என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாகி உள்ளன.
    • நடப்பாண்டில் அந்த இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு, மீதமுள்ள இடங்களை நிரப்ப இறுதி சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.

    இந்நிலையில், அதில் பங்கேற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்களில் சிலா் கல்லூரிகளில் சேராமல் படிப்பை கைவிட்டனா். இதனால், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாகி உள்ளன.

    இதேபோன்று, கடலூா் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 24 பி.டி.எஸ். இடங்கள் என 28 பல் மருத்துவ இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மருத்துவ மாணவா் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய அவகாசம் நிறைவடைந்த நிலையில், அந்த இடங்களை இனி நிரப்ப முடியாது.

    இதனால் நடப்பாண்டில் அந்த இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இறுதிச் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றவா்களில் எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு பெற்ற 4 பேரும், பி.டி.எஸ். ஒதுக்கீடு பெற்ற 16 பேரும் கல்லூரிகளில் சேரவில்லை. இதையடுத்து அவா்களுக்கு அபராதம் மற்றும் ஓராண்டு மருத்துவக் கல்வியில் சேருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சில மாணவா்கள் முந்தைய சுற்று கலந்தாய்வின்போதே கல்லூரிகளில் இருந்து விலகுவதற்கான அபராதத்தை செலுத்தியதால் அவா்கள் அடுத்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கத் தடையில்லை என்று மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றில் தாங்கள் கொண்டுள்ள பிடிப்பானது முற்போக்கான பீகாரைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும்.
    • ஓர் எதிர்காலத்துக்காகப் பணியாற்றி வரும் தாங்கள் வலிமையோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பீகார் மாநிலத்தின் துடிப்புமிக்க இளம் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


    சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றில் தாங்கள் கொண்டுள்ள பிடிப்பானது முற்போக்கான பீகாரைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும். நியாயமான, அனைவரையும் அரவணைத்துப் போற்றும் ஓர் எதிர்காலத்துக்காகப் பணியாற்றி வரும் தாங்கள் வலிமையோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்து சீராக கொட்டி வருகிறது.
    • ஐந்தருவியின் ஐந்து கிளைகளில் தண்ணீர் விழுந்து வந்த நிலையில் தற்போது 3 கிளைகளில் மட்டுமே அதிகம் தண்ணீர் விழுந்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு சீராவதுமாக தொடர்ந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான அளவில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்து சீராக கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவியில் காலை முதல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஐந்தருவியின் ஐந்து கிளைகளில் தண்ணீர் விழுந்து வந்த நிலையில் தற்போது 3 கிளைகளில் மட்டுமே அதிகம் தண்ணீர் விழுந்து வருகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் சீராக விழுவதால் விடுமுறை தினத்தை கழிப்பதற்கு குற்றால அருவிகளை நோக்கி சுற்றுலா பயணிகள் காலை முதலே அதிக அளவில் வருகை தந்துள்ளனர்.

    • மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    • ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள கீழப்புதூரை சேர்ந்த முருகன் மகன் ராஜ்குமார் (வயது28). இவருக்கும் ஆண்டிபட்டி அருகில் உள்ள மணியக்காரன்பட்டியை சேர்ந்த மரியாள் என்பவரும் கடந்த 1 வருடத்திற்கு முன்பு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் தீபாவளியை தனது மாமியார் வீட்டில் கொண்டாடுவதற்காக மனைவி மரியாளுடன் ராஜ்குமார் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் ஆண்டிபட்டி மெயின்ரோட்டில் வந்துகொண்டிருந்தார். திம்மரசநாயக்கனூர் முருகன் கோவில் அருகே வந்தபோது எதிரே குமுளியில் இருந்து வந்த லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் மற்றும் அவரது மனைவியின் தலையில் பலத்த காயம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் சிகிச்சையில் இருந்த ராஜ்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தி கேட்டு அவரது மனைவி கதறி அழுத நிலையில் அவரும் இன்று காலை உயிரிழந்தார். காதல் திருமணம் செய்த தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்தது இரு குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டதாகவும் கருதி பிடித்து செல்கின்றனர்.
    • புனித நீராக வழங்கப்பட்டுsam வரும் நிலையில் நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்காம்பட்டியில் ஸ்ரீவாஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. அதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சிவலிங்கத்திற்கு அடியில் நீரூற்று தோன்றி சிவலிங்கம் வழியாக வழிய தொடங்கியது. அந்த நீரானது பாதாள சிவலிங்கத்தை சுற்றி சுமார் 1 அடியிலிருந்து 2 அடி வரை நீரூற்றிலிருந்து வெளியேறி தண்ணீர் அறை முழுவதும் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்கு ஊற்று பெருக்கெடுக்க தொடங்கியது.

