தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு- மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர்.கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது.
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு- மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்பனையினர் சிறைப்பிடித்தனர்.

இதுகுறித்து கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், " இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது.

கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வது, மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 128 பேர் மற்றும் 199 மீன்பிடி படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com