search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathaya Festival"

    • திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்பதிகம் முற்றோதல் செய்யப்பட்டது.
    • விநாயகர் பெருமானுக்கும், நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    அவிநாசி:

    தேவாரத்தை மீட்டெடுத்த திருமுறை கண்ட ராஜ ராஜ சோழ மாமன்னனின் 1038 வது ஐப்பசி சதய பெருவிழா அவிநாசி கோவிலில் நடைபெற்றது.அவிநாசியிலுள்ள லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீகருணாம்பிகை அம்மன் கலையரங்கில், ராஜராஜ சோழனின் 1038 சதயப்பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்பதிகம் முற்றோதல் செய்யப்பட்டது.

    ஓதிய பலனை தரக்கூடிய 25 திருப்பதிகங்கள் கொண்ட தேவார திரட்டு பண்ணொன்ற விண்ணப்பித்தல், திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு ஓதப்பட்டது.

    முன்னதாக விநாயகர் பெருமானுக்கும், நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான சிவனடியார்கள் பங்கேற்று முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ரவிபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • மாமன்னன் ராஜராஜசோழன் 1,038-வது சதயவிழா தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்றது.
    • சதயவிழாக் குழு சார்பில் மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் விழா நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் 1,038-வது சதயவிழா தஞ்சை பெரியகோவிலில் 2 நாட்கள் அரசு விழாவாக நடைபெற்றது.

    நேற்று மாலை நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, நாத சங்கம், மற்றும் சதயவிழாக் குழு சார்பில் மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    சதய விழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார்.

    விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் மாமன்னன் ராஜராஜன் விருதினை மதுரை செந்தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் தட்சிணாமூர்த்தி, தஞ்சை டாக்டர் செல்வராஜ், முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் பழனியப்பன், புலவர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 பேருக்கு விருதுகள் வழங்கபட்டன.

    இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, சதய விழாக்குழு துணைத்தலைவர் மேத்தா, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் உதவி ஆணையர் கவிதா நன்றி கூறினார்.

    ×