரசு கண்காணிக்க முடியாது. மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய இடத்தில்தான் இந்த துறை இருக்கிறது. செயலிகளில் குறிப்பிட்ட பிரச்சினை இருக்கிறது என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்.
விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
- தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை.
மதுரை:
மதுரை புதுமாகாளிபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தற்போது பெரும்பாலான மூத்த குடிமக்கள், பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளால் எந்த பாதுகாப்பும் கிடைக்காமல் உள்ளனர். இதனால் தனி மையில் வசிக்கும் பல முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு, மூத்த குமடிக்கள் மற்றும் பெற்றோர் நல விதி முறைகளை 2009-ம் ஆண்டில் ஏற்படுத்தியது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த குடிமக்கள், பெற்றோர்களின் பாதுகாப்பை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது மாநகர போலீஸ் கமிஷனர் உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரியும், தனது எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

குறிப்பாக ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். மேலும் மாதத்துக்கு ஒரு முறையாவது மூத்த குடிமக்களை போலீஸ் நிலைய அதிகாரி சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இதற்காக அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை. இதனால் முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை சந்தித்து வருகின்றனர். எனவே ஐகோர்ட்டு மதுரை கிளை எல்லைக்கு உள்பட்ட மாவட்டங்களின் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இந்த விதிமுறைகளை கடைபிடித்து மூத்த குடிமக்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் மாதம் 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
- தவெக மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது.
- மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த மாநிலம் தழுவிய முதல் அரசியல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.
அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.
மாநாட்டுக்காக நூற்றுக்கணக்கான ஏக்கரில் பார்வையாளர்கள் அமர தனி இடம், வாகனங்கள் நிற்க தனி இடம் என்று அனைத்து வசதிகளும் செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
லட்சக்கணக்கான மக்கள் பங்குபெற உள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வெற்றிப்பெற வேண்டும் என்று விஜய்யின் ரசிகர்கள் கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தவெக மாநாடு வெற்றி பெற, விஜய்யின் சொந்த கோவிலான கொரட்டூர் சாய் பாபா கோவிலுக்கு அவரது பெற்றோர் நேரில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோர் பிரசாதம் வழங்கினர்.
- தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் நடைபெற்றது.
- டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி, தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 26,236 அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் மற்றும் 19,097 தனியார் தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் என மொத்தம் 45,333 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
இத்தேர்வில் 24,853 அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், 16,738 தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், என மொத்தம் 41,591 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், தமிழ்நாட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இண்டஸ்டி ரியல் ரோபாடிக்ஸ் தொழிற் பிரிவில் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர் என்.அந்தோணி சேசுராஜ் மற்றும் திருச்சி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி என்.மோகன பிரியா மற்றும்
மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் அன்ட் ஆட்டோ மேஷன் தொழிற் பிரிவில் சிதம்பரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி யு.பிரசிதா மற்றும் வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர் எஸ்.மணிமுருகன் ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
இன்பர்மேஷன் டெக்னாலஜி தொழிற் பிரிவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), கோயம்புத்தூரை சார்ந்த கே.இந்துஸ்ரீ அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் நவீன கால தொழிற்பிரிவுகள் உட்பட பல்வேறு தொழிற் பிரிவுகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்த 19 அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளும் மற்றும் 5 தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளும் என மொத்தம் தமிழ்நாட்டை சேர்ந்த 29 மாணவ- மாணவிகள் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
பயிற்றுநர்களுக்கான பயிற்சியில் பயிற்சி பெற்ற காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்றுனர் வி.ஸ்வேதா, வெல்டர் தொழிற்பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவ்வாறு, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 29 மாணவ மாணவிகளும் மற்றும் 1 பயிற்றுநரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் பா.விஷ்ணு சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர்.
- கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்பனையினர் சிறைப்பிடித்தனர்.
இதுகுறித்து கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், " இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது.
கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வது, மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 128 பேர் மற்றும் 199 மீன்பிடி படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கவர்னர் பங்கேற்கும் சாதாரண நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளை புறக்கணித்தால் பரவாயில்லை.
