search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raja Raja Cholan"

    • திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்பதிகம் முற்றோதல் செய்யப்பட்டது.
    • விநாயகர் பெருமானுக்கும், நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    அவிநாசி:

    தேவாரத்தை மீட்டெடுத்த திருமுறை கண்ட ராஜ ராஜ சோழ மாமன்னனின் 1038 வது ஐப்பசி சதய பெருவிழா அவிநாசி கோவிலில் நடைபெற்றது.அவிநாசியிலுள்ள லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீகருணாம்பிகை அம்மன் கலையரங்கில், ராஜராஜ சோழனின் 1038 சதயப்பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்பதிகம் முற்றோதல் செய்யப்பட்டது.

    ஓதிய பலனை தரக்கூடிய 25 திருப்பதிகங்கள் கொண்ட தேவார திரட்டு பண்ணொன்ற விண்ணப்பித்தல், திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு ஓதப்பட்டது.

    முன்னதாக விநாயகர் பெருமானுக்கும், நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான சிவனடியார்கள் பங்கேற்று முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ரவிபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

    மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும். வழக்கமாக 2 நாட்கள் சதய விழா கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் 1 நாள் விழாவாக நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவலால் 1 நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1036-வது சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவில் முதல் நிகழ்ச்சியாக காலை 6:30 மணிக்கு பெரிய கோவிலில் டி.கே.எஸ். பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 7 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு புத்தாடைகளை கட்டளை தம்பிரான் சுவாமிகள் வழங்கினார்.

    பின்னர் தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கோவிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் பாராயணத்தை பாடினர். முன்னதாக கோவில் வளாகத்தில் யானையில் வைத்து திருமுறை வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தமிழில் பாடிய பாராயணத்தை கேட்டு ரசித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    சதயவிழாவையொட்டி யானை மீது திருமுறை வீதிஉலா நடந்ததை காணலாம்

    இதையடுத்து பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு கட்டளை தம்பிரான் சுவாமிகள் தலைமையில் சந்தனம், மஞ்சள், மூலிகைகள், வில்வஇலை, விபூதி, இளநீர், பசும்பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், அன்னம் உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் பெருவுடையார் பெரியநாயகி திருமேனிகளுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் மனம் உருகி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று மாலை 6 மணிக்கு கலைமாமணி பண்ணிசை பேரறிஞர்கள் திருமுறைக் கலாநிதிகள் பழனி சண்முகசுந்தர தேசிகர், கரூர் குமார சாமிநாத தேசிகர் குழுவினர்களின் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது . அதனைத் தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.


    சோழர்களில் முக்கியமானவனும், ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள்மொழிவர்மன் பற்றிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை தமிழில் இணைய தொடராக்கும் முயற்சியில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இறங்கியிருக்கிறார். #PonniyinSelvan
    எழுத்தாளர் கல்கியின் அமர காவியமான `பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கவும் அதில் வந்தியத்தேவனாக நடிக்கவும் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் என பலரும் விரும்பினார்கள். ஆனால் நிறைவேறவில்லை. இப்போது தான் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்க ஆரம்ப கட்டப் பணிகளில் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி ஒரு சரித்திர வலைத்தொடரை தயாரிக்க உள்ளார்.

    இதுகுறித்து சவுந்தர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரசின் காலத்தைப் பற்றி விறுவிறுப்பும் வீரமும், தொன்மையும், காதலும், நகைச்சுவையும் கலந்த காவியமாக இது இருக்கும். இந்த நாவலைப் படித்த நாள் முதலே எனக்கு இதைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


    இந்த தொடரைத் தயாரித்து கிரியேட்டிவ் ஹெட்டாகவும் பொறுப்பை மேற்கொள்கிறார் சவுந்தர்யா. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளராக இருந்த சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகிறது தொடர். இதில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. டைம்ஸ் இன்டெர்நெட் நிறுவனம் வழியே தயாராகும் இந்த வெப் சிரீஸ் மட்டும் அல்லாமல், தமிழில் பல தொடர்களையும் தயாரிக்க உள்ளது. #PonniyinSelvan #SoundaryaRajinikanth #SuriyaPrathap

    ‘இயற்கை’, ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அடுத்ததாக ராஜ ராஜ சோழனின் வரலாற்றை படமாக உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RajaRajaCholan #SPJananathan
    தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை உருவாக்கும் இயக்குநர்களில் ஒருவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இதற்கு முன்பாக ‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘ஈ’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

    தற்போது தனது அடுத்த படமாக தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரபல சோழ அரசனான, ராஜ ராஜ சோழன்  பற்றிய வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.



    இதற்காக அவர் தஞ்சையில் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறார். ராஜராஜ சோழன் படத்தை இரண்டு அல்லது மூன்று பாகமாக உருவாக்க அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிவாஜி கணேசன் நடிப்பில் ஏற்கனவே ராஜ ராஜ சோழன் பற்றிய படம் உருவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #RajaRajaCholan #SPJananathan

    ×