    இதனைக் கண்ட பக்தர்கள் அந்த தண்ணீரை புனித நீராக கருதி பிடித்து செல்கின்றனர். இந்த தண்ணீர் கும்பாபிஷேகத்திற்கு புனித நீராகவும், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளை போக்குவதாகவும், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டதாகவும் கருதி பிடித்து செல்கின்றனர்.


    இந்த தகவல் பரவியதும் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து பாதாள சிவலிங்கத்தை வழிபட்டு புனித நீர் பெற்றுச் செல்கின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும்போது 2 அடி ஆழத்திற்கு கான்கிரீட் போடப்பட்டு பின்னர் அதன் மேல் டைல்ஸ் கல் பதிக்கப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்நிலையில் ஆறு போல் ஊற்று பெருக்கெடுத்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாகவும் தற்போது புனித நீராக வழங்கப்பட்டு வரும் நிலையில் நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சுக்காம் பட்டி சித்தர்ஸ்ரீலஸ்ரீ துரை ஆதித்தன் சுவாமிகள் அருளாசி வழங்கி புனித நீர் மற்றும் காணிக்கை பூக்களை பிரசாதமாக அளித்து வருகிறார்.

    • சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
    • தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

    தஞ்சை பெரிய கோவிலை கட்டி மாமன்னன் ராஜராஜ சோழன் உலகிற்கே பெருமை சேர்த்தார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது.

    மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039-வது சதயவிழா அரசு விழாவாக இன்று காலை தொடங்கியது.

    சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம்!

    தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

    கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன். பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவன். நாமும் கடுமையாக உழைப்போம்... நமது ஆட்சியை நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    • ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரியங்காபங்கஜம் சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலை கட்டி மாமன்னன் ராஜராஜ சோழன் உலகிற்கே பெருமை சேர்த்தார்.

    இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி 1039-வது சதயவிழா அரசு விழாவாக இன்று காலை இறைவணக்கம், மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கம் நடைபெற்றது.

    இதையடுத்து தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சதயவிழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார்.

    விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரியங்காபங்கஜம் சிறப்புரையாற்றினார். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க உரையாற்றினார்.

    நிகழ்ச்சிக்கு அரண்மனை பரம்பரை தேவஸ்தானம் அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், பேராசிரியர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழநி ஆதீனம் குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து வரலாறாக வாழும் மாமன்னன் ராசராசன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதையடுத்து பிற்பகலில் நாதசுரம், பரதநாட்டியம், யாழ் இசை, வில்லுப்பாட்டு ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழாவின் 2-ம் நாளான நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு கயிலை மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை புத்தாடைகள் வழங்குகிறார். காலை 7.20 மணிக்கு அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    காலை 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜவீதிகளில் திருஉலா நடைபெறும். காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது. மதியம் 1.30 மணியளவில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறும்.

    தொடர்ந்து 1039 கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

    • சோதனை சாவடியில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கிறது.
    • விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெறுகிறது.

    கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கிறது. நகர கூட முடியாமல் நீண்ட நேரமாக சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.

    விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    • நாளை இரவில் இருந்து தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, மேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக நாளை இரவில் இருந்து தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகையில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    • பொய்யான செய்திகளை பரப்பி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார்.
    • மனித நேய மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் சுபேதார் தலைமையில் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் மனு கொடுத்தனர்.

    தருமபுரி:

    அவதூறு கருத்துக்களை பரப்பும் பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் சுபேதார் தலைமையில் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் மனு கொடுத்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரின் தலைவராக இருந்து வரும் எச்.ராஜா என்பவர் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் குறித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளார். மேலும், அவர் பொய்யான செய்திகளை பரப்பி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாஹ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மீது தேவையற்ற அவதூறு பரப்ப செய்து, மக்களுக்கு இடையில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் எச்.ராஜா செயல்படுகிறார் எனும் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    மனு கொடுக்கும் போது மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஷாஜகான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜீலான், நகர தலைவர் சாதிக், நகர துணை செயலாளர் ஏஜாஸ், முன்னாள் மாவட்ட நிர்வாகி நவுஷாத் ஆகியோர் உடனிருந்தனர். 

    • நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்து பார்த்தனர். மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.59 அடியாக இருந்தது.
    • தற்போது அணையில் 73.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

    இதற்கிடையே கடந்த மாதம் 3-வது வாரத்தில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக 96 அடியாக குறைந்த அணையின் நீர்மட்டம் மீண்டும் 107 அடியாக உயர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது மழை குறைந்து விட்டது. ஆனாலும் டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்கு ஏற்ப அங்கு மழை பெய்தால் தண்ணீர் குறைத்தும், மழை நின்றால் அதிகரித்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.59 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 9 ஆயிரத்து 466 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 9 ஆயிரத்து 149 கனஅடியாக குறைந்தது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 73.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×