- முதலமைச்சர், துணை முதலமைச்சர் எங்களை தோற்கடிக்க ஆளே இல்லை என்பது போல பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
* கவர்னரின் நிகழ்ச்சியை அமைச்சர்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வருவது பற்றி?
கவர்னர் பங்கேற்கும் சாதாரண நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளை புறக்கணித்தால் பரவாயில்லை.
பட்டமளிப்பு நிகழ்ச்சிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. அரசியலையும் தாண்டி நடக்கும் நிகழ்வுகள் அது.
அங்கே பட்டம் வாங்கும் மாணவர்களுக்கு நல்வழியை காட்டுவதற்கு உயர்கல்வித்துறை அமைச்சருக்கு என்று உரை அங்கு இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுவது சரியல்ல. இவர்கள் அரசியலையும் எல்லாவற்றையும் கலக்குகிறார்கள்.
கல்வியையும் அரசியலையும் கலப்பது அரசியலில் ஒரு வாடிக்கையாக இருக்கிறது.
புதிய கல்விக்கொள்கையாக இருக்கட்டும், பிரதமரின் புதிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கட்டும், சமக்ர சிக்ஷா அபியான் விரிவுபடுத்தப்பட்ட கல்வி திட்டமாக இருக்கட்டும், மும்மொழி கொள்கையாக இருக்கட்டும், உயர்கல்வியில் துணைவேந்தர்களை நியமிப்பதாக இருக்கட்டும், கவர்னர் பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்வதாக இருக்கட்டும் எல்லாவற்றையும் இவர்கள் அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
அடிப்படை கல்வியிலும் உயர் கல்வியிலும் இவர்கள் அரசியலை புகுத்துகிறார்கள்.
எவ்வளவுதான் மாற்று சிந்தனை இருக்கலாம். கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் அதனை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் காண்பிக்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
அரசாங்கத்தை பொருத்தவரை எதுவுமே சரியாக நடப்பதாக எனக்கு தெரியவில்லை.
தென்சென்னை பகுதியில் குப்பை கிடங்கு எல்லாம் சரியாகி விட்டதாக சொன்னார்கள்.
சில சதவீதம் கூட குப்பைகள் அகற்றப்படவில்லை. திடக்கழிவுகள் மேலாண்மை சரியாகவே பயன்படுத்தப்படவில்லை என்ற செய்தி கவலை அளிக்கிறது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் எங்களை தோற்கடிக்க ஆளே இல்லை என்பது போல பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் சொல்கிறார், கூட்டணியில் விவாதம் தான் இருக்கிறதாம். விரிசல் இல்லையாம்.
விரிசல்களை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மதுரையில் தண்ணீர் தேங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரை குற்றம் சொல்கிறார்.
அண்ணன் திருமாவளவன் நாம் முதலமைச்சர் ஆகும் அளவிற்கு நமது செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கும் அளவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே 2026 சட்டசபை தேர்தல் திமுக நினைக்கும் அளவிற்கு அவ்வளவு சுலபமாக இருக்காது. எந்த ஆட்சி வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து என்று அவர் கூறினார்.
- கும்பலை சேர்ந்தவர்கள் பல்வேறு இணைய எண்களில் இருந்து பேசியுள்ளனர்.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த இலுப்பையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 50). இவர் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், இவரை கடந்த ஆண்டு மே மாதம் மர்ம ஆசாமி ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகையில், வேவ் எப்.எக்ஸ். என்ற இணையதளத்தில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும் என்றும், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பல்வேறு இணைய எண்களில் இருந்து பேசியுள்ளனர்.
