என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.59 அடியாக இருந்தது.
    • தற்போது அணையில் 73.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

    இதற்கிடையே கடந்த மாதம் 3-வது வாரத்தில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக 96 அடியாக குறைந்த அணையின் நீர்மட்டம் மீண்டும் 107 அடியாக உயர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது மழை குறைந்து விட்டது. ஆனாலும் டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்கு ஏற்ப அங்கு மழை பெய்தால் தண்ணீர் குறைத்தும், மழை நின்றால் அதிகரித்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.59 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 9 ஆயிரத்து 466 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 9 ஆயிரத்து 149 கனஅடியாக குறைந்தது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 73.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
    • அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக் கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்நிறுவனங்களில் வழங்கப்படும்.

    பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம், தனியார்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது.

    அலுவலக நடைமுறைகள், தனியார்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம்" கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.

    இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறி உள்ளார்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதி வரை உயர்ந்து வந்தது. பின்னர் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து குறைந்து காணப்பட்டது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் விலை அதிகரித்திருந்தது.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு வெளியானது. அதில் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் போர்களை முடிவுக்கு கொண்டு வருவோம் என பேசியிருந்தார்.

    போர் பதற்றம் காரணமாக தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வந்ததால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. இந்த சூழலில் டிரம்பின் இந்த பேச்சு ஒருவகையில் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருந்தது.

    இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்யாமல் பங்கு சந்தைகளின் பக்கம் கவனத்தை திருப்பினர். இதனால் நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது.

    இந்த விலை குறைவால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சந்தோஷம் ஒரு நாள் கூட நிலைக்கவில்லை. நேற்று 'அந்தர் பல்டி' அடித்தது போல, தங்கம் 'கிடுகிடு'வென உயர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 200-க் கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 285-க்கும், ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,275-க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 58,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

    07-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600

    06-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,920

    05-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,840

    04-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960




    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-11-2024- ஒரு கிராம் ரூ. 103

    07-11-2024- ஒரு கிராம் ரூ. 102

    06-11-2024- ஒரு கிராம் ரூ. 105

    05-11-2024- ஒரு கிராம் ரூ. 105

    04-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    03-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    • அனைத்து தரப்பினரின் பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும்.
    • ஒரு நபரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பின், அதை அடையாளம் கண்டு நீக்க வலியுறுத்துங்கள்.

    சென்னை:

    புதிய வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர்களின் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பொது மக்களின் தேவையறிந்து தமிழக வெற்றிக்கழகத்தினர் செயல்பட உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி இருக்கிறது.

    இது தொடர்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு தொலைபேசி வாயிலாக விஜய் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அவர், 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல்தான் நாம் சந்திக்கும் முதல் தேர்தல். எனவே இந்த முதல் தேர்தலையே சவாலாக எடுத்துக்கொண்டு, நாம் தீர்மானித்த இடத்திற்கு வர இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை நீக்குங்கள். அவர்களுக்கு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் எதுவென்றாலும் முன் நின்று உதவுங்கள் என்று கூறியிருக்கிறார்.

    மேலும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்கள், புதிதாக குடிவந்துள்ளவர்கள் என அனைத்து தரப்பினரின் பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒரு நபரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பின், அதை அடையாளம் கண்டு நீக்க வலியுறுத்துங்கள்.

    நீங்கள் இருக்கும் பூத் பகுதியை விட்டு இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரையுங்கள். இதற்கு உரிய படிவத்தை பெற்று பூர்த்திசெய்து, தொடர்புடைய முகாம்களில் வழங்குங்கள். இந்த பணிகளை செய்ய இப்போதே தயாராகி கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, பூத் கமிட்டி, வாக்காளர் சேர்த்தல், திருத்த முகாம் தொடர்பாக நிர்வாகிகளிடம் மாவட்டம் வாரியாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழக - இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
    • வரும் 12-ந்தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    * தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    * குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழக - இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    * வரும் 12-ந்தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெடுஞ்சாலையில் சென்ற பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பஸ்சில் இருந்து பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நெடுஞ்சாலையில் சென்ற பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தனியார் பஸ் மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்.

    சென்னையில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை நோக்கி சென்ற ஆம்னி பஸ், சங்ககிரி கோவை தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. பஸ் கவிழ்ந்த சில நொடிகளில் தீப்பற்றி எரிந்தது.

    பஸ்சில் இருந்து பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    • ஆசிரியர்களிடம் இருந்து பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெற வேண்டுமென அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
    • ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் இருந்து பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெற வேண்டுமென அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

    ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளைப் பரிவுடன் ஏற்று. நடப்பு ஆண்டில் மேற்கண்ட துறைகளின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வை வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வினை உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி 25.11.2024-க்குள் வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

    அதற்கிணங்க இணைய வழியாகப் பெறப்படுகின்ற ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும்.

    • விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • உயிரிழந்த டிரைவர் பூந்தமல்லி நசரத்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் 3 லாரிகள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மற்றொரு லாரி டிரைவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உயிரிழந்த டிரைவர் பூந்தமல்லி நசரத்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருமொழிக் கொள்கை தான் முக்கியம்..
    • பைக்கில் டூர் போவதை பற்றி வீடியோவில் கூறியிருந்தார்.

    சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியின் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    அஜித் குமார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். பைக்கில் டூர் போவதை பற்றி வீடியோவில் கூறியிருந்தார். சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனுக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு காரணம் மதம் தான். ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம். எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது. ஆனால் அந்த மதம் தான். தேவையில்லாமல் ஒரு வெறுப்பை உருவாக்குகிறது என்று அழகான பதிவினை வெளியிட்டிருந்தார் அஜித். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது ஓகே. தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ரொம்ப ஆபத்தானது. ஆரியம் வந்து திராவிடத்தை எதிர்க்கலாம். தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார் இதை பற்றி.. அவரிடம் நான் பேசுவது எல்லாம் சரியா என்று கேட்டால்.. நீ பேசுவதை பார்த்து அவர்கள் கோபப்பட்டால்.. நீ பேசுவது சரி என்றார்.

    ஆனால் அவர்கள் சந்தோஷப்பட்டால் நீ தப்பா பேசுகிறாய் என்று அர்த்தம் என்று தெளிவாக சொல்லிக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். டெக்னாலஜி வளர்ந்து வரும்போது, நமக்கு இருமொழிக் கொள்கைதான் முக்கியம்.

    மும்மொழிக் கொள்கை எதற்காக. மாணவனுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியம். பள்ளிக்கு போய் வர வேண்டும். அதன்பிறகு விளையாட்டு, கொஞ்ச நேரம் டிவி பார்க்கணும். அப்படித்தானே வாழ்க்கையை நடத்த முடியும். ஏற்கனவே என்னை மாதிரி சரியாக படிக்காதவர்களுக்கு ஆங்கிலம், கணக்கு படிப்பதே பெரிய தலைவலியாக இருக்கிறது. இதில் இந்தியையும் படிக்க வேண்டும் என்று சொன்னால் கோபம் வரத்தானே செய்யும்.

    திராவிடம்தான் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது. இந்த வடமாநில தொழிலாளர்கள் நிறைய வருகிறார்கள். அவங்க மாநிலத்தில் வந்து ஜாதிய ஒடுக்குமுறையை அனுபவித்திருப்பார்கள். உயர்ஜாதி என்று கருதப்படுபவர்கள் யாரும் இங்கு வேலைக்கு வந்திருக்கமாட்டார்கள்.

    மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் சகோதரர்களின் குடும்பங்கள்தான் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் கிட்டத்தட்ட 10, 15 வருடங்களாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவர்களிடம் நாம் புரிய வைக்க வேண்டும்.

    ஏன் உங்கள் மாதிரி எங்கள் மாநிலம் இல்லை. திராவிட சித்தாந்தம்தான் காரணம் என்று புரிய வைக்க வேண்டும். நாம் சிங்கப்பூர் போய்விட்டு வந்தால், சிங்கப்பூரை போய் பாருங்க என்று சொல்வோம்.. அமெரிக்கா போய் வந்தால், அமெரிக்காவை போய் பாருங்க என்று கூறுவோம். அதுபோல் வடமாநில தொழிலாளர்கள், அவங்க மாநிலத்திற்கு போய் தமிழ்நாட்டை பாருங்க..

    அப்படி சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு இந்தியில் திராவிடம் குறித்து மொழி பெயர்த்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஊரில் போய் தமிழ்நாடு பற்றி சொல்வார்.

    இங்கு ஒரு மதக்கலவரமும் இல்லை. நன்றாக போகிறது வாழ்க்கை என்று பெருமையாக கூறுவார்கள். எங்களை பிரியமாக வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறுவார்கள். அங்கிருந்து இங்கு ஆட்கள் வருகிறார்கள் என்றால், நம்மாட்கள் அதைவிட மேலே சென்றுவிட்டார்கள் என்று அர்த்தம்.. நம்மாட்கள் வேலை செய்ய வரவில்லை என்று அர்த்தம் இல்லை.

    திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என பிரபாகரனே கூறியுள்ளார். ஒருமுறை பேரறிவாளன் ஜாமினில் வெளியில் வந்திருந்தார். அவரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டுக் கதவை திறந்த உடன் அங்கு சுவரில் பெரியார், பிரபாகரன் படம் இருந்தது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

    விடுதலை ராஜேந்திரன் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், 1975-ல் கியூபாவில் உலகப் பேராளிகள் மாநாடு நடந்துள்ளது. இதற்கு பிரபாகரன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் சூழ்நிலைகள் காரணமாக செல்லவில்லை. இதற்கு பதில் அவர் கியூபாவிற்கு கடிதம் அனுப்புகிறார். அதில், தமிழ் இந்தியாவிலேயே பழமையான மொழி என்றும் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்னும் வகையில் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் மொழி பேசுகிற திராவிடர்கள் ஆகிய நாங்கள் என்று பிரபாகரன் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ், தமிழ் தேசியத்தின் அரண் திராவிட இயங்கங்கள். திராவிட இயக்கம் ஆட்சியில் இருக்கும் வரை அந்த அரண் வெறும் கற்கோட்டையாக இல்லாமல் இரும்புக்கோட்டையாக இருக்கிறது.

    விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் திராவிடம், தமிழ்தேசியம் இரண்டும் இரு கண்கள். இது எங்கள் கொள்கை என அறிவித்திருந்தார். தமிழ்தேசியம், திராவிடம் என்பது எப்படி ஒன்றாகும் என சீமான் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.

    இந்த நிலையில் திராவிடமும், தமிழ்தேசியம் இரண்டும் ஒன்றுதான். இரண்டையும் வெவ்வேறாக பிரித்து பார்ப்பது சரியாகாது என பிரபாகரன் கூறியதை மேற்கோள் காட்டி விஜயின் கொள்கையை தவறு என்ற வகையில் சத்யராஜ் முறைமுகமாக விமர்சித்ததாக பார்க்கப்படுகிறது.

    பொதுவாக சினிமா தொடர்பாக விஜய்- அஜித் ரசிகர்கள் இடையே மோதல் இருந்து வருகிறது. விஜயை விமர்சிப்பவர்கள் அஜித்தை பாராட்டி பேசுவார்கள். அஜித்தை விமர்சிப்பவர்கள் விஜயை பாராட்டி பேசுவார்கள்.