இவர்களது பேச்சை நம்பிய கருணாமூர்த்தி மர்ம ஆசாமிகள் கூறிய பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ.71 லட்சத்து 28 ஆயிரத்து 770 செலுத்தியுள்ளார். பின்னர் அவர்கள் பணத்தை மோசடி செய்ததால் மனமுடைந்த கருணாமூர்த்தி அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் இணைய குற்றப்பிரிவு) விஜயராகவன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மோசடியில் ஈடுபட்டவர்கள் கோவை மாவட்டம், போத்தனூரை சேர்ந்த ரியாஸ்கான் (27), குனியமுத்தூரை சேர்ந்த ரம்யா (28), பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த மகேஸ்வரி (47) என தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 23 ஆயிரம், 4 செல்போன்கள், 1 மடிக்கணினி, 2 வங்கிக்கணக்கு புத்தகம், 4 ஏ.டி.எம். கார்டுகள், 4 சிம் கார்டுகள், 2 காசோலை புத்தகம், 4 போலி முத்திரை சீல்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று அரியலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான பெண் உள்பட 3 பேரும் தமிழகம் முழுவதும் நெட் ஒர்க் அமைத்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
கைதானவர்களின் இணையதளத்தில் பதிவு செய்து பணத்தை இழந்தவர்கள் குறித்த விவரத்தை சேகரிக்கவும், இந்த இணையதளத்தை முடக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இணையதளம் மூலம் பணத்தை இழந்தவர்கள் சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் போலீசாரை தொடர்பு கொள்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த மோசடியில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று சிறிய முதலீடு மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறும் யாரையும் நம்பி பணம் அளிக்க வேண்டாம், இணைய மோசடிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் உங்கள் வங்கி தொடர்பான தகவல்கள், ஓ.டி.பி.யை யாரிடமும் கூற வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- “அடுத்த தலைமுறை டிஜிட்டல் நடவடிக்கை” நிகழ்ச்சியில் எக்கோபுளோட்டர் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படும்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெறும் "அடுத்த தலைமுறை டிஜிட்டல் செயல் திட்டம் 2024-ல் இந்தியாவின் பிரதிநிதியாகச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வளர்ந்து வரும் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனமான ஸ்கிராப்பிபை எக்கோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ம.பி. அழகு பாண்டிய ராஜாவை பாராட்டினார்.
தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தினால் ஆதரவளிக்கப்பட்டுவரும் இந்த புத்தொழில் நிறுவனம், 2,000 விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய 18 நிறுவனங்களில், இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 28 முதல் நவம்பர் 2, 2024 வரை டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெறும் டிஜிட்டல் தொழில்நுட்ப உச்சி மாநாடு 2024-ன் உலகளாவிய இளைஞர் முயற்சியின் ஒரு பகுதியான "அடுத்த தலைமுறை டிஜிட்டல் நடவடிக்கை" நிகழ்ச்சியில் எக்கோபுளோட்டர் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படும்.
- தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
- 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
மேலும் இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக www.trektamilnadu.com என்ற பிரத்யோக வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். 18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- நீ எந்த செல்லுக்கு வேண்டுமானாலும் போன் பண்ணு... போடா... என்று கூறுகிறார்.
- டோக்கன் வாங்குவதற்காக அங்கு நின்றிருந்த ஒருவர் ஒன்றரை மணி நேரமாக காத்திருப்பதாக கூறினார்.
கடலூர்:
கடலூர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் டோக்கன் கொடுக்கும் பணியாளர் நீண்ட நேரமாக பணியில் இல்லாததால் நோயாளி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
டோக்கன் கொடுப்பவர் வெளியே சென்றுள்ளதாக கூறிய தூய்மைப்பணியாளர், தொடர்ந்து அநாகரிகமாக பேசினார்.
கேள்வி கேட்ட நோயாளிக்கு, ஒருமையிலும் திமிராகவும் தூய்மைப் பணியாளர் பதில் அளித்தார்.
சிஎம் செல்லுக்கு போன் செய்து கூறுவதாக அந்த நோயாளி கூற,
நீ எந்த செல்லுக்கு வேண்டுமானாலும் போன் பண்ணு... போடா... என்று கூறுகிறார்.
100-க்கு போன் செய்தால் போலீஸ் வரும் என்று அவர் கூற...
100 போலீஸ்... 2000 போலீஸ் பார்ப்பேன் என்று அந்த தூய்மைப்பணியாளர் கூறுகிறார்.
டோக்கன் வாங்குவதற்காக அங்கு நின்றிருந்த பெண் ஒருவர் ஒன்றரை மணி நேரமாக காத்திருப்பதாக கூறினார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர் பவுன்ராஜ், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவ ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும்; மருந்துப் பொருட்கள் பற்றாக் குறையாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்து வருகிற 26-ந் தேதி காலை 10.30 மணியளவில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில், மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர் பவுன்ராஜ், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