    விஜய் மாநில மாநாட்டிற்குப் பிறகு கார் ரேசில் கலந்து கொள்ள இருந்த அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்திருந்தார். மாநாடு நடத்திய விஜய்க்கு எதிர்ப்பை இவ்வாறு மறைமுகமாக தெரிவிப்பதாக பேசப்பட்டது.

    இவ்வாறு நடிகர் சத்யராஜ் பேசினார்.

    • சிவகாசி அருகே பட்டாசு ஆலையை பார்வையிட்டு, பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
    • திறந்த வாகனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக வந்து, மக்களை சந்திக்கிறார்.

    2 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகர் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து காலையில் விமானத்தில் புறப்பட்டு, 10.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வருகிறார்.

    அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து காரில் விருதுநகர் புறப்படும் முதலமைச்சருக்கு, பகல் 11 மணி அளவில் சத்திரரெட்டியபட்டி விலக்கில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் 60 ஆயிரம் பேர் திரண்டு, தி.மு.க. கொடியுடன் வரவேற்கிறார்கள்.

    இதையடுத்து சிவகாசி அருகே கன்னிச்சேரிபுதூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பட்டாசு ஆலையை பார்வையிட்டு, பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிகிறார். பின்னர் ஆர்.ஆர்.நகர் வரும் அவர், ராம்கோ விடுதியில் மதிய உணவு சாப்பிடுகிறார்.

    அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு விருதுநகரில் வாகன பேரணி (ரோடு ஷோ) நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. திறந்த வாகனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக வந்து, மக்களை சந்திக்கிறார்.

    மாலை 6 மணி அளவில், விருதுநகர் மருத்துவ கல்லூரி அருகே உள்ள கந்தசாமி மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் ஆர்.ஆர். நகரில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை காலை 9 மணிக்கு, ரூ.77 கோடியில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள விருதுநகர் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதையடுத்து விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று 35 ஆயிரம் பேருக்கு அரசின் பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அங்கு கோட்டை முகப்பு போன்று நுழைவுவாயிலுடன் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • மாற்றம் கைகூடுவதற்கு தெலுங்கானா, ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமே உதாரணம்.
    • அ.தி.மு.க. நேற்றைய மழையில் முளைத்த காளான் அல்ல... எம்.ஜி.ஆர். விதைத்து ஜெயலலிதா வளர்த்த விருட்சம்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பதாவது:-

    ஒரு மாதத்தில் கூட மாற்றம் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் கைகூடி வரும். மாற்றம் கைகூடுவதற்கு தெலுங்கானா, ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமே உதாரணம்.

    அ.தி.மு.க. நேற்றைய மழையில் முளைத்த காளான் அல்ல... எம்.ஜி.ஆர். விதைத்து ஜெயலலிதா வளர்த்த விருட்சம் என்று கூறியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய், அ.தி.மு.க. குறித்து விமர்சிக்காதததால் அதனுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜயபாஸ்கர் ஆட்சி மாற்றம் கைகூடி வரும் என்று கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தை உற்று நோக்க வைத்துள்ளது. 

    • நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை.
    • தாமிரபரணி ஆற்றை நாளை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    வேலூர்:

    வேலூரை அடுத்த அணைக்கட்டு ஊராட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே ஆதனூர்-குமாரமங்கலம் தடுப்பணை, புகளூர் கதவணை திட்டத்தை கிடப்பில் போட்டது குறித்து கொஞ்சம் கூட ஆதாரமில்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இந்த திட்டம் அவரால் தொடங்கப்பட்டது. சரியாக ஆய்வு செய்யாமல் இடத்தை தேர்வு செய்துவிட்டார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த மறுஆய்வு செய்யவே பாதி பணம் போய்விட்டது. இதனை அவர் சட்டமன்றத்தில் பேசட்டும் சரியான பதில் அளிக்கிறேன்.

    நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை. மேட்டூர் அணையை தூர்வார முடியாது. யாரும் அங்கு மணல் எடுக்கமாட்டார்கள். தாமிரபரணி ஆற்றை நாளை